Jump to content

ராஜபக்சவினர் எங்களது வம்சாவளியினர்: தமிழ்நாடு காமாட்சி நாயுடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நாயக்க என்ற குடும்ப பெயர்களை கொண்டுள்ளவர்கள், தெலுங்கு நாயுடு வம்சாவளியினர் எனவும் ராஜபக்சவினரும் தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் எனவும் தமிழ் நாடு நாயுடு பேரவையின் தலைவர் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழ் வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

22-62679b69e0d2d.webp

 

பண்டாரநாயக்க என்ற பெயரில் இருக்கும் பண்டார என்பது தமிழில் இருக்கும் பண்டாரம் என்ற பெயர்களை கொண்ட மக்களை குறிக்கும். பண்டாரம் என்பவர் அம்மன் கோயில் ஒன்றில் பூசாரியாக இருந்தார். அவரது பெண்ணை இலங்கைக்கு மணம் முடித்து கொடுத்தனர்.

இலங்கை சென்றது, இந்த பெண்ணின் கணவன் இறந்து போகிறார். இதன் பின்னர், அந்த பெண் இலங்கையில் வாழ்ந்து வருகிறார். அதன் பின்னர், அங்கு ஆட்சி செய்த நாயக்கர்களான நாயுடுகளில் ஒருவரை திருமணம் செய்த பின்னர் பண்டாரநாயக்க என்று குடும்ப பெயர் மாறுகிறது.

இலங்கையில் 1793 ஆம் ஆண்டில் எங்களது (தெலுங்கர்களின்) ஆட்சி உதயமாகின்றது. அன்றிலிருந்து இலங்கையில் நாயக்கர்களில் ஆட்சி ஆரம்பமாகிறது. எனினும் அதற்கு முன்னரே பண்டாரம் என்ற வார்த்தை இலங்கைக்கு சென்று விட்டது.

பண்டாரம் என்ற குடியிலேயே திருவள்ளுவர் பிறந்ததாக கூறுகின்றனர். அது உண்மையாகவும் இருக்கலாம். ஏன் என்றால், அவர்கள் மிகவும் திறமையானவர்கள். பட்டியலின வகுப்புகளில் இவர்கள் சற்று மாறுப்பட்டவர்கள். இவர்கள் ஜாதகம் பார்ப்பது கோயில்களில் பூசாரிகளாக பணியாற்றுகின்றனர். பழனியில் இருக்கும் பூசாரிகள் அனைவரும் பண்டாரம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் வம்சாவளியில் வந்தவர்களே பண்டாரநாயக்கர்கள்.

சிங்க( ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கன் ) என்ற கண்டி மன்னர் தமிழகத்தின் மதுரை நாட்டில் இருந்து இரண்டு நாயுடு பெண்களை மணம் முடித்துக்கொள்கிறார். அந்த இரண்டு பெண்களுக்கும் வாரிசுகள் இல்லை.

இதன் பின்னர் 1793 ஆம் ஆண்டில் மதுவரையில் இருந்த இந்த பெண்களின் சகோதரனை(ஸ்ரீ விஜய ராஜசிங்கன் ) கண்டிக்கு அழைத்துச் சென்று மன்னராக முடி சூடுகின்றனர்.

அதன் பின்னர் அங்கு நாயுடுக்களின் ஆட்சி அங்கு ஏற்படுகிறது. சிங்களவர்கள் அனைவருமே நாயுடுகள். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ராஜபக்சவினரின் வம்சாவளியினரும் நூற்றுக்கு நூறு நாயுடுகளே.

இலங்கையில் இருக்கும் ராஜபக்சவினரும், இந்தியாவில் இருக்கும் நாயுடுகளின் வம்சாவளிகள் ஒரே இனத்தவர்களே. அவர்கள் நாயுடுகள் என்பதற்காக அவர்கள் செய்வது அனைத்தையும் நியாயப்படுத்தவில்லை.

அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட குற்றங்கள் முற்றிலும் தவறானது. அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு நாயுடு பேரவையின் தலைவர் காமாட்சி நாயுடு, தெலுங்கர் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்தார். அதனை பின்னர் திராவிட முன்னேற்றக் கழத்துடன் இணைத்து அந்த கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகிறார்.

தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கட்சியை ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைத்தீர்கள் என அண்மையில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்த காமாட்சி நாடு, திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதால், தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தேவை இல்லை எனக் கருதி,அதனை திமுகவுடன் இணைத்ததாகவும் தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது தமது ஆள் என்பதால், தனியாக கட்சியை வைத்திருக்கும் அவசியமில்லை எனவும் கூறியிருந்தார்.

இலங்கையின் கண்டி ராஜ்ஜியத்தின் இறுதி சிங்கள மன்னனான ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கனின் மறைவிக்கு பின்னர், கண்டியை மதுரையை சேர்ந்த நாயக்கர் வம்சத்தை சேர்ந்த நான்கு மன்னர்கள் ஆட்சி செய்தினர். 1739 ஆம் ஆண்டு முதல் 1747 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய ராஜசிங்கனும், 1747 ஆம் ஆண்டு முதல் 1782 ஆம் ஆண்டு வரை கீர்த்தி ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனும் 1782 ஆம் ஆண்டு முதல் 1798 ஆம் ஆண்டு முதல் ராஜாதி ராஜசிங்கனும் 1798 ஆம் ஆண்டு முதல்1815 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனும் கண்டியை ஆட்சி செய்தனர். 1815 ஆம் ஆண்டு கண்டி ராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றினர்.  

https://tamilwin.com/article/telugu-kandy-madurai-nayakkar-kings-1650954987?itm_source=parsely-detail

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசானையும், நாதமுனியையும்… உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமாட்சி நாயுடு ஆந்திராவில்  தெலுங்கர். தமிழ்நாட்டில் திராவிடர் அர்த்தம் புரியுதா? 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கோசானையும், நாதமுனியையும்… உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்.😂

இந்த செய்தியை யாராவது சிங்களத்தில் மொழிமாற்றி போடுங்க உடனே கோ கோம் அமெரிக்கா என்பதுக்கு பதிலா கோ கோம்  தெலுங்கு தேசம் என்று மாற்றி கத்தட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூப்பிடீங்களே என்று, ஓடியாந்தேன்... ஏதோ நம்மால் முடிந்தது.... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

சல்லி சல்லியா நொருக்கிறாங்கள் 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயமா இங்கே பெரிய சண்டையே நடந்தது.... இப்ப... வேறு யாரு.... காமாட்சி நாயுடுவே அடிச்சு சொல்லிப்புட்டார்... 🤗

பண்ணியில், பண்ணிப் பாருங்கோவன்... 😁

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இனி யாழ்ப்பாண கோவியரும் நாயுடுக்கள் தான் போல.. ஏற்கனவே அவர்கள் தாங்கள் கண்டிய ராஜசிங்கன் குடி என்று சொல்லிகொண்டவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பகிடி said:

ஆக இனி யாழ்ப்பாண கோவியரும் நாயுடுக்கள் தான் போல.. ஏற்கனவே அவர்கள் தாங்கள் கண்டிய ராஜசிங்கன் குடி என்று சொல்லிகொண்டவர்கள் 

உப்புடிச் சொல்லாதேயுங்கோ பகிடி, பிறகு அவனுகள் கோவிச்சுப் போடுவானுகள்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த விசயமா இங்கே பெரிய சண்டையே நடந்தது.... இப்ப... வேறு யாரு.... காமாட்சி நாயுடுவே அடிச்சு சொல்லிப்புட்டார்... 🤗

பண்ணியில், பண்ணிப் பாருங்கோவன்... 😁

 

நீ இஸ்டம் போல விளையாடு தல, எவனும் இல்ல குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க🤣.

