Jump to content

தமிழ் இளைஞர்களின்... இரத்தத்தை உறிஞ்சும், புலம்பெயர் தமிழ் முதலைகள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரி  

இங்கே  முதலாளிகளை  மட்டும்  குறை கூறுபவர்களிடம்  ஒரு விண்ணப்பம்

ஒரு  ஆயிரம் பேராவது லா  சப்பல்  பகுதியில்  இவ்வாறு  வேலை  செய்யலாம்

நீங்கள்  அவர்களுக்கும்  அவர்களை  சார்ந்து உதவிக்காக ஏங்கியபடி  இருக்கும்  பல  ஆயிரம் அவர்களது தாயக குடும்பங்களுக்கும்  உறவுகளுக்கும்  என்ன  பரிந்துரைகளையும் வசதிகளையும்  செய்து  தர  தயாராக உள்ளீர்கள்??

அப்படி  நீங்கள்  பரிந்துரைத்தால்  செய்தால் 

அவர்களும்  வசதியாக  வாழ்வது  மட்டுமல்ல

நீங்கள்  குறிப்பிடும்  தமிழ்முதலாளிமாரும் திருந்த  வாய்ப்புண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைக்காசுக்கு வேலை செய்வது, களவாக வேலை செய்வது எல்லாம் வெளிநாடுகளில் புதிய விடயங்கள் இல்லை. அவை காலங்காலமாக எல்லா இடங்களிலும், சமூகங்களிலும் உள்ளன.

சைனாக்காரன், இந்தியாக்காரன் என்று முதலாளிகள் செய்யும் அடாவடிகள் எல்லாம் நாம் அறிந்ததே.

இங்கு யதார்த்தம் என்ன என்றால் முறையான வேலை செய்யும் அனுமதி, மற்றும் குடியுரிமை உள்ளவர்களிடமே அடிமாட்டு விலைக்குதான் வேலை வாங்குகிறார்கள். வேலை வழங்கும் ஏஜென்சிகள் இன்னொரு பக்கத்தில் தொழிலாளர் உழைப்பை தின்று ஏப்பம் விடுகின்றன. தகுந்த வேதனம் வழங்காமை தொடக்கம் இவர்கள் செய்யும் சுத்து மாத்துக்க்கள் முடிவில்லாத தொடர்கதை.

தாங்கள், தங்கள் வலைப்பூக்கள், தளங்கள்  பிரபலம் அடைவதற்கு சமூக ஊடகப்பரப்பில் சகட்டுமேனிக்கு கண்டதையும் எழுதித்தள்ள பலர் உள்ளார்கள். தமிழ் கடைகளை புறக்கணிக்க போகின்றீர்களா? நல்லது நியாயமாக ஓடுகின்ற இந்தியன், சைனா கடை எது என்று கூறுங்கள், நானும் வருகின்றேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2022 at 16:34, விசுகு said:

கிருபன் அவர்கள் இந்தளவுக்காவது  கருணை  காட்டாது  விட்டால்  பலபேர்  இங்கே  தற்கொலை  செய்யும் நிலை?

இங்கு விசா இல்லை வேர்க் பெர்மிட் இல்லியாகினும் சரளமாய்  ஆங்கிலம் கதைக்க தெரிந்தால் காணும் போடர் ஏஜென்ட் கூட்டத்தை சக்கையாக ஏமாத்தலாம் உலகம் விசித்திரமானது தெலுங்குவம்சாவளியை சேர்ந்த தமிழ் நாட்டை சேர்ந்த தமிழர் இளவயது ஆங்கில மீடியத்தில் படித்து இருப்பார் ஆக்கும் ஐந்து வருடமாக இலங்கை மரக்கறி வகைகள் பாம்பே வெங்காயம் இப்படி பல தொழில்கள் மூலம் நம்மவர் பலருக்கு வேலை  கொடுக்கின்றார் மணித்தியாலத்துக்கு ஐந்து பவுன் இங்கிலாந்து அடிப்படை சம்பளம் 9.50  சமீபத்தில் இலங்கை தமிழ் பெண்ணை விசாவுக்காக மணம்  புரிந்து உள்ளார் தனிப்பட்ட விபரங்கள் இங்கு பகிரக்கூடாது ஆனால் இந்த திரி வேறு எங்கோ போவது போல் உள்ளது அதனால் .

