Jump to content

மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனது ஆக்கிரமிப்பு யுத்த முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மக்களை வெளியேற்றக்கூடிய மனிதாபிமான பாதைகளைவேண்டுமென்றே தடுத்து மூடிய ரஸ்ஸியா

Zelenskyy accuses Russia of attack on humanitarian corridor in Mariupol |  Business Standard News

மரியோபுல் மீதான முற்றுகையின்பொழுது, உள்ளே அகப்பட்டிருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு பல சர்வதேச அமைப்புக்களும் நாடுகளும் முயன்றன. இவ்வாறான முயற்சிகளின் விளைவாக ரஸ்ஸியா தன்னால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து மக்கள் சிலரை வெளியேற்ற இணக்கியபோதும், அவ்வாறு திறக்கப்பட்ட பாதுகாப்பான வழிகள் மீது கடுமையான எறிகணை வீச்சினை நடத்தி மக்கள் வெளியேறுவதைத் தடுத்து நிறுத்தியதுடன் அவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்ட மக்களையும் கொன்றுதள்ளியது. 

பங்குனி 5 ஆம் நாளன்று, ஐந்து மணித்தியால யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு ரஸ்ஸியா இணங்கியபோதும்கூட, மக்கள் பாதுகாப்பாக வெளியேற முற்பட்ட வேளையில் யுத்த நிறுத்தத்தையும் மீறி மக்கள் செல்லும் பாதை நெடுகிலும் மிகக் கடுமையான செல்த் தாக்குதலை நடத்தியது. இதனால் இந்த முயற்சியையும் யுத்த நிறுத்த கால எல்லைக்குள்ளேயே கைவிடவேண்டியதாகியது. 
மறுநாள் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைமையில் மீண்டும் மக்களை வெளியேற்ற எடுத்த முயற்சியையும் ரஸ்ஸியாவின் கடுமையான தாக்குதல்கள் முறியடித்திருந்தன.  மேலும், பங்குனி 7 ஆம் திகதி சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் ரஸ்ஸியாவினால் பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்ட மக்கள் வெளியேற்றப்பாதையினைப் பரிசோதித்தபோது, அப்பாதை முழுதும் ரஸ்ஸிய ராணுவம் கண்ணிவெடிகளைப் புதைத்துச் சென்றிருந்ததைச் சாட்சியப்படுத்தியிருக்கிறது. 

Russian attack on railway station in eastern Ukraine leaves dozens dead,  officials say | Fox News

 

சிலவேளை ரஸ்ஸியா மக்களை மீட்கவே மனிதாபிமான மீட்பு நடவடிக்கையினை நடத்துகிறது (இலங்கை அரசும் அவ்வாறுதான் தமிழர்களை புலிகளிடமிருந்து மீட்க யுத்தம் செய்வதாக அறிவித்திருந்தது) என்று நம்பும் சிலருக்கு ரஸ்ஸியாவின் இந்த செயல் முள்ளிவாய்க்காலில் தானே அறிவித்த யுத்த சூனிய வலயங்கள் மீது சிங்கள ராணுவம் நடத்திய தாக்குதல்கள் நடக்கவில்லையோ என்கிற சந்தேகத்தினை ஏற்படுத்தலாம். கருணா துரோகம் செய்யவில்லையென்று தற்போது நம்பத் தொடங்கியிருக்கும் இவர்களுக்கு இலங்கையின் முள்ளிவாய்க்கால் கொலைகளும், ரஸ்ஸியாவின் மரியோபுல் கொலைகளும் நியாயப்படுத்தப்படக்கூடியவைதான் என்று தோன்றினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. 

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

அணுமின் நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியமை

 

Russia-Ukraine war: Fire at Zaporizhzhia nuclear plant put out | Russia-Ukraine  war News | Al Jazeera

பங்குனி 3 ஆம் திகதி, ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சப்போரிச்சியா மின் நிலையம் அமைந்திருக்கும் பகுதியை நோக்கி இரண்டு ரஸ்ஸியத் தாங்கிகளும், 10 கனரக ரஸ்ஸிய வாகனங்களும் முன்னேறிவந்தன. நிலையத்திற்கு வெளியே காவலில் ஈடுபட்டிருந்த உக்ரேனிய ராணூவத்திற்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்குமிடையே துப்பாக்கிச் சமர் ஆரம்பித்தது. இச்சமரின்போது, அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ரஸ்ஸியப் படை தாக்கத் தொடங்கியது. இத்தாக்குதலில் கனரக துப்பாக்கிகள், மோட்டார்கள், ராக்கெட் உந்துகணைகளைச் செலுத்தி ரஸ்ஸிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ரஸ்ஸிய ராணுவத்தின் தாக்குதல்களின் விளைவாக அணுமின் நிலையத்தைன் உட்பகுதியில் தீப்பிடித்துக்கொண்டதுடன், ஏனைய காடிடங்களுக்கும் கடுமையான சேதம் ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட தீ பின்னர் கட்டுக்குள் கொன்டுவரப்பட்டபோதும் கூட, அந்நிலையம் கடுமையான சேதத்தினைச் சந்தித்தது.

தமது அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல் ஒன்றினை நடத்தி, பாரிய அழிவு ஒன்றினை ஏற்படுத்தவே ரஸ்ஸியா முயன்றதாக உக்ரேன் அரசு அறிவித்திருந்தது. இத்தாக்குதலின்போது ரஸ்ஸியாவினால் ஏவப்பட்ட எறிகணைகள் நிலையத்தின் பயிற்சிப் பட்டறைகள் மீது வீழ்ந்து வெடித்தபோதே தீப்பற்றிக்கொண்டதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.  ஆனால், தம்மீது அணுமின் நிலையத்திலிருந்து தாக்குதல் நடத்தியதாலேயே தாம் திருப்பித் தாக்கியதாகவும், அணுமின் நிலையத்தை உக்ரேனியர்களே தீவைத்துக் கொழுத்தியதாகவும் ரஸ்ஸியா மறுத்திருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தைப் பார்க்கும்போது முள்ளிவாய்க்கால் யுத்த சூனிய வலயத்திற்குள்  கனரக ஆயுதங்களை நகர்த்திய புலிகள் அங்கிருந்து தம்மீது தாக்கியதாலேயே தாம் திருப்பித் தாக்கியதாகவும், மக்களை புலிகளே கொன்றதாகவும் இலங்கை அரசு கூறியது நினைவிற்கு வருகிறது.

ஜெனீவா சாசனத்தின்படி மக்களின்பாவனைக்கென்று இயங்கும் அணுசக்தி மின்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறானது என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் கூட, ரஸ்ஸியா இதனை உதாசீனம் செய்தே இந்த  மின் நிலையம் மீது தாக்குதலினை மேற்கொண்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனின் கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் மீது வேண்டுமென்றே தாக்குதலினை நடத்தியமை

Ukrainian adviser to UNESCO: "I know Russians, and they will not respect  the heritage of Ukraine" - ePrimefeed

உக்ரேனின் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் மீது மக்களின் பாதுகாப்புக் குறித்து சட்டை செய்யாது ரஸ்ஸிய நடத்திவரும் சகட்டுமேனித் தாக்குதல்களினால் உக்ரேனின் பல கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள், புராதன நினைவாலயங்கள், கலையம்சம் பொருந்திய சிற்பங்கள், புராதன தேவாலயங்கள் மற்றும் உக்ரேன் மக்களின் கலாசாரத்தினை, வரலாற்றினை எடுத்தியம்பும் பல கட்டிடங்கள் அடங்குகின்றன. தமிழர் தாயகத்தின் பல கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்களையும் அடையாளங்களையும் சிங்கள அரசு இலக்குவைத்து அழித்தமைக்கு ஒப்பானது ரஸ்ஸியாவின் இந்த திட்டமிட்ட கலாசார அழிப்பு.

ரஸ்ஸியாவினால் உக்ரேனில் அழிக்கப்பட்ட கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடங்களில் மரியோபுல்லில் அமைந்திருக்கும் குயின்ட்ஸி கலை நூதனசாலை, சேர்னிவ் பகுதியில் அமைந்திருந்த சோவியத் ஒன்றிய காலத்து திரையரங்கு மற்றும் புராதன சிற்பக்கலைகளுடன் வடிவமைக்கப்பட்டிருந்த நூலகம், தலைநகர் கியிவில் அமைந்திருந்த நாஜிகளால் கொல்லப்பட்ட உக்ரேனியர்களின் நினைவாலயம், சைடொமிர் பிராந்தியத்தில் அமைந்திருந்த மரத்தால் முழுதுமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த 19 ஆம் நூற்றாண்டு தேவாலயம், இவன்கிவ் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சரித்திர தொன்மைவாய்ந்ததும், உக்ரேனிய மக்களின் தனித்துவமான கலாசாரத் தொன்மையினைக் கொண்டிருந்ததுமான நூதணசாலை ஆகியவை குறிப்பிடத் தக்கவை.

