Jump to content

பரி. யோவான் பொழுதுகள்: 2022 Big Match


Recommended Posts

பரி. யோவான் பொழுதுகள்:
2022 Big Match

பரி. யோவானில் படித்துக் கலக்கினவங்களை விட, Big Match இல் வெளுத்து கலக்கினவங்களை தான் Johnians சமூகம் தலையில் வைத்துக் கொண்டாடும். அந்தளவிற்கு இந்த “Big Match is a Big deal at St. John’s” என்று இங்கிலீஷில் சொன்னால் தான் Big Match இன் சிறப்பை, பெருமையை உங்களுக்கு விளங்க வைக்கலாம்.

2020 மார்ச் மாதத்தில் யாருமே எதிர்பாராத வகையில், பொடிப் பயலுகளான, Baby Brigade என்று வர்ணிக்கப்பட்ட, பரி யோவானின் அணி, பலம் வாய்ந்த பிஸ்தாக்களான யாழ் மத்திய கல்லூரி அணியை Big Match இல் வென்ற கையோடு, கொரனா பெருந்தொற்று முழு உலகையே பூட்டிப் போட்டது. 2020 Big Match உண்மையிலேயே கோலியாத்தை வென்ற தாவீது கதையின் மீளுருவாக்கம் தான்.

2021 Big Match ஐயும் கொரனா கொன்றுவிட, 2022 இல் Big Match நடக்குமா இல்லையா என்ற நிலையை கோத்தாவின் ஆட்சிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி ஏற்படுத்தியது.  மார்ச்சில் நடக்க வேண்டிய ஆட்டம், ஏப்ரல் முதல் வாரத்தில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, அதுவும் பின்னர் பிற்போடப்பட்டு ஏப்ரல் 21 முதல் 23 வரை நடைபெற்று முடிந்திருக்கிறது.

2022 இல் அன்டன் அபிஷேக் தலைமையில் களமிறங்கிய பரி. யோவானின் இளைய அணியில் ஆடிய பெரும்பாலான பெடியள், 2016/17 பருவகாலத்தில் இலங்கைப் பாடசாலைகள் U13 Div II இல் சம்பியனான அணியில் ஆடியவர்கள். தேசிய அளவில் வாகை சூடிய பரி். யோவான் U13 அணியை அன்று பயிற்றுவித்ததும், இன்றைய U19 கோச்சரான லவேந்திரா தான்.

“அண்ணே, அவங்கள் என்ட குஞ்சுகள் அண்ணே.. என்ன செய்வாங்கள்.. என்ன செய்ய மாட்டாங்கள் என்று எனக்கு நல்லா தெரியுமண்ணே” என்று லவேந்திரா சொல்லும் போது அவருக்கும் அணிக்கும் இடையிலான பந்தத்தின் வலு நன்றாகவே புரிந்தது. ஆட்டத்தின் மூன்றாம் நாள் காலை வேளையில் எப்பொழுது declare பண்ண வேண்டும் என்ற சரியான முடிவை எடுக்கும் நம்பிக்கையை லவேந்திராவிற்கு கொடுத்ததும் இந்த பந்தம் தான்.

பெருந்தொற்றால் தடைபட்ட 2021/22 பருவகாலத்தில், பரி. யோவான் அணியால் மூன்றே மூன்று இரு நாள் போட்டிகளில் மட்டுமே ஆட முடிந்தது. மிகுதி ஆட்டங்கள் எல்லாம் ஒரு நாள் ஆட்டங்களாகவே அமைந்தன. இந்தப் பருவகால ஆட்டங்களில் batting collapse என்பது பரி. யோவான் பாசறையில் சர்வசாதாரணமான ஒன்றாகவே அரங்கேறியதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

இந்தப் பருவகாலத்தில் பரி. யோவான் அணியின் batting பலமான ஓன்றாக அமைந்திருக்கவில்லை. களுத்துறை வித்தியாலத்திற்கு எதிரான ஆட்டத்தில் 89 ஓட்டங்களிற்கு சுருண்ட பரி. யோவான் அணி, பாணதுறை ஶ்ரீ சுமங்கல கல்லூரிக்கு எதிரான ஆட்டத்தில் 65 ஓட்டங்களிற்கு all out ஆகியிருந்தது. Big Match இன் இரண்டாவது இன்னிங்ஸில் 116 பந்துகளில் 105 ஓட்டங்களை விளாசிய சபேசனும், Big Match இற்கு முந்தைய ஆட்டங்கள் எதிலும் சோபித்திருக்கவில்லை. 