பகிடி என்னவென்றால் அவரின் தொழில் முறை போட்டியாளர்களுக்கு அவருக்கு விசா வேர்க் பெர்மிட் இல்லை என்பது தெரியும் போடர் ஏஜென்ட் அவரிடம் போகும் நேரம்களில் அழகான பிரிடிஷ் ஆங்கிலத்தில் பிளந்து கட்டுவார் போனதுகள்  கடமைக்கு ஒப்பாரி வைத்துவிட்டு போய் விடுவினம் .

ஊரில் இருந்துவரும் நம்மவர் உதவலாம் என்று போனால் லண்டன் உலக வரைபடத்தில் எங்கு உள்ளது என்று காட்ட கூட முடியாத உலக அறிவு 100 தோப்புக்கரணம் அடிக்க முடியாத உடல்வாகு இங்குவந்ததும் அவருக்கு ஒரு சின் ஊரில் இருப்பா அவாவுடன் மணித்தியாலக்கணக்கில் கதை வாழ்க்கையில் எந்த குறிக்கோளும் இல்லாமல் சோம்பிஸ்  போல் வந்து இறங்குகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் கல்யாண ஒளிநாடா யூடியூப்பில் அனைவரும் பார்க்க கூடியது போல் போட்டு இருந்தவர் அதில் அநேகர் அவரின் போட்டி யாளர் சமூகம் அளித்து அட்சதை போட்டது வேடிக்கையான ஒன்று  நினைவு வந்து தேட கிடைக்குதில்லை அந்த இணைப்பு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/5/2022 at 17:10, விசுகு said:

சரி  

இங்கே  முதலாளிகளை  மட்டும்  குறை கூறுபவர்களிடம்  ஒரு விண்ணப்பம்

ஒரு  ஆயிரம் பேராவது லா  சப்பல்  பகுதியில்  இவ்வாறு  வேலை  செய்யலாம்

நீங்கள்  அவர்களுக்கும்  அவர்களை  சார்ந்து உதவிக்காக ஏங்கியபடி  இருக்கும்  பல  ஆயிரம் அவர்களது தாயக குடும்பங்களுக்கும்  உறவுகளுக்கும்  என்ன  பரிந்துரைகளையும் வசதிகளையும்  செய்து  தர  தயாராக உள்ளீர்கள்??

அப்படி  நீங்கள்  பரிந்துரைத்தால்  செய்தால் 

அவர்களும்  வசதியாக  வாழ்வது  மட்டுமல்ல

நீங்கள்  குறிப்பிடும்  தமிழ்முதலாளிமாரும் திருந்த  வாய்ப்புண்டு

 

இது  தான்

சொல்லுக்கும் செயலுக்குமான  வித்தியாசம்?

சொல்மிக  மிக  சுலபம்  மலிவானது

செயல்????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை குறைச்சு பதியண்ணை. நான் ஊருக்கு காசு அனுப்ப வேணும். சும்மா ஒரு கொஞ்ச பதிவிருந்தால் காணும். மற்றும் படி நான் 12,13 மணித்தியாலமும் வேலை செய்வன் அண்ணை.மெடிக்கல் இன்சூரன்ஸ் லைவ் இன்சூரன்ஸ் ஒண்டும் தேவையில்லை அண்ணை. அந்த காசை கையிலை தாங்கோ அண்ணை.

☜(゚ヮ゚☜)☜(⌒▽⌒)☞☜(゚ヮ゚☜)☜(⌒▽⌒)☞☜(゚ヮ゚☜)

அண்ணை எனக்கு விசா பிரச்சனை வரும் போலை கிடக்கு... ஒரு ஆறு ஏழு மாதத்துக்கு புஃல் பதிவாய் பதிஞ்சு விடுங்கோ அண்ணை. நல்ல விசா வந்தாப்பிறகு 100 ஈரோ பதிவு காணும் அண்ணை

☜(⌒▽⌒)☞☜(⌒▽⌒)☞☜(⌒▽⌒)☞☜(⌒▽⌒)☞☜(⌒▽⌒)☞

அண்ணை ஒரு வருசத்துக்கு கட்டாயம் புஃல் பதிவும் பேப்பரும் வேணுமண்ணை. நான் ஒரு இடத்திலை வீடு பாத்திருக்கிறன் அண்ணை. வீடு வாங்கப்போறன். இந்த பதிவு காணாட்டில் வேறை ஒரு இடத்திலையும் வேலை செய்யுறன் எண்டு சொல்லி பேப்பர் எடுக்கப்போறன் அண்ணை......என்ரை மனிசிக்கும் வேலை செய்யுறா எண்டு கள்ளப்பேப்பர் முடிச்சிட்டன் அண்ணை....