உக்ரேனில் ரஸ்ஸியா நடத்திவரும் திட்டமிட்ட கலாசார அழிப்புப் பற்றி அறிக்கை ஒன்றினை பங்குனி 1 இல்  வெளியிட்டிருக்கும் யுனெஸ்கோ அமைப்பு, ஆக்கிரமிப்பு ஆரம்பித்த முதல் இரு வாரங்களுக்குள் உக்ரேனின் கலாசாரத் தொன்ப்மையினையும், தனித்துவத்தையும் எடுத்தியம்பிய 98 சரித்திர கட்டிடங்கள், புராதன தேவாலயங்கள், நூதணசாலைகள் ஆகியவை முற்றாக அழிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஒரு இனத்தின் கலாசாரப் பாரம்பரியம் மிக்க சொத்துக்களுக்கான பாதுகாப்பென்பது சர்வதேசச் சட்டங்களில் முக்கியமானதென்பதுடன், இவற்றின் மீதான தாக்குதல்கள் மனிதாபிமானத்திற்கெதிரான தாக்குதல்களாகக் கணிக்கப்படுகின்றன. ஜெனீவா சாசனத்தின்படி கலாசாரத் தொன்மை மிக்க கட்டிடங்கள் சொத்துக்கள் போரின்போது இரு தரப்பாலும் பாதுக்காக்கப்படவேண்டும் என்கிற நியதி இருப்பதுடன், இவற்றின் மீதான தாக்குதல்கள் அவ்வினத்தின் மீதான தாக்குதல்களாகக் கணிக்கப்படக் கூடியவை என்று சொல்கின்றது.

ஒரு இனத்தின் கலாசாரத்தினை, வரலாற்றினை, அவர்களின் கலை பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றுகின்ற கட்டிட அமைப்புக்கள், சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் இனவழிப்பாகக் கருத்தப்படுவதுடன், இதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாதிக்கப்படும் தரப்பு வழக்குத் தொடர்வதற்கான சாத்தியங்களும் இருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் இருந்த பல நூற்றுக்கணக்கான புராதன கோயில்களும், சின்னங்களும் சிங்கள ஆக்கிரமிப்பில் வேண்டுமென்றே இலக்குவைக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது எமது கலாசாரச் சின்னங்கள் ராணுவத்தால் திட்டமிட்டு அழிக்கப்பட்டதுடன், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் சிங்கள பெளத்தம் முளைக்கத் தொடங்கியிருக்கிறது.

ஆகவே ஈழத்தமிழினம் சந்தித்த கலாசார இனவழிப்பை உக்ரேனும் தற்போது சந்தித்து வருகிறது.

எமது முள்ளிவாய்க்காலினை ஒத்த, உக்ரேனில் ரஸ்ஸியா நடத்தும் போர்க்குற்றங்களும் இனவழிப்பும் பற்றிய விபரங்கள் தொடரும்.........
Ukraine added 158 monuments and cultural sites damaged or destroyed by  Russia - ePrimefeed

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலை இன்னொரு நாட்டின் யுத்தத்துடன் ஒப்பிடுவது சுத்த அயோக்கியத்தனம் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kapithan said:

முள்ளிவாய்க்காலை இன்னொரு நாட்டின் யுத்தத்துடன் ஒப்பிடுவது சுத்த அயோக்கியத்தனம் என்பது எனது உறுதியான நிலைப்பாடு. 

நீங்கள் எப்பிடிச்சொன்னாலும் எனக்கு உறைக்காது.ஏனெண்டால் நானொரு விடாக்கண்டன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மீதான ரஸ்ஸியாவின் திட்டமிட்ட தாக்குதல்கள்

உக்ரேனில் செயற்பட்டுவரும் ஐ நா மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் பங்குனி 26 ஆன்று வெளியிட்ட அறிக்கையில் குறைந்தது 74 வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்திருக்கிறது. இவற்றுள் 61 வைத்தியசாலைகள் உக்ரேன் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஸ்ஸிய வான்படை மற்றும் ஏவுகணைகளைக்கொண்டு தாக்கப்பட்டிருக்கின்றன. இத்தாக்குதல்களில் பலத்த சேதமடைந்த வைத்தியசாலைகளில் இஸியம், மரியோபுல், ஒவ்ருச், வொல்னொவாகா, வூலெடார் ஆகிய வைத்தியசாலைகளைக் குறிப்பிட முடியும்.
அதேபோன்று ரஸ்ஸிய ராணுவத்தின் துணையுடன் போராடும் கிளர்ச்சிக் காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 9 வைத்தியசாலைகளும் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.  மேலும் 4 வைத்தியசாலைகள் உக்ரேனிய அரசின் கட்டுப்பாடின் கீழ் அல்லாமலும், ரஸ்ஸிய ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அல்லாமலும் இருக்கும் பகுதிகளில் தாக்கப்பட்டிருக்கின்றன. 

இன்றுவரைக்கும், குறைந்தது 6 சிசுப் பராமரிப்பு நிலையங்களும், மகப்பேற்று மருத்துவமனைகளும், 10 சிறுவர் வைத்தியசாலைகளும் ரஸ்ஸிய ராணுவத்தால் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கப்பட்டிருக்கின்றன. 

மாசி 24 ஆம் திகதியன்று, வுலெடார் வைத்தியசாலை மீது ரஸ்ஸியா கொத்தணிக் குண்டுகளை ஏவித் தாக்கியதில் குறைந்தது 4 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் 10 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள். இத்தாக்குதலில் வைத்தியசாலையின் ஒரு பகுதி அழிக்கப்பட்டதோடு, வெளியே நின்றிருந்த பல நோயாளர் காவுவண்டிகளும் தீக்கிரையாக்கப்பட்டன. 

பங்குனி 8 ஆம் திகதி அன்று இஸியம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டிருந்த மத்திய மருத்துவமனை மீது ரஸ்ஸியா தாக்குதல் நடத்தி முற்றாக அழித்திருந்தது. மேலும் பங்குனி 11 அன்று இதே பகுதியில் அமைந்திருந்த மனநலம் குன்றியோரைப் பராமரிக்கும் மருத்துவமனைமீது ரஸ்ஸியா நடத்திய தாக்குதலில் இந்த மருத்துவமனையும் கடுமையான சேதங்களுக்கு உள்ளானது. 

இவ்வாறே பங்குனி 9 ஆம் திகதி, தெளிவாக அடையாளமிடப்பட்டிருந்த மரியோபுல் மருத்துவமனையினை ரஸ்ஸியா இலக்குவைத்துத் தாக்கியது. இத்தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது பிறவாத சிசுவும் கொல்லப்பட்டதுடன், இன்னும் 17 பேர் படுகாயங்களுக்கு உள்ளானார்கள்.

புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மருத்துவமனைகள் தெளிவாக அடையாளம் காணப்பட்டபோதும், செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவல்களைப் பாவித்து இலங்கை ராணுவம் இவ்வைத்தியசாலைகள் மீது நடத்திய தாக்குதல்களுக்கு நிகரானது ரஸ்ஸியாவின் இத்தாக்குதல்கள்.

பங்குனி 30 ஆம் திகது உலக சுகாதார ஸ்த்தாபனம் வெளியிட்ட அறிக்கையில்,"மாசி 24 முதல் ரஸ்ஸியா நடத்திவரும் தாக்குதல்களில் குறைந்தது 82 வைத்தியசாலைகள், மகப்பேற்று மருத்துவமனைகள், சிறுவர் மருத்துவமனைகள், மனநிலை குன்றியோர் கண்காணிப்பகங்கள் உட்பட பல மருத்துவ நிலைகள் தாக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்களும், வைத்திய உதவியாளர்களும் இத்தாக்குதல்களின்போது கொல்லப்பட்டிருக்கின்றனர்" என்று உறுதிப்படுத்தியிருக்கிறது.