எதிராளிகளின் முதல் ஐந்து, ஆறு விக்கெட்டுக்களை வீழ்த்துவதில் விண்ணர்களாக இருந்த பரி. யோவானின் பந்து வீச்சாளர்களிற்கு, எதிரணியை all out ஆக்குவது பல சந்தர்ப்பங்களில் சவால் மிகுந்ததாகவே இருந்திருக்கிறது. 

Mt. Lavania St. Thomas கல்லூரி அணியை 59/5  என்ற நிலைக்கு கொண்டு வந்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த பரி. யோவான் அணி, Thomians இன் ஆறாவது விக்கெட்டை கழற்றும் போது 225/6 என்று scoreboard பல்லிளித்த கதையை வேறு இந்தப் பருவகாலம் பதிவுசெய்தது. 

மறுவளத்தால், யாழ்ப்பாணத்தின் கிரிக்கெட் பிஸ்தாக்களான யாழ் மத்திய கல்லூரி அணியோ, ஆடிய எல்லா ஆட்டங்களிலும் 300+ ஓட்டங்களை குவித்து, எதிரணி பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து விட்டு தான், போன வியாழக்கிழமை ஆரம்பமான Big Match இல் களமிறங்கியது.

 “அவங்கட No 11 உம் நல்லா bat பண்ணும்.. முன்னுக்கு வாறதில நாலஞ்சு பேர் நல்ல விளாசல்காரன்கள்” என்று பரி. யோவான் அணியின் பொறுப்பாசிரியர் கோபிகிருஷ்ணா மத்திய கல்லூரியின் துடுப்பாட்ட வரிசையை விபரித்தார். 

மிகப் பலமான துடுப்பாட்ட வரிசையை தன்னகத்தே கொண்டிருந்ததால், இரண்டாவதாக bat பண்ணி நல்ல lead வைத்து, பரி யோவானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோற்கடிக்கலாம், இல்லாட்டியும் நாலாவது இன்னிங்ஸில் துரத்தி வெளுக்கலாம் என்ற நம்பிக்கையில், 2022  Big Match இன் நாணயச் சுழற்சியில் வென்ற யாழ் மத்திய கல்லூரி அணி, பரி யோவான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.  

பரி. யோவானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சச்சினும் (20) கரிஷனும் (41) முதலாவது விக்கெட்டுக்கு திறமான இணைப்பாட்டத்தை தந்து, 59 ஓட்டங்களை சேர்த்தார்கள். முதலாவது இன்னிங்சில் எப்படியும் பரி யோவானின் ஓட்ட எண்ணிக்கை 200, 250 தாண்டும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் தான் மளமளவென்று விக்கெட்டுகள் சரிந்து 99/6 என்ற நிலைக்கு கொண்டு வந்து, மத்திய கல்லூரி் அணியின் மிதவேகப் பந்து வீச்சாளர்கள் பரி. யோவான் அணியின் துடுப்பாட்ட வரிசையை ஆட்டம் காண வைத்தார்கள். 

பேந்தென்ன.. முக்கித் தக்கி, நொட்டித் தட்டி, பரி யோவானின் அணித்தலைவர் அன்டன் அபிஷேக் (40) தனது இறுதிவரிசை துடுப்பாட்ட வீரர்களோடு இணைந்தாடி,  அணியின் முதலாவது இன்னிங்ஸ் ஓட்ட எண்ணிக்கையை 167 ஓட்டங்கள் என்ற கணக்கில் கொண்டு வந்துவிட்டார்கள்.

யாழ் மத்திய கல்லூரி அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களும் 25 ஓட்டங்களை நிதானமாக ஆடி எடுத்துத் தங்களது அணிக்கு பலமான அடிதளத்தை இட்டுக் கொண்டு இருக்கும் போது தான் யோகதாஸின் பெடியனின் அட்டகாசம் தொடங்கியது.

யோகதாஸ் எங்கட SJC92 batch நண்பர், 1979 இல் பாலர் வகுப்பில் பரி. யோவானில் இணைந்து, 1992 இல் A/L சோதனை எடுத்து முடிக்கும் வரை, பரி. யோவான் கல்லூரியில் மட்டுமே முழுமையாக கல்விகற்ற கலப்படமில்லாத 22 கரட் ஜொனியன். 