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2022 at 00:21, குமாரசாமி said:

அண்ணை குறைச்சு பதியண்ணை. நான் ஊருக்கு காசு அனுப்ப வேணும். சும்மா ஒரு கொஞ்ச பதிவிருந்தால் காணும். மற்றும் படி நான் 12,13 மணித்தியாலமும் வேலை செய்வன் அண்ணை.மெடிக்கல் இன்சூரன்ஸ் லைவ் இன்சூரன்ஸ் ஒண்டும் தேவையில்லை அண்ணை. அந்த காசை கையிலை தாங்கோ அண்ணை.

☜(゚ヮ゚☜)☜(⌒▽⌒)☞☜(゚ヮ゚☜)☜(⌒▽⌒)☞☜(゚ヮ゚☜)

அண்ணை எனக்கு விசா பிரச்சனை வரும் போலை கிடக்கு... ஒரு ஆறு ஏழு மாதத்துக்கு புஃல் பதிவாய் பதிஞ்சு விடுங்கோ அண்ணை. நல்ல விசா வந்தாப்பிறகு 100 ஈரோ பதிவு காணும் அண்ணை

☜(⌒▽⌒)☞☜(⌒▽⌒)☞☜(⌒▽⌒)☞☜(⌒▽⌒)☞☜(⌒▽⌒)☞

அண்ணை ஒரு வருசத்துக்கு கட்டாயம் புஃல் பதிவும் பேப்பரும் வேணுமண்ணை. நான் ஒரு இடத்திலை வீடு பாத்திருக்கிறன் அண்ணை. வீடு வாங்கப்போறன். இந்த பதிவு காணாட்டில் வேறை ஒரு இடத்திலையும் வேலை செய்யுறன் எண்டு சொல்லி பேப்பர் எடுக்கப்போறன் அண்ணை......என்ரை மனிசிக்கும் வேலை செய்யுறா எண்டு கள்ளப்பேப்பர் முடிச்சிட்டன் அண்ணை....

 

உண்மை  தான் அண்ணா

இங்கே  வேண்டுதென்றே ஒரு  பக்கத்தாரை மட்டும் 

ஏதோ எரிச்சலில்  அல்லது  பகையில்  எழுதியது  போலத்தான் கட்டுரை  இருக்கு?

ஆனால் நிஐத்தில் இரு  பகுதியிலும்  சரியுமுண்டு  பிழைகளும்  உண்டு

முதலில்  விசா  இருந்ததோ இல்லையோ எவரையும்  அவர்களது அனுமதியில்லாமல் கட்டாயப்படுத்தி இந்த  நாடுகளில் வேலை  வாங்கமுடியாது.  எனவே  அவர்களது  தேவை  மற்றும் கடன்  சுமைகள்  மற்றும் பொறுப்புக்கள் சார்ந்து தத்தமது  சம்பளங்களை  பேசித்தான் வேலை  செய்கிறார்கள். அதேநேரம் வதிவிட  அனுமதியுள்ளவனுக்கும் இல்லாதவனுக்கும் வேலையிலும்  சரி சம்பளத்திலும் சரி  வித்தியாசம்  இருக்கவே  செய்யும்.  இது  முதலாளிக்கான சவாலுக்கானது. நானே 5 வருடங்கள்  ஒரு  நாள் ஓய்வு நாளோ விடுமுறையோ இல்லாமல் 365 நாளும்  வேலை  செய்தவன் தான்.  அதுவும்  தமிழரல்லாத  முதலாளியிடம்.  ஆனால் விசா  இல்லாதவர் மே தினத்துக்கு  கடையை  பூட்டு  என்று முதலாளியிடம் சொல்வதெல்லாம்  ரொம்ப அதிகம்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.