மேலும் வைத்தியசாலைகளில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் வைத்திய சேவையாளர்களீன் எண்ணிக்கை தமக்குக் கிடைத்த ஊர்ஜிதப்படுத்தப்பட்ட தகவல்களின்படி 72 என்று கூறும் சுகாதார ஸ்த்தாபனம், உண்மையில் இத்தாக்குதலின் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறுகிறது.  இதே காலப்பகுதியில் வைத்தியசாலைத் தாக்குதல்களில் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 என்றும் அது கூறுகிறது.
இறுதியாக இத்தாக்குதல்களின் எண்ணிக்கையினை மதிப்பிட்டிருக்கும் உலக சுகாதார ஸ்த்தாபனம், இன்றுவரை 91 வைத்தியசாலைகளை ரஸ்ஸிய ராணுவம் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ அழித்திருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஒரு நாட்டின் வைத்தியசாலைகள் போரின்போது தவிர்க்கப்படவேண்டிய பகுதிகள் என்று இருக்க, அவற்றின்மீதான ரஸ்ஸியாவின் வேண்டுமென்று திட்டமிட்ட ரீதியில் நடத்தப்படும் தாக்குதல்கள் , இலங்கையின் முள்ளிவாய்க்கால் இனவழிப்பில் சிங்கள ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு நிகரானவை. இவை போர்க்குற்றங்களாகக் கணிக்கப்படக் கூடியவை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ஸிய ராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்கள் சிலவற்றின் விபரங்கள்

டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட்

The aftermath of the missile attack at Kramatorsk, Donetsk oblast.  https://t.co/C0AUwEH4iC - EU Agenda

மாசி 24 ஆம் திகதி, ரஸ்ஸிய ராணுவமும், ரஸ்ஸிய ஆதரவுபெற்ற கிளர்ச்சிக்காரர்களும் முற்றுகைக்குள்ளாக்கப்பட்ட துறைமுக நகரான மரியோபுல் மீது மிகக் கடுமையான ஏவுகணை மற்றும் பல்குழல் எறிகணை வீச்சினை மேற்கொண்டிருந்தனர். இப்பகுதியில் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ள மக்களுக்கான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை ரஸ்ஸியா முற்றாகத் தடுத்துவிட்டு நடத்திய இத்தாக்குதலில் பெருமளவு பொதுமக்கள் பலியானார்கள். வன்னிக் கொலைக் களத்தில் எமது உறவுகளுக்கான உணவையும் மருந்தையும் முற்றாகத் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது இலங்கை ராணுவம் மேற்கொண்ட அழித்தொழிப்புத் தாக்குதலுக்கு நிகரானது இத்தாக்குதல். 
மரியோபுல் முற்றுகைக்குள் நாளாந்தம் பலியிடப்படும் பொதுமக்களின் அவலங்கள் தொடர்பாக பிரிதொரு இணைப்பில் மேலும் பேசலாம்.

மரியோபுல் நாடக அரங்கு மீதான ரஸ்ஸியாவின் ஏவுகணைத் தாக்குதல்

Mariupol theatre bombing killed 300, Ukrainian officials say | Ukraine |  The Guardian

பங்குனி 16 அன்று, டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்திருந்த நாடக அரங்கு மீது ரஸ்ஸிய ராணுவம் கடுமையான குண்டுவீச்சுத் தாக்குதலினை மேற்கொண்டது. மரியோபுல் பகுதியில் இருந்த இந்த நாடக அரங்கினை வான்குண்டுவீச்சில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் ஒரு காவல்க் கட்டிடமாக மரியோபுல் நகர நிர்வாகம் பாவித்து வந்தது. மரியோபுல் மீதான் முற்றுகை ஆரம்பித்த நாட்களிலிருந்து சுமார் 1200 பொதுமக்கள் இந்த அரங்கினுள் தஞ்சம் அடைந்திருந்தனர். ரஸ்ஸியாவின் தாக்குதலில் இந்த நாடக அரங்கு ஏறக்குறைய முழுவதுமாக அழிக்கப்பட்டது. போரிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ளவென்று மக்கள் தஞ்சமடையும் இடங்களை இலக்குவைத்துத் தாக்குவது போர்க்குற்றங்களுக்குள் அடங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது. 

தாக்குதல் நடந்த சில நாட்களின் பின்னர் கருத்துத் தெரிவித்த மீட்புப் பணியாளர்கள், கட்டிட இடிபாடுகளுக்கிடையேயும், இன்னமும் எரிந்துகொண்டிருக்கும் கட்டிடப் பகுதிக்குள்ளும் பெருமளவு பொதுமக்கள் அகப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்ட மக்களின் முற்றான எண்ணிக்கை தெரிய சில வாரங்களாவது ஆகும் என்று கூறினர். அத்துடன், இப்பகுதிமீது ரஸ்ஸியா தொடர்ச்சியாக நடத்திவரும் மூர்க்கத்தனமான எறிகணைத் தாக்குதல்களால் இடிபாடுகளிடையே அகப்பட்டிருப்போரை உயிருடன் மீட்பதற்கான சாத்தியங்கள் குறைந்துவருவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த நாடக அரங்கு உக்ரேன் நாட்டு மக்களின் கலாசாரத் தொன்மை வாய்ந்த கட்டிடமாகக் கருதப்பட்டு வந்தது. அதனாலேயே இக்கட்டிடத்தைக் குறிவைத்து ரஸ்ஸியா தாக்கியதாக நம்பப்படுகிறது. பங்குனி 14 அன்று இக்கடிடத்தை படமெடுத்த செய்மதிகள் இக்கட்டிடத்தின் இரு புறங்களில் "சிறுவர்கள்" என்று ரஸ்ஸிய மொழியில் தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. குண்டுவீச்சிலிருந்து சிறுவர்களையும் பொதுமக்களையும் காத்துநிற்கும் இக்கட்டிடத்தினை ரஸ்ஸிய ராணுவம் தாக்குதலில் இருந்து தவிர்ப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டிருந்தது. மரியோபுல் பகுதியில் இருந்த மிகப்பெரிய குண்டுவீச்சு காப்புக் கட்டிடமான இந்த அரங்கினை ரஸ்ஸியா திட்டமிட்டே தாக்கி அழித்திருக்கிறது. 

War in Ukraine: Estimated 300 dead in Mariupol theatre strike - BBC News

பின்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி சிறுவர்கள் உட்பட குறைந்தது 300 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருப்பதை மரியோபுல் நகர நிர்வாகம் தெரிவித்திருந்தது. ஆனால், தனது தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டது வெளித்தெரிய ஆரம்பித்ததையடுத்து, இவ்வரங்கம் உக்ரேனிய சிறப்புப் படையணியான அசோவ் பட்டாலியனின் தளமாகப் பாவிக்கப்பட்டதாக ரஸ்ஸியா அப்பட்டமாகப் பொய்யுரைத்தது. ஆனால், தாக்குதல் நடந்த சில மணிநேரத்தில் அங்கு சென்ற சர்வதேச ஊடகவியலாளர்கள் ரஸ்ஸியாவின் குற்றச்சாட்டினை முற்றாக மறுத்ததோடு, அப்பகுதியில் உக்ரேனிய ராணுவத்தினரின் பிரசன்னமோ அல்லது ராணுவ வாகனங்களின் பிரசன்னமோ இருக்கவில்லையென்பதை உறுதிப்படுத்தியிருந்தார்கள். 
 

வன்னிக்கொலைக்களத்தில் செஞ்சோலைச் சிறார்களின் இல்லத்தைக் குண்டுவீசி அழித்து 58 சிறுமிகளைக் கொன்றுவிட்டு புலிகளின் பாசறையென்று கதிர்காமரும் சிங்களமும் நியாயப்படுத்தியது நினைவிற்கு வருகிறது. 

