Jump to content

இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை போராட்டத் திடலில் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பு: கண்ணீர்ப் புகை வீச்சு

9 மே 2022, 08:05 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கூடாரம் எரிப்பு

 

படக்குறிப்பு,

காலிமுகத் திடல் போராட்டக் காரர்களின் கூடாரம் எரிப்பு.

இலங்கை தலைநகர் கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

கொழும்பு நகரில் முதலில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு பிறகு நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட்டது.

போராட்டத் திடலில் ஒரு கூடாரம் தீவைப்பில் எரிவதைப் பார்க்க முடிந்தது.

போராட்டக் காரர்கள், அவர்களைத் தாக்கும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என இரு தரப்பினர் மீதும் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர்.

 

எரியும் கூடாராம்.

ராஜபக்ஷ ஆதரவாளர்கள் பத்திரிகையாளர்களையும் தாக்கினர்.

இலங்கையில் நடந்த இந்த சம்பவங்களை பிபிசி தமிழுக்காக பணியாற்றும் செய்தியாளர் ரஞ்சன் அருண்பிரசாத் ஃபேஸ்புக் நேரலையாக வழங்கினார்.

வன்முறை தொடங்கியது எப்படி?

இலங்கை பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்ட நிலையில், அத்தியாவசியப் பொருள்களான பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது, அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாக குறைந்த நிலையில், எதையும் இறக்குமதி செய்ய முடியவில்லை.

 

மஹிந்த படத்தை சுமந்துகொண்டு செல்லும் ஆதரவாளர்கள்.

 

படக்குறிப்பு,

மஹிந்த படத்தை சுமந்துகொண்டு செல்லும் ஆதரவாளர்கள்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பு மையப் பகுதியில் உள்ள காலிமுகத் திடலில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் என அனைவரும் வேறுபாடுகளை கடந்து ஒன்றாகப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். போராட்டம் இன்று ஒரு மாதத்தை நிறைவு செய்யும் நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கான அழுத்தம் அவரது கட்சிக்கு உள்ளேயும் அதிகரித்து வருவதாக செய்திகள் வரத் தொடங்கியிருந்தன.

இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தி, தாம் பதவி விலக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று மே 9-ம் தேதி காலை பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகைக்கு முன்பு கூடிய அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்த பத்திரிகையாளர்களை தாக்கினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தவர்களில் பலர், அலரிமாளிகைக்குள் உருட்டு கட்டைகளுடன் செல்வதை காணக்கூடியதாக உள்ளது.

 

இலங்கை போராட்டம்

 

படக்குறிப்பு,

போர்க் களமான இலங்கை போராட்டக் களம்.

பிறகு அவர்கள் அங்கிருந்து போராட்டம் நடந்துகொண்டிருக்கும் காலிமுகத் திடல் பகுதிக்கு சென்று கம்புகளால் போராட்டக் காரர்களைத் தாக்கத் தொடங்கினர். போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அடித்து உடைத்து, தீவைத்து எரிக்கப்பட்டன.

 

போராட்டக்காரர்கள்

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், ராஜபக்ஷ ஆதரவாளர்கள் இருதரப்புக்கும் இடையில் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் இரண்டு தரப்பினர் மீதும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்கின்றனர். நிலைமை இன்னும் அங்கு வன்முறையும், பதற்றமும் நிறைந்தே காணப்படுகிறது.

நாடு தழுவிய ஊரடங்கு அமல்

 

போலீஸ் அணி வகுப்பு

கொழும்பு காலிமுகத் திடலில் அரசு எதிர்ப்புப் போராட்டக் காரர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. இதையடுத்து கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தியப் பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த உத்தரவு வரும் வரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், இந்த ஊரடங்கு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், அடுத்த தகவல் வரும் வரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61375881

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வன்முறை: காலிமுகத் திடலில் அரங்கேறிய வன்முறை - படத்தொகுப்பு

24 நிமிடங்களுக்கு முன்னர்
 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத் திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாதமாக போராட்டம் நடத்தி வருகிறவர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என்று அறியப்படுவோர் இன்று வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கண்ணீர் புகை குண்டுகளை வீசும் காவல்துறையினர்

 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இந்த வன்முறையில் காயம்படைந்தவரை தூக்கிச் செல்லும் போலீச்சார்

 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

போராட்டத் திடலில் குவிந்த பாதுகாப்பு படையினர்

 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

போராட்டத் திடலில் கூடாரங்கள் தாக்கப்பட்டன.

 

இலங்கை - போராட்டம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

போராட்டக் காரர்கள், அவர்களைத் தாக்கும் ராஜபக்ஷ ஆதரவாளர்கள் என இரு தரப்பினர் மீதும் போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசுகின்றனர்.

 

https://www.bbc.com/tamil/sri-lanka-61382661இலங்கை - போராட்டம்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image

 

இந்த கார்டூனுக்கும் திண்ணையில நான் எழுதினதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.