Jump to content

இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே பற்றி அதிகம் அறியாத சில தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே பற்றி அதிகம் அறியாத சில தகவல்கள்

30 ஏப்ரல் 2022
 

இந்திய ராணுவ தளபதி

பட மூலாதாரம்,INDIAN ARMY

 

படக்குறிப்பு,

இந்திய ராணுவ தலைமைத் தளபதிக்குரிய பேட்டனை, பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து பெறும் ஜெனரல் மனோஜ் பாண்டே (இடது)

இந்திய ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். சம்பிரதாய நடைமுறைப்படி டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் முகுந்த் நரவனேவிடம் இருந்து மனோஜ் பாண்டே ராணுவ ஜெனரலுக்கான பேட்டனை பெற்றுக் கொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டார். முன்னதாக, பதவியில் இருந்து ஓய்வு பெறும் ஜெனரல் நரவனேவுக்கு ராணுவ வீரர்கள் பிரியாவிடை அணிவகுப்பும், புதிய ஜெனரலுக்கு மரியாதையும் செலுத்தினர். அவரைப் பற்றிய 10 தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

இந்திய ராணுவத்தின் 29ஆவது தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெனரல் மனோஜ் பாண்டே, ராணுவத்தின் இஞ்சினியரிங் கார்ப்ஸ் எனப்படும் பொறியாளர் பிரிவை அடிப்படையாகக் கொண்டவர். இதுவரை போர்க்கள படைப்பிரிவை அடிப்படை சேவையாகக் கொண்டவர்களே ராணுவ ஜெனரல் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உதாரணமாக, ஜெனரல் முகுந்த் நரவனே சீக்கிய லைட் படையணியை அடிப்படை சேவையாகக் கொண்டவர். அங்கிருந்துதான் அவர் சீக்கியர் படையணிகளையும் அசாம் ரைஃபிள்ஸ், இலங்கையில் இந்திய அமைதி காப்புப்படை, ராணுவ அதிரடிப்படை போன்றவற்றையும் வழிநடத்தினார். அவருக்கு முன்னதாக ராணுவ ஜெனரலாக இருந்த மறைந்த பிபின் ராவத், தல்பீர் சிங் சுஹாக் ஆகியோர் கோர்க்கா ரைஃபில்ஸ் படைப்பிரிவை அடிப்படை சேவையாகக் கொண்டவர்கள். அந்த வகையில் இப்போதுதான் முதல் முறையாக ராணுவ பொறியாளர் பிரிவை அடிப்படை சேவையாகக் கொண்ட ஒருவர் ராணுவ ஜெனரல் ஆகியிருக்கிறார்.

இந்திய ராணுவ தலைமை தளபதி பொறுப்பேற்கும் முன்பு ராணுவ துணை தலைமைத் தளபதியாக லெப்டிணன்ட் ஜெனரல் அந்தஸ்தில் இருந்தார் மனோஜ் பாண்டே. அந்த பதவியை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதிதான் இவர் ஏற்றார். வழக்கமாக ராணுவ தலைமை தளபதி பணிக்கு நியமிக்கப்படும்போது பணி மூப்பு, படைத்திறன் அனுபவம் ஆகியவற்றை விட தகுதி அடிப்படையில்தான் ஒருவரை ராணுவ உயரதிகாரியாக நியமிக்கும் வழக்கத்தை உயரதிகாரிகள் நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை வழக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், இம்முறை பணி அனுபவம் அடிப்படையில் ஜெனரல் முகுந்த் நரவனேவுக்கு அடுத்த நிலையில் இருந்த மனோஜ் பாண்டேவை இந்திய அரசு ராணுவ ஜெனரல் ஆக நியமித்திருக்கிறது.

கடக்வாஸ்லாவில் உள்ள என்டிஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு கல்லூரி மற்றும் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிக் கல்லூரியில் படித்தவர் மனோஜ் பாண்டே.1982ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார்ப்ஸ் ஆஃப் இஞ்சினியர்ஸ் என இப்போது அழைக்கப்படும் பாம்பே இஞ்சினியர் குரூப் படைப்பிரிவில் ராணுவ சேவையை செகன்ட் லெப்டிணன்ட் பதவியில் இருந்து தொடங்கினார். இந்திய ராணுவத்தில் இந்த படைப்பிரிவை பாம்பே சாப்பர்ஸ் என்று அழைப்பதுண்டு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பாம்பே மாகாண ராணுவத்தின் அங்கமாக இந்த பாம்பே சாப்பர்ஸ் இருந்ததால் அந்தப் பெயரிலேயே கார்ப்ஸ் ஆஃப் இஞ்சினியர்ஸ் அழைக்கப்படுவதுண்டு.

ராணுவ பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் லெப்டிணன்ட், அடுத்த மூன்று ஆண்டுகளில் கேப்டன், பிறகு ஆறு ஆண்டுகளில் மேஜர் பதவிகளை வகித்தார் மனோஜ் பாண்டே.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்திய ராணுவத்தில் லெப்டிணன்ட் கர்னல் பதவி உயர்வு பெற்ற பிறகு, எத்தியோப்பியா மற்றும் எரிட்ரியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்புப் படையின் தலைமைப் பொறியாளராக மனோஜ் பாண்டே பணியாற்றினார். ஜம்மு காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (LOC) பகுதியில் அமைந்துள்ள 117ஆவது பொறியாளர் படைப்பிரிவுக்குக் கட்டளை அதிகாரியாக மனோஜ் பாண்டே பணியாற்றினார்.

