Jump to content

பொறுப்பு துறப்பு - Dr. T. கோபிசங்கர்


Recommended Posts

பொறுப்பு துறப்பு …. 

எங்களுக்கு காலமை எழும்பிறதுக்கு alarm தேவையில்லை, நாலரைக்கு நல்லூர் மணி அடிக்க நித்திரை கலைஞ்சா, ஐஞ்சு மணிக்கு அம்மன் கோயில் மணி் எழுப்பி விட்டிடும். பாண்காரன்டை சத்தம் கேட்டா அதுக்குப் பிறகு படுத்தாலும் நித்திரை வராது. வீட்டு gateஇல கொழுவின பையில இருந்த பால்ப் போத்திலை எடுத்துக் கொண்டு வந்து மனிசீட்டைக் குடுக்க ,பிள்ளைகளை எழுப்பிக்கொண்டிருக்கிற மனிசி பேசிற பேச்சில பாதி எனக்கு மாதிரித் தெரிஞ்சாலும் தெரியாத மாதிரிப் பவ்வியமா இருந்தால் தான் இருக்கிற இடத்துக்குக் கோப்பி வரும். 

வேலைக்குப் போக முதல் மனிசி தந்த கோப்பியோட பேப்பரை விரிக்க , வழமைபோல முன்பக்கத்தில ஓரு ஓரத்தில மோட்டார் சைக்கிள் விபத்து, அந்த இடத்திலேயே ஒருவர் பலி மற்றும் இருவர் படுகாயம் , இனம் தெரியாத கும்பலின் தாக்குதலுக்கு உள்ளாகி மூவர் வைத்தியசாலையில் அனுமதி எண்டு வாசிச்சிட்டு சரி இண்டைக்கும் ward full எண்டு நினைப்போட வேலைக்குப்  போய் உடைஞ்சது , முறிஞ்சது , வெட்டினது கொத்தினது எல்லாம் பாத்திட்டு ஒப்பிறேசன் தியட்டரில உடுப்பை மாத்தீட்டு நிக்க உங்களுக்கு call எண்டு யாரோ சொல்ல போய் phoneஐத் தூக்கினன். 

சேர் கொழும்பில இருந்து ஒரு கோல் connect பண்ணட்டே எண்டு exchange காரர் சொல்லி முடிய, ஒரு சின்னப் பி்ள்ளையை கொழும்பு ஆஸ்பத்திரீல இருந்து மாத்தினமாம் எண்ட சாரம்சத்தோட call cut ஆகீட்டுது. 

அடுத்த நாள் ward round ல ஒரு ஆறு வயதுப் பிள்ளை “ஆ “ வெண்டு வாயைத் துறந்தபடி சிரிக்குதா அழுதா எண்டு கண்டு பிடிக்கமுடியாமல் ஒரு ஓவெண்ட சத்தம் போட்ட படி இருந்திச்சுது. இது தான் நேற்றைக்கு phone இல கதைச்ச பிள்ளை எண்டு விளங்கி அம்மா எங்க எண்டு கேக்க , அம்மா இல்லை, ஆக்கள் ஒருத்தரும் இல்லை இங்க நேர்ஸ் ஓட தான் பிள்ளை transfer ஆக வந்தது எண்டு மறுமொழி வந்திச்சது. தன்னையே தெரியாத பிள்ளையிட்டை என்னத்தை கேக்கிறது எண்டு யோசிக்க ,ஒரு வகையில தன்னிலை அறியாதவனுக்கு ஒரு நாளும் பிரச்சினையில்லை அவனை வைச்சுப் பாக்கிறவனுக்குத்தான் பிரச்சினை எண்டு யோசிச்ச படி அடுத்த  patient ஐ பாக்க  இந்தக் குழந்தையை பற்றிய எண்ணம் மறந்து போச்சிது.  

