Jump to content

#GoHomeGota போராட்டம்: தமிழர்கள் தூரவிலகி நிற்பதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

#GoHomeGota போராட்டம்: தமிழர்கள் தூரவிலகி நிற்பதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை!

on April 26, 2022

IMG_0415-scaled.jpg?resize=1200%2C550&ss

Photo, Selvaraja Rajasegar

தென்னிலங்கையில் இன்று நடைபெறுகின்ற போராட்டங்கள் பொருளாதார இடர்பாடுகளின் விளைவாக மூண்டவை. முன்னரைப் போலன்றி மிகவும் இளையவர்களும் படித்தவர்களும் பெருமளவில் பங்கேற்கிறார்கள். ஆனால், பொருளாதார நிவாரணம் கேட்டு சாதாரண மக்கள் வீதிகளில் இறங்கியிருப்பதை செவிசாய்க்காமல் ஜனாதிபதியும் அரசாங்கமும் அலட்சியம் செய்வதால் நாளடைவில் அவை அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போராட்டங்களாக முனைப்படைந்து இன்று உலகின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன.

பௌத்த சிங்கள பேரினவாத போதையை ஊட்டி தங்களை பிழையாக வழிநடத்திய ராஜபக்‌ஷக்கள் நாட்டை வங்கரோத்து அடையச் செய்துவிட்டார்கள் என்ற புரிதல் சிங்கள சமுதாயத்தின் கணிசமான பிரிவினர் மத்தியில் வந்திருக்கிறது. அதற்காக அவர்கள் தமிழர்களின் அபிலாசைகள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்பவர்களாக மாறிவிட்டார்கள் என்றோ, மாறுவார்கள் என்றோ நான் கூறவில்லை. ஆனால், அந்தப் புரிதல் மேலும் அவர்கள் மத்தியில் விரிவடையக்கூடியதான ஒரு தந்திரோபாயத்தையே தமிழர் அரசியல் சக்திகள் கையாளவேண்டும்.

அதை விடுத்து நாம் கஷ்டப்பட்டபோது நீங்கள் குரல் கொடுக்கவில்லை. அதனால் நீங்கள் கஷ்டப்படும் போது நாம் ஒருமைப்பாட்டைக் காட்டமாட்டோம் என்று விதண்டாவாதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடாது. காலமாற்றத்துக்கேற்ப நாம் சிந்திக்கவேண்டும்.

தமிழர்கள் நெடுகவும் கடந்த காலத்தில் வாழக்கூடாது. கடந்தகால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று புதிய பாதையை வகுக்கவேண்டும். மாறிவரும் உலகில் புதிய வாய்ப்புக்களை நாம் தவறவிடவும் கூடாது. இன்று ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக கிளர்ந்தெழுந்து அவர்களை வீட்டுக்குப் போகுமாறு கேட்பவர்கள் தென்னிலங்கையின் புதிய தலைமுறையினர். தற்போதைய போராட்டங்களில் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளைப் பொறுத்தவரை, அவர்களும் நாங்களும் சந்திக்கக்கூடிய பல புள்ளிகள் இருக்கின்றன. அதை பயன்படுத்துவதன் மூலம் வரும் காலத்தில் புதியதொரு அரசியல் கலாசாரத்துக்கு வழியை சிறிது சிறிதாக திறக்க வாய்ப்புக்கள் வரலாம். அது ஒரு நீண்டகால செயன்முறை.

காலங்காலமாக இனவாத அரசியலுக்குள் மூழ்கியிருந்த ஒரு சிங்கள சமுதாயத்தின் இன்றைய தலைமுறையினர் காலிமுகத்திடலில் வெளிப்படுத்துகிற கோசங்களின் ஆரோக்கியமான அம்சங்களை நாம் அடையாளம் காணவேண்டும். மூன்று தசாப்தகால போரின்போதான பொருளாதார இடர்பாடுகளை எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாம், தற்போதைய நெருக்கடியையும் கடந்து செல்வோம் என்று கூட சிலர் பொருந்தாத்தன்மையாக பேசுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

அதைவிடுத்து எம்மையும் அவலத்துக்குள்ளாக்குகிற பொருளாதார இடர்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரக் கோரியும் அந்த இடர்பாடுகளுக்கு காரணமான ஆட்சியாளர்களை விரட்ட வேண்டியும் நடைபெறுகின்ற போராட்டங்களில் இருந்து எம்மைத் தூரவிலக்குவதன் மூலம் நாம் சாதிக்கப்போவது எதுவும் இல்லை.

வீரகத்தி தனபாலசிங்கம்
 

 

https://maatram.org/?p=10028

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரும்புபவர்கள் போகலாம்.. போகாதை என்று தடுக்காமல் விடலாம்.. ஆனால் எல்லாரும் போகோனும் எண்டு வற்புறுத்தகூடாது… இவர் செய்வது போல் தமிழர்கள் ஒதுங்கி இருக்காமல் போகோனும் அனைவரும் எண்டு பிரச்சாரம். செய்வது பப்பாவில் ஏற்றுவது மிகவும் தவறு.. ஏற்கெனவே நொந்து வெந்து அழிந்து ஓய்ந்து கிடக்குர இனம்.. நாளைக்கு போராட்டத்துக்கு போன இளம் தமிழ் பிள்ளைகளின் போட்டோக்களை எடுத்து வைத்து கொண்டு சிங்கள புலனாய்வுத்துறை தேடி தேடி அழித்தால் இவர் வருவாரோ காப்பாத்த.. எத்தனை என் நண்பர்கள் இப்படி ஈபிடீயாலும் புலநாய்வுத்துறையாலும். 2000-2009 காலப்பகுதியில் கொல்லப்பட்டிருப்பார்கள்.. பட்டவனுக்குத்தான் வலி தெரியும்.. சைக்கிள் கோஸ்டி மாதிரி ஏத்தி விட்டு சாகக்குடுக்குர வேலை இது.. 

Link to comment
Share on other sites

1 minute ago, கிருபன் said:

#GoHomeGota போராட்டம்: தமிழர்கள் தூரவிலகி நிற்பதால் சாதிக்கப்போவது எதுவுமில்லை!

on April 26, 2022

 

காலங்காலமாக இனவாத அரசியலுக்குள் மூழ்கியிருந்த ஒரு சிங்கள சமுதாயத்தின் இன்றைய தலைமுறையினர் காலிமுகத்திடலில் வெளிப்படுத்துகிற கோசங்களின் ஆரோக்கியமான அம்சங்களை நாம் அடையாளம் காணவேண்டும். மூன்று தசாப்தகால போரின்போதான பொருளாதார இடர்பாடுகளை எதிர்கொண்டு சமாளித்தவர்கள் நாம், தற்போதைய நெருக்கடியையும் கடந்து செல்வோம் என்று கூட சிலர் பொருந்தாத்தன்மையாக பேசுவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

 

 

https://maatram.org/?p=10028

அப்படியே காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் அமைத்து இருக்கும் ரணவிரு கிராமத்திற்கு தமிழர்களும் சென்று றபான் அடித்து, கிரிபத் சாப்பிட்டு தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை போரில் வெற்றியை ஈட்டித் தந்த இராணுவ வீரர்களின் புகழையும் போற்றிப் பாடினால் இன்னும் நல்லது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.