Jump to content

சைபர் குற்றங்கள்: ஜெராக்ஸ் கடை முதல் வசீகர குறுஞ்செய்திகள் வரை - தொடரும் நூதன மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சைபர் குற்றங்கள்: ஜெராக்ஸ் கடை முதல் வசீகர குறுஞ்செய்திகள் வரை - தொடரும் நூதன மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

  • நீச்சல்காரன்
  • கணினித் தமிழ் ஆர்வலர், சென்னை
1 மே 2022
 

நூதனமாக நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

(மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினோராம் கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்)

தங்கம் விலை, பெட்ரோல் விலை என்று தினசரி செய்தியாக சைபர் கிரைம் எனப்படும் இணையவழிக் குற்றங்களும் பெருகிக்கொண்டே உள்ளன.

பொதுவாக எல்லா தொழிலிலும் மோசடிகள் நடந்தாலும் இணையம் என்று வரும் போது பலருக்குப் புதிதாக இருப்பதாலும், நவீனத்தின் மீதுள்ள கவர்ச்சியாலும் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள். இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடம் நம்ப வைத்து பணம்பறித்தல், ஆசைகாட்டி ஏமாற்றுதல், ஆபாசம் காட்டி மிரட்டுதல், போக்கு காட்டி திருடுதல் எனப் பல வழிகளில் குற்றங்கள் நடப்பதை நாம் அறிவோம்.

ஓட முடியாது, ஒளிய முடியாது என்பது இந்த இணையவழிக் குற்றங்களுக்குச் சரியாகப் பொருந்தும். இணையத்தின் கறுப்புப் பக்கங்களான இத்தகைய குற்றங்கள் இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமல்லாமல் பயன்படுத்தாத அல்லது விட்டு விலகியிருப்பவர்களிடமும் நடந்து வருகின்றன. இவை எப்படியெல்லாம் நடக்கின்றன, எவ்வாறு தற்காத்துக் கொள்ளலாம் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.

பணம் பறிப்பு

ஒரே பாடலில் பணக்காரனாகும் கதாநாயகன் போல ஒரே நாளில் பணக்காரராக ஒவ்வொருவர்க்குள்ளும் ஒரு மோகம் இருக்கும். அதுதான் ஏமாற்றுக்காரரின் தேவை.

இணையவாசிகளை ஏமாற்ற மின்னஞ்சல், வாட்சப் என போலியான விளம்பரச் செய்தி அனுப்புவது போல இணையத்தைப் பயன்படுத்தாதவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்புவார்கள்.

உதாரணமாக செல்போன் டவர் அமைத்துத் தருகிறோம், ஆஸ்திரேலியக் கப்பலில் வேலை வாங்கித் தருகிறோம், முத்ரா திட்டத்தில் மானியமாகக் கடனளிக்கிறோம், வெளிநாட்டிலிருந்து சிறப்புப் பரிசு வந்திருக்கிறது அதைக் கொடுக்கிறோம், கொரோனா நிவாரணநிதி அளிக்கிறோம், வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறோம் என்று நேரத்திற்கு ஏற்றவாறு பேசுவார்கள். நம்பிக்கையை அதிகரிக்க போலியான மின்னஞ்சல், போலியான இணையதளத்தைக் கூடக் கொடுப்பார்கள்.

இவ்வாறாக பெரும் நம்பிக்கையை உருவாக்கிவிட்டு முன்பணம் அல்லது சேவைக் கட்டணம் அல்லது சுங்கக் கட்டணம் என்று ஏதாவது சொல்லி, பணத்தைக் கட்டச் சொல்வார்கள். நமக்கும் ஆசை கண்ணை மறைப்பதால் கேள்வியே கேட்காமல் கேட்கும் தொகையை கட்டிவிடுவோம். அதன் பிறகே ஏமாற்றப்பட்டதை உணர்வோம். எனவே தெரியாத நபர்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் அல்லது ஒன்றிற்கு இருமுறை விசாரித்து முடிவெடுக்கலாம்.