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரியோபுல் வைத்தியசாலை மீதான விமானத் தாக்குதல்

Russia shifts stance on hospital bombing that sparked world outrage |  Reuters

பங்குனி 9 ஆம் திகதியன்று மரியோபுல் மருத்துவமனை மீது ரஸ்ஸியா விமானத் தாக்குதலை மேற்கொண்டது. தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக இயங்கிவந்த இந்த பிரதான வைத்தியசாலையினையே ரஸ்ஸிய விமானப்படை இலக்குவைத்துத் தாக்கியது. தாக்குதலின்போது வைத்தியசாலை முற்றாகச் சேதமாக்கப்பட்டதுடன் பலர் காயங்களுக்கு உள்ளானார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அவளது பிறவாத சிசிவும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். ரஸ்ஸியாவினால் வேண்டுமென்றே நடத்தப்பட்ட வைத்தியசாலை மீதான தாக்குதல் போர்க்குற்றமாகவும், இனவழிப்பின் கூறுகளைக் கொண்டிருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

Ukrainian woman and baby carried on stretcher from bombed Mariupol hospital  die after surgery - ABC News

 

மரியோபுல்லின் மக்கள் குடியிருப்புப் பகுதிமீது நடந்த கடுமையான பல்குழல் எறிகணைத் தாக்குதல்

பங்குனி 2 ஆம் திகதி, 15 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக மரியோபுல்லின் மக்கள் செறிந்துவாழும் குடியிருப்புக்களை நோக்கி ரஸ்ஸிய ராணுவம் மிகக் கடுமையான பல்குழல் எறிகணை வீச்சினை நடத்தியது. நகர்ப்பகுதியின் இடதுபக்கம் இத்தாக்குதல்களினால் முற்றாக சிதைத்தழிக்கப்பட்டது. 
மேலும் பூரண முற்றுகைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் மரியோபுல் வெளித்தொடர்புகள் அனைத்துமிலிருந்து முற்றாகத் துண்டிக்கப்பட்டிருப்பதுடன், நகருக்கான நீர் விநியோகம், மின்சாரம், உணவு வழங்கல்கள், எரிவாயு என்பனவும் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களால் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன. போதிய நீர்வசதியின்றி 6 வயதுச் சிறுமி உட்பட இன்னும் சிலர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கின்றனர்.

செய்மதியூடாகப் பெறப்பட்ட ஒளிப்படங்களின்படி மரியோபுல் நகருக்கு ஏற்பட்டிருக்கும் அழிவின் அளவு வெளித்தெரிய ஆரம்பித்திருக்கிறது. பங்குனி 9 ஆம் திகதி எடுக்கப்பட்ட இந்தச் செய்மதிப் புகைப்படங்களில் மக்கள் குடியிருப்புக்களாக இருந்த பல்லடுக்குத் தொடர்மாடிகள், கடைத்தொகுதிகள், வங்கிகள், மக்கள் கூடும் முற்றங்கள் என்பன மிகக் கடுமையான சேதத்தினைச் சந்தித்திருக்கின்றன என்பது தெரியவந்திருக்கிறது.

Mariupol Residents Fight to Survive in Bombed and Besieged City - The New  York Times

மரியோபுல் நகர நிர்வாகத்தினர் இந்தத் தாக்குதல் பற்றிக் கூறும்போது நகரின் 90 வீதமான கட்டிடங்கள் இலக்குவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றுள் 30 - 40 வீதமான கட்டிடங்கள் பாவிக்கமுடியாதளவிற்கு முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறுகின்றனர். "நகரின் எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்ணுக்குத் தெரிவது எரியுண்டு கோதுகளாகத் தெரியும் மக்களின் குடியிருப்புக் கட்டிடங்கள் மட்டும் தான்" என்று தாக்குதலின் பின்னர் அங்கு சென்ற ரொயிட்டர்ஸ் செய்தியாளர் கூறுகிறார்.

பங்குனி 16 அன்று பி பி ஸி வெளியிட்ட செய்தியில் இந்நகர் மீதான ரஸ்ஸியாவின் தொடர்ச்சியான செல்த்தாக்குதல்களால் மரியோபுல் நகரும், சுற்றியுள்ள பகுதிகளும் முற்றாகப் பாழடைந்த நிலம் போலக் காட்சியளிக்கிறது என்று கூறியது. ட்ரோன்கள் மூலம் எடுக்கப்பட்ட ஒளிப்படங்களூடாக மரியோபுல் மீது நடத்தப்பட்ட அகோரம் தெரிவதாகவும், பல கட்டிடங்களிலிருந்து தீயும், கரிய புகை மண்டலமும் இன்னும் வெளிவந்துகொண்டிருப்பதாகவும் அது கூறியது. கட்டிட இடிபாடுகளால் நிரப்பட்ட தெருக்கள், அடையாளம் தெரியாது உருக்குக்லைந்து போன வாகனங்கள், பிரதேசத்திலிருந்து மேலெழும் புகை மண்டலம்..இவை எல்லாமே மரியோபுல் நகரைச் சுடுகாடு போல ஆக்கிவிட்டிருந்தது என்று அது மேலும் கூறியது. 

யுத்தங்களின்பொழுது மக்களின் அவலங்களை அவதானித்து ஆவணப்படுத்தும் ஐ.எஸ். டபிள்யூ அமைப்பு இத்தாக்குதல் பற்றிக் கூறுகையில், "மரியோபுல் நகரத்தின் அடையாளமே தெரியவில்லை. அங்கே எந்தவி மக்கள் குடியிருப்பும் எழுந்து நிற்கவில்லை, எல்லாமே முற்றாக அழிக்கப்பட்டு மண்ணோடு மண்ணாகக் கிடக்கின்றன. பொதுமக்களை இலக்குவைத்து ரஸ்ஸியா நடத்தும் இந்தத் தாக்குதல் முற்றான போர்க்குற்றம் அன்றி வேறில்லை" என்று கூறுகிறது.

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரியோபுல் மீதான அழித்தொழிப்பின்போது படுகொலைசெய்யப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளை பாரிய புதைகுழிகளில் போட்டு மூடிமறைத்து வருகிறது சர்வாதிகாரி புட்டினின் ஆக்கிரமிப்பு ராணுவம்

Mariupol: Satellite images suggest mass graves dug near besieged city - BBC  News

செய்மதிகளூடாக எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மரியோபுல் பகுதிகளில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளை ரஸ்ஸிய ராணுவம் பாரிய குழிகளில் புதைத்துவருவது தெரிந்திருக்கிறது. முள்ளிவாய்க்கால் இனவழிப்பின்போது யுத்த சூனிய வலயத்தில் அகப்பட்ட குறைந்தது மூன்று லட்சம் மக்களை கொன்றொழித்துவந்த சிங்கள ராணுவம் பலரை அவர்கள் பதுங்கியிருந்த பதுங்கு குழிகளுக்குள்ளும், இன்னும் பலரை பாரிய புதைகுழிகளிலும் மூடி தனது போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை இறுதிநாட்களில் அழித்துவந்தது. அதற்கு நிகரான சாட்சிய அழித்தல்களையே ரஸ்ஸியா தற்போது மரியோபுல்லில் செய்துவருகிறது.

Corpses In The Street: Mariupol Is Being Devastated By Relentless Russian  Attacks

மரியோபுல்லின் தெருக்களில் கொல்லப்பட்டு வீசப்பட்டிருந்த அப்பாவி உக்ரேனியர்களின் உடல்களை ரஸ்ஸிய ராணுவத்தின் பாரவூர்திகள் சேகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் உக்ரேனியர்களின் உடல்கள் மன்ஹுஷ் எனும் பகுதியில் அமைந்திருக்கும் பழைய சேமக்காலைக்கு அருகில் ரஸ்ஸியாவினால் தோண்டப்பட்டு வரும் பாரிய மனிதப் புதைகுழிகளில் கொட்டப்பட்டு மூடப்படுவதாக மரியோபுல்லின் நகர மேயர் வாடிம் போய்செங்கோ கூறுகிறார். 

"ஆக்கிரமிப்பாளர்கள் தமது போர்க்குற்றங்களை மறைப்பதில் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள். பழைய சேமக்காலைக்கும் எரிபொருள் களஞ்சியசாலைக்கும் இடையே அமைந்திருக்கும் நிலத்தில் 30 மீட்டட் நீளத்தில் பல குழிகளை தோண்டிவரும் ரஸ்ஸிய ராணூவம் அவற்றில் எமது மக்களைப் புதைக்கத் தொடங்கியிருக்கிறது" என்று கூறுகிறார்.

கடந்த வியாழன் அன்று இப்பகுதியை தனது செய்மதிகள் மூலம் படம்பிடித்த அமெரிக்க நிறுவனமான மக்ஸார் டெக்னோலொஜி, அப்பகுதியில் பாரிய மனிதப் புதைகுழிகள் இருப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்னர்வரையில் வெற்று நிலமாக இருந்த இப்பகுதியில் தற்போது ரஸ்ஸியா குறைந்தச்து 200 புதைகுழிகளை தோண்டியிருப்பதை செய்மதிகள் தெளிவாகப் படம்பிடித்திருக்கின்றன.