பிகு

இன்னும் இது போல பல புரட்டுகள் யாழில் வரணும், அவை எதிர் கேள்வி கேட்டு fact check பண்ணபடமல் போகணும். இதன் பலனாக இன்னொரு ஏப்ரல் பூக் ஊடகமாக யாழும் வரணும்.  அப்பவாவது கருத்தியல் பல்லினதுவத்தின் அவசியம் உறைக்கட்டும்.

அதுவரை … 

You dance, me dance …உடான்ஸ்…

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

இன்னும் இது போல பல புரட்டுகள் யாழில் வரணும், அவை எதிர் கேள்வி கேட்டு fact check பண்ணபடமல் போகணும். இதன் பலனாக இன்னொரு ஏப்ரல் பூக் ஊடகமாக யாழும் வரணும்.  அப்பவாவது கருத்தியல் பல்லினதுவத்தின் அவசியம் உறைக்கட்டும்.

அதுவரை … 

காமாட்சி நாயுடு  சொன்னது பொய்யா?  fact check எங்கு செய்யணும்? 

இங்கு தெலுங்கனே தமிழ் இனத்தை அழித்த  ராஜபக்சேவை தெலுங்கன் என்று கூறுமளவுக்கு தமிழ் எதிர்ப்பு தெலுங்கர்களிடம் எவ்வளவு ஊறியிருக்கு என்பதை வாசகர்கள் அறியட்டும் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

காமாட்சி நாயுடு  சொன்னது பொய்யா?  fact check எங்கு செய்யணும்? 

இங்கு தெலுங்கனே தமிழ் இனத்தை அழித்த  ராஜபக்சேவை தெலுங்கன் என்று கூறுமளவுக்கு தமிழ் எதிர்ப்பு தெலுங்கர்களிடம் எவ்வளவு ஊறியிருக்கு என்பதை வாசகர்கள் அறியட்டும் .

கொஞ்சம் பொறுங்கோ.....விரைவில் ராஜபக்ச & ஸ்டாலின் தலைமையில் அகண்ட திராவிடம் அமைப்பார்கள்..

Saravanan's Blog: தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஜி ஆர் க்கு முதலே இயக்கங்களுக்கு trainning கொடுத்தது என் டி ஆர் என்று கேள்வி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நீ இஸ்டம் போல விளையாடு தல, எவனும் இல்ல குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க🤣.

பிகு

இன்னும் இது போல பல புரட்டுகள் யாழில் வரணும், அவை எதிர் கேள்வி கேட்டு fact check பண்ணபடமல் போகணும். இதன் பலனாக இன்னொரு ஏப்ரல் பூக் ஊடகமாக யாழும் வரணும்.  அப்பவாவது கருத்தியல் பல்லினதுவத்தின் அவசியம் உறைக்கட்டும்.

அதுவரை … 

You dance, me dance …உடான்ஸ்…

நா காமன்ஸ் தல..... 😂😁

என்னடா கண்ணு இது, மதுரைக்கு, சா... காமாட்சி நயுடுக்கு வந்த சோதனை.....

ஏதோ.....நாம சொன்னது போல.... நம்ம உடான்சு குழம்புறாரே..... இது தமிழகத்தில், தமிழருக்கு.... ஒரு தெலுங்கர் சொன்னது... கண்ணு...

குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் அவனுகளே கேட்கட்டும், பதிலு குடுக்கிறன் குடுக்கட்டும் கண்ணு....

நோ டென்சன் தல.... 😂

பக்டு செக் அவனுக பண்ணட்டு்ம், பண்ணாம போகட்டும்.... நமக்கேன் பொல்லாப்பு...

நம்ம பேரீச்சம்பழ ஜோலி பார்ப்போமே...

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

காமாட்சி நாயுடு  சொன்னது பொய்யா?  fact check எங்கு செய்யணும்? 

இங்கு தெலுங்கனே தமிழ் இனத்தை அழித்த  ராஜபக்சேவை தெலுங்கன் என்று கூறுமளவுக்கு தமிழ் எதிர்ப்பு தெலுங்கர்களிடம் எவ்வளவு ஊறியிருக்கு என்பதை வாசகர்கள் அறியட்டும் .

 

41 minutes ago, Nathamuni said:

நா காமன்ஸ் தல..... 😂😁

என்னடா கண்ணு இது, மதுரைக்கு, சா... காமாட்சி நயுடுக்கு வந்த சோதனை.....

ஏதோ.....நாம சொன்னது போல.... நம்ம உடான்சு குழம்புறாரே..... இது தமிழகத்தில், தமிழருக்கு.... ஒரு தெலுங்கர் சொன்னது... கண்ணு...

குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் அவனுகளே கேட்கட்டும், பதிலு குடுக்கிறன் குடுக்கட்டும் கண்ணு....

நோ டென்சன் தல.... 😂

பக்டு செக் அவனுக பண்ணட்டு்ம், பண்ணாம போகட்டும்.... நமக்கேன் பொல்லாப்பு...

நம்ம பேரீச்சம்பழ ஜோலி பார்ப்போமே...

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

fact check எங்கு செய்யணும்?  என்றாவது அருளிவிட்டு போங்கள்  குருவே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

அதே கமாட்சி நாயுடு காரு.... ஸ்ராலின் நம்மாளு என்று சொன்னதை புரட்டு என்று ஸ்ராலினோ, திமுகவோ சொல்லலியே கண்ணு.... அப்புறம்?

இப்ப என்ன, ராசபக்சேகளே வந்து இல்லைன்னு சொல்லணுமா, கண்ணு?

சரி விடு கண்ணு..... நம்ம ஜோலிய பார்கலாம். 😊👍

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

 

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

யாழ் தமிழரை தெலுங்கு வ ......குடிகள் என்று இதே யாழில் தலையங்கம் போட்டு அல்லும் பகலும் போராடியவர் இதனால் நான் கடுப்பாக நிழலி அதப்பார்த்து கடுப்பாக வெட்டுப்புள்ளி வாங்கியது வரலாறு உலகம் உருண்டை இப்ப யார் உண்மையான தெலுங்கர் என்பதை தெலுங்கு மக்களே கூறி விட்டார்கள் வழக்கம் போல் இந்த திரியை மறந்து திண்ணை தான் தஞ்சம் என்று சாட்டா ?

அல்லது உங்கடை ஆட்கள் போல் வேலியை பிய்த்து கொண்டு ஓடிப்போய் ஒளித்து நின்று பார்க்கபோரியல் போல் உள்ளது .😃

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

யாழ் தமிழரை தெலுங்கு வ ......குடிகள் என்று இதே யாழில் தலையங்கம் போட்டு அல்லும் பகலும் போராடியவர் இதனால் நான் கடுப்பாக நிழலி அதப்பார்த்து கடுப்பாக வெட்டுப்புள்ளி வாங்கியது வரலாறு உலகம் உருண்டை இப்ப யார் உண்மையான தெலுங்கர் என்பதை தெலுங்கு மக்களே கூறி விட்டார்கள் வழக்கம் போல் இந்த திரியை மறந்து திண்ணை தான் தஞ்சம் என்று சாட்டா ?

அல்லது உங்கடை ஆட்கள் போல் வேலியை பிய்த்து கொண்டு ஓடிப்போய் ஒளித்து நின்று பார்க்கபோரியல் போல் உள்ளது .😃

கமாட்சி நாயுடு காரு.... செல்வநாயகமும் உங்காளா, இல்லையா? 😂

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

சீமான் சிங்கள தலைவர்களை தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று கூறி விட்டார் என்பதுக்காக அந்த திரியை தொடக்கி கடைசியில் சீமான் சொன்னது உண்மையாகி போட்டுது ஆனால் தலை ஓடி............ விட்டார் 😆

Link to comment
Share on other sites

image.gif.43170f12657af5ec70f797a761312113.gifதிராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! ஆய்வு முடிவு!

 4 years ago  aanthai

நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர். இதில் இந்தோ ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். திராவிடம்என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. மொழியியல் அறிஞர் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளை திராவிட மொழிகள் என அழைத்தார். தென்னிந்திய பேச்சு மொழிகளைக் குறிக்கும் போது, வட மொழி ஆய்வாளர்கள் திராவிடிஎன்ற சொல்லால் குறிப்பிட்டனர். தற்காலத்தில் 23க்கும் அதிகமான மொழிகள், திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன, 1.தமிழ், 2.மலையாளம், 3.கன்னடம், 4.தெலுகு, 5.கோண்டி, 6.குரூக், 7.துளு, 8.கூயி, 9.பிராகூய், 10.கூவி, 11.கோயா, 12.மால்தோ, 13.குடகு, 14.கோலாமி, 15.பர்ஜி, 16.கொண்டா(கூபி), 17.கதபா, 18.நாயக்கி, 19.பெங்கோ, 20.கோத்தா,21.தோடா, 22.மண்டா, 23.கொரகா என்பனவாகும்.

இவற்றுள், தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா என்ற எட்டு மொழிகளும் தென்திராவிட மொழிகள்; தெலுகு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டா என்ற 12 மொழிகளும் நடுத்திராவிட மொழிகள்; குரூக், மால்தோ, பிராகூய் என்ற மூன்றும் வட திராவிட மொழிகள் என்ற பகுப்பில் உள்ளடங்குகின்றன என்றெல்லாம் ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில் நம் இந்தியாவில் சுமார் 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிலாங்க் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியாவின் டேராடூனில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவை சேர்ந்து உலக மொழிகளின் பழமை குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குழுவினர் திராவிட கிளை குடும்பங்களில் தங்களது தாய்மொழியை பேச்சுவழக்கில் கொண்டுள்ள ஏராளமான மக்களை நேர்காணல் செய்தனர். அதன் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் இலக்கியத்தின் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக உள்ளன. இதில் தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி என்றும் கூறியுள்ளனர்.

உலகின் தொன்மை மிக்க செம்மொழியாக தமிழ் விளங்கி வருவதாகவும், காலப்போக்கில் அழிந்து போகாமல் பண்டைய காலத்திற்கும் நவீன யுகத்திற்கும் இடையில் இணைப்பு பாலமாக உள்ளது. செய்யுள்கள், கவிதைகள், மதசார்பற்ற மற்றும் பக்திசார்ந்த உரைநடைகள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை தமிழ்மொழியில் எழுத்து வடிவில் இருந்து வருவதாகவும் இந்த ஆய்வு குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்தியா மற்றும் இந்தியாவின் மத்திய பகுதிகளிலும் அருகாமையிலும் உள்ள நாடுகளிலும் 80 மொழி வகைகளாக சுமார் 22 கோடி மக்களால் பேசப்பட்டுவரும் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடித்துள்ளனர். திராவிட மொழியின் தோற்றக்காலம் குறித்து கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாச்சார மேம்பாடுகளில் ஆரம்ப காலகட்டமும் ஒத்துப்போவதாகவும் இக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-ஆரியர்கள் (இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியவர்கள்) எனப்படும் ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.aanthaireporter.com/

 

குடும்பம் என்றால் அதற்கு ஒரு தலைமை இருக்கும். 

திராவிட மொழி குடும்பத்திற்குத் தலைமையாக இருப்பதுதான் தமிழ்.

image.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சீமான் சிங்கள தலைவர்களை தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று கூறி விட்டார் என்பதுக்காக அந்த திரியை தொடக்கி கடைசியில் சீமான் சொன்னது உண்மையாகி போட்டுது ஆனால் தலை ஓடி............ விட்டார் 😆

ஆள்  இப்ப அடிபட்ட பாம்பு மாதிரி😂.......எப்பிடியும் பெரிய உரல் உருட்டோடை திரும்பி வருவார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆள்  இப்ப அடிபட்ட பாம்பு மாதிரி😂.......எப்பிடியும் பெரிய உரல் உருட்டோடை திரும்பி வருவார்🤣

இந்த டிரிக்ஸ் எல்லாம் நம்பியார் காலத்திலயே பார்த்தாச்சு🤣

4 hours ago, Nathamuni said:

கமாட்சி நாயுடு காரு.... செல்வநாயகமும் உங்காளா, இல்லையா? 😂

 

2 hours ago, Paanch said:

image.gif.43170f12657af5ec70f797a761312113.gifதிராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! ஆய்வு முடிவு!

 4 years ago  aanthai

நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர். இதில் இந்தோ ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். திராவிடம்என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. மொழியியல் அறிஞர் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளை திராவிட மொழிகள் என அழைத்தார். தென்னிந்திய பேச்சு மொழிகளைக் குறிக்கும் போது, வட மொழி ஆய்வாளர்கள் திராவிடிஎன்ற சொல்லால் குறிப்பிட்டனர். தற்காலத்தில் 23க்கும் அதிகமான மொழிகள், திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன, 1.தமிழ், 2.மலையாளம், 3.கன்னடம், 4.தெலுகு, 5.கோண்டி, 6.குரூக், 7.துளு, 8.கூயி, 9.பிராகூய், 10.கூவி, 11.கோயா, 12.மால்தோ, 13.குடகு, 14.கோலாமி, 15.பர்ஜி, 16.கொண்டா(கூபி), 17.கதபா, 18.நாயக்கி, 19.பெங்கோ, 20.கோத்தா,21.தோடா, 22.மண்டா, 23.கொரகா என்பனவாகும்.

இவற்றுள், தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா என்ற எட்டு மொழிகளும் தென்திராவிட மொழிகள்; தெலுகு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டா என்ற 12 மொழிகளும் நடுத்திராவிட மொழிகள்; குரூக், மால்தோ, பிராகூய் என்ற மூன்றும் வட திராவிட மொழிகள் என்ற பகுப்பில் உள்ளடங்குகின்றன என்றெல்லாம் ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில் நம் இந்தியாவில் சுமார் 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிலாங்க் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியாவின் டேராடூனில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவை சேர்ந்து உலக மொழிகளின் பழமை குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குழுவினர் திராவிட கிளை குடும்பங்களில் தங்களது தாய்மொழியை பேச்சுவழக்கில் கொண்டுள்ள ஏராளமான மக்களை நேர்காணல் செய்தனர். அதன் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் இலக்கியத்தின் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக உள்ளன. இதில் தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி என்றும் கூறியுள்ளனர்.

உலகின் தொன்மை மிக்க செம்மொழியாக தமிழ் விளங்கி வருவதாகவும், காலப்போக்கில் அழிந்து போகாமல் பண்டைய காலத்திற்கும் நவீன யுகத்திற்கும் இடையில் இணைப்பு பாலமாக உள்ளது. செய்யுள்கள், கவிதைகள், மதசார்பற்ற மற்றும் பக்திசார்ந்த உரைநடைகள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை தமிழ்மொழியில் எழுத்து வடிவில் இருந்து வருவதாகவும் இந்த ஆய்வு குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்தியா மற்றும் இந்தியாவின் மத்திய பகுதிகளிலும் அருகாமையிலும் உள்ள நாடுகளிலும் 80 மொழி வகைகளாக சுமார் 22 கோடி மக்களால் பேசப்பட்டுவரும் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடித்துள்ளனர். திராவிட மொழியின் தோற்றக்காலம் குறித்து கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாச்சார மேம்பாடுகளில் ஆரம்ப காலகட்டமும் ஒத்துப்போவதாகவும் இக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-ஆரியர்கள் (இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியவர்கள்) எனப்படும் ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.aanthaireporter.com/

 

குடும்பம் என்றால் அதற்கு ஒரு தலைமை இருக்கும். 

திராவிட மொழி குடும்பத்திற்குத் தலைமையாக இருப்பதுதான் தமிழ்.

image.gif

நன்றி பெரும்ஸ், நாதம்.

#உறைக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்சாக்களின் பூர்விகம் இப்போதைய மலேசிய - இந்தோனேசியா பிராந்தியம்.  

மலே அடிக்கு சாத்தியக்கூறுகள் மிகவும்  அதிகம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.