Jump to content

உயர்தர கணித பேராசான் நல்லையா மாஸ்டர் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர கணித பேராசான் நல்லையா மாஸ்டர் காலமானார்

 

spacer.png

 

பிரபல கணித ஆசிரியர் கந்தையா நல்லையா(பிறப்பு: 01/02/1945) அவர்கள் காலமானார். கடந்த நான்கு தசாப்த காலமாக வடமராட்சி பிரதேசத்திலே கல்வி பொதுத்தராதர உயர்தர வகுப்புக்களுக்கு கணிதபாடம் கற்பித்து பலபொறியியலாளர்களையும், பலகணித பட்டதாரிகளையும் உருவாக்கிய  கொம்மந்தறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணித பேராசான் கந்தையா நல்லையா இன்று (26.04.2022) மாலை  காலமானார்.

 


இவர் கந்தையா குட்டிப்பிள்ளையின் அன்பு மகனும், கந்தையா அழகதுரை(அமரர்), சின்னராசா பூபதி, பரராஜசிங்கம் பூமணி, அழகலிங்கம் தவமணி(ஜேர்மனி), கந்தையா தங்கராசா(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரனும், நல்லையா பவானி(மாவீரர் லெப்டினன்ட் நித்திலா  வீரச்சாவு: 26.06.1989) , நல்லையா வசீகரன், நல்லையா சுபாகரன்(கனடா), நல்லையா பபாகரன்(ஜேர்மனி) ஆகியோரின் தந்தையும், வசீகரன் சுதேஸ்வரி, சுபாகரன் மஞ்சுளாதேவி(கனடா), பபாகரன் துவேனிகா(ஜேர்மனி) ஆகியோரின் மாமனாரும், வசீகரன் அன்பன், வசீகரன் அபிமேனன், வசீகரன் அபிதா, சுபாகரன் குணாளன் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள்  புதன்கிழமை (27/04/2022) அவரது இல்லத்தில் நடைபெற்று , 14.00 மணியளவில் அவரது பூதவுடல் மயிலியதனை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனக்கிரிகைகள் இடம்பெறும் என்பதனை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணித ஆசான் நல்லையா மாஸ்ரரிடம் சில மாதங்கள் மாத்திரமே படித்திருக்கின்றேன். அதற்கு மேல் படிக்கக் கொடுத்து வைக்க்கவில்லை.

கம்பீரமான தோற்றமும், வசீகரமான முகமும், கடினமான தூய, பிரயோக கணக்குகளை எல்லாம் இலகுவாக விளங்கப்படுத்தும் அவரது இலாவகவும் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. திரிகோண கணிதத்திலும், நுண்கணிதத்திலும் (calculus) நல்லையா மாஸ்ரரிடம் இருந்து பெற்ற அடிப்படை அறிவும், பூரணமான தர்க்கத்துடன் விடைகளை எழுத அவர் கற்றுத்தந்ததும் இங்கிலாந்தில் இலகுவாகக் கல்வியைத் தொடர உதவியது.

ஆசான் நல்லையா மாஸ்ரருக்கு சிரம் தாழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்........!

தகவலுக்கு நன்றி கிருபன்......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணித ஆசான் நல்லையா மாஸ்ரரிடம் படித்திருக்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கணித ஆசான் நல்லையா மாஸ்ரரிடம் இலவசமாக படித்திருக்கின்றேன். நான் இந்த நிலையில் இருப்பதிற்கு இவரும் ஒருவர்🙏🙏🙏

ஆசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

இவர்  (ஆசிரியர் கந்தையா நல்லையா) கந்தையா குட்டிப்பிள்ளையின் அன்பு மகனும்

இந்த பூர்வீகம் யாருக்காவது தெரியுமா?

தெரிந்தால், தயவு செய்து அறியத்  தரவும்.

1900 க்கு முதல் அறிய முடியாத (தொலைந்த?) எனது ஓர் பகுதி சந்ததி வழியாக இருக்குமோ என்று நெருடலாக இருக்கிறது.

நன்றி.