எங்கட SJC92 batch இல் யோகதாஸும் யசீந்திராவும் தான் திறமான fast bowlers. U17 ஓட யசீந்திரா கல்லூரிக்கு கிரிக்கட் விளையாடமல் விட்டு விட, அதுவரை கல்லூரி அணியில் ஆடியிராத யோகதாஸ் அணிக்குள் நுழைந்து, 1992 Big Match இல் 5/76 எடுத்து Big Match வரலாற்றில் இடம்பிடித்தவர்.

1992 Big Match இல் தனது வலதுகை வேகப்பந்து வீச்சின் மூலம் ஐந்து விக்கெட்டுக்களைச் சாய்த்த யோகதாஸின் இரண்டாவது புத்திரன் தான் விதுஷன். விதுஷன் முதலில் சில ஓவர்கள் இடதுகை மிதவேகத்தில் பந்து வீசிப் பார்த்தார், ஆனால் தகப்பனைப் போல fast bowl போட்டு அவரால் விக்கெட் எடுக்க முடியாமல் போக, தனக்குப் பரிச்சயமான spin இற்குத் தாவினார். 

நின்று, நிதானித்து, இரண்டடி எடுத்து வைத்து, இடக் கையைச் சுழற்றி விதுஷன் வீசிய மாயச் சுழற்பந்து வீச்சில், மத்திய கல்லூரியின் அதிரடி துடுப்பாட்டக்காரன்கள், ஆட்டமிழந்து வெளியேறத் தொடங்கினார்கள். மத்திய கல்லூரி அணியின் முதல் ஐந்து விக்கெட்டுக்களையும் கைப்பற்றி, விதுஷனும் Big Match இன் சாதனை ஏட்டில் இடம்பிடித்துக் கொண்டிருக்க, மத்திய கல்லூரி அணியோ 72/5 இல் அல்லாடியது.

1904 ஆண்டு முதல் 115 ஆவது தடவையாக ஆடப்பட்டுக் கொண்டுவரும், Battle of the North  (வடக்கின் பெரும்போர்) என்று வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும் பரி. யோவான் கல்லூரிக்கும் இடையிலான இந்த Big Match போட்டிகளில், ஐந்து விக்கெட்டுக்களை எடுத்து Big Match records இல் இடம்பிடித்த தந்தை-மகன் இணை, யோகதாஸும்-விதுஷனுமாகத் தான் இருக்க வேண்டும்.

ஒருபக்கத்தால் விதுஷன் விக்கெட்டுக்களைச் சாய்க்க, மறுபக்கத்தில் இன்னுமொரு சுழற் பந்துவீச்சாளரான அஷ்நாத் மத்திய கல்லூரியின் விக்கெட்டுக்களைக் கைப்பற்றத் தொடங்கினார். பரி. யோவான் அணியின் சிறந்த ஆரம்ப பந்து வீச்சாளரும் அணியின் தலைவருமான அபிஷேக் 2 ஓவர்கள் வீசிவிட்டு ஒதுங்கிக்கொள்ள, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களான விதுஷனும் (6/48) அஷ்நாத்தும் (4/46) மத்திய கல்லூரி அணியை 125 ஓட்டங்களிற்கு முதலாவது இன்னிங்ஸில் all out ஆக்கினார்கள். 

இரண்டாவது இன்னிங்ஸை ஆட வந்த பரி. யோவானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களை, மத்திய கல்லூரியின் பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சில் உடனடியாகவே (1/2 in 2.4 overs) ஆட்டமிழக்க வைத்தார்கள்

2018 Big Match இல் 8/4 என்று இருந்த நிலைமையும் மீண்டும் கண்ணுக்கு முன்னால் வந்து போக, காலஞ்சென்ற நேசகுமாமார் அண்ணாவின் மகனான எபினேசரும் (35) சுகேதனும் (34) மூன்றாவது விக்கெட்டுக்கு 60 ஓட்டங்களை நிதானமாச் சேர்த்து, பரி. யோவானின் இரண்டாவது இன்னிங்ஸை ஸ்தரப்படுத்தினார்கள். 

61/3 இல் சுகேதன் ஆட்டமிழந்து வெளியேற, பரி. யோவான் கல்லூரி அணியின் உப தலைவர் சபேசன், எபினேசருடன் இணைந்து கொண்டார். வழமையாக ஸ்டைலிஷாக அடித்தாடும் எபினேசர், தட்டிக் கொண்டு நிற்க, மற்றப் பக்கத்தால், முதலாவது இன்னிங்ஸில் முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்த சபேசன், இரண்டாவது இன்னிங்ஸில் வெளுக்கத் தொடங்கினார்.

ஆட்டத்தின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை பின்னேரம் பண்ணைக் கடலில் சூரியன் மறையும்போது பரி. யோவான் 129/4 என்ற பலமான நிலையில் இருந்தது. சபேசன் ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களோடு  புட்டு சாப்பிட வீட்ட போனார். 

அன்றிரவு முழுவதும், பரி. யோவானின் சமூக வலைத்தளங்களில் பரி. யோவான் அணி எப்ப declare பண்ண வேண்டும், sportive declaration எப்படி இருக்க வேண்டும், bowlers ஐ நம்பி declare பண்ண வேண்டும் என்று காரசாரமாக கருத்துக்கள் பகிரப்பட்டுக் கொண்டிருக்க, இவை எவற்றையும் பார்ப்பதைத் தவிர்த்த கோச்சர் லவேந்திராவிற்கு, பரி. யோவானின் புகழ் பூத்த கிரிக்கெட் வீரர் ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பொன்று வந்தது.

“எல்லாம் நல்லா தான் போகுது.. நீ யார்ற கதையும் கேளாத.. உன்ர ப்ளானிலேயே போ” வெளிநாட்டில் இருந்து வந்த அந்த அழைப்பு கோச்சருக்கு உற்சாகமூட்டியது. “240,250 lead வச்சியென்றா காணும் என்று தான் நெக்கிறன்.. lunch இற்கு முதல் ஒரு அரை மணித்தியாலம் குடு..” என்ற ஆரோக்கியமான ஆலோசனையுடன் ஆசிகூறி அந்த புகழ்பூத்தப் பழைய மாணவர் அழைப்பைத் துண்டித்தார். 

சனிக்கிழமையான மூன்றாம் நாள் காலையில் யாழ்ப்பாணத்து வானத்தை கருமேகங்கள் சூழத் தொடங்க, மத்திய கல்லூரி மைதானத்தில் சபேசன் தனது அதிரடி துடுப்பாட்டத்தால் ரன்ஸ் மழை பொழியத் தொடங்கினார் . சபேசன் தனது 89 ஓட்டங்களில் இருந்து Six அடித்து nervous nineties இற்குள் பாய்ந்தவர், பின்னர் 98 ஓட்டங்களில் நின்று கொண்டு அதிரடியாக இன்னுமொரு sixer அடித்து அழகிய Big Match century ஒன்றை முத்தமிட்டார். 

பரி. யோவானின் lead ஒரு பக்கத்தால் ஏறிக் கொண்டிருக்க, மறுபக்கத்தில் ஆட்டத்தில் மீதமிருந்த நேரம் சுருங்கிக் கொண்டிருந்தது. மறுபடியும் பரி. யோவானின் சமூக வலைத்தளங்கள் பதறிக் கொண்டிருக்க, இவை எவற்றையும் அறியாது, மைதானத்தின் எல்லைக் கோட்டிற்கு வெளியே பிளாஸ்டிக் கதிரையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கோச்சர் லவேந்திரா ஆட்டத்தின் போக்கை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தாராம். 

பரி. யோவான் கல்லூரி அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 220/7 ஐ எட்டிய வேளையில், declare பண்ணும் முடிவை பரி. யோவான் அணி எடுத்தது. 115 ஆவது வடக்கின் பெரும் போரை வெல்ல யாழ் மத்திய கல்லூரிக்கு  65 ஓவர்களில் 263 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பருவகாலத்தில் ஆடிய ஆட்டங்களில் பலமுறை 300+ ஓட்டங்களை குவித்திருந்த, அதிரடியான துடுப்பாட்ட வரிசையை வைத்திருந்த, யாழ்ப்பாண மத்திய கல்லூரியை பொறுத்தவரை இதுவொரு sportive declaration தான். 

யாழ் மத்திய கல்லூரி அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்க, முதலாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுக்களைச் சரித்த யோகதாஸ் விதுஷன் ஆரம்பப் பந்துவீச்சாளராகக் களமிறக்கப்பட்டார். 

பரி. யோவானின் பந்து வீச்சாளர்களான கஜகர்ணன் (2/5), விதுஷன் (2/57) மற்றும் அஷ்நாத் (6/70) ஆகியோர் முதல் 13 ஓவர்களிலேயே மத்திய கல்லூரியின் நான்கு விக்கெட்டுக்களை 18 ஓட்டங்களுக்குள் சரித்தார்கள். 
 
18/4 என்ற நிலையில் எந்த அணி இருந்தாலும் பிட்சில் பாயைப் போட்டு படுத்து விடுவார்கள். ஆனால் மத்திய கல்லூரி அணியோ அடித்து ஆடத் தொடங்கியது. அடுத்து வந்த 20 ஓவர்களில் சரமாரியாக பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்து 90 ஓட்டங்களைக் குவித்தது கஜன் (53) - சாரங்கன் (33) இணைப்பாட்டம். 

109/5 இல் கஜனின் விக்கெட் விழுந்து விட, மத்திய கல்லூரி அணியின் middle order மீண்டுமொரு mini collapse ஐச் சந்தித்து. 8 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுக்களை இழந்து 118/8 என்ற நிலையில் இந்தா சென்ரல் தோற்கப் போகுது என்று உலகமே பார்த்துக் கொண்டிருக்க, சாகும் வரை போராடும் வல்லமை படைத்த மத்திய கல்லூரி அணி மீண்டும் போராட ஆரம்பித்தது.

அடுத்து வந்த இருபது சொச்ச ஓவர்களும் வெற்றியை எதிர்பார்த்திருந்த பரி. யோவான் சமூகத்தின் பொறுமை சோதிக்கப்பட, “I told you we should have declared earlier” என்ற கருத்துக்களும் ஆங்காங்கே பதிவாகிக் கொண்டுருந்தது. 

பண்ணைக் கடற்கரையில் மறையப் போகும் சூரியனை, மைதானத்தை சூழ்ந்திருந்த மழைமேகங்கள் மறைத்திருக்க, மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் வருணபகவானிற்கு ஆராத்தி எடுத்து அபிஷேகம் செய்யத் தொடங்கினார்கள். 

Big Match இன் இறுதி நாளின் இறுதி மணித்தியாலத்தின் இறுதிக் கணங்களிற்குள் நுழைந்த Big Match இன் நினைவுகள் காலத்திற்கும் நிலைத்து நிற்கும். Big Match வரலாற்றில் இன் இறுதி நாளின் இறுதி மணித்தியாலத்திற்கு பல தனிவரலாறுகள் இருக்கின்றன. 

பரி. யோவானைப் பொறுத்தவரை அந்த இறுதிக் கணங்களின் நாயகர்களாக விக்னபாலன்-விஜயராகவன் (1982), நிஷ்யந்தன் (1984), கேர்ஷன்-சுஜித் (1992), ஶ்ரீதரன்-சஞ்சீவ் (1993), பந்து வீச்சில் கபில்ராஜ்- ஜதுஷன் (2018) என்ற நீண்ட பட்டியலே இருக்கிறது. யாழ் மத்திய கல்லூரிக்கும் அதே போன்ற நாயகர்கள் கனபேர் இருப்பார்கள்.

115 ஆவது Big Match இன் இறுதி மணித்தியாலத்துக்குள் ஆட்டம் நுழைந்து விட்டது. களைத்துப் போன பரி. யோவானின் பந்து வீச்சாளர்கள் அறம்புறமாக மாற்றப்படுகிறார்கள். கடைசிவரை துடுப்பாடும் வல்லமை படைத்த மத்திய கல்லூரியின் வீரர்கள் ஆட்டத்தை draw ஆக்கும் கெத்துடன், மறித்தும் அடித்தும் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒன்பதாவது விக்கெட்டுக்கு 18 ஓவர்கள் நின்றுபிடித்து 36 ஓட்டங்களை எடுத்திருந்த சன்சஜன்-சயந்தன் இணைப்பாட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் பரி. யோவான் அணி தீவிரமாக ஈடுபடுகிறது. 
அதுவரை சுப்ரமணிய பூங்கா முனையில் பந்து வீசிக் கொண்டிருந்த யோகதாஸ் விதுஷன், மணிக்கூட்டுக் கோபுர முனையில் இருந்து பந்துவீச அழைக்கப்படுகிறார்.

விதுஷன் வீசிய பந்தை சயந்தன் ஓங்கி அடிக்க, பரி. யோவானின் அணித்தலைவர் அன்டன் அபிஷேக் பிடியெடுக்க, மத்திய கல்லூரி அணியின் ஒன்பதாவது விக்கெட் இழக்கப்படும் போது, யாழ்ப்பாண மணிக்கூட்டுக் கோபுரத்தின் மணிக்கூடு பிற்பகல் 4.20 ஐத் தாண்டியிருந்தது. 

மணிக்கூட்டுக் கோபுரத்தின் நிமிட முள்ளு ஏனோ வேகமாகமாக ஓடுவதாக ஜொனியன்ஸ் நினைத்துக் கொண்டிருக்க, மத்திய கல்லூரியின் கடைசித் துடுப்பாட்ட வீரர்களோ நேரம் கடத்தும் விளையாட்டையும் அரங்கேற்றத் தொடங்கினார்கள்.

நேரங்கடத்தும் வித்தையில் வித்தகர்களான பரி. யோவான் அணியோ, கிடுகிடுவென ஓவர்களின் இடையில் field மாறி, மளமளவென பந்துவீச பந்துவீச்சாளர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள்.

விக்கெட் விழாமல் போன ஒவ்வொரு பந்தும் Johnians இற்கு விசரைக் கிளப்ப, நேரமோ 5 மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ஐந்து மணியை நெருங்கத் துடிக்கும் மணிக்கூட்டு கோபுரத்தின் நிமிட முள்ளோடு மழை தரும் மேகங்களின் சேர்க்கை போட்டி போட, மைதானத்திலும் உலகெங்கிலும் இருந்து ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஜொனியன்ஸின் இதயத்துடிப்பு பன்மடங்கு ஏறத் தொடங்கியது. 

மணி நாலரை தாண்டியிருக்கும்.. இன்னும் ஆறோ ஏழு ஓவர்கள் நின்று பிடித்து விட்டார்கள் என்றால் மத்திய கல்லூரி அணி ஆட்டத்தை draw ஆக்கிவிடும். 

மணிக்கூட்டுக் கோபுர முனையில் இருந்து ஆட்டத்தின் சிறந்த பந்துவீச்சாளராகத் தெரிவான அஷாந் வீசிய பந்து, மத்திய கல்லூரி அணியின் சன்சஜனின் கால் காப்பில் பட… “how is that?” என்று மைதானத்தில் பரி. யோவான் வீரர்கள் கத்திய கத்தில், டொரோன்டோவில் நித்திரை முழித்து இரவிரவாக ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த விக்னபாலன் அண்ணாவும் எழும்பிக் கத்த, அம்பயர் தனது தங்க விரலைத் தூக்கி அவுட் கொடுக்க…. பரி. யோவானின் Red & Black கொடிகளோடு பழைய மாணவர்கள் மைதானத்துக்குள் ஓடிவந்து, Big Match வென்ற கல்லூரியின் வீரர்களை தங்களது தோள்களில் சுமந்து கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறும் காட்சிகள் ஜொனியன்ஸின் கண்களை ஆனந்தத்தில் கலங்க வைத்தன.  

பொதுவாக கிரிக்கெட் ஆட்டத்தில் Bastmen களின் பங்களிப்பு தான் பெரிதாக பேசப்படும். அதுவும் century அடித்த batsmen இன் புகழ் நீடித்து நிலைத்து நிற்கும். 2022 Big Match இல் வீழ்தப்பட்ட 20 விக்கெட்டுக்களில் 18 ஐ வீழ்த்திய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களான அஷாந் (10/116) மற்றும் விதுஷன் (8/105) இருவரின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் பதிவு செய்வதும் காலத்தின் கட்டாயம். பரி. யோவான் அணி வீழ்த்திய மத்திய கல்லூரியின் அனைத்து இருபது விக்கெட்டுக்களையும் வீழ்த்தியது இடதுகை பந்துவீச்சாளர்கள் என்பதும் ஒரு சிறப்பம்சம்மாகும். 

இந்தாண்டு Big Match வென்ற அணியில் ஆடிய ஒன்பது வீரர்கள் அடுத்த ஆண்டும் பரி. யோவான் அணியில் விளையாட வாய்ப்புண்டு. பரி. யோவானின் இருநூறாவது அகவைக் கொண்டாட்டக்கள் அரங்கேறப் போகும் 2023 ஆம் ஆண்டில், ஆடப்படப் போகும் 116 ஆவது Big Match ஐச் சூழ எழப் போகும் பாரிய எதிர்பார்ப்புக்களை இந்த இளம் வீரர்கள் அணி தனது தோள்களில் சுமக்கப் போகிறது.

ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்

 

Edited by நிழலி
சில பகுதிகள் இரு தடவை பதியப்பட்டது
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.