Jump to content

இருவகை பிரியாணி - திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி, ஹைதராபாதி சிக்கன் பிரியாணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2020 இல் இந்த pandemic துவங்கியபோது, நிறைய நேரம் சும்மா இருந்தது. அப்பொழுது பிரியாணி செய்து பாப்போம் என்று விதம் விதமான ரெஸிபிகள், YouTube விடீயோகள் நிறைய பார்த்து செய்வது. ஆரம்பத்தில் ஒன்றுமே சரியாக வராது, தண்ணி அளவு பிழைக்கும், அல்லது அடிப்பிடிக்கும், சரியான ingredients இருக்காது, தம் சரியாக வைக்க வராது. அப்பிடி இருந்து படிப்படியாக  இப்பொழுது, விருப்பமான சுவையில், உறைப்பில்  செய்யும் அளவுக்கு வந்துவிட்டேன். ஒரே குறை, பிரியாணி செய்வது கொஞ்சம் நேரம் எடுக்கும் வேலை

இதில்  ஹைதராபாதி சிக்கன் பிரியாணி , எனது மகன்களில் ஒருவருக்கு பிடிக்கும் என்பதால் ஒவ்வொரு கிழமையும் அவருக்காகவே செய்வேன், நாங்களும் சாப்பிடுவோம். இந்த பிரியாணி மற்றைய வகைகளை விட கொஞ்சம் இலகுவானது, தண்ணி அளவு அவ்வளவு முக்கியமில்லை. இதற்கு நூற்று கணக்கில் விடியோக்கள் உள்ளது, நான் எனக்கென்று ஒரு அளவு, ingredients, செய்முறை  வைத்து செய்வேன். எங்கள் மிளகாய்த்தூள் கூட கொஞ்சம் போடுவதுண்டு.

தலப்பாக்கட்டி பிரியாணியும், வெவ்வேறு விடியோக்கள் பார்த்து பல தடவை செய்திருக்கிறேன், சில வேளைகளில் சரி வரும், சில வேளைகளில் பிழைக்கும். இந்த வகை பிரியாணிக்காக முன்பு வாங்கிவைத்த சீரக சம்பா அரிசி மூட்டை சும்மா இருந்ததால்,  கிட்டடியில் வேறு ஒரு நல்ல விடியோவை பார்த்து கடந்த இரண்டு தடவை செய்தது மிகவும் சுவையாகவே வந்தது.  இப்பொழுது இது எப்பிடி சரியாக செய்வது என்று கொஞ்சம் பிடிபட்டு விட்டது.

ஒரு கிழமைக்கு முன், முழுநாள் ஓய்வு கிடைத்தபோது இரண்டுவகை பிரியாணிகளையும் ஒரே நாளில், நேரம்  எடுத்து செய்தேன். நான் இப்பிடியெல்லாம் செய்தேன், எனக்கு இப்பிடியெல்லாம் செய்யத்தெரியும் என்று வேறெங்கே படம் காட்டுவது😆? அதனால் கொஞ்ச படங்கள் கீழே: 

20220421-130308.jpg

20220421-130324.jpg

ஹைதராபாதி சிக்கன் பிரியாணி

 

20220421-115506.jpg

20220421-115523.jpg

திண்டுக்கல் தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி

20220421-114405.jpg

தலப்பாக்கட்டி பிரியாணி செய்யும் முறை கீழே, இதில் இவர் போடும் காரம், தண்ணி அளவைவிட எனக்கு கொஞ்சம் கூட போட வேண்டி இருந்தது:

 

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரே நான் தம் பிரியாணி மாதத்தில் ஒருதடவை மட்டும் எண்டு முறைவச்சு பாஸ்மதி அரிசியில் செய்வேன்.. முதலில் வீடியோக்கள் பாத்து கொஞ்சம்தடுமாறி தடுமாறி பிழைகள் சரிகளோடு செய்து செய்து இப்பொழுது என் சொந்த ஸ்டைலை கண்டடைந்து செய்கிறேன்.. செமயாக இருக்கும்.. அடுத்தமாதம் செய்யும்போது வீடியோ போடுரன்.. கைதரபாத் பிரியாணி மட்டும் செய்ய தெரியா.. பாஸ்மதி அரிசி என்பதால் உடல் நலத்துக்கு கூடாது என்பதால் மாதத்தில் ஒரு முறை மட்டும் என்று முறைவைத்து செய்வேன்.. ஆனால் சீரகச்சம்பா அரிசி பாஸ்மதிபோல் உடல் நலத்துக்கு அவ்வளவு தீங்கானது அல்ல.. நன்றி பகிர்விற்கு..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவரே நான் தம் பிரியாணி மாதத்தில் ஒருதடவை மட்டும் எண்டு முறைவச்சு பாஸ்மதி அரிசியில் செய்வேன்.. முதலில் வீடியோக்கள் பாத்து கொஞ்சம்தடுமாறி தடுமாறி பிழைகள் சரிகளோடு செய்து செய்து இப்பொழுது என் சொந்த ஸ்டைலை கண்டடைந்து செய்கிறேன்.. செமயாக இருக்கும்.. அடுத்தமாதம் செய்யும்போது வீடியோ போடுரன்.. கைதரபாத் பிரியாணி மட்டும் செய்ய தெரியா.. பாஸ்மதி அரிசி என்பதால் உடல் நலத்துக்கு கூடாது என்பதால் மாதத்தில் ஒரு முறை மட்டும் என்று முறைவைத்து செய்வேன்.. ஆனால் சீரகச்சம்பா அரிசி பாஸ்மதிபோல் உடல் நலத்துக்கு அவ்வளவு தீங்கானது அல்ல.. நன்றி பகிர்விற்கு..