 

நூதனமாக நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தரவு திருட்டு

சில நேரங்களில் பணமாகக் கேட்காமல் அறியாமையைப் பயன்படுத்த வங்கி அதிகாரியாக ஆதார் சரிபார்க்கிறோம் என்றோ, வருமான வரித்துறையினராக பான் சரிபார்க்கிறோம் என்றோ, ஆதார் - பான் அட்டை இணைக்கிறோம் என்றோ, தொலைத்தொடர்புத் துறையினராக KYC (Know Your Customer) சரிபார்ப்பு என்றோ, கூரியர் வந்துள்ளது அடையாளத்தைச் சரி பார்க்கிறோம் என்றோ, கொரோனா தடுப்பூசி போடப் பதிவு செய்யச் சொல்லியோ கறாராகவும் பேசுவார்கள்.

இவர்களை நம்பி பல தகவல்களைக் கொடுப்போம். குறிப்பாக, பற்று அட்டையின் (Debit card) எண், ரகசிய எண் என்று நேரடியாகக் கொடுத்து ஏமாறுபவர்கள் உண்டு.

சில நேரம் ஓடிபி எண் மட்டும் கொடுத்து ஏமாறுபவர்களும் உண்டு. அதாவது அட்டை என்னிடம் தானே இருக்கு எப்படி ஏமாற்ற முடியும் என நினைக்கலாம். ஆனால் அட்டை இல்லாமல் அட்டை எண்ணுடன் ரகசிய எண் மட்டும் கொடுத்து, பணத்தை எடுக்க முடியும். குறிப்பாக வெளிநாட்டு வங்கிகளில் பரிவர்த்தனை செய்தால் குறுஞ்செய்தி கூட இல்லாமல் பணம் மாற்றமுடியும். யாரென்றே தெரியாதவருக்குக் கட்டாயம் OTP-யைப் பகிரக் கூடாது. குறைந்தபட்சம் எதற்கான OTP என்பதை குறுஞ்செய்தியில் படித்து அறிந்து பின்னர் முடிவெடுக்கலாம்.

வங்கியில் பணமில்லை என்றுகூட அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம். உங்கள் OTP மூலம் கணக்கில் நுழைந்து, உங்கள் பெயரில் கடன் வாங்கி அந்தப் பணத்தைத் திருடிச் செல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. நீங்கள் கொடுக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று மெல்லிய மிரட்டல்கள் வந்தாலும் இத்தகைய தகவல்களைப் பகிரவேண்டாம். வங்கியைத் தொடர்பு கொண்டு நிலையறிந்து செயலாற்ற வேண்டும்.

 

நூதனமாக நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

தூண்டுகளவு (Phishing)

உங்கள் தொலைப்பேசி எண் அதிர்ஷ்டசாலியாகத் தேர்வாகியுள்ளது. உங்களுக்கு நாங்கள் லட்சக்கணக்கில் பரிசு வழங்கவுள்ளோம் என்று ஆசை வார்த்தையுடன் இணையத்தளங்களில் இருந்து கைப்பேசிகளுக்குக் குறுஞ்செய்திகள் வரலாம்.

இலவச டேட்டா, இலவச கல்வி உதவித் தொகை என்று நூற்றுக் கணக்கான காரணங்களைச் சொல்லி SMS-களில் உலாவும் வதந்திகளைச் சரிபார்க்காமல் யாருக்கும் முன்னகர்த்தாதீர்கள். விளம்பரங்களுக்கு வரும் குறுஞ்செய்தியில் உள்ள உரலிகளை (URL) ஆராயாமல் சொடுக்க வேண்டாம். அந்த உரலி மூலம் ஏதேனும் நச்சு மென்பொருள் தரவிறக்கமாகலாம் அல்லது உங்களது கருவியின் கட்டுப்பாட்டை அபகரிக்கலாம். பொதுவாகவே ஆசைகாட்டி வரும் குறுஞ்செய்திகள் நம்பகத்தன்மையற்றவை. அதை நீக்கிவிடுவதே நல்லது.