2001ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றம் மீது பயங்கரவாத தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு எதிரான மறைமுக போரை பாகிஸ்தான் ஊக்குவிப்பதாக இந்திய அரசு குற்றம்சாட்டியது. அப்போது பாகிஸ்தானுக்கு எதிர்வினையாற்றுவதற்காக மிகப்பெரிய அளவில் சுமார் ஐந்து லட்சம் ராணுவ வீரர்கள் பல்வேறு முகாம்களில் இருந்து எல்லை நோக்கி நகர்த்தப்பட்டனர். அதுவே ஆப்பரேஷன் பராக்கிரமம் என்று அழைக்கப்பட்டது. எனினும், 2002ஆம் ஆண்டில் அந்த ராணுவ நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.

மத்திய பிரதேசத்தின் மோவில் உள்ள ராணுவ போர்ப்பயிற்சிக் கல்லூரியில் உயரதிகாரிகளுக்கான ராணுவ பயிற்சியை முடித்த மனோஜ் பா்டே, மலையேற்ற போர்ப்படைப்பிரிவின் எட்டாவது படையணி தலைமையகத்தில் கர்னல் ஆக பணியாற்றினார். பிறகு மேஜர் ஜெனரல் ஆக பதவி உயர்வு பெற்று மேற்கு லடாக் பிராந்தியத்தில் பணியாற்றினார். அப்போது லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினர் பெருமளவில் குவிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த மலையேற்ற படைப்பிரிவு, 1940களில் இராக், சிரியா, பெர்ஷியா, இத்தாலி ஆகிய நாடுகளில் நடந்த போர் நடவடிக்கையில் பிரிட்டிஷ் படையின் அங்கமாக சென்றுள்ளது. இதன் வீரர்கள் 1999இல் கார்கில் போரில் பங்கேற்பதற்காக காஷ்மீருக்குச் சென்றனர்.

 

இந்திய ராணுவம்

பட மூலாதாரம்,INDIAN ARMY

 

படக்குறிப்பு,

ஜம்மு காஷ்மீரில் ராணுவ களப்பணி ஆய்வுக்கு சென்ற ஜெனரல் முகுந்த் நரவனேவுடன் லெப்டிணன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே

பிறகு இந்திய ராணுவ தலைமையகத்தில் ராணுவ நடவடிக்கைகள் இயக்குநரகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் ஆக மனோஜ் பாண்டே பணியாற்றினார். ராணுவ லெப்டிணன்ட் ஜெனரல் ஆக பதவி உயர்வு பெற்ற அவர் தெற்கு பிராந்திய தளபதியாக பணியாற்றினார். 2018இல் தேஜ்பூரில் உள்ள படைப்பிரிவின் தளபதி பொறுப்பை ஏற்றார் மனோஜ் பாண்டே. இந்த காலகட்டத்தில் அவரது படையினர் வடகிழக்கு ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றனர். ஒன்றரை வருடம் அங்கு பணியாற்றிய பிறகு மீண்டும் டெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவர், ராணுவ ஒழுங்கு, நலன்கள் மற்றும் சம்பிரதாய நிகழ்வுகள் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர் ஆக பணியாற்றினார்.

 

இந்திய ராணுவ தளபதி

பட மூலாதாரம்,INDIAN ARMY

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவர் அந்தமான் நிகோபார் படைப்பிரிவின் தலைமை கட்டளைத் தளபதி ஆக நியமிக்கப்பட்டார். ஓராண்டுக்குப் பிறகு கிழக்கு பிராந்திய தளபதியாக இடமாற்றம் செய்யப்பட்ட அவர், அங்கு ஏழு மாதங்கள் பணியாற்றிய நிலையில், டெல்லிக்கு மீண்டும் அழைத்துக் கொள்ளப்பட்டார். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராணுவத்தின் துணைத் தளபதியாக மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டார்.

 

இந்திய ராணுவம்

பட மூலாதாரம்,INDIAN ARMY

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பிறந்த மனோஜ் பாண்டேவின் தந்தை சி.ஜி. பாண்டே நாக்பூர் பல்கலைக்கழகத்தில் மன நல பிரிவு டீன் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமீபத்தில்தான் அவர் இறந்து போனார். அவரது தாயார் பிரேமா பாண்டே அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி வாசிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். அறிவியல் பட்டப்படிப்பு முடித்து என்டிஏவில் தேர்ச்சி பெற்ற பிறகு புனேவில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் பிரிவில் பிடெக் பட்டம் முடித்தார் மனோஜ் பாண்டே. இவரது மனைவி அர்ச்சனா சால்பேக்கர், பல் மருத்துவ நிபுணர். இப்போது ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கான சங்கத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இந்திய ராணுவத்தில் மிக உயரிய சேவைக்காக வழங்கப்படும் பரம் விஷிஷ்ட் சேவை பதக்கம், அதி விஷிஷ்ட் சேவை பதக்கம், விசிஷ்ட் சேவை பதக்கம், ராணுவ பணியாளர்கள் தலைமை அதிகாரியின் பாராட்டுப்பத்திரம் மற்றும் பிராந்திய தளபதியின் பாராட்டுப் பத்திரங்களை பெற்றுள்ளார் மனோஜ் பாண்டே.

https://www.bbc.com/tamil/india-61284401

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டிஷ் வரிகட்டுபவர்களின் முதுகில் நின்று இந்திய ராணுவ அதிகாரி பற்றி புகழ்பாடுகினம் இந்த தமிழபிபிசி .

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.