எவராயினும், ஆத்மா சாந்தி. அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and sitting

ஆசான்களிடம் பரீட்சைக்கு படிக்கும் கலாசாரம் கோழிக்கூட்டு பண்ணைகள் போன்று  தனியார் கல்வி நிலையங்கள் யாழில் இருக்கும் காலத்தில் இவர் தனித்துவமானவர் அடுத்தவர் உடுப்பிட்டி நீலகண்டன் கட்டையாக இருப்பார் இந்த இருவரையும் வாழ்வில் மீண்டும்  சந்திக்கணும் என்று இருந்தேன் .. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

மனோன்மணி அம்பாள் உவந்த மகத்துவம் மிகு கணித ஆசான் நல்லையா சேர்

நல்லையா சேர் எப்படி எல்லாம் எம்மை ஆட்கொண்டார் என எண்ணுகையில் 

‘‘கணந்தோறும் தோன்றும் வியப்புக்கள்’’ என சுப்பிரமணிய பாரதியார் பாஞ்சாலி சபதத்தில் உரைத்த பாடலை முதலில் ஒப்புவிக்கத் தோன்றுகின்றது.
‘‘கணந்தோறும் வியப்புக்கள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாய் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ? ஆங்கே,
கணந்தோறும் ஒருபுதிய வண்ணங் காட்டிக்
காளிபரா சக்திஅருள் களிக்குங் கோலம்
கணந்தோறும் அவள்பிறப்பாள் என்று மேலோர்
கருதுவதன் விளக்கத்தை இங்குக் காண்பாய்.”

எல்லோருக்கும் பிரியமான நல்லையா சேர் வடமராட்சியில் கொம்மாந்துறையில் கோவில் கொண்டு உறையும் அன்னை மனோன்மணி அம்பாள் உவந்த மகத்துவம் மிக்க கணித ஆசான் என்றால் மிகையாகாது. அவரிடம் நாம் கற்கும் போது கணந்தோறும் வியப்புகள் புதியன தோன்றும் வண்ணம் அடுக்கடுக்காகக் கணித எண்ணக்கருக்களையும், புதிர்களையும், பயிற்சிகளையும் அதிசயக்கத்தக்க ஆர்வத்தை தூண்டும் வகையில், எம்மவரின் சிந்தையில் நிலைபெறும் வகையில் சேர் ஒப்புவிப்பதைக் கண்டு நவநவமாய்க் களிப்போம். பயிற்சி வினாக்களுக்கான விடைகளை மாணவர்கள் முயன்ற பின் நல்லையா  சேர் பலவிதமான முறைகளில் விடைகளைப் பெறும் வழிகளை ஒப்புவித்து புதிய வண்ணங்கள் காட்டி மகிழ்விப்பார். இவ்வாறாக கணந்தோறும் புதிய விடயங்களைக் கற்பித்து எமது ஆர்வத்தைத் தூண்டி நல்லையா சேர் மகிழ்வுறும் கோலம், கணந்தோறும் சேர் புதிய பிறப்பெடுத்து வருவது போன்ற அதிசயமான ஆற்றல் மிகுந்த ஆசானாக எம்மைப் பிரமிக்க வைக்கும்.

இலங்கை சுதந்திரம் அடையும். காலத்தையண்டி 1945 ஆம் ஆண்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நல்லையா சேர் பிறந்தார். சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில் விஞ்ஞானம் மற்றும் கணிதக் கல்வி என்பன மேட்டுக் குடியினருக்கே பெரும்பாலும் உரித்தானதாகவே இருந்தது. எமது பிரதேசத்தின் கணித ஜாம்பவனாகத் திகழ்ந்த நல்லையா சேர், தில்லையம்பலம் சேர், வேலாயுதம் சேர் ஆகியோர் சமகாலத்தில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் கல்வி பயின்று கணித ஆசான் ஏபிரகாம் மாஸ்டரின் வழிகாட்டலில் கணிதத் துறையில் தேர்ச்சி பெற்று பேரதெனியா பல்கலைக்கழகம் சென்று தம்மை மேம்படுத்தி எம்போன்ற மாணவச் செல்வங்கட்கெல்லாம் குருவாயிருந்து வாழும் வழிகாட்டி ஒளி விளக்காகத் திகழ்ந்தார்கள்.