மன்ஹுஷ் பகுதியில் எடுக்கப்பட்ட, இருவாரங்களுக்கு முன்னரான செய்மதிப்படங்களை தற்போது எடுக்கப்பட்டிருக்கும் செய்மதிப் படங்களோடு ஒப்பிடுகையில் இந்த பதுங்குழிகள் அண்மையில் ரஸ்ஸியாவினால் அமைக்கப்பட்டவை என்பது தெளிவாகிறது.

இப்பகுதியில் ரஸ்ஸிய ஆக்கிரமிப்புப் படை இனக்கொலையினை ஆரம்பித்த நாளிலிருந்து இதுவரையில் குறைந்தது 20,000 மக்கள் கொல்லப்பட்டிருப்பதை தம்மால் உறுதிப்படுத்த முடியும் என்று மேயர் கூறுகிறார். கொல்லப்பட்ட பலரின் உடல்கள் தற்போது அவசர அவசரமாக ரஸ்ஸியர்களீனால் அகற்றப்பட்டு வருவதுடன், பலர் நடமாடும் தகன வாகனங்களில் ஏற்றப்பட்டு உடனுக்குடன் எரிக்கப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

Russia Using Mobile Crematoriums in Ukraine

"மரியோபுல் பகுதியை தாம் உக்ரேனிலின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்திருக்கிறோம்" எனும் சர்வாதிகாரியும், போர்க்குற்றவாளியுமான புட்டினின் பிதற்றலைக் கடுமையாகச் சாடும் மேயர், "நாம் எமது பிரதேசத்திலிருந்து முற்றாக விலகவில்லை. எமது வீரர்கள் இன்னும் அப்பகுதியில் இருக்கும் இரும்புத் தொழிற்சாலையில் இருந்து போராடி வருகிறார்கள், அவர்களுடன் இன்னும் 1000 பொதுமக்களாவது அங்கே தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் " என்று அவர் கூறுகிறார்.

"உண்மையாகவே அங்கு முற்றுகைக்குள் அகப்பட்டிருக்கும் அப்பாவிகளின் எண்ணிக்கை எமக்குத் தெரியாது. அவர்களை எம்மால் இதுவரையில் மீட்க முடியவில்லை. ஒரு நாள் யுத்த நிறுத்தம் ஏற்பட்டால்க் கூட நாம் அவர்களை வெளியே பாதுகாப்பாக அழைத்துவரமுடியும். மிகவும் கடுமையான சூழ்நிலையிலும், பலத்த காயங்களுடனும், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஏதுமின்றி அவதிப்படும் எம்மக்கள் மீது புட்டினின் படைகள் கொடுமையான தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றன" என்றும் அவர் கூறினார்.
 

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Situation in Azovstal steel plant 'desperate,' Ukraine says - ABC News

ரஸ்ஸிய சர்வாதிகாரி புட்டின் தனது ஆதரவாளர்களிடையே பேசும்போது தனது ராணுவத்தை மரியோபுல் இரும்புத் தொழிற்சாலைமீது தாக்குதலை மேற்கொள்ளவேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளதாக கூறினார். தனது பாதுகாப்பு அமைச்சர் சேர்கி ஷொகு தமது ராணுவம் இன்னும் ஆயிரக்கணக்கான உக்ரேனிய ராணுவத்தினருடம் சண்டையிட்டு வருவதாக அறிவித்த சில மணிநேரத்தின்பின்னரே சர்வாதிகாரி புட்டினின் மேற்படி அறிக்கை வெளிவந்திருந்தது.

"இரும்புத் தொலிற்சாலையினுள் உள்நுழைவது சாத்தியமற்றது. பல சுரங்கப் பாதைகளையும், நிலக்கீழ் வலையமைப்பையும் கொண்ட அத்தொழிற்சாலையினுள்நுழைந்து போராடுவதைக் காட்டிலும், அப்பகுதியைச் சுற்றி முற்றான முற்றுகையினைக் கொண்டுவருவதன் மூலம், இன்னமும் உள்ளிருந்து போராடும் உக்ரேனியர்களை அடிபணியவைக்க முடியும்" என்று புட்டின் கூறினார்.

மேற்குலக ராஜதந்திரிகளின் கணிப்பின்படி தொழிற்சாலையினைச் சூழ்ந்து சுமார் 5000 முதல் 10,000 வரையான ராணுவத்திணரை ரஸ்ஸியா நிறுத்தியிருப்பதாக நம்புகிறார்கள். உள்ளிருந்து எதிர்த்துச் சண்டையிடும் உக்ரேனியர்களின் எண்ணிக்கை ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கையின் மூன்றில் ஒரு பங்கே இருப்பதனால், மேலதிக ஆக்கிரமிப்புப் படைகளை ரஸ்ஸியா டொன்பாஸ் பகுதியில் தம்மை எதிர்த்துச் சண்டையிடும் உக்ரேனிய வீரர்களுக்கெதிரான சண்டையில் பாவிக்க சர்வாதிகாரி புட்டின் முயலக்கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டொன்பாஸ் பகுதியில் ரஸ்ஸிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆரம்பித்திருக்கும் புதிய நில ஆக்கிரமிப்பு குறைந்தது ஒருவருடமாவது செல்லும் என்று நம்பப்படுகிறது. 

மரியோபுல் பகுதியை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவிட்டதாக சர்வாதிகாரி புட்டினும் அவரது ஆதரவாளர்களும் கூற ஆரம்பித்திருப்பதை எள்ளிநகையாடியிருக்கும் உக்ரேனிய அதிபர், "அவர்களால் அசோவ்டல் பகுதியை ஒருபோதுமே முழுவதுமாகக் கைப்பற்ற முடியாது. அது அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கிறது. நாம் அவர்களுக்கு மிகக் கடுமையான இழப்புக்களை அங்கே ஏற்படுத்தியிருக்கிறோம்" என்று கூறுகிறார்.

Ukraine: Mariupol says Russia forcefully deported thousands

மரியோபுல் நகர மேயர் மேலும் கூறுகையில், "குறைந்தது ஒரு லட்சம் உக்ரேனியர்களை ரஸ்ஸிய ராணுவம் தனது ஆக்கிரமிப்பில் வைத்திருக்கிறது. மேலும் 40,000 உக்ரேனியர்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக ரஸ்ஸியாவினுள் இழுத்துச் சென்றிருக்கிறது. இன்னும் ஒரு லட்சம் பேர் ரஸ்ஸிய முற்றுகைள்ளிருந்து தப்பித்து வெளியேறி இருக்கின்றனர். இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் ரஸ்ஸிய "புலநாய்வு" முகாம்களில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள்" என்று கூறுகிறார்.

Russia transfers thousands of Mariupol civilians to its territory - BBC News

முள்ளிவாய்க்கால் இனக்கொலை முடிந்த நாட்களில் சிங்கள ராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட 280,000 பொதுமக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து புலிகளைத் தேடுகிறோம் என்கிற பெயரில் பல ஆண்களையும் பெண்களையும் இழுத்துச் சென்று கொன்றும், பாலியல் வன்புணர்விற்குப் பின்னர் படுகொலை செய்தும் தமது வக்கிரத்தைக் காட்டிய சிங்கள மிருகங்களுக்கு நிகரான அட்டூழியங்களை சர்வாதிகாரி புட்டினின் ஆக்கிரமிப்பு ராணுவம் மரியோபுல் மக்கள் மீது நடத்தி வருகிறது என்பது தெளிவாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரும்பவும் முட்ஞலில் இருந்தா ? 

உக்ரேனில் சண்டை முடிந்தாலும் இராணுவ மனிதாபிமான ஆய்வாளர்களின் ஆய்வுகள் முடியாது போலகிடக்கு ?

🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனில் இருந்த 7 வருடங்களில் குறைந்தது முன்று தடவை மரியோப்புல் போயுள்ளேன். ஒவ்வொரு தடைவையும் இரண்டு கிழமைகள் அங்கு தங்குவேன்.

அழகான அசோவ் மோரே ( கடற்கரை )  றால் அவித்து விற்கும் ரஷ்யன் பாட்டிகள், சுவையான சவர்மா என்று மறக்க முடியாத நாட்கள் அவை.

இப்பொழுது இந்த அழிவு நடந்த இடங்களை பார்க்கும் பொழுது எனக்கு  அங்குள்ள பலரின் ஞாபகங்கள் வந்து போகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பகிடி said:

உக்ரைனில் இருந்த 7 வருடங்களில் குறைந்தது முன்று தடவை மரியோப்புல் போயுள்ளேன். ஒவ்வொரு தடைவையும் இரண்டு கிழமைகள் அங்கு தங்குவேன்.

