Jump to content

பிரச்சினைகளால் பற்றி எரியும் நாடு: தமிழ் மக்களின் நிலைப்பாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினைகளால் பற்றி எரியும் நாடு: தமிழ் மக்களின் நிலைப்பாடு

லக்ஸ்மன்

நாடு பற்றி எரியும் வேளையில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததற்கு ஒப்பாக, தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் தற்போதைய நெருக்கடிச் சூழலைக் கையாளுதலை அல்லது கணக்கற்று இருப்பதை அவதானிக்க முடிகிறது.

பொருளாதாரப் பிரச்சினைகளால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் போராட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது குறித்து தமிழ் மக்களின் நிலைப்பாடு சரியா, தவறா என்பதான கேள்விகளுக்கு இதுவரையில் சரியான பதில்கள், முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்த இடத்தில்தான், ஒரு தேசமாக தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான தமிழர்களின் நீண்டகாலக் கேள்விக்கு, இன்று தெற்கில் இடம்பெறும் போராட்டங்களில் பதிலேதும் உண்டா என்று தமிழர் தரப்பின் வினவல் நெருடலாகின்றது.

இலங்கையில் யுத்தம் தானாக ஆரம்பித்ததல்ல. அது, தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. ஆனாலும், இன்று தெற்கில் போராடிக் கொண்டிருக்கும் பொதுமக்கள், இளைஞர்களுக்கு தம் தோழமையை தமிழர்கள் இப்போது கொடுக்காமலில்லை. இருந்தாலும் அடிப்படையை உணர்ந்தார்களா என்பதற்கான சரியானதொரு பதில் கிடைக்கவேண்டுமென்றே தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த எதிர்பார்ப்புத் தவறானதல்ல.

பெரும்பான்மை மக்களின் பெரும்பகுதியினர் போராடப் புறப்பட்டதற்கான காரணமான பொருளாதார நெருக்கடிகள் தமிழர்களையும் தாக்காமலில்லை. ஆனால், அவற்றைச் சகித்துக்கொண்டே ஆகவேண்டும் என்ற பக்குவத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள். நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் பிறந்தவர்கள் இந்தச் சகிப்பினை கைக்கொள்ள கொஞ்சம் சிரமப்படத்தான் செய்வார்கள்.

எது எவ்வாறாக இருந்தாலும், அயலிலுள்ளவர், நம்முடன் உள்ளவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போது அதனைத் தீர்த்துவைக்க அல்லது கைகொடுக்காதவர்களை மனிதர்களாகவோ சகபாடிகளாகவோ யாரும் எண்ணுவதில்லை. அந்தவகையில், தமிழர்களுக்கு இருக்கின்ற மனத்தடையைத் தீர்க்கவேண்டியது நாட்டிலுள்ள பெரும்பான்மைச் சமூகத்துக்குள்ளது என்ற பொறுப்பையே தமிழர்கள் கோருகின்றனர். இந்த ஆத்மாத்தமான கோரிக்கையைத் தவறாக எண்ணிவிடமுடியாது.

தென்னிலங்கையில் இடம்பெற்றுவரும் பொதுமக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்வதற்கு தமிழர்களின் அரசியல் தரப்புகளும், சிவில் அமைப்புகளும் முயன்றே வருகிறார்கள்.  இந்த முயற்சிகளுக்குத் தடைகள் வராமலில்லை. அதற்கு பட்டறிவுகளுடனான அனுபவங்களே காரணம்.

இதில்தான், காலி முகத்திடலில் இருந்து முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் இன்றைய பொருளாதாரச் சிக்கல்களுக்கு உண்மையான அடிப்படைக் காரணமான சிங்கள -பௌத்த மேலாதிக்க அபிலாஷைகளுக்கு மாற்றீடுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்பதும், வெறுமனே நாட்டில் ஆட்சி மாற்றம் தமிழருக்கு அமைதியையும் நிம்மதியையும் கௌரவத்தையும்  தந்துவிடப் போவதில்லை என்ற விடயம் சிக்கி நிற்கின்றது.

image_824bb3aa64.jpg

இந்த வகையில் தான், தமிழ்த் சிவில் சமூக அமையத்தின் ‘அண்மைய நாள்களில் தென்னிலங்கையில் முகிழ்த்து வரும் பொதுமக்கள் போராட்டங்களுக்கான ஆதரவைத் தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது’ என்ற அறிக்கையும் முக்கிய பார்வைக்குரியதாகின்றது.

