Jump to content

ஒரு இலட்சம் டொலர்களை... வைப்பிலிடும், வெளிநாட்டவர்களுக்கு.... வதிவிட வீசா வழங்க அமைச்சரவை அனுமதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர்களின் விசா செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு!

ஒரு இலட்சம் டொலர்களை... வைப்பிலிடும், வெளிநாட்டவர்களுக்கு.... வதிவிட வீசா வழங்க அமைச்சரவை அனுமதி

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட வீசா வழங்கும் Golden Paradise Visa Program  என்ற திட்டத்தை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட நீண்டகால வதிவிட வீசா வழங்குதல் தொடர்பாக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி,

• கூட்டு ஆதனங்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75,000 அமெரிக்க டொலர்கள் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு செய்கின்ற வெளிநாட்டவர்களுக்கு மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இயக்குநர்களுக்கு, அவர்களுடைய துணைவருக்கும் தங்கி வாழ்பவர்களுக்கும் அவ்வாறு முதலிடுகின்ற அமெரிக்க டொலரின் அளவுக்கமைய 5 ஆண்டுகள் தொடக்கம் 10 ஆண்டுகள் வரையான நீண்டகால வதிவிட வீசா வழங்கல்.

• இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது 100,000 அமெரிக்க டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட வீசா வழங்குவதற்கு இயலுமை கிட்டும் வகையில் ´தங்க சுவர்க்க வீசா நிகழ்ச்சித்திட்டம்´ எனும் பெயரிலான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்.

ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1278578

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

எந்த ம_ _ன் வருவான்?!

நீங்கள் மேலே.. மறைத்து எழுதியதை, கண்டு பிடித்து விட்டேன். மடையன் தானே…. 🤣

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

ஒரு இலட்சம் டொலர்களை... வைப்பிலிடும், வெளிநாட்டவர்களுக்கு.... வதிவிட வீசா வழங்க அமைச்சரவை அனுமதி

வீ என்றால் சாவு எனபதாகப் பொருளுண்டு

சா என்றால் மரணம் என்பதாகவும் பொருளுண்டு

எப்படிப் பார்த்தாலும் அங்கு வாழத்தொடங்கி 5 - 10 வருடத்திற்குள் பணமும் காலி ஆளும் காலிதான்.🤫

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் மேலே.. மறைத்து எழுதியதை, கண்டு பிடித்து விட்டேன். மடையன் தானே…. 🤣

அவர் எந்த மனிதன் வருவான் என்று எழுதியிருக்கிறார்.......!  😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

அவர் எந்த மனிதன் வருவான் என்று எழுதியிருக்கிறார்.......!  😂

அட… நான் தான், அவசரப் பட்டு… உண்மையை சொல்லிப் போட்டேன். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட! இதைப்பார்த்த பின்னும் நீண்ட வரிசையில் நிற்க அழைக்கிறார்கள். அழைப்பவர்களுக்கே இது அதிகமாக தெரியவில்லை? வழமைபோல ஏதும் தெரியாதது போல நடிப்பா? அது சரி, பங்கருக்குள் இருந்தால் இரவெது பகலேது என்று தெரியாதுதான். அன்று நம்மை பங்கருக்குள் துரத்தி மூடியவர்கள் இன்று அதே இடத்தில தங்களை தாங்களே மறைத்து பாதுகாப்பு தேடுகிறார்கள். ஒருநாள் இவர்களுக்கு பாதுகாப்பளிப்போரும் சலிப்படைந்து, வெறுப்படைந்து விலகிக்கொள்ள அதே பயம், பற்றாக்குறை இவர்களையும் பிடிக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது போல வேற நாடுகள் ஏதும் கொள்கை அறிவித்த்தால் வீடு வளவுக்ளை வித்து வெளியேறலாம் இலங்கையை விட்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இது போல வேற நாடுகள் ஏதும் கொள்கை அறிவித்த்தால் வீடு வளவுக்ளை வித்து வெளியேறலாம் இலங்கையை விட்டு 

விக்கிறதை வாங்க ஆள் வேணுமே

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.