“அப்பா எவ்வளவு  சரியில்லை இப்ப தான் கட்டினாப்பிறகு எங்களைச் சேக்கினம் எப்பிடியும் நாளைக்கு அந்த சாமத்தியவீட்டிக்குப் போவம்” எண்டு குணாளின்டை மனிசி சுசி நச்சரிக்க, வேண்டா வெறுப்பாத்தான் ஓம் எண்டான் குணாள். பஞ்சியோடையும் கொஞ்சம் சங்கடத்தோடையும் தங்கச்சியாரின்டை சாமத்திய வீடு எண்டு மாங்குளத்தில இருந்து வெளிக்கிட்டு மனிசியோடேம்  பிள்ளை சியாம் ஓடேம் வந்தான் குணாள். புணர்வாழ்வு முகாமுக்க இருக்கேக்க வந்த பழக்கம் நெருக்கமாக ஒருத்தருக்கும் சொல்லாமல் ஓடிப் போய் கட்டி மாங்குளத்தில சின்னக்கடை போட்டு கொஞ்சம் இப்பதான் தலை நிமித்தத் தொடங்கி இருந்தான் குணாள். 

பெடியனும் பிறந்து நாலு வருசத்திக்குப்  பிறகு தான் இப்ப சித்தப்பா கூப்பிட யாழ்ப்பாணம் வாறான். தயங்கி வந்தவனுக்கு கொஞ்சக் காலமாய் விலத்தி நிண்ட சொந்தங்கள் எல்லாம் விரும்பி வந்து விசாரிக்க இதுதான் மனிசி இதுதான் பிள்ளை எண்டு எல்லாருக்கும் கொண்டே காட்டினான். என்ன சொல்லுவினமோ எண்டு வந்தவன், எப்பிடி இருக்கிறாய் எண்டு கேக்க சந்தோசமாய் எல்லாரோடேம் ஓடி ஓடிக் கதைக்கிறதை பாத்து மனிசி கண் கலங்கினதை கவனிக்காத மாதிரி இருந்தான். 

இரவுச் சாப்பாடும்  எல்லாம் முடிஞ்சகையோட வெளிக்கிடுவம் எண்ட சொல்ல , சின்னம்மா “ வந்தனி நிண்டிட்டுப் போவன் “ எண்டு கேட்ட அன்பிற்கு, அடுத்த முறை வந்து ஒரு கிழமையா நிக்கிறன் எண்டு சொன்னபடி வெளிக்கிட்டான் குணாள். ஒரு பலகாரப் பையைக் கொண்டு வந்து சுசியின்டை கையில குடுத்திட்டு “ வீட்டை போய் நாவூறு சுத்திப்போடு “ எண்டு சின்னம்மா சொன்னதுக்கு தலையை ஆட்டின  சுசீ, மடீல பிள்ளையை மெல்லவும் குணாளின்டை தோளை இறுக்கியும் பிடிச்ச படி மோட்டச்சைக்கிளில இருந்தாள்.  “எனக்கென்னவோ இப்பிடியே செத்தாலும் பரவாயில்லை அவ்வளவு சந்தோசமா இருக்கு”எண்ட படி மோட்டச்சைக்கிளை முறுக்கிப் பிடிச்சான் குணாள். 

என்ன நடந்தது இந்தப் பிள்ளைக்கு எண்டு விசாரிக்க , வவுனியா ஆஸ்பத்திரீல இருந்து போன மாசம் தலையில அடிபட்டது எண்டு  கொழும்புக்கு அனுப்பின பிள்ளை அங்க திரும்பி அனுப்ப ஏலாது ,  எண்டு இங்க அனுப்பி இருக்கினம் எண்டு விளக்கம் கிடைச்சிது. இன்னும் தோண்டி விசாரிக்க போனமாசம் மாங்குளத்தில நடந்த accident கேஸ் இது, நடுச்சாமம் மோட்டச்சைக்கிள் நல்ல speed ஆப் போகேக்க குறுக்கால வந்த மாட்டுக்கு விலத்த முன்னால வந்த கள்ள மண் ஏத்தின டிப்பர் நேர அடிச்சதாம் எண்ட விபரம் கிடைச்சுது. அது மட்டும் இல்லை அப்பா அதிலயே சரி , அம்மா வவுனியா ICU இல இருந்து ஒரு கிழமையால சரி, பிள்ளைக்கு helmet ஒண்டும் போடாத்தால மூளைக்குள்ள bleeding கால் ரெண்டும் உடைஞ்சு கொழும்புக்கு அனுப்பினதாம் எண்டு முழு விளக்கமும் வந்திச்சுது. 