அழகான அசோவ் மோரே ( கடற்கரை )  றால் அவித்து விற்கும் ரஷ்யன் பாட்டிகள், சுவையான சவர்மா என்று மறக்க முடியாத நாட்கள் அவை.

இப்பொழுது இந்த அழிவு நடந்த இடங்களை பார்க்கும் பொழுது எனக்கு  அங்குள்ள பலரின் ஞாபகங்கள் வந்து போகின்றது.

இங்கே நாங்கள் எல்லாம் உக்ரேனை கூகிள் மப்பில் (மப்பிலும்) பார்த்த கூடங்கள்தான்.

அந்த மக்கள் பற்றிய உங்கள் அனுபவங்கள் எப்படி? அவர்கள் பெரும்பாலும் இன, நிற வெறியர், நாஜிகள் என பலரும் மேற்கு ஐரோப்பாவில் இருந்து சொல்வது எந்தளவு உண்மை. 

எனது வேலையின் நிமித்தம் உக்ரேனில் இருக்கும் மட்டுபட்ட நாஜி பிரசன்னம் பற்றி அறிந்துள்ளேன்.  ஆனால் இது பல்கேரிய, ஹங்கேரி ஏன் ஜேர்மனியில் கூட உள்ள விடயம்தான். இதை விடவும் மேலதிகமாக இன வெறியர்களா உக்ரேனியர்கள்? உங்கள் அனுபத்தில்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன்.

நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன்.

படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன்.

டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள்.

நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள்  போய் இருக்கின்றேன் இவர்களுடன்.

குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான்.

நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான்.

 

நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன்.

Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர்.

 

வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது.

இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால்.

நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார்.

நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம்.

எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம்.

ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி.

மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள்.

ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை.

கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் 

கிவ்

இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும்.

இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல😄.)

ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள்.

கிரிமியா

இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம்.

2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க

வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன்.

இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே..

அனுப்பவ படிப்பினைகள் இவைதான்

1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில்.

2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு .

3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 

4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 

4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

  • Like 9
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.

இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே..

நீங்கள் படிக்கும் காலத்தில், கண்டு அனுபவித்த சம்பவங்களை... 
எமக்கு தொகுத்து தந்தமைக்கு, மிக்க நன்றி பகிடி.  👍

உக்ரைனுக்கு... வெள்ளைக்காரனின் பத்திரிகை செய்திகளை நம்பி,
முட்டுக் கொடுக்கும் யாழ். கள  அனுதாபிகள்...
மேலே  மேற்கோள் காட்டியதை,
மூளையில்  பதியும் மட்டும்,
திரும்ப, திரும்ப படிக்கவும்.  😎

உக்ரேன்காரன் பயங்கர சுத்துமாத்து காரன் என்று..
பலமுறை நாம் சொல்லியும், நம்பாமல் இருந்தவர்களுக்கு 
அந்த சம்பவத்தை போல்... பிணம் மாதிரி நடித்து 
மேற்குலகின் அனுதாபத்தை பெற என்னவும் செய்வார்கள் என்பதற்கு
நேரில் கண்ட சாட்சி அது.

இனியும்...  வெள்ளைக்காரனுக்கு, முட்டுக்  கொடுப்போருக்கு,
ஆழ்ந்த அனுதாபங்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் படிக்கும் காலத்தில், கண்டு அனுபவித்த சம்பவங்களை... 
எமக்கு தொகுத்து தந்தமைக்கு, மிக்க நன்றி பகிடி.  👍

உக்ரைனுக்கு... வெள்ளைக்காரனின் பத்திரிகை செய்திகளை நம்பி,
முட்டுக் கொடுக்கும் யாழ். கள  அனுதாபிகள்...
மேலே  மேற்கோள் காட்டியதை,
மூளையில்  பதியும் மட்டும்,
திரும்ப, திரும்ப படிக்கவும்.  😎

உக்ரேன்காரன் பயங்கர சுத்துமாத்து காரன் என்று..
பலமுறை நாம் சொல்லியும், நம்பாமல் இருந்தவர்களுக்கு 
அந்த சம்பவத்தை போல்... பிணம் மாதிரி நடித்து 
மேற்குலகின் அனுதாபத்தை பெற என்னவும் செய்வார்கள் என்பதற்கு
நேரில் கண்ட சாட்சி அது.

இனியும்...  வெள்ளைக்காரனுக்கு, முட்டுக்  கொடுப்போருக்கு,
ஆழ்ந்த அனுதாபங்கள். 😁

தமிழ் சிறி ஐயா, திரும்பத் திரும்ப மூளையில் பதியும்படி படியுங்கள்!👇🏾

 

4 hours ago, பகிடி said:

அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்

பேய்க்காட்டியது ரஷ்ய ரவுடிகள்தான்..

 

தனது அனுபவங்களையும், உக்கிரேன் பற்றிய தகவல்களையும் தொகுத்துத் தந்த “பகிடி”க்கு நன்றி🙏🏽

 

சிங்களக் காடைகளை வடக்கு கிழக்கில் குடியேற்றத் திட்டங்களில் குடியமர்த்தியது மாதிரி டொன்பாஸில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு அனுப்பிய ரஷ்யக் குற்றவாளிகளைக் குடியேற்றியிருக்கின்றார். இப்போது அவர்களின் பரம்பரையினரை வைத்து பூட்டின் உக்கிரேனை இரண்டாகப் பிளக்கின்றார். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, கிருபன் said:

தமிழ் சிறி ஐயா, திரும்பத் திரும்ப மூளையில் பதியும்படி படியுங்கள்!👇🏾

 

பேய்க்காட்டியது ரஷ்ய ரவுடிகள்தான்..

 

தனது அனுபவங்களையும், உக்கிரேன் பற்றிய தகவல்களையும் தொகுத்துத் தந்த “பகிடி”க்கு நன்றி🙏🏽

 

சிங்களக் காடைகளை வடக்கு கிழக்கில் குடியேற்றத் திட்டங்களில் குடியமர்த்தியது மாதிரி டொன்பாஸில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு அனுப்பிய ரஷ்யக் குற்றவாளிகளைக் குடியேற்றியிருக்கின்றார். இப்போது அவர்களின் பரம்பரையினரை வைத்து பூட்டின் உக்கிரேனை இரண்டாகப் பிளக்கின்றார். 

நானும் இதே மாதிரிதான் யோசித்தேன், வடக்கு கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றி எம்மை இரண்டாம் தர பிரசைகள் ஆக்கியது போல நடந்துள்ளது. எந்த நாடாக இருக்கட்டும், பெரும்பான்மை இனங்களுக்கு பக்கத்தில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு எப்பவுமே சிக்கல்தான் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பகிடி said:

நான் யாழ் தளத்தை பல ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இப்பொழுது தான் உறுப்பினர் ஆக இணைந்து கொண்டேன்.

நான் உக்ரைனில் 2006 புரட்டாசி மாசம் மருத்துவம் படிக்க போனேன்.2014 - 2015 அளவில் இலங்கைக்கு திரும்பினேன். இலங்கையில் சில வருடம் வேலை செய்து விட்டு இப்பொழுது கனடாவில் Alberta வில் வசிக்கிறேன். Canadian emergency Ambulance service இல் வேலை செய்கிறேன்.

படிக்க போன இடம் luhansk ( லூகான்ஸ்க்,டன்பாஸ் இல் உள்ள Donesk (டோனேஸ்க் ) க்கு அடுத்த பெரிய province. போன புதிதில் நான்கு இலங்கை மாணவர்கள் தான்போனோம். அப்பொழுது நாங்கள் தான் ஒரே இலங்கை மாணவர்கள். கொஞ்சம் தமிழ் நாட்டு மாணவர்களும் இருந்ந்தார்கள்.லீவு கிடைக்கும் பொழுது பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியா இலங்கை போய் விடுவார்கள். நான் டிக்கெட் செலவு கூட என்பதால் ukraine க்குள் சுத்துவது வழக்கம். அப்படி போன இடங்களில் ஒன்று தான் மரிப்புல். இது தவிர கிரீமியா கீவ் கார்க்கிவ்,liviv, zaporizhzhia போன்ற இடங்களில் ஓரிரு மாதங்கள் ஆவது இருந்து இருப்பேன்.

