Jump to content

13வது திருத்தச் சட்டத்தினை... அமுல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

13வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை

13வது திருத்தச் சட்டத்தினை... அமுல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை  தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை  கருத்திற்கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரசாங்கத்திற்கு இந்திய அரசு வழங்கி வருகின்றது.

அதேபோலத்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நமது இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரால் அண்மைய இலங்கை விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைத்தப்படும் சாத்தியம் உள்ளது.

அதே போல இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையானது விரைவில் சுமுகமான நிலையை எட்ட இறைவன் அருள் புரிய வேண்டும். அதேபோல் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வருவோருக்கு  கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என  அறிவுறுத்தியுள்ளோம்.

இலங்கை மக்களை தமிழ் மக்களை  தொப்புள் கொடி உறவுகளை மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நேசக்கரம் நீட்டி பார்க்கின்றோம்.

தென் இந்திய மீனவர்களால்  வடபகுதி மீனவர்கள்  பாதிப்பினை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மைதான். அது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம்தான். ஆனால் சிறையில் இருப்பதற்காக எந்த இந்திய மீனவனும் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லை ஏதோ ஒரு தவறால்  வருகின்றார்கள். அது தொடர்பில் உரிய கவனம் எடுக்கப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1279619

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 6 people and text that says 'சஞ்சீவி மலையை அனுமன் சுமந்ததுபோல, இலங்கையை சுமக்க பிரதமர் மோடி தயாராக இருக்கிறார் அண்ணாமலை (BJP) அண்ணாமலை mt lankans MEMES'

சஞ்சீவி மலையை, அனுமான் சுமந்தது போல... 
இலங்கையை சுமக்க, மோடி தயாராக இருக்கிறார். - அண்ணாமலை.-

Link to comment
Share on other sites

  • இணையவன் changed the title to 13வது திருத்தச் சட்டத்தினை... அமுல்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை
  • கருத்துக்கள உறவுகள்

இந்hக் காணொளியை கடைசி 10 நிமிடமாவது கேட்டுப் பாருங்கள்.

13வது திருத்த சட்டத்தை தோலுரித்து காட்டுகிறார்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 13ல் என்ன இருக்கு என்று இவருக்கு தெரியுமோ?  தொண்டமானின் ஆள்  இவரைச் சிக்கெனப் பிடித்திருக்கிறார்.....அதாவது இது நம்ம ஆளு.. ஒரு மானில கடட்சித் தலைவருக்கு மோடியின் அளவுக்கு மரியாதை.. எங்கடா போகுது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, alvayan said:

இந்த 13ல் என்ன இருக்கு என்று இவருக்கு தெரியுமோ?  தொண்டமானின் ஆள்  இவரைச் சிக்கெனப் பிடித்திருக்கிறார்.....அதாவது இது நம்ம ஆளு.. ஒரு மானில கடட்சித் தலைவருக்கு மோடியின் அளவுக்கு மரியாதை.. எங்கடா போகுது...

பாஜக மாநிலக் கட்சியல்ல,  இந்தியாவை ஆளும் தேசியக் கட்சி.  அண்ணாமலை மாநில மட்டத்திலான தலைவரானாலும் அவரை அனுப்பியிருப்பது பாஜக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அண்ணாமலை யாருமல்ல திரு ரஜனிகாந் அவர்களை அரசியலுக்கு இழுக்க முயற்சித்து அவர் வராமல் போக அதன்பின்பு கர்நாடகாவைச்சேர்ந்த ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக வேலை செய்து அரசியலுக்காக தனது வேலையை விட்டுட்டு இப்போ தமிழ்நாட்டில் பா ஜா கா வின் செயலாளராக நியமிக்கப்பட்ட ஒரு கர்நாடகாக்காரன் கர்நாடகாவில் ஒரு கூட்டத்தில் நான் முதலில் ஒரு கன்னடன் அதன்பின்பே மற்றவை எல்லாம் எனக்கூறியவர், இப்போ இரண்டு நாளைக்கு முன்பு தயா மோகன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் விடுதலைப்புலிகளது அரசியல்துறை எனக்கூறி அவருக்கு இந்தியாவால் கொடுக்கப்பட்டிருக்கும் அசைண்மென்ட் என்னவெனில் இப்போ விடுதலைப்புலிகள் எனும் பெயரில் புலம்பெயர் தேசங்களில் யாரும் அரசியல் நடத்துவதில்லை காரணம் அதைத் தடை செய்துவிட்டார்கள் ஆகவே எங்களுக்கு ஒத்துவராத புலம்பெயர் அமைப்புகளை ஓரங்கட்ட வேண்டுமெனில் நீ போய் விடுதலைப் புலிகள் பெயரில் அறிக்கை விடு அதன் பின்பு எல்லாரையும் புலம்பெயர் தேசங்களில் லாடஙட்டுவாங்கள் அதுக்குப்பின்பு நாங்கள் இந்திய நலனுக்கான காய் நகர்த்தல்களை தமிழர்கள் நடுவில் செய்வம் என்பது ஒரு புறம் இருக்க இந்தக்கன்னடத்துக்காரனை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பியிருக்கு இந்தியா அண்ணாமலை வெறுமனே பா ஜ கா காரன் மட்டுமல்ல தமிழக ஆளுநர் ரவிபோல ஒடு இந்திய உளவுத்துறையின் வேலைகளைச் செய்துமுடிக்கும் உளவாளியுமாகும். நாகலாந்தில் ஆளுநர் ரவி செய்த அட்டூழியம் கொஞ்சநஞ்சமில்லை இப்போ தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார் அதுபோல் எல் முருகன் எனும் தலித்தை பா ஜா க தன்னுடன் வைத்திருந்தாலும்  காஞ்சி மடத்தில் உள்ள பிராமணியை இருநூறு மீற்றர் தொலைவிலவைத்துப்பார்க்கவே அனுமதி கிடைத்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, karu said:

பாஜக மாநிலக் கட்சியல்ல,  இந்தியாவை ஆளும் தேசியக் கட்சி.  அண்ணாமலை மாநில மட்டத்திலான தலைவரானாலும் அவரை அனுப்பியிருப்பது பாஜக.

இதுபோல சுவாமியும் வந்தவர்..ஜெயசன்கரும் வந்தவர்..13 ..16 ஆக மாறினதா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 திருத்தம் தொடர்பாக ஈழத்தமிழருக்கு யார் மூலமாக சொல்லியனுப்புகிறார்கள் ?

அவருக்கு தமைலகத்திலேயே செருப்பைக் காட்டுகிறார்கள். அப்படியான ஒருவரைக்கொண்டு ஈலத்தில் ஒரு செய்தி சொல்லப்படுகின்றதென்றால் 13 க்கும் ஈழத் தமிழருக்கும் இந்தியா கொடுக்கும் முக்கியத்துவம் என்ன ? 

☹️

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.