நாங்களும் உறவுகளைத் தேடித் திரிய, தெரிஞ்சோ தெரியாமலோ எந்த உறவும் தேடி வரேல்லை . எப்பிடியோ இதைக் கேள்விப்பட்டு மகளையும் குடும்பத்தையும் தேடின ஒரு அம்மா வந்து பேரனக்கண்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கினா. “கட்டீட்டு விட்டிட்டுப் போனவள் ஒரேடியாப் போட்டாள் “ எண்டு , அம்மா புலம்பி முடிஞ்சு பேரப் பிள்ளையைப் பாத்து கேள்வி கேக்க அது வழமைபோல ஓஓஓஓ எண்ட படியே இருந்தது. அப்பிடியே என்டை மகள் சுசி மாதிரி இருக்கிறான் எண்ட படி எங்களைத் திரும்பிப் பாத்த அந்த அம்மாவுக்கு , நிலமையை விளக்கி மூளைப் பாதிப்பால இனி இந்தக் குழந்தை நடக்கிறது கஸ்டம் எண்டு சொன்னம். கொஞ்ச நேரத்தில திருப்பியும்  வந்த அம்மா பிரச்சினை ஒண்டும் இல்லைத்தானே பேரன் நடப்பான் தானே எண்டு அப்பாவியாக் கேட்டா. உண்மையை பொய்யாக்கச் சொல்லி அந்த அம்மா கேட்ட கேள்விக்கு விடைசொல்லாமல் விலகினன். 

அடுத்த நாள்  பிள்ளையின்டை சித்திக்காரி வந்து விளக்கம் கேட்டிட்டு நான் வைச்சுப் பாக்கிறன் எண்டு தன்டை வறுமைச்சுமையோட அவனையும் சுமந்து கொண்டு போனா.    தாங்களாயே X-ray எடுத்த தயாபரன், ward doctor, nurse மார் எல்லாரும் சேந்து சேத்த காசை வற்புறுத்திக் குடுத்து விட்டம். கொஞ்சம் நாளால திருப்பிக் கிளினிக் வரேக்க சித்திக்காரீன்டை அரவணைப்பு கொஞ்சம் அந்தப் பெடியன்டை முகத்தில கொஞ்சம் வித்தியாசத்தை காட்டிற மாதிரி இருந்தது. தகப்பன்டை ஆக்கள் ஒருத்தரும் கேள்விப்பட்டும் வாறேல்லை நான் ஏலுமானவரை பாப்பன் எண்ட சித்திக்கு கலியாணம் பேசுப்படுதாம் எண்டு தாய் சொன்னா. திருப்பியும் யாரோ தந்த உதவியும் நன்றியும் கைமாற்றம் பெற்றன. 
கொரோனாவுக்கு முதல் கடைசியா வரேக்க ஆரோ சியாம்  எண்டு கூப்பிட கண்விரித்துப் பாத்த மாதிரி இருந்திச்சுது. 

இண்டைக்கும் அதே கோப்பி , வழமை போல காலமைப் பேப்பரைத் திறக்க , ரயில் கடவையில் டிப்பருடன் ரயில் மோதி இரு குழந்தைகள் பலி தந்தை படுகாயம் எண்ட செய்தியையும் பாத்திட்டு மறக்காம  கடைசிப் பக்கம் IPL score ஐ வாசிக்கத் தொடங்கினன். 

Dr. T. கோபிசங்கர்
யாழப்பாணம்

  • Like 4
  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் டிப்பர் வண்டிகளின் ஒட்டம் படு மோசம்......அதைத்தான் கோபத்துடன் பகிர்ந்திருக்கிறார் கோபி........!  🤔

நன்றி நிழலி .......!  

Link to comment
Share on other sites

40 minutes ago, suvy said:

யாழ்ப்பாணத்தில் டிப்பர் வண்டிகளின் ஒட்டம் படு மோசம்......அதைத்தான் கோபத்துடன் பகிர்ந்திருக்கிறார் கோபி........!  🤔

நன்றி நிழலி .......!  

ரிப்பர் மட்டுமல்ல, மோட்டார் சைக்கிள்களும் மிக மோசம் அங்கு. வேகமாக போய் விளக்கு கம்பத்தில் இருந்து வேலி கதியால்கள் வரைக்கும் மேல் மோதி கடும் காயங்களுக்குள்ளாகின்றவர்களும் அதிகம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாகனச் சாரதி அனுமதிகளை இறுக்கமாக்க வேணும், யார் செய்யப்போறாங்கள்?! இங்க தான் மனித உயிர்கள் மலிவாச்சே!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.