டன்பாஸ் பிறதேசத்தில் இருப்பவர்களில் 90 வீதம் பேர் ரஷியன் தாய் மொழி ஆக கொண்டவர்கள். பலர் சுரங்க தொழிலாளிகள். ரஷ்யாவுடன் குடும்பம் பிணைப்புகள் அதிகம் கொண்டவர்கள்.

நானே சில தடவைகள் ரஷ்யாவுக்குள் போனேன் என்று தெரியாமலே உள்ளுக்குள்  போய் இருக்கின்றேன் இவர்களுடன்.

குணம் என்று வரும் பொழுது மிகவும் பொதுவாக நல்ல மனிதர்கள் தான்.

நான் இளம் வயது ஆட்களை வைத்து அந்த சமூகத்தை மதிப்பிடக்கூடாது என்று நம்புகிறேன். ஆகவே 60 கடந்தவர்கள் என்று பார்த்தால் ஓரளவுக்கு நல்லவர்கள் தான் அவர்கள். என்றாலும் எல்லோரையும் அப்படி சொல்ல ஏலாது. கம்யூனிஸ்ட் சித்தாதத்தில் பற்று கொண்டவர்கள். வெளியே சொல்லிக்கொண்டு இருக்க மாட்டினம் ஆனால் உள் மனது அது தான்.

 

நான் கூட பழகியது பாட்டிகள் தாத்தாக்களுடன் தான். சில வருடங்கள் அவர்கள் வீட்டில் வாடகைக்கு வாழ்ந்தும் இருக்கின்றேன்.

Danbaas உண்மையில் ukraine க்கான பிரதேசம் தான். ஆனாலும் சோவியத் காலத்தில் ஸ்டாலின் சைபிரியாவுக்கு நாடு கடத்திய கிரிமினல்களில் ஓரளவுக்கு குறைவான பிழைகள் செய்தோரை இங்கே டன்பாசில் குடியெற்றி அங்குள்ள சுரங்க வேலைக்கு பயன்படுத்திக்கொண்டார். அவர்களின் பரம்பரை தான் இப்போது அங்கே இருப்போர்.

 

வெள்ளை இன வெறி உண்டு. அதுவும் எல்லோரும் அப்படி என்று ஒரேஅடியாக சொல்ல முடியாத அளவுக்கு நல்ல மனிதர்களின் ஞாபகங்கள் வந்து போகின்றது.

இரவில் வெளியே நம்பிக்கையோடு சுற்ற முடியாது நன்கு ரஷியன் தெரியாவிட்டால்.

நான் பல முறை மாட்டி இருக்கின்றேன். குடிகாரர் குடித்து விட்டு காசுக்கு வெளிநாட்டு ஆக்களை அடித்து காசு வாங்குவது வளமை.. அப்படி அடிக்கும் பொழுதே அங்குள்ள இன்னொருவர் காப்பாற்றியும் விடுவார்.

நான் ஒருமுறை இரவு கடைக்கு போய் சாமான் வாங்கி வெளியே வரும் பொழுது சைக்கிள் செயின் கொண்டு அடிக்க ஒருவர் வந்து இருந்த காசை கொடுத்து தப்பிய சம்பவம் ஞாபகம்.

எல்லோருக்கும் ஒரு வீடு அங்கு உண்டு. குவர்த்திரா ( அப்பார்ட்மெண்ட் ) என்று சொல்வோம்.

ஏற்கனவே சொன்னது போல வாயோதிப்பர்கள் பழக இனிமையானவர்கள். அவர்களிடமும் வெள்ளை இன வெறி, உடைந்து போன சோவியத் பற்றிய கனவுகள், ரஷியன் மொழி மீதான தீரா தாகம், conservetive மனநிலை, மனிதாபிமானம், கடவுள் பக்தி, வெளியே காட்டாத அமெரிக்க வெறுப்புணர்வு, இந்தியா மீது பாசம்,உழைப்பு, சுற்றதாருடன் மனித பன்புடன் பழகுவது, இயலுமான வரை மற்றவர்களுக்கு உதவி, சிக்கனம், உபசரிப்பு என்று எல்லாம் கலந்த சாதாரண மனிதர்கள் அவர்கள். இவர்கள் கிழக்கு உக்ரைனியர்கள்.mariupol zaporizhzhia, கார்கிவ் போன்ற இடங்களில் வாழ்வோரும் இப்படி பட்டவர்கள் தான் என்றாலும் கார்கிவ் மேற்கத்தேய நாகரிக மோகம் கொஞ்சம் அதிகம் கொண்ட பகுதி.

மேற்கு ukraine இல் உள்ள மக்கள் அப்படியே வேறு ஒரு மக்கள் கூட்டம். ரஷியன் தெரிந்தாலும் விடாப்பிடியாக பேச வேண்டாம் என்று இருக்கும் மக்கள் அவர்கள். ஒப்பீட்டளவில் மிகவும் நாகரிகம் ஆன மக்கள்.

ஒரு காலத்தில் யூதர்கள் சோவியட் ரஷ்யா உடன் சேர்ந்து இவர்களை அடக்கிபலரை படுகொலை செய்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கு இவர்கள் பின்னர் ஜெர்மனிஉடன் சேர்ந்து யூதர்களை படுகொலை செய்ததும் உண்மை.

கம்யூனிஸ்ட் சித்தாந்தம், Soviet ரஷ்யா இந்த இரண்டும் இவர்களை முன்னேற விடாமல் இறுக்க பிடித்திருக்கிறது என்று மனதார உணருகின்றர்கள்.யூத வெறுப்புணர்வு ஓரளவு உண்டு என்பது உண்மை என்றாலும் எல்லோரிடமும் சமமாக இழையோடி இல்லை. இவர்களில் பலருக்கு poland ருமேனியா, அஸ்திரியா நாடுகளோடு குடும்ப பிணைப்பு உண்டு. கிழக்கு மக்கள் ரஷியன் ஆர்த்தோடோக்ஸ் என்றால் இவர்ககளில் பலர் கத்தோலிக்கார்கள். யாழ்ப்பாண மொழியில் சொல்வது என்றால் புழுத்த கத்தோலிக்கர்கள். இங்கே குடி போதையில் அடிப்பவன் இல்லை. எங்களை கறுப்பு குரங்கே என்று கூவி நக்கல் அடிப்பவர்களும் இல்லை.சுதந்திர நாட்டுக்கான தணியாத தாகம் கொண்டவர்கள். இங்கே liviv என்று ஒரு இடம் உண்டு அழகான இடம். ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை என்று இப்போது நினைத்து வருந்துகிறேன் 

கிவ்

இது இன்னொரு அற்புதம். இங்குள்ள டேனிப்பர் ஆற்றின் கரையோரங்களில் நடந்து திரிந்த நாட்கள் பசுமையான நினைவுகள். மிகவும் ஆழத்தில் இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் எந்த குண்டு வெடிப்பிலும் இருந்தும் உங்களை பாதுக்காக்கும்.

இங்கே உள்ளவர்கள் அனைவரும் நன்கு ரஷியன் பேசுவார்கள், ரஷியன் தான் இங்கேயும் பெரும்பாலும் பேசப்படும் மொழியும், எனினும் கம்யூனிஸ்ட் சித்தாதம் மீது எந்த ஈடுபாடும் இல்லை. (கொழும்பு தமிழர்க்கு தமிழ் பாசம் போல😄.)

ரஷியன் தான் இவர்களின் தாய் மொழி எனினும் பெரிய பற்று என்று ஒன்றும் இல்லை. Ukraineனை நேசிப்பவர்கள் என்பதை விட கீவை நேசிப்பவர்கள். எப்படி யாவது யூரோப் இல் இணைந்து விட்டால் தமது செல்வ செழிப்புக்கு நல்லது என்று கருத்துப்பவர்கள்.

கிரிமியா

இது வரலாற்று முக்கியத்துவம் உள்ள குடா நாடு. Turkey யும் ரஷ்யாவும் பிரித்தானியாவும் சண்டை போட்டு களைத்துபோன இடம். இங்கே கருங்கடலில் குளித்து தான் நான் நீந்தவே பழகினேன். இரண்டாவது உலகப்போர் நிறுத்தபடவும் சர்வதேச சங்கம் ஐக்கிய நாடுகள் சங்கமாக மாறவும் கையெழுத்து போடப்பட்ட இடம். இங்கே உள்ளவர்கள் கொஞ்சம் பழுப்பு தோல் கொண்டவர்கள். ரஷியன் போல் அவித்த றால் போல் இருக்க மாட்டினம். அரேபிய, ஒஸ்மானிய, யூத, ரஷிய, உக்கரைன் கலப்பு மக்கள் தான் இங்கு அதிகம். நல்ல திராட்சை ரசத்துக்கு பெயர் போன இடம்.பல மேற்கு நாட்டவர்கள் summer ஹாலிடேக்கு வந்து போகும் இடம்.