இந்தப் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் பட்டிணியை தமது அன்றாடமாக்குகின்ற நிலைமை உருவாகிவருகின்ற நிலையில், இந்த நெருக்கடிக்கு இன்றைய அரசாங்கம் மாத்திரமே காரணம் என்று அதனை ஆட்சிபீடத்திலிருந்து அகற்றுவதால் தீர்வு வந்துவிடாது என்பதும் புரிந்துகொள்ளப்படவேண்டும்.
அதில்தான், அடிப்படைக் காரணமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு,  போராட்டத்தின் முதற் கோரிக்கையாக அமைய வேண்டும் என்பது முன்னகருகின்றனது.

இப்போது காலி முகத்திடலிலே சிங்கள இளையோர்களால் மேற்கொள்ளப்படும் போராட்டத்தின் கோரிக்கைகளில், பொருளாதார வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற விடயம் முதன்மையான கோரிக்கையாக அமைந்திருக்க வேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வே, நாட்டின் மீட்சிக்குரிய ஒரே வழி என்பதும் அதன் அடிப்படையும் தெரிந்திருந்தாலும், அதனை வெளிப்படையாக பொறுப்புடன் ஏற்றுக்கொள்ள யாரும் தயாரில்லை. 

உண்மையிலேயே இந்த நாட்டில், தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டதும், அதன் காரணமாக ஏற்பட்ட யுத்தமும், யுத்தத்தின் காரணமமாக பில்லியன் கணக்கான டொலரை வெளிநாடுகளிடம் கடனாகப் பெற்றமையானது நாட்டுக்குப் பெரும் சுமையே. இந்தச் சுமையைத் தூக்குவதற்கு தமிழ் மக்கள் மீது போராட்டத்தினை திணித்த அனைவரும் தயாராக வேண்டும்.

அதனை விடுத்து, தற்போதைய அரசாங்கத்திடம் மாத்திரம் அதனை விட்டுவிடுவது எவ்வகையில் நியாயம் என்பது ஆட்சித் தரப்பின் கேள்வியாக இருக்கவேண்டும். ஆனால், அதனை அவர்கள் இன்னமும் வெளிப்படையாகச் செய்யவில்லை.

ராஜபக்‌ஷ குடும்பம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற அடிப்படையில்,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்; ஒட்டுமொத்த அமைச்சரவையும் பதவிகளைத் துறக்க வேண்டும். ராஜபக்‌ஷ குடும்பத்தினர் எவருமே பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் வகிக்கக் கூடாது. ராஜபக்‌ஷ குடும்பத்தால் அபகரிக்கப்பட்ட சொத்துகள் மீளப்பெறப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளே போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இது ராஜபக்‌ஷ குடும்பத்தின் மீதான கோபமாகவே பார்க்கப்படவேண்டும்.

ஆனால், இதனால் உருவாகின்ற மாற்றம் நாட்டை மீட்டுவிடுமா என்றால் அது சந்தேகமாகவே இருக்கும். வெறுமனே ராஜபக்‌ஷ குடும்பத்தினை மாத்திரம் வெளியேற்றிவிட்டால் நாடு மீண்டுவிடுமா?

நாடு பொருளாதார ரீதியாக மிகவும் அதளபாதாளத்துக்குள் விழுந்து கிடக்கின்றது. இலங்கை தற்போது இருக்கும் பொருளாதார நிலைமையை எந்தக்கட்சியோ, நபரோ ஆட்சிக்கு வந்தாலும் உடனடியாக நிமிர்த்திக் கொள்ளக்கூடிய நிலைமை இல்லை. இந்த உண்மையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