பண மோசடிகள்

பணம் எடுக்கும் எந்திரமே ஆனாலும் முன்பின் தெரியாதவர்களிடம் உங்கள் பற்று அட்டையைக் கொடுக்க வேண்டாம். அவர் ஏமாற்றுக்காரர் என்றால் அட்டையை மாற்றிக் கொடுக்கக்கூடும் அல்லது அட்டையின் அடையாளத்தை நகலெடுக்கக் கூடும். இதன் மூலம் இணையவழியில் ரகசிய எண்கள் இல்லாமலும் பணத்தை எடுக்கமுடியும்.

வைஃபை அட்டை என்றால் PoS என்ற கருவியின் அருகே கொண்டு சென்றாலே ரகசிய எண் இல்லாமல் சிறிய அளவு பணத்தை எடுக்கமுடியும். பொதுவாக வங்கி சார்ந்து ஏமாற்றப்பட்டாலோ, தகவல்களை திருடப்பட்டாலோ உடனே வங்கியைத் தொடர்பு கொண்டு கணக்கினைப் பூட்ட வேண்டும். இதன்மூலம் எந்த புதுப் பரிவர்த்தனையும் யாராலும் செய்ய முடியாது. குறைந்தபட்ச பாதுகாப்பினை உறுதிசெய்யலாம். அதன் பின்னர் சைபர் கிரைம் காவல்துறையில் புகாரளிக்க வேண்டும்.

 

நூதனமாக நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யுங்கள் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள் என்று அந்தக் கால ஈமு கோழி போலப் பல திட்டங்கள் தொழில்நுட்ப உலகில் உள்ளன. இணையம் தெரியாத பலரும் இதில் முறையற்ற நிறுவனங்களிடம் சிக்கி ஏமாறுகிறார்கள். சேர்ந்தவுடன் சிறிய லாபத்தை அளித்து ஏமாற்றி, பின்னர் பெரும் தொகையைச் சுருட்ட வாய்ப்புள்ளது. அந்நியச் செலாவணி, தங்கம், பங்கு வர்த்தகம் என்று சட்டரீதியான வர்த்தகத்திலும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் போட்டு ஏமாற்றுவதுண்டு.

கோழியிலோ தேக்குமரத்திலோ ஏமாந்தால் அந்தப் பொருளையாவது பார்க்கமுடியும். ஆனால் தொழில்நுட்பத்தில் இவற்றில் எதையும் கண்களால் பார்க்க முடியாது. எனவே தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளாமல் பெரும் முதலீடுகள் செய்யக் கூடாது.

பல்லூடகக் குற்றங்கள்

அடுத்த வகையான குற்றங்கள் காணொளி வாயிலாக நடப்பவை. நம்பிக்கையின் பேரில் பழகியவர்கள் பின்னர் ஏதோ ஒரு காரணத்தில் முரண்படும் போதும் பழைய அந்தரங்கப் படங்களையும் காணொளிகளையும் இணையத்தில் பரப்பிவிடுவார்கள். இச்சூழல் மனத்திடத்துடன் காவல்துறையில் புகாரளித்து எதிர்கொள்வதே சரியான முடிவு.

சில வேளைகளில் நண்பர்கள் மூலம் தவறுதலாகக் கசிந்த காணொளிகளால் சிக்கல்கள் நிகழ்வதுண்டு. வேடிக்கைக்காக பட்டா கத்தியுடன் பிறந்தநாள் கொண்டாடி, அந்த ஒளிப்படங்கள் வெளியே கசிந்து கைதான சம்பவங்களும் உண்டு.

கவன ஈர்ப்பிற்கு மாடியிலிருந்து நாயைத் தூக்கிப் போட்டு பதிவு செய்த காணொளி, கைது வரை கொண்டு சென்ற சம்பவங்களும் உண்டு. கைப்பேசி பழுது நீக்கும் கடை வழியாகப் பரவிய பல்லூடகக் கோப்புகளும் ஆபத்தைத் தர வல்லவை.

இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 67ன் படி சட்டத்திற்குப் புறம்பான விசயங்களை இணையத்தில் யார் பகிர்ந்தாலும் அதன் மூலகர்தாவும் குற்றவாளியாவார். அதாவது தனிப்பட்டமுறையில் நீங்கள் உதித்த சொற்கள், செய்த செயல் எதுவும் யாரையும் பாதிக்காதெனில் குற்றமல்ல. ஆனால் அதனை இணையத்தில் ஏற்றுவதால் பொது அமைதி சிதைவதால் நீங்கள் குற்றவாளியாகக் கருதப்படுவீர்கள். எனவே பொதுவில் பகிர முடியாத எந்தவொன்றையும் காணொளியாகப் பதிவு செய்யாதீர்கள். நீங்கள் அறிந்தோ அறியாமலோ அது பொதுவெளிக்கு வந்தே தீரும் என்பதை உணரலாம்.

 

நூதனமாக நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பொது இடங்கள், விடுதி, துணிக்கடைகள் போன்ற இடங்களில் ரகசியக் கேமிராக்கள் மூலம் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு அல்லது விற்பனை செய்து சைபர் குற்றங்கள் நிகழ்கின்றன. அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

போலிக் கணக்கு

நீங்கள் ஒரு பிரபலம் என்றாலோ அல்லது பிரபலத்தின் நண்பரென்றாலோ உங்கள் பெயரில் போலி கணக்குகள் இணையத்தில் தொடங்க வாய்ப்புள்ளது. உங்களைப் புண்படுத்த வேண்டும் என்றல்ல உங்கள் பெயரில் மற்றவர்களை ஏமாற்ற இவ்வாறு நடக்கலாம்.

மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி ஏமாற்றியவர் அண்மையில் கைதாகினார். பிரபல நடிகர் பெயரில் திருமணம் செய்து கொள்வதாக இணையம் வழியாக ஒரு பெண் ஏமாற்றப்பட்டுப் புகாரளித்த சம்பவங்களும் உள்ளன. பிரபலங்கள் ஒருபுறமிருக்க உங்கள் பெயரைப் பயன்படுத்தி, அவசரத்தில் உள்ளேன் பணம் அனுப்பச் சொல்லி உங்கள் நண்பர்களைத் தொடர்பு கொள்ளக்கூடும். நீங்கள் தான் பணம் கேட்கிறீர்கள் என்று உங்கள் நண்பர்கள் பணமளித்து ஏமாறக்கூடும். எனவே சமூகத் தளத்தில் தொடர்பு இல்லாவிட்டலும் சமூகத் தளத்தில் இயங்குபவர்களுடன் நட்பில் இருப்பது ஒருவகையான பாதுகாப்பு. இணையம் வழியாக நண்பர்கள் யாரேனும் பணம் அனுப்பச் சொன்னால் எப்போதும் பயன்படுத்தும் கணக்கிற்கு அனுப்புங்கள் அல்லது வேறு வகையில் தொடர்பு கொண்டு உறுதி செய்துவிட்டுப் பணம் அனுப்பலாம்.

உங்களது செல்போன் தொலைந்து போனால் அந்த எண்ணை உடனே தடைசெய்ய வேண்டும். மேலும் அதில் திறந்திருக்கும் செயலிகளையும் நிறுத்த வேண்டும். அதாவது ஜிமெயில், பேஸ்புக் என்று இருந்தால் அவற்றின் கடவுச் சொல்லை மாற்ற வேண்டும். கூகிளின் 'Find My Device', ஆப்பிளின் 'Find My iPhone' வசதி மூலம் மீட்க முயலலாம் அவ்வாறு அல்லாத போது காவல்துறையில் புகார் அளிப்பது முக்கியம். காரணம் அந்தக் கைப்பேசி வழியாக ஏதேனும் சட்டவிரோத செயல் நடந்திருந்தால் உங்களது புகார் தான் உங்களைப் பாதுகாக்கும்.

ஆதார் அட்டை, கடவுச் சீட்டு போன்ற அடையாள அட்டைகளை நகலெடுக்கும்போது உங்களுக்கே தெரியாமல் கூடுதல் நகலெடுக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். ஏனெனில், அதுவும் கூட தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம்.

மேலும், அடையாள அட்டைகளின் நகலை யாரிடம் பகிர்ந்தாலும் இன்ன நோக்கத்திற்குப் பகிர்வதாகக் கையெழுத்திடலாம். இதன் மூலம் உங்கள் ஆவணத்தைக் கொண்டு எளிதில் வேறு யாரும் பயன்படுத்த முடியாது. இவ்வாறு போலி சிம், அட்டை வங்கிக் கொடுப்பதும், போலியான வங்கிக் கணக்கினைத் தொடங்கித் தருவதும் என முழுநேரத் தொழிலாக 15 ஆண்டுகள் செய்துவந்த கூட்டத்தை டெல்லியில் சில மாதங்கள் முன்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளதை நீங்கள் செய்திகளில் பார்த்திருக்கலாம்.

 

நூதனமாக நடக்கும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

பட மூலாதாரம்,GETTY IMAGES

யாருடைய ஆதார் அட்டையையும் சில தகவல்களை அளிப்பதன் மூலம் இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளமுடியும் என்பதால் இவ்வகை குற்றங்கள் ஆங்காங்கே நடக்கின்றன. இம்மாதிரி அடுத்தவரின் அடையாள அட்டையைக் கொண்டு மாதத் தவணையில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி நூதன முறையில் மோசடி நடந்திருப்பதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது. பொதுவாக உங்களது ஆதாரைக் கொண்டு வாங்கிய தொலைப்பேசி எண்களை இந்த முகவரியில் சரிபார்க்க முடியும். தொடர்பில்லாத எண் ஏதேனும் இருந்தால் அங்கேயே புகாரளிக்கலாம்.

இவை மட்டுமல்ல இணையத்தில் பல்வேறு வகையான குற்றங்களும் நடைபெறுகின்றன. அவற்றை உரிய இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவிற்குப் புகாரளிக்கலாம். இந்தியாவில் https://cybercrime.gov.in/ என்ற முகவரியிலோ 1930 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 112 என்ற அவசர எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.

இலங்கை நாட்டினர் https://cert.gov.lk/ என்ற முகவரியில் புகாரளிக்கலாம். ஆக இணையத்திலிருந்து வெளியே இருந்தாலும் இணையம் தொடர்பான மோசடிகளும் குற்றங்களும் நம்மைச் சுற்றி நடக்கின்றன. இணையத்தைவிட்டு விலகியிருந்தாலும், இணையத்தில் இருந்தாலும் இணையம் தொடர்பான குற்றங்கள் குறித்து மிகவும் விழிப்புடனும், எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும்.

(பொதுவெளியில் நீச்சல்காரன் என்று அறியப்படும் கணினித் தமிழ் ஆர்வலரான கட்டுரையாளர் இராஜாராமன், சென்னையில் உள்ள பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணிபுரிகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் கணினித் தமிழ் விருது மற்றும் கனடா தமிழ் இலக்கியத் தோட்டக் கணிமை விருதை இவர் பெற்றிருக்கிறார்)

தயாரிப்பு: சாய்ராம் ஜெயராமன், பிபிசி தமிழ்

https://www.bbc.com/tamil/science-61286005

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.