2014 இல் மைதான் ( தமிழில் மைதானம் ) புரட்சிக்கு பின் அப்போதைய அதிபர் விக்டர் யானுக்கோவிச் பதவியில் இருந்து அகற்றப் பட்ட பின் கிரீமியா ரஷ்யாவால் சண்டை இன்றி பிடிக்கப்பட்டது. பின்னர் நான் இருந்த luhansk மற்றும் donesk இல் ரஷ்ய சார்பு ஆட்களால் பிரச்னை ஏற்படுத்தப்பட்டு அங்குள்ள போலீஸ் ஸ்டேஷன்,நிர்வாக அலகுகள் கைப்பற்றபட்டது. அங்குள்ள வேலை இல்லாத ரவுடிகளுக்கு ரஷ்யா பணம் ஆயுதம் கொடுத்து தான் இது நடந்தது. அப்பொழுது நான் அங்க தான் இருந்தேன். படிப்பு முடிந்து பட்டமளிப்பும் முடிந்தது விட்டது ஆனால் இன்னும் கையில் எல்லாம் செர்டிபிகேட் documents வரவில்லை என்பதால் கொஞ்ச நாள் கஷ்டத்திலும் அங்கு நாங்கள் இருந்தோம். பின்னர் குண்டு சத்தம் கேட்க நான் கார்கிவ் போய் விட்டேன். வரமால் அங்கு மாட்டிய ஆபிரிக்க மாணவர்களை இந்த ரவுடிகள் பிடித்து அமெரிக்கன் army uniform போட்டு அங்குள்ள டிவி களில் அமெரிக்க ராணுவம் இங்கு வந்து விட்டது என்றும் தாம் அவர்களை பிடித்து விட்டோம் என்றும் சனங்களுக்கு பேய்க்காட்டினர்கள்.அங்கு ( கார்கிவ் )கிட்டதட்ட ஒரு வருடம் இருந்து பின்னனர் lugansk வந்தேன் என்னுடைய documents எடுக்க

வரும் பொழுது முகமாலை ஆனையிறவு வழியில் வருவதை விட செக்கிங் அதிகம். luhansk railway station இல் வைத்து என்னை ரஷியன் பிரிவினைவாதிகள் பிடித்து கிழே ஒரு இடத்துக்கு கொண்டு போய் இரண்டு மணி நேரம் ஆவது விசாரித்து இருக்கிற காசை பிடுங்கி விட்டு அனுப்பி விட்டார்கள். நான் இவர்கள் காசு வாங்கமல் விட மாட்டார்கள் என்று ஏற்கனவே தெரியும் என்பதால் வேறு பணம் ஒழித்து வைத்து இருந்தேன். விட்டுக்கு போனால் தண்ணி இல்லை, மின்சாரம் இல்லை, பெரிய விற்பனை நிலையன்கள், சந்தை, நகரம் என்று எல்லாம் சுக்கு நூறாய் கிடந்தது. ஒரு கிழமை சமாளித்து விட்டு எல்லா documents ம் எடுத்துக்கொண்டு இலங்கைக்கு வந்து விட்டேன்.

இவை வெகு சுருக்கமான தகவல்கள் மட்டுமே..

அனுப்பவ படிப்பினைகள் இவைதான்

1) ஒரு நாட்டுக்கு போனால் உங்கள் மொழி பேசுபவர்கள், உங்கள் நாட்டவர்கள் உடன் மட்டுமே தொடர்பில் இருக்காதீர்கள். நான் கார்கிவ் போன பொழுது கையில் உடனடியாக பணம் இல்லை. தங்கியது எல்லாம் அங்குள்ள எனது உக்கீரைன் நண்பர் வீட்டில்.

2) நன்கு அந்த நாட்டின் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். கடையில் போய் பால் வெங்காயம் வாங்கும் அளவில் தான் இன்று பலரின் மொழியறிவு .

3) பிரச்சனைக்கு உள்ளான இடங்களில் பிரச்னை மீண்டும் வரும். அது தீர்ந்து விட்டதாக தோன்றும். அந்த மாயத்துக்குள் உட்பட்டு விடாதீர்கள்.luhansk இல் இருந்த பொழுது போர் எல்லாம் வரவே வராது என்று தான் 99 வீதம் பேர் சொன்னார்கள். சொன்னவர்களில் பலர் இன்று உயிரோடு இல்லை. 

4)கொஞ்சம் நிலைமை சரி இல்லை என்றால் அந்த இடத்தை விட்டு ஓட தயங்க வேண்டாம். நாங்கள் சவாகச்சேரியில் இருந்து வவுனியா 1991 இல் வந்தோம்.. ஆகவே எந்த பெரிய சண்டையிலும் சிக்கவில்லை. Luhansk திரும்பிய பொழுது ஒரு தெரிந்த குடும்பம் நான் இலங்கை போவதாக சொன்ன பொழுது இரவு சாப்பிட்டுக்கு அழைத்தார்கள். அவர்கள் முன்று மாசம் உருளைக்கிழங்கு, உள்ளி இந்த இரண்டும் மட்டுமே உண்டு வாழ்ந்து இருக்கிறார்கள்.அவர்கள் இலக்குவாக வேறு ஒரு இடத்துக்கு போய் இருக்கலாம். 

4) எப்பொழுதும் எங்கு வாழ்ந்தாலும் அவசரம் என்று வெளியில் ஓட வேண்டி வரலாம். ஒரு bag இல் ஒரு மூன்று நாளைக்கு தேவையான உணவு, இதர அவசிய பொருட்கள், மற்றும் உங்கள் டாக்குமெண்ட்ஸ் அதில் வைத்துக்கொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

நண்பர் பகிடி .....மிகவும் சிறப்பான தகவல்கள் கொண்ட ஒரு கட்டுரை தந்திருக்கிறீர்கள்......இதை நீங்கள் நிர்வாகத்திடம் சொல்லி தனியாக யாழ் 24 அகவைக்கு மாற்றலாமே ......பலரும் படிப்பார்கள்.....இன்னும் 3/4 நாட்கள்தான் இருக்கின்றன........ முடிந்தால் கூடுதலான சம்பவங்களையும் சேர்க்கலாம்.......!  👍

Edited by suvy
சிறு திருத்தம்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

நண்பர் பகிடி .....மிகவும் சிறப்பான தகவல்கள் கொண்ட ஒரு கட்டுரை தந்திருக்கிறீர்கள்......இதை நீங்கள் நிர்வாகத்திடம் சொல்லி தனியாக யாழ் 24 அகவைக்கு மாற்றலாமே ......பலரும் படிப்பார்கள்.....இன்னும் 3/4 நாட்கள்தான் இருக்கின்றன........ முடிந்தால் கூடுதலான சம்பவங்களையும் சேர்க்கலாம்.......!  👍

நன்றி

எனக்கு எப்படி இதை நிர்வாகத்திடம் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பகிடி said:

நன்றி

எனக்கு எப்படி இதை நிர்வாகத்திடம் கொண்டு சேர்ப்பது என்று தெரியவில்லையே 

நீங்கள் மேலே எழுதியதை… கொப்பி பண்ணி, 
சுய ஆக்கம் பகுதியில், புதிய தலைப்பை திறந்து… பதிந்து விடுங்கள்.
இதுகும் அப்படியே இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

@பகிடி,

உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பொன்றைத் தந்தால் இதனை யாழ் 24 அகவைக்கு மாற்றி விடுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, இணையவன் said:

@பகிடி,

உங்கள் கட்டுரைக்குப் பொருத்தமான தலைப்பொன்றைத் தந்தால் இதனை யாழ் 24 அகவைக்கு மாற்றி விடுகிறேன்.

 

எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.....சிறியர் சொல்வதுபோல் இதுவும் அப்படியே இங்கும் இருக்கட்டும்.......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் மேலே எழுதியதை… கொப்பி பண்ணி, 
சுய ஆக்கம் பகுதியில், புதிய தலைப்பை திறந்து… பதிந்து விடுங்கள்.
இதுகும் அப்படியே இருக்கட்டும்.

நன்றி தமிழ் சிறி அவர்களே.யாழ் அகவை 24 இல் சுய ஆக்கம் பகுதியில் பதிந்து உள்ளேன் 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.