ஓணாண்டி, நீங்கள் செய்யும் முறையை பார்க்க ஆவலாக உள்ளேன், செய்துவிட்டு படங்கள், செய்முறையுடன் போடுங்கள், நாங்களும் செய்து பார்க்கலாம். இதைவிட வேறு வகை புரியாணிகளும் செய்துள்ளேன், அடிக்கடி செய்வதில்லை. சீராக சம்பா அரிசி சுவை கொஞ்சம் வித்தியாசமானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீர்வேலியான் உங்களது பிரியாணி இரண்டும் பிரசன்ட்டேசன் சுப்பராய்  இருக்கு .......ஹைதராபாத் சிக்கன் முட்டை போடுவதில்லையா .......அதில் ஒரு முழு முட்டை வைத்திருந்தால் இன்னும் நல்லாய் இருந்திருக்கும்.....அல்லது திண்டுக்கல் பிரியாணியில் இருக்கும் முட்டையை எடுத்து வைத்தாவது படமெடுத்திருக்கலாம்.......!

திண்டுக்கல் பிரியாணியும் கலக்கலாய் இருக்கு.....ஆனால் அந்த முட்டையை சரிபாதியாக நீளவாக்கில் வெட்டி வைத்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்......வெங்காயம் நல்ல வடிவாக பொன்நிறமாக வதங்கி இருக்கு.......நெய் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.....போத்தலில் நிறையத்தான் இருக்கும்......நாங்கள்தான் அளவாகப் போடவேணும்.......மற்றும்படி எல்லாம் சூப்பர்.......!

( குறை நினைக்க வேண்டாம், குக் வித் கோமாளியின் பாதிப்பு)

செஃவ் தாமுவின் தாசன் ......!   👍  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

நீர்வேலியான் உங்களது பிரியாணி இரண்டும் பிரசன்ட்டேசன் சுப்பராய்  இருக்கு .......ஹைதராபாத் சிக்கன் முட்டை போடுவதில்லையா .......அதில் ஒரு முழு முட்டை வைத்திருந்தால் இன்னும் நல்லாய் இருந்திருக்கும்.....அல்லது திண்டுக்கல் பிரியாணியில் இருக்கும் முட்டையை எடுத்து வைத்தாவது படமெடுத்திருக்கலாம்.......!

திண்டுக்கல் பிரியாணியும் கலக்கலாய் இருக்கு.....ஆனால் அந்த முட்டையை சரிபாதியாக நீளவாக்கில் வெட்டி வைத்திருந்தால் இன்னும் அழகாய் இருந்திருக்கும்......வெங்காயம் நல்ல வடிவாக பொன்நிறமாக வதங்கி இருக்கு.......நெய் கொஞ்சம் குறைத்திருக்கலாம்.....போத்தலில் நிறையத்தான் இருக்கும்......நாங்கள்தான் அளவாகப் போடவேணும்.......மற்றும்படி எல்லாம் சூப்பர்.......!

( குறை நினைக்க வேண்டாம், குக் வித் கோமாளியின் பாதிப்பு)

செஃவ் தாமுவின் தாசன் ......!   👍  😂

சுவி,
முட்டை எல்லா பிரியாணிக்கும் வைக்கலாம், பசியில் இருந்ததால் முட்டையை, முதலாவது செய்த பிரியாணியுடன் சாப்பிட்டு விட்டேன்! இந்தியர்கள் போல், நெய் நான் நிறைய போடுவதில்லை, பார்த்தால் நிறைய போட்டது போல் உள்ளதா? உங்கள் கருத்துகள், திருத்தங்களை எப்போதுமே வரவேற்கிறேன், நீங்கள் சொன்ன புரோக்ராம் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. சிறப்பானதா?     

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

சுவி,
முட்டை எல்லா பிரியாணிக்கும் வைக்கலாம், பசியில் இருந்ததால் முட்டையை, முதலாவது செய்த பிரியாணியுடன் சாப்பிட்டு விட்டேன்! இந்தியர்கள் போல், நெய் நான் நிறைய போடுவதில்லை, பார்த்தால் நிறைய போட்டது போல் உள்ளதா? உங்கள் கருத்துகள், திருத்தங்களை எப்போதுமே வரவேற்கிறேன், நீங்கள் சொன்ன புரோக்ராம் கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை. சிறப்பானதா?     

விஜய் டீ .வீ யில் சனி ஞாயிறுகளில் வரும் சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி.......கலகலப்பாகப் போகும்.....நேரமிருந்தால் நீங்களும் ஒருமுறை பார்க்கலாம்.....அதில் வரும் விமர்சனம் போலத்தான் சும்மா பகிடிக்கு எழுதினேன் .........!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நீர்வேலியான்.

யுவர் ஆனர் உங்க வீட்டுக்கு வரலை என்றதுக்காக ரொம்பவும் கடுப்பேத்துறீங்களே!

சரி சரி காலம் இடம் கொடுத்து சுகமா இருந்தா வந்து பாயை போட்டு படுக்க தான் இருக்கு.

புரியாணி சூப்பராக இருக்கு.எனக்கு மிகவும் பிடித்தது.முன்னரெல்லாம் அடிக்கடி சாப்பிடுவோம்.நெய்யை ஊத்துறதால இப்ப வருடம் ஒருக்கா என்ற நிலை.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.