பண்டா - செல்வா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட போது அன்றைய நிலையில் எல்லோரும் நிம்மதி ஏற்பட்டுவிட்டதாகவே எண்ணினர். அன்று  நாட்டில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட்டிருந்தால் இந்த நாட்டில் 30 வருடங்களுக்குமேல் யுத்தமும் இடம்பெற்றிருக்காது. அழிவுகள், பொருளாதார இழப்புகள் ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்களின் மனங்களில் இவ்வளவான வெறுப்பும் பட்டிறிவும் பதிந்தும் இருக்காது.
அத்தோடு, யுத்தத்திற்காக மாறி மாறி வந்த அரசாங்கங்கள் டொலரைச் செலவு செய்ய வேண்டிய தேவையும் இருந்திருக்காது. ஆனால், நடந்தது என்னவோ வேறு.

தொடர்ச்சியாக, இப்போதும் இனவாதம் ஊட்டி வளர்க்கப்படுகின்ற இளைஞர்களையே நாம் காண்கிறோம். அதனை அடிப்படைவாதிகளும், அரசியல் கட்சிகளும் செய்தே வருகின்றன.

இந்த இடத்தில்தான், யுத்தத்திலும், அதற்கு முன்னரும், பின்னரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள் 1,800 நாள்களையும் தாண்டி இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அந்தப் போராட்டத்தில் எமது தமிழ் இளைஞர்களின் பங்கு என்ன? எமது தமிழ் இளைஞர்கள் காலி முகத்திடல் போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என எங்கள் மக்களின் பிரதிநிதிகளே அறைகூவல் விடுக்கின்றனர். இவ்வாறு அறைகூவல் விடுபவர்கள் எமது உறவுகளின் போராட்டத்தில் இளைஞர்களை உள்வாங்குவதற்கு எவ்வித அக்கறையும் அற்றவர்களாகவே செயற்பட்டிருக்கின்றார்கள்.

சிங்கள மக்கள் மின்சாரம், எரிபொருள், போன்ற பொருட்கள் இல்லாமல் இருக்கின்ற காரணத்தால் போராடுகின்றார்களே தவிர, பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டமைக்கான முல காரணத்தைக் கண்டு பிடித்து, அதனை நிவர்த்தி பண்ணுவதற்கு எந்தவிதமான எத்தனிப்பும் காட்டவில்லை. இந்த விடயத்தில், நாங்கள் சற்றுச் சிந்திக்க வேண்டும் என்ற தமிழ்த் தரப்பின் கேள்வி நியமானதாகவே இருக்கிறது எனலாம்.
அதே நேரத்தில், தமிழ் மக்களுடைய அரசியலை நகர்த்துகின்ற தரப்புகளின் ஒருமிப்பின்மை, தமிழ் மக்களை மேலும் பிரித்து வைத்தே வருகிறது.
மொத்தத்தில், அரசியல் பாரபட்சம், இனப்பாகுபாடு, தரப்படுத்தல், நெருக்கடிகளால் நாட்டைவிட்டு வெளியேறிக்கொண்டே இருந்த மூளை சாலிகள் இன்றும் வெளியேறிக்கொண்டே இருக்கிறார்கள்.
நாட்டின் பாரபட்சம் இல்லாமலாக்கப்படவில்லை. தமிழ் மக்களின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை. இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு ஏற்படுத்துவதற்கான தீர்க்கமான செயற்பாடில்லை.
இவ்வாறிருக்கையில், தமிழ் மக்களுக்கு வேறு என்னதான் நிலைப்பாடு முடிவிருக்கமுடியும். ஆனாலும், தமிழர்களாகிய எம்முடைய நிலைப்பாடு வேறாக இருந்தாலும் இந்தச் சூழலில் ‘பிடில்’ வாசித்த கதையாக இருப்பது பொருத்தப்பாடற்றதே.

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பிரச்சினைகளால்-பற்றி-எரியும்-நாடு-தமிழ்-மக்களின்-நிலைப்பாடு/91-295145

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • சத்தியமா... இங்கைதான் இருந்திச்சு ராஜவன்னியன் சார். 😁 களவாணிப் பயலுக யாரோ களவெடுத்துப்புட்டாங்க சார். 😂 @island கூட அது இருந்ததை பார்த்தார் சார். 🤣
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.