நானும் எனும் சகோதரர்களும் நல்லையா சேரிற்கு பெரிதும் நன்றியுடையவர்களாக  இருக்கின்றோம். எனது மூத்த சகோதரர் பொறியியலாளர் திரு.சிறிஸ்கந்தராசா முதல் ஏனைய நான்கு சகோதரர்களும் தூய கணிதம், பிரயோக கணிதம் ஆகிய இரண்டு பாடங்களையும் நல்லையா சேரிடம் கற்று சிறப்புப் பயிற்சி பெற்று உயர்நிலைப் பட்டங்களைப் பெற்றுக் கொண்டோம். நாம் எல்லோரும் பொறியியலாளராகவும் கணிதப் போராசிரியராகவும் சிறப்புப் பெற்று சீலமாக வாழ சீரருள் புரிந்த நல்லையா சேர் அவர்களை எமது ஆதவனாக போற்றித் துதிக்கின்றோம்.

நல்லையா சேரின் கணிதக் கற்பித்தலின் ஆரம்பம் 1966-67 களில் கரணவாய் தாமோதர வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் அப்போதைய மாணவர்களுக்கான (எனது மூத்த சகோதரர் உட்பட) வழிகாட்டல் கற்பித்தலாக அமைந்தது. இதனாலோ என்னவோ கரணவாய் நல்லையா சேரின் பிரியமான இடமாகவும் அவரின் பல வாழ்நாள் நண்பர்களைக் கொண்ட இடமாகவும் விளங்குகின்றது. நல்லையா சேரின் ஐம்பது வருடங்களாக (அரை நூற்றாண்டு) பிரணமித்த கணிதக் கற்பித்தல் 2015ஆம் ஆண்டு முடிவுறும் வகையில் எமது கரணவாய் பிரதேசம் உட்பட வடமராட்சியின் பல எண்ணற்ற பல மாணவர்கள் கணித பாடத்தில் தேர்ச்சி பெற்று  சாதனையாளர்களாகவும்,

  பொறியியலாளர்களாகவும், துறைசார் விற்பன்னர்களாகவும், கணித ஆசிரியர்களாகவும் பிரகாசிக்க வழிசமைத்தது. நல்லையா சேரின் சேவையால் வடமராட்சிப் பிரதேசம் வியப்புறும் வகையில் உயர்தரப் பரீட்சையில் கணித பாடத்தில் தொடர்ந்து மேன்மை அடைவுச் சுட்டிகளைப் பெற்று இலங்கைத் தீவின் மூளை என்ற கூற்றை மேலும் உன்னதமாக்கியது. நல்லையா சேரின் பிறந்த ஊரான கொம்மாந்தறைக்கு ஒரு புதிய விலாசமாக சேர் அமைந்தார் என்பது மிகையாகாது. சேரின் பழைய மாணர்கள் தமது விடுமுறைக்காலங்களில் சேரை சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக்கொள்ள அவரின் கொம்மாந்தறை வீட்டுக்கு சென்ற வண்ணமிருப்பார்ககள்.  சேரின் மனைவியாரும் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் வீடு நாடிச் செல்வோரை இனிதே உபசரிப்பார்கள்.

நல்லைய சேர் ஒரு சிறந்த  குருவிற்கான எல்லா அம்சங்களையும் கொண்டிருந்தார். சேரின் தோற்றம் மிகவும் கம்பீரமானது. காண்பவரின் கவனத்தை ஈர்த்திருக்கவல்லது. அவரது வார்த்தை (அல்லது மொழி) எமக்கெல்லாம் மந்திரமூலமாக  சொற்சுவை பொருட்சுவை பொருந்தியதாக மனதை அலைய விடாமல் நிறைபெறச் செய்யும். அவரது கிருபையும் நல்லாசிகளும் எம்போன்ற பல் சந்ததி மாணவர்களை சான்றோர்களாக்கியது. நல்லையா சேரின் அறிவிலும் ஆளுமையிலும் பரிவிலும் அவரது மாணவர்கள் மயங்க நின்றனர். மாணவர்களின் அன்பில் சேர் மயங்கி நின்றார் என்பதே பொருந்தும்.

நல்லையா சேரின் உயர்விலும் உன்னத கற்பித்தல் பணியிலும் பின்புலமாக நின்ற துணை அவரது அன்புக்குரிய  பாரியார் செல்லப்பாக்கியம் அம்மையார் என்றால் மிகையாகாது. சேர் மணமுடித்த காலத்திலிருந்து அரச தொழிலை நாடாது சுயதொழிலாக கணிதம் கற்பிப்பதை மேற்கொண்ட வேளையில் அவர்களின் ஊரான கொம்மாந்தறைக்கே உரித்தான வெங்காயச் செய்கையினை அவரது பாரியார் தலைமையில் மேற்கொண்டு கடுமையான உழைப்பாளிகளாக திகழ்ந்தார். நல்லையா சேர் தம்பதியியனர் நீண்ட இல்லற வாழ்வில் சிறப்புடன்  பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்த்து பேணிப் பாதுகாத்து பேரப்பிள்ளைகளையும் கண்டு, மகிழ்வுடன் உற்றார் உறவினருக்கும் உதவியான இருந்தனர். நல்லையா சேர் தன்னைத் தொழில் ரீதியாக முற்றாக அர்ப்பணிக்கவும் செல்லபாக்கியம் அம்மையார் ஒரு மனைவியாக, அன்னையாக, பாட்டியாக காலத்தால் ஆற்றிவந்தமை போற்றுதற்குரியது. அதேவேளை சேரின் அன்புக்குரிய நான்கு பிள்ளைகளின் அவரின் ஏகபுத்திரி செல்வி பவானி எம்மக்களிற்கெல்லாம் விடுதலை வேண்டி ஒரு வீர மகளீராக மிளிர்ந்து தன்னையயே ஆகுதியாக்கினார். மறுமைக்கு நீங்கிய பிரிவுச் சுமையை சேருடன் செல்லபாக்கியம் அம்மையாரும் கனத்த இதயத்துடன் சுமந்துகொண்டு தனது ஏனைய பிள்ளைகளினதும் எம்போன்ற மாணவர்களினதும் நலன்களை மேம்படுத்த வேண்டும் என்ற விருப்புடன் வாழ்நாள் முழுவதும் கல்விப் பணியிலும், சமூகப் பணியிலும் ஈடுபடுத்தி வாழ்ந்து வந்தனர்.

இன்றைய அறிவுலகு விஞ்ஞான அடிப்பமையிலான ஒழுங்குபடுத்தப்பட்டு பேணப்படும் அறிவுடமை விஞ்ஞானம் எனப்படலாம். அறிவுடமையை ஒழுங்குபடுத்தி உதவும் மொழி அல்லது கருவியாக கணிதம் அமைகிறது. மேலும் இன்னொரு வகையில் கூறுவதாயின் எந்தவொரு விடயத்தையும் ஆழமான முறையில் புரிந்துகொள்ள முயலும்போது கணிதம் ஒரு கருவியாகத் துணைபுரிகிறது. வைரத்தை வைரத்தால் தான் வெட்ட முடியும். அதே போல் கணிதத்தையும் தர்க்க ரீதியான முறைமைகளினால் தான் கையாளமுடியும். நல்லையா சேர் கணிதப் பாடத்தை உயர்தர மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்பித்து இன்புற முடிந்தமைக்கு வைராக்கியமும், தெளிந்த சிந்தனையும், தர்க்க முறைகளிலிருந்த தேர்ச்சியும், மாணவர்களின் மீதான மெச்சத்தக்க அன்பும், விந்தையான கணித நுட்பங்களை  எளிதான முறையில் ஒப்புவிக்கும் திறனும் அவரின் மூலதன உரிமங்கள் ஆயின. முடிவாக.
நல்லையா சேர் கொம்மாந்தறையில் உறையும் மனோன்மணி அம்பாள் உவந்த கணிதப் பெருந்தகை.வடமராட்சி மண்ணின் மைந்தர்கள் உயரப்பறந்திட சேர் ஆற்றிய  அரை நூற்றாண்டுக்கு மேலான சீரிய சேவை போற்றுதலுக்கும் மதிப்புக்குமுரியது. சேர் தனது இறுதிக் காலத்தை இடர் இன்றி கழித்திட அரும்பணி செய்த துணைவியார் மூத்த மகன் வசீகரன், பேரப்பிள்ளைகள் ஆகியோர் புண்ணியவான்கள்.

நல்லையா சேரின் அடியினைப் பின்பற்றி கணிதத் துறையில் நானும் பல மேன்மைகளைப் பெற்று ஒரு கணிதப் பேராசிரியராக உயர்வுற தனது நல்லாசிகளை என்றும் வழங்கிவந்த எனது பிரியமான ஆசானின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனின் அருளாசியை வேண்டி அமைகிறேன்.

சாந்தி! சாந்தி!! சாந்தி!!

பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா,
கணிதப் பேராசிரியர்,
துணைவேந்தர் 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம்

 

https://www.facebook.com/100008121166242/posts/3305141126433227/?d=n

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.