Jump to content

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை
 
இது வரைக்கும்... எரியூட்டப்பட்ட,  வீடுகள்.
 
1-சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
3- குருணாகல மேயர் இல்லம்
4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்
5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்
6 - என் அனுஷா பாஸ்குவல் வீடு
7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு
8- ரமேஷ் பதிரானா வீடு
9- புனித பண்டாராவின் வீடு
10-ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறை 
நீர்கொழும்பில்
11-அவென்ரா கார்டன் ஹோட்டல்
12- அருந்திகாவின் வீடு
13 கனக ஹேரத்தின் வீடு
14- காமினி லோகுவின் வீடு
15-ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில்
16- ,17 - மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு
லான்சாவின் (2 வீடுகள்)
18- பந்துல குணவர்த்தனவின் வீடு
19 - அலி சப்ரி ரஹீமின் வீடு
 
Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அடித்துக் கொலை என்றால்... 
விசாரணை, நீதிமன்றம் என்று, இழுபட வேண்டும் என்பதால்...
தற்கொலை என்று, சுருக்கமாக அலுவலை முடித்து இருக்கிறார்கள்.

உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்சன் பெர்னாடோவின் மயிரை தொட விடமாட்டேன் எண்டார், குருநாகல் மேயர். 

இப்ப, ஜோன்சன் வீடு, மகிந்தா வீடு எல்லாம் எரியுது.

மேதுமில்லன்னா ராஜபக்சக்களின் பரம்பரை வீடு தீக்கிரையாகி தரைமட்டமானது.

அவரது மகன்களில் ஒருவரின் லம்போகினி காரும் தப்பவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, body of water and text

Mahinda~ சொல்லிடாதீங்க🙏

That சாராய Gang~ எதடா சொல்ல வேணாங்கிற?🤔

Mahinda~ அடிச்சு கூட கேப்பாங்க
ஒண்டயும் சொல்லிடாதீங்க 
🙏  🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Elugnajiru said:

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

விதம் விதமாக கதைகள் வருகிறது, ஏது உண்மை என்று தெரியவில்லை. கோத்தா மஹிந்தவை போடும் அளவுக்கு வருமா? அவர்களின் ஆதரவு தளத்தை முற்றிலும் இழந்து விடுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Elugnajiru said:

 

3 hours ago, நீர்வேலியான் said:

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

 

கோத்தாவுக்கு எதிராக திரண்ட மக்களை மகிந்த பக்கம் திருப்பி இதுவரை பாதுகாப்பாக இருக்கிறார்.

இதுவே அவருக்கு பெரிய வெற்றியே.

கோத்தாவின் தேவை கருதி பிக்குகள் தான் திசை திருப்பிவிட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people, people standing and outdoors

மகிந்த... அனுப்பிய ஆள் ஒருத்தன்,
"ஜட்டி"  போடாமல் வந்து... அசிங்கப் பட்டுப் போனான். 😂  🤣

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

இது என்ன புதிதா அவர்களுக்கு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

No...no..no... it is photo shoot:::

Rajapaksa-Thug-was-attacked-by-people-Gota-Go-Home-.jpeg?fit=498%2C356&ssl=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

இது என்ன புதிதா அவர்களுக்கு???

ராஜபக்‌ஷக்களின் ஆதரவாளர், எதிர்ப்பாளர்  இரண்டு பக்கமும் காடைத்தனத்தைக் காட்டும் சிங்களவர்கள்தான் இருக்கின்றார்கள்.
இதே காட்டான்கள்தான் முள்ளிவாய்க்காலில் தமிழரையும் குடும்பங்களின் முன்னிலையிலேயே நிர்வாணப்படுத்தினார்கள். அடிப்பது, உதைப்பதை விட நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது அவர்களின் விகாரமான மனப்பான்மையைத்தான் காட்டுகின்றது.

இதில் தமிழர்கள் இரசிக்க எதுவுமில்லை. நாளை இந்த இரண்டு பக்கமும் சேர்ந்து தமிழரையும், முஸ்லிம்களையும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தவும் கூடும். ஏற்கனவே செய்தவர்கள்தானே!

  • Like 11
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்த கோத்தா கூட்டுக் கும்பலால் தமிழ் பேசும் மக்கள் மீது திருப்பாதிருக்க.. பன்னாட்டு சமூகம் அக்கறையோடு துரிதமாகச் செயற்படுவதோடு.. இலங்கையில் அரசியல் மற்றும் பொருண்மிய நெருக்கடிக்கு உரிய வகையில் எல்லா மக்களும் விரும்பக் கூடிய தீர்வை பன்னாட்டு சமூகம் முன்வைப்பதோடு அமுலாக்க வேண்டும். 

ஒரு காலத்தில் பிலிப்பைன்ஸ் மக்களால் நேசிக்கப்பட்ட மார்க்கோஸை மக்கள் தூக்கி எறிந்துவிட்டு அக்கினோவை பதவிக்கு கொண்டு வந்த வரலாறுகள் தான் ஞாபகத்தின் பக்கங்களில் வந்து போகிறது. 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ராசாக்கள்

கொண்டு  வந்து  கொட்டுங்கள் நல்ல  செய்தியை....

ஆட்டுக்கிடாய்  அடிக்கலாமா  மாடே  போதுமா  என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்😂

தம்பி விசுகு.   அப்போ தமிழ்ஈழம். வேண்டாமா  ?ஆடும்  ...மாடும்....போதுமா  ....?  😂🙏👍😂🙏👍😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடுகளை எரிப்போருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரணில் வீட்டையோ அவருக்க ஆதரவாக இருக்கும் தமிழ் எம்பிக்களின் வீட்டையோ எரித்து விடாதீர்கள்.தில் இருந்தால் அவர்களின் வீட்டுப்பக்கம் முடிந்தால் போய் பாருங்கோ பார்ப்போம்.வீடுகளை எரிப்போருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரணில் வீட்டையோ அவருக்க ஆதரவாக இருக்கும் தமிழ் எம்பிக்களின் வீட்டையோ எரித்து விடாதீர்கள்.தில் இருந்தால் அவர்களின் வீட்டுப்பக்கம் முடிந்தால் போய் பாருங்கோ பார்ப்போம்.

வலிகள் வேறு வேறானாலும்
சிலவற்றையாவது அவர்கள் உணர காலம் அவர்களை கட்டாயப்படுத்துகிறது
இதுவரை எரிக்கப்பட்ட மகிந்த, அவரது அரச அமைச்சர் கள் மற்றும் ஆதரவாளர்களின் வீட்டு விபரங்கள்
1-சனத் நிஷாந்தவின் வீடு
2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3-குருநாகல் மேயர் மாளிகை
4-ஜான்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
5-மொரட்டுவை மேயர் மாளிகை
6-எம்பி அனுஷா பாஸ்குவலின் வீடு
7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8-ரமேஷ் பத்திரனவின் வீடு
9-சாந்த பண்டாரவின் வீடு
10-ராஜபக்சே பெற்றோரின் கல்லறை
11- நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல்
12-அருந்திகாவின் வீடு
13-கனக ஹேரத்தின் வீடு
14-காமினி லொகுகேவின் வீடு
15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
லான்சாவின் 17-2 வீடுகள்
18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
19-யானை சபர் வீடு
20-பந்துல குணவர்தன வீடு
21. வீரகெட்டிய மெதமுலன வீடு
22.கேகல்ல மஹிபால ஹேரத் ஹவுஸ் 10pm 9/05/2022
23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம் இரவு 10.30
24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் இரவு 10.40
25- விமல் வீரவன்சவின் வீடு இரவு 10.45
26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி இரவு 10.50
27- சிறிபாலகம்லத் வீடு இரவு 11 மணி
28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு இரவு 11.10
29-ரோஹித அபேகுணவர்தன இல்லம் இரவு 11.15
30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் இரவு 11.40
31-காஞ்சனா விஜேசேகர இல்லம் இரவு 11.45
32-துமிந்த திசாநாயக்க வீடு இரவு 11.45
33-அலிசப்ரி ரஹீம் வீடு (புத்தளம்)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

மனுசியை தமிழ்கடக்கு அனுப்பிட்டன்...மட்டனும்வேணும்..சிக்கனும் வேணும்...மாடும் வேணும்...பத்துப் பேரைக்கூப்பிட்டு பார்ட்டி போடப்போறன்...கையும் ஓடேல்லை காலும் ஓடாதாம் சந்தோசத்திலை..இந்தக் காட்ட்சிகளை 77 ..83 ல் நேரில் கண்ட நினைவு..தெய்வம்  நின்றறுக்கும்..

இவ்வளவையும் வாங்கிப்போட்டு விட்டு சந்தோஷத்தில நீங்கள் சாப்பிட மறந்திடாதீங்கோ!

7 hours ago, தமிழ் சிறி said:

பெனியன், போடத்  தெரிஞ்சவனுக்கு... ஜட்டி போடத்  தெரியலையே..

அவ்வளவு அவசரம்.

7 hours ago, தமிழ் சிறி said:

 வயிறு நோக  சிரிக்க... மேலே உள்ள காணொளியை பாருங்கள். 👆

எங்கள் சொத்துக்கள், உடல்கள்,  நூலகம் எரியூட்டி விடுதிகளில் இருந்து ரசித்தார்கள், நம்மால் முடியவில்லை! அத்தனையும் ஏழைகளின் வயிறு எரிய சேர்த்து கட்டினவையை இப்போ தீ கொண்டு போகுது. 

10 hours ago, தமிழ் சிறி said:

நாடு முழுக்க...  
அவசரகால சட்டமும்,  ஊரடங்கு சட்டமும் இருக்கின்ற நிலையில்... 
ஒரு எம்.பி. அடித்துக்  கொல்லப் படுகிறார், 
பத்து அமைச்சர்களின் வீடு... கொளுத்தப் பட்டுள்ளது,

இன்று காலை... பிரதம மந்திரியாக இருந்த மகிந்தவின், 
தங்காலை  வீடு  எரிகின்றது... என்றால் 

அதி உத்தமரான... ஜனாதிபதி  கோத்தபாய என்ன செய்கிறார்?
இராணுவம், போலிஸ், கடற்   படை, அதிரடிப் படை எல்லாம் எங்கே?

ஏதோ... நம்மால், முடிந்தது. 😎

இவர்கள் வெளியில் வந்தால் அவ்வளவேதான்! அவர்கள் கொடுத்த பயிற்சி அவர்களையே பதம் பாக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமார வெல்கம மீது தாக்குதல் – அவர் பயணித்த வாகனம் எரியூட்டப்பட்டது!

குமார வெல்கம மீது தாக்குதல் – அவர் பயணித்த வாகனம் எரியூட்டப்பட்டது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொட்டாவ பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1280978

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

தாக்குதலில்.... இமதுவ பிரதேச சபையின் தலைவர், உயிரிழப்பு

இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு காலத்திலும் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவு – கொழும்பின் தற்போதைய நிலை!

ஊரடங்கு காலத்திலும்.... பல வன்முறைச் சம்பவங்கள் பதிவு – கொழும்பின் தற்போதைய நிலை!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக அலரி மாளிகை அருகே நேற்று இரவு மீண்டும் பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அலரிமாளிகைக்குள் நுழைய தொடர்ச்சியாக முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தொடர்ந்த நிலையில், பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தையும் முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் அலரி மாளிகையிலிருந்து வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடாத்தப்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்கான சனத் நிஷாந்தவின் வீடு, குருநாகல் மேயரின் இல்லம், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வீடு மற்றும் அலுவலகம், பந்துல குணவர்தன , காமினி லொக்குகே , டி.பி . சன்ன ஜெயசுமண, மஹிபால ஹேரத் , ரமேஷ் பத்திரண , திஸ்ஸ குட்டியாராச்சி , சாந்த பண்டார , அலி சப்ரி ரஹீம் உட்பட்ட பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலனவின் இல்லத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் கொழும்பின் பல பகுதிகளிலும் காட்சியளிப்பதை அவதானிக்க முடிகின்றது.

3-1-600x450.jpg

2-1-600x450.jpg

1-1-600x450.jpg

https://athavannews.com/2022/1280982

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

இது மகிந்த கோத்தா கூட்டுக் கும்பலால் தமிழ் பேசும் மக்கள் மீது திருப்பாதிருக்க.. பன்னாட்டு சமூகம் அக்கறையோடு துரிதமாகச் செயற்படுவதோடு.. இலங்கையில் அரசியல் மற்றும் பொருண்மிய நெருக்கடிக்கு உரிய வகையில் எல்லா மக்களும் விரும்பக் கூடிய தீர்வை பன்னாட்டு சமூகம் முன்வைப்பதோடு அமுலாக்க வேண்டும். 

அமெரிக்கா, கனடா பிரித்தானியா அவுஸ்ரேலியா போன்ற ஜனநாயக நாடுகளே இதில் அக்கறையோடு செயல்படும்.
மனித விரோத ரஷ்யா சீனா போன்றவை தமிழர்களை இலங்கை மக்களை ஒடுக்கும் செயற்பாட்டுக்கு ஆதரவாகவே செயல்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/cVPJtQlkTF/

சிங்கள காடையர்களினால் அப்பவியான நீர்கொழும்பு போதகரின் வீடு எரிக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்கா, கனடா பிரித்தானியா அவுஸ்ரேலியா போன்ற ஜனநாயக நாடுகளே இதில் அக்கறையோடு செயல்படும்.

நீங்கள் குறிப்பிட்ட சனநாயக நாடுகள் கடந்த பதினைந்து வருடங்களாக கோமாவிலா இருக்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இறுதியாக இருந்த ஒப்சன்-3
1-இடைக்கால கூட்டரசு
2-ராணுவ பின்புல ஆட்சி
3-கலகம் அல்லது கழன்று செல்லுதல்(தப்பிச் செல்லுதல்)
வழமையாகவே மஹிந்தவின் வலது,இடது பக்கமாக இருந்து இடக்குமுடக்கான ஐடியாஸ் கொடுத்து அதில் வாசிகளை அள்ளிக்கொள்ளும் விமல், உதய, மைத்திரியின் #இடைக்கால கூட்டரசு #தந்திரம் இம்முறை பலிக்கவில்லை.
அடுத்தபடியாக இருந்த ஒப்சன்-2
அதில்-1 ராணுவ பின்புல உதவியுடனான ஆட்சி!
ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு பின்னால் இருந்து இயக்குவது! ராணுவம் அதற்கு கைவிரித்து விட்டது!
முப்படையும் முடிந்தளவு இப்போது மக்களோடு நிற்கிறது.
எனவே இறுதியாக இருந்த ஒப்சன் “செய் அல்லது செத்து மடி” என்பது போல் #கலகம் அல்லது கழன்று செல்லுதல். .
அதற்காக நாலாபுறம் ஆட்கள் அழைக்கப்பட்டார்கள், விசேடமாக #சீன பாணியில் சிறைக்கதிகளும் கொண்டுவரப்பட்டார்கள்.
அலரிமாளிகையில் ஆலோசனை நடந்தது.
கலகமா? கழர்வதா?
அரை மணிநேரம் தாருங்கள் கோள்பேஸை நான் கிளீன் செய்து தருகிறேன் என்று உசுப்பேற்றினார் ஜோன்ஸ்டன்.
ஜோன்ஸ்டனின் எண்ணப்படி கலகம்தான் என முடிவானது.
காரியம் தொடர்ந்தது, அலரிமாளிகை முன்னால் இருந்த #மைனாகோகம அடியாட்களிடம் வீழ