Jump to content

கோட்டாவிற்கு எதிரான... எந்த பிரேரணைக்கும், ஆதரவில்லை – வாசுதேவ


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும்- வாசுதேவ

கோட்டாவிற்கு எதிரான... எந்த பிரேரணைக்கும், ஆதரவில்லை – வாசுதேவ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என வாசுதேவ நாணயக்கார அறிவித்துள்ளார்.

அத்தோடு ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை அர்த்தமற்றதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சி பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் நேற்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் வாசுதேவ நாணயக்காரவின் கருத்தைப் போன்றே கருத்து வெளியிட்டிருந்தார்.

முன்னதாக தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்த வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியின் கீழ் எந்தவொரு அமைச்சு பதவியும் ஏற்கமாட்டேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1279959

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்திருந்த வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதியின் கீழ் எந்தவொரு அமைச்சு பதவியும் ஏற்கமாட்டேன்

குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.

அரசியல்வாதியின் பேச்சு விடியுமுன்னே போச்சு.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணிய சுவாமியின் பேச்சுக்கும், இவரின் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. வெறும் அரசியல் கோமாளிகள் இவர்கள். கொரோனா காலத்திலும்  பெரும் எடுப்பில் ராஜபக்க்ஷ கொம்பனியுடன் நட்பு கொண்டாடிய சுப்பிரமணி, இப்போ வாயடைத்து இருக்கிறார். ஆபத்து காலத்தில் அறியலாம் உண்மையான நண்பனை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

சுப்பிரமணிய சுவாமியின் பேச்சுக்கும், இவரின் பேச்சுக்கும் அதிக வித்தியாசமில்லை. வெறும் அரசியல் கோமாளிகள் இவர்கள். கொரோனா காலத்திலும்  பெரும் எடுப்பில் ராஜபக்க்ஷ கொம்பனியுடன் நட்பு கொண்டாடிய சுப்பிரமணி, இப்போ வாயடைத்து இருக்கிறார். ஆபத்து காலத்தில் அறியலாம் உண்மையான நண்பனை!

இது எதிர்பார்த்தது தானே

Link to comment
Share on other sites

இவரும் ஒரு மதில் மேல் பூனை தான்.
இவ்வளவு அநியாயத்துக்கும் காரணமான மகிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்காமல் நளுவுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

இவரும் ஒரு மதில் மேல் பூனை தான்.
இவ்வளவு அநியாயத்துக்கும் காரணமான மகிந்த அரசுக்கு எதிராக வாக்களிக்காமல் நளுவுகிறார்.

பெட்டிகள் கைமாறியிருக்கும்.

  • Like 2
Link to comment
Share on other sites

2 minutes ago, ஈழப்பிரியன் said:

பெட்டிகள் கைமாறியிருக்கும்.

மகிந்த துணிந்து தங்களுக்கு போதுமான வாக்குகள் வரும் என்று சொல்லுவது இதனால் தான் போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, nunavilan said:

மகிந்த துணிந்து தங்களுக்கு போதுமான வாக்குகள் வரும் என்று சொல்லுவது இதனால் தான் போலும்.

பிரச்சினை கிளப்பினதே இந்த மூன்றும்தன்...இப்ப மாறி நிக்குதுகள்...

Link to comment
Share on other sites

27 minutes ago, alvayan said:

பிரச்சினை கிளப்பினதே இந்த மூன்றும்தன்...இப்ப மாறி நிக்குதுகள்...

ஒரு  set up என்றும் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, nunavilan said:

ஒரு  set up என்றும் சொல்கிறார்கள்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

பிரச்சினை கிளப்பினதே இந்த மூன்றும்தன்...இப்ப மாறி நிக்குதுகள்...

எல்லாம் பணம் படுத்தும் பாடு! சுரண்ட முடியாதபோது முரண்டு பிடிச்சுக்கொண்டு வெளியேறுகிறது, தங்கள் உயிரை காப்பதற்காக மக்களை தூண்டி விடுவது, மீண்டும் கப்பம் பெற்றுக்கொண்டு  சொன்னது, செய்ததை மறந்து  வழிய வேண்டியது. இருபக்கமும் ஏமாற்றப்படுவது அப்பாவி ஏழை மக்களே!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

பிரச்சினை கிளப்பினதே இந்த மூன்றும்தன்...இப்ப மாறி நிக்குதுகள்...

சந்தர்ப்பவாதிகளுக்கு  ஒரு கொள்கை. இலட்சியம் இராது.  தங்களுக்கு இலாபகரமான இடங்களில் அந்தந்த வடிவம் எடுத்து இலட்சிய வாதிகள் போல தம்மை காட்டிக்கொள்வார்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.