Jump to content

ராஜபக்சவினர் எங்களது வம்சாவளியினர்: தமிழ்நாடு காமாட்சி நாயுடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நாயக்க என்ற குடும்ப பெயர்களை கொண்டுள்ளவர்கள், தெலுங்கு நாயுடு வம்சாவளியினர் எனவும் ராஜபக்சவினரும் தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் எனவும் தமிழ் நாடு நாயுடு பேரவையின் தலைவர் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழ் வலையொளி தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

22-62679b69e0d2d.webp

 

பண்டாரநாயக்க என்ற பெயரில் இருக்கும் பண்டார என்பது தமிழில் இருக்கும் பண்டாரம் என்ற பெயர்களை கொண்ட மக்களை குறிக்கும். பண்டாரம் என்பவர் அம்மன் கோயில் ஒன்றில் பூசாரியாக இருந்தார். அவரது பெண்ணை இலங்கைக்கு மணம் முடித்து கொடுத்தனர்.

இலங்கை சென்றது, இந்த பெண்ணின் கணவன் இறந்து போகிறார். இதன் பின்னர், அந்த பெண் இலங்கையில் வாழ்ந்து வருகிறார். அதன் பின்னர், அங்கு ஆட்சி செய்த நாயக்கர்களான நாயுடுகளில் ஒருவரை திருமணம் செய்த பின்னர் பண்டாரநாயக்க என்று குடும்ப பெயர் மாறுகிறது.

இலங்கையில் 1793 ஆம் ஆண்டில் எங்களது (தெலுங்கர்களின்) ஆட்சி உதயமாகின்றது. அன்றிலிருந்து இலங்கையில் நாயக்கர்களில் ஆட்சி ஆரம்பமாகிறது. எனினும் அதற்கு முன்னரே பண்டாரம் என்ற வார்த்தை இலங்கைக்கு சென்று விட்டது.

பண்டாரம் என்ற குடியிலேயே திருவள்ளுவர் பிறந்ததாக கூறுகின்றனர். அது உண்மையாகவும் இருக்கலாம். ஏன் என்றால், அவர்கள் மிகவும் திறமையானவர்கள். பட்டியலின வகுப்புகளில் இவர்கள் சற்று மாறுப்பட்டவர்கள். இவர்கள் ஜாதகம் பார்ப்பது கோயில்களில் பூசாரிகளாக பணியாற்றுகின்றனர். பழனியில் இருக்கும் பூசாரிகள் அனைவரும் பண்டாரம் என்ற பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் வம்சாவளியில் வந்தவர்களே பண்டாரநாயக்கர்கள்.

சிங்க( ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கன் ) என்ற கண்டி மன்னர் தமிழகத்தின் மதுரை நாட்டில் இருந்து இரண்டு நாயுடு பெண்களை மணம் முடித்துக்கொள்கிறார். அந்த இரண்டு பெண்களுக்கும் வாரிசுகள் இல்லை.

இதன் பின்னர் 1793 ஆம் ஆண்டில் மதுவரையில் இருந்த இந்த பெண்களின் சகோதரனை(ஸ்ரீ விஜய ராஜசிங்கன் ) கண்டிக்கு அழைத்துச் சென்று மன்னராக முடி சூடுகின்றனர்.

அதன் பின்னர் அங்கு நாயுடுக்களின் ஆட்சி அங்கு ஏற்படுகிறது. சிங்களவர்கள் அனைவருமே நாயுடுகள். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. ராஜபக்சவினரின் வம்சாவளியினரும் நூற்றுக்கு நூறு நாயுடுகளே.

இலங்கையில் இருக்கும் ராஜபக்சவினரும், இந்தியாவில் இருக்கும் நாயுடுகளின் வம்சாவளிகள் ஒரே இனத்தவர்களே. அவர்கள் நாயுடுகள் என்பதற்காக அவர்கள் செய்வது அனைத்தையும் நியாயப்படுத்தவில்லை.

அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட குற்றங்கள் முற்றிலும் தவறானது. அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் காமாட்சி நாயுடு தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு நாயுடு பேரவையின் தலைவர் காமாட்சி நாயுடு, தெலுங்கர் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்தார். அதனை பின்னர் திராவிட முன்னேற்றக் கழத்துடன் இணைத்து அந்த கட்சியில் இணைந்து செயற்பட்டு வருகிறார்.

தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கட்சியை ஏன் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைத்தீர்கள் என அண்மையில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்த காமாட்சி நாடு, திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பதால், தெலுங்கர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சி தேவை இல்லை எனக் கருதி,அதனை திமுகவுடன் இணைத்ததாகவும் தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது தமது ஆள் என்பதால், தனியாக கட்சியை வைத்திருக்கும் அவசியமில்லை எனவும் கூறியிருந்தார்.

இலங்கையின் கண்டி ராஜ்ஜியத்தின் இறுதி சிங்கள மன்னனான ஸ்ரீ வீரபராக்கிரம நரேந்திர சிங்கனின் மறைவிக்கு பின்னர், கண்டியை மதுரையை சேர்ந்த நாயக்கர் வம்சத்தை சேர்ந்த நான்கு மன்னர்கள் ஆட்சி செய்தினர். 1739 ஆம் ஆண்டு முதல் 1747 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விஜய ராஜசிங்கனும், 1747 ஆம் ஆண்டு முதல் 1782 ஆம் ஆண்டு வரை கீர்த்தி ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனும் 1782 ஆம் ஆண்டு முதல் 1798 ஆம் ஆண்டு முதல் ராஜாதி ராஜசிங்கனும் 1798 ஆம் ஆண்டு முதல்1815 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனும் கண்டியை ஆட்சி செய்தனர். 1815 ஆம் ஆண்டு கண்டி ராஜ்ஜியத்தை பிரித்தானியர் கைப்பற்றினர்.  

https://tamilwin.com/article/telugu-kandy-madurai-nayakkar-kings-1650954987?itm_source=parsely-detail

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோசானையும், நாதமுனியையும்… உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமாட்சி நாயுடு ஆந்திராவில்  தெலுங்கர். தமிழ்நாட்டில் திராவிடர் அர்த்தம் புரியுதா? 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கோசானையும், நாதமுனியையும்… உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்.😂

இந்த செய்தியை யாராவது சிங்களத்தில் மொழிமாற்றி போடுங்க உடனே கோ கோம் அமெரிக்கா என்பதுக்கு பதிலா கோ கோம்  தெலுங்கு தேசம் என்று மாற்றி கத்தட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூப்பிடீங்களே என்று, ஓடியாந்தேன்... ஏதோ நம்மால் முடிந்தது.... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

சல்லி சல்லியா நொருக்கிறாங்கள் 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயமா இங்கே பெரிய சண்டையே நடந்தது.... இப்ப... வேறு யாரு.... காமாட்சி நாயுடுவே அடிச்சு சொல்லிப்புட்டார்... 🤗

பண்ணியில், பண்ணிப் பாருங்கோவன்... 😁

 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இனி யாழ்ப்பாண கோவியரும் நாயுடுக்கள் தான் போல.. ஏற்கனவே அவர்கள் தாங்கள் கண்டிய ராஜசிங்கன் குடி என்று சொல்லிகொண்டவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பகிடி said:

ஆக இனி யாழ்ப்பாண கோவியரும் நாயுடுக்கள் தான் போல.. ஏற்கனவே அவர்கள் தாங்கள் கண்டிய ராஜசிங்கன் குடி என்று சொல்லிகொண்டவர்கள் 

உப்புடிச் சொல்லாதேயுங்கோ பகிடி, பிறகு அவனுகள் கோவிச்சுப் போடுவானுகள்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இந்த விசயமா இங்கே பெரிய சண்டையே நடந்தது.... இப்ப... வேறு யாரு.... காமாட்சி நாயுடுவே அடிச்சு சொல்லிப்புட்டார்... 🤗

பண்ணியில், பண்ணிப் பாருங்கோவன்... 😁

 

நீ இஸ்டம் போல விளையாடு தல, எவனும் இல்ல குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க🤣.

பிகு

இன்னும் இது போல பல புரட்டுகள் யாழில் வரணும், அவை எதிர் கேள்வி கேட்டு fact check பண்ணபடமல் போகணும். இதன் பலனாக இன்னொரு ஏப்ரல் பூக் ஊடகமாக யாழும் வரணும்.  அப்பவாவது கருத்தியல் பல்லினதுவத்தின் அவசியம் உறைக்கட்டும்.

அதுவரை … 

You dance, me dance …உடான்ஸ்…

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

இன்னும் இது போல பல புரட்டுகள் யாழில் வரணும், அவை எதிர் கேள்வி கேட்டு fact check பண்ணபடமல் போகணும். இதன் பலனாக இன்னொரு ஏப்ரல் பூக் ஊடகமாக யாழும் வரணும்.  அப்பவாவது கருத்தியல் பல்லினதுவத்தின் அவசியம் உறைக்கட்டும்.

அதுவரை … 

காமாட்சி நாயுடு  சொன்னது பொய்யா?  fact check எங்கு செய்யணும்? 

இங்கு தெலுங்கனே தமிழ் இனத்தை அழித்த  ராஜபக்சேவை தெலுங்கன் என்று கூறுமளவுக்கு தமிழ் எதிர்ப்பு தெலுங்கர்களிடம் எவ்வளவு ஊறியிருக்கு என்பதை வாசகர்கள் அறியட்டும் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

காமாட்சி நாயுடு  சொன்னது பொய்யா?  fact check எங்கு செய்யணும்? 

இங்கு தெலுங்கனே தமிழ் இனத்தை அழித்த  ராஜபக்சேவை தெலுங்கன் என்று கூறுமளவுக்கு தமிழ் எதிர்ப்பு தெலுங்கர்களிடம் எவ்வளவு ஊறியிருக்கு என்பதை வாசகர்கள் அறியட்டும் .

கொஞ்சம் பொறுங்கோ.....விரைவில் ராஜபக்ச & ஸ்டாலின் தலைமையில் அகண்ட திராவிடம் அமைப்பார்கள்..

Saravanan's Blog: தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இவர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம் ஜி ஆர் க்கு முதலே இயக்கங்களுக்கு trainning கொடுத்தது என் டி ஆர் என்று கேள்வி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நீ இஸ்டம் போல விளையாடு தல, எவனும் இல்ல குண்டக்க மண்டக்க கேள்வி கேட்க🤣.

பிகு

இன்னும் இது போல பல புரட்டுகள் யாழில் வரணும், அவை எதிர் கேள்வி கேட்டு fact check பண்ணபடமல் போகணும். இதன் பலனாக இன்னொரு ஏப்ரல் பூக் ஊடகமாக யாழும் வரணும்.  அப்பவாவது கருத்தியல் பல்லினதுவத்தின் அவசியம் உறைக்கட்டும்.

அதுவரை … 

You dance, me dance …உடான்ஸ்…

நா காமன்ஸ் தல..... 😂😁

என்னடா கண்ணு இது, மதுரைக்கு, சா... காமாட்சி நயுடுக்கு வந்த சோதனை.....

ஏதோ.....நாம சொன்னது போல.... நம்ம உடான்சு குழம்புறாரே..... இது தமிழகத்தில், தமிழருக்கு.... ஒரு தெலுங்கர் சொன்னது... கண்ணு...

குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் அவனுகளே கேட்கட்டும், பதிலு குடுக்கிறன் குடுக்கட்டும் கண்ணு....

நோ டென்சன் தல.... 😂

பக்டு செக் அவனுக பண்ணட்டு்ம், பண்ணாம போகட்டும்.... நமக்கேன் பொல்லாப்பு...

நம்ம பேரீச்சம்பழ ஜோலி பார்ப்போமே...

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

காமாட்சி நாயுடு  சொன்னது பொய்யா?  fact check எங்கு செய்யணும்? 

இங்கு தெலுங்கனே தமிழ் இனத்தை அழித்த  ராஜபக்சேவை தெலுங்கன் என்று கூறுமளவுக்கு தமிழ் எதிர்ப்பு தெலுங்கர்களிடம் எவ்வளவு ஊறியிருக்கு என்பதை வாசகர்கள் அறியட்டும் .

 

41 minutes ago, Nathamuni said:

நா காமன்ஸ் தல..... 😂😁

என்னடா கண்ணு இது, மதுரைக்கு, சா... காமாட்சி நயுடுக்கு வந்த சோதனை.....

ஏதோ.....நாம சொன்னது போல.... நம்ம உடான்சு குழம்புறாரே..... இது தமிழகத்தில், தமிழருக்கு.... ஒரு தெலுங்கர் சொன்னது... கண்ணு...

குண்டக்க மண்டக்க கேள்வி எல்லாம் அவனுகளே கேட்கட்டும், பதிலு குடுக்கிறன் குடுக்கட்டும் கண்ணு....

நோ டென்சன் தல.... 😂

பக்டு செக் அவனுக பண்ணட்டு்ம், பண்ணாம போகட்டும்.... நமக்கேன் பொல்லாப்பு...

நம்ம பேரீச்சம்பழ ஜோலி பார்ப்போமே...

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

fact check எங்கு செய்யணும்?  என்றாவது அருளிவிட்டு போங்கள்  குருவே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

அதே கமாட்சி நாயுடு காரு.... ஸ்ராலின் நம்மாளு என்று சொன்னதை புரட்டு என்று ஸ்ராலினோ, திமுகவோ சொல்லலியே கண்ணு.... அப்புறம்?

இப்ப என்ன, ராசபக்சேகளே வந்து இல்லைன்னு சொல்லணுமா, கண்ணு?

சரி விடு கண்ணு..... நம்ம ஜோலிய பார்கலாம். 😊👍

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

 

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

யாழ் தமிழரை தெலுங்கு வ ......குடிகள் என்று இதே யாழில் தலையங்கம் போட்டு அல்லும் பகலும் போராடியவர் இதனால் நான் கடுப்பாக நிழலி அதப்பார்த்து கடுப்பாக வெட்டுப்புள்ளி வாங்கியது வரலாறு உலகம் உருண்டை இப்ப யார் உண்மையான தெலுங்கர் என்பதை தெலுங்கு மக்களே கூறி விட்டார்கள் வழக்கம் போல் இந்த திரியை மறந்து திண்ணை தான் தஞ்சம் என்று சாட்டா ?

அல்லது உங்கடை ஆட்கள் போல் வேலியை பிய்த்து கொண்டு ஓடிப்போய் ஒளித்து நின்று பார்க்கபோரியல் போல் உள்ளது .😃

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

யாழ் தமிழரை தெலுங்கு வ ......குடிகள் என்று இதே யாழில் தலையங்கம் போட்டு அல்லும் பகலும் போராடியவர் இதனால் நான் கடுப்பாக நிழலி அதப்பார்த்து கடுப்பாக வெட்டுப்புள்ளி வாங்கியது வரலாறு உலகம் உருண்டை இப்ப யார் உண்மையான தெலுங்கர் என்பதை தெலுங்கு மக்களே கூறி விட்டார்கள் வழக்கம் போல் இந்த திரியை மறந்து திண்ணை தான் தஞ்சம் என்று சாட்டா ?

அல்லது உங்கடை ஆட்கள் போல் வேலியை பிய்த்து கொண்டு ஓடிப்போய் ஒளித்து நின்று பார்க்கபோரியல் போல் உள்ளது .😃

கமாட்சி நாயுடு காரு.... செல்வநாயகமும் உங்காளா, இல்லையா? 😂

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

இன்னும்….இன்னும்…

மேலே….மேலே….

(You are both on my side this time கண்ணுகளா…தேங் யூ).

#உறைக்கணும் 😎

சீமான் சிங்கள தலைவர்களை தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று கூறி விட்டார் என்பதுக்காக அந்த திரியை தொடக்கி கடைசியில் சீமான் சொன்னது உண்மையாகி போட்டுது ஆனால் தலை ஓடி............ விட்டார் 😆

Link to comment
Share on other sites

image.gif.43170f12657af5ec70f797a761312113.gifதிராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! ஆய்வு முடிவு!

 4 years ago  aanthai

நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர். இதில் இந்தோ ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். திராவிடம்என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. மொழியியல் அறிஞர் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளை திராவிட மொழிகள் என அழைத்தார். தென்னிந்திய பேச்சு மொழிகளைக் குறிக்கும் போது, வட மொழி ஆய்வாளர்கள் திராவிடிஎன்ற சொல்லால் குறிப்பிட்டனர். தற்காலத்தில் 23க்கும் அதிகமான மொழிகள், திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன, 1.தமிழ், 2.மலையாளம், 3.கன்னடம், 4.தெலுகு, 5.கோண்டி, 6.குரூக், 7.துளு, 8.கூயி, 9.பிராகூய், 10.கூவி, 11.கோயா, 12.மால்தோ, 13.குடகு, 14.கோலாமி, 15.பர்ஜி, 16.கொண்டா(கூபி), 17.கதபா, 18.நாயக்கி, 19.பெங்கோ, 20.கோத்தா,21.தோடா, 22.மண்டா, 23.கொரகா என்பனவாகும்.

இவற்றுள், தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா என்ற எட்டு மொழிகளும் தென்திராவிட மொழிகள்; தெலுகு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டா என்ற 12 மொழிகளும் நடுத்திராவிட மொழிகள்; குரூக், மால்தோ, பிராகூய் என்ற மூன்றும் வட திராவிட மொழிகள் என்ற பகுப்பில் உள்ளடங்குகின்றன என்றெல்லாம் ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில் நம் இந்தியாவில் சுமார் 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிலாங்க் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியாவின் டேராடூனில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவை சேர்ந்து உலக மொழிகளின் பழமை குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குழுவினர் திராவிட கிளை குடும்பங்களில் தங்களது தாய்மொழியை பேச்சுவழக்கில் கொண்டுள்ள ஏராளமான மக்களை நேர்காணல் செய்தனர். அதன் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் இலக்கியத்தின் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக உள்ளன. இதில் தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி என்றும் கூறியுள்ளனர்.

உலகின் தொன்மை மிக்க செம்மொழியாக தமிழ் விளங்கி வருவதாகவும், காலப்போக்கில் அழிந்து போகாமல் பண்டைய காலத்திற்கும் நவீன யுகத்திற்கும் இடையில் இணைப்பு பாலமாக உள்ளது. செய்யுள்கள், கவிதைகள், மதசார்பற்ற மற்றும் பக்திசார்ந்த உரைநடைகள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை தமிழ்மொழியில் எழுத்து வடிவில் இருந்து வருவதாகவும் இந்த ஆய்வு குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்தியா மற்றும் இந்தியாவின் மத்திய பகுதிகளிலும் அருகாமையிலும் உள்ள நாடுகளிலும் 80 மொழி வகைகளாக சுமார் 22 கோடி மக்களால் பேசப்பட்டுவரும் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடித்துள்ளனர். திராவிட மொழியின் தோற்றக்காலம் குறித்து கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாச்சார மேம்பாடுகளில் ஆரம்ப காலகட்டமும் ஒத்துப்போவதாகவும் இக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-ஆரியர்கள் (இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியவர்கள்) எனப்படும் ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.aanthaireporter.com/

 

குடும்பம் என்றால் அதற்கு ஒரு தலைமை இருக்கும். 

திராவிட மொழி குடும்பத்திற்குத் தலைமையாக இருப்பதுதான் தமிழ்.

image.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சீமான் சிங்கள தலைவர்களை தெலுங்கு வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்று கூறி விட்டார் என்பதுக்காக அந்த திரியை தொடக்கி கடைசியில் சீமான் சொன்னது உண்மையாகி போட்டுது ஆனால் தலை ஓடி............ விட்டார் 😆

ஆள்  இப்ப அடிபட்ட பாம்பு மாதிரி😂.......எப்பிடியும் பெரிய உரல் உருட்டோடை திரும்பி வருவார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆள்  இப்ப அடிபட்ட பாம்பு மாதிரி😂.......எப்பிடியும் பெரிய உரல் உருட்டோடை திரும்பி வருவார்🤣

இந்த டிரிக்ஸ் எல்லாம் நம்பியார் காலத்திலயே பார்த்தாச்சு🤣

4 hours ago, Nathamuni said:

கமாட்சி நாயுடு காரு.... செல்வநாயகமும் உங்காளா, இல்லையா? 😂

 

2 hours ago, Paanch said:

image.gif.43170f12657af5ec70f797a761312113.gifதிராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! ஆய்வு முடிவு!

 4 years ago  aanthai

நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர். இதில் இந்தோ ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். திராவிடம்என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. மொழியியல் அறிஞர் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளை திராவிட மொழிகள் என அழைத்தார். தென்னிந்திய பேச்சு மொழிகளைக் குறிக்கும் போது, வட மொழி ஆய்வாளர்கள் திராவிடிஎன்ற சொல்லால் குறிப்பிட்டனர். தற்காலத்தில் 23க்கும் அதிகமான மொழிகள், திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன, 1.தமிழ், 2.மலையாளம், 3.கன்னடம், 4.தெலுகு, 5.கோண்டி, 6.குரூக், 7.துளு, 8.கூயி, 9.பிராகூய், 10.கூவி, 11.கோயா, 12.மால்தோ, 13.குடகு, 14.கோலாமி, 15.பர்ஜி, 16.கொண்டா(கூபி), 17.கதபா, 18.நாயக்கி, 19.பெங்கோ, 20.கோத்தா,21.தோடா, 22.மண்டா, 23.கொரகா என்பனவாகும்.

இவற்றுள், தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா என்ற எட்டு மொழிகளும் தென்திராவிட மொழிகள்; தெலுகு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டா என்ற 12 மொழிகளும் நடுத்திராவிட மொழிகள்; குரூக், மால்தோ, பிராகூய் என்ற மூன்றும் வட திராவிட மொழிகள் என்ற பகுப்பில் உள்ளடங்குகின்றன என்றெல்லாம் ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில் நம் இந்தியாவில் சுமார் 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிலாங்க் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியாவின் டேராடூனில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவை சேர்ந்து உலக மொழிகளின் பழமை குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குழுவினர் திராவிட கிளை குடும்பங்களில் தங்களது தாய்மொழியை பேச்சுவழக்கில் கொண்டுள்ள ஏராளமான மக்களை நேர்காணல் செய்தனர். அதன் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் இலக்கியத்தின் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக உள்ளன. இதில் தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி என்றும் கூறியுள்ளனர்.

உலகின் தொன்மை மிக்க செம்மொழியாக தமிழ் விளங்கி வருவதாகவும், காலப்போக்கில் அழிந்து போகாமல் பண்டைய காலத்திற்கும் நவீன யுகத்திற்கும் இடையில் இணைப்பு பாலமாக உள்ளது. செய்யுள்கள், கவிதைகள், மதசார்பற்ற மற்றும் பக்திசார்ந்த உரைநடைகள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை தமிழ்மொழியில் எழுத்து வடிவில் இருந்து வருவதாகவும் இந்த ஆய்வு குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்தியா மற்றும் இந்தியாவின் மத்திய பகுதிகளிலும் அருகாமையிலும் உள்ள நாடுகளிலும் 80 மொழி வகைகளாக சுமார் 22 கோடி மக்களால் பேசப்பட்டுவரும் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடித்துள்ளனர். திராவிட மொழியின் தோற்றக்காலம் குறித்து கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாச்சார மேம்பாடுகளில் ஆரம்ப காலகட்டமும் ஒத்துப்போவதாகவும் இக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-ஆரியர்கள் (இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியவர்கள்) எனப்படும் ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.aanthaireporter.com/

 

குடும்பம் என்றால் அதற்கு ஒரு தலைமை இருக்கும். 

திராவிட மொழி குடும்பத்திற்குத் தலைமையாக இருப்பதுதான் தமிழ்.

image.gif

நன்றி பெரும்ஸ், நாதம்.

#உறைக்கட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்சாக்களின் பூர்விகம் இப்போதைய மலேசிய - இந்தோனேசியா பிராந்தியம்.  

மலே அடிக்கு சாத்தியக்கூறுகள் மிகவும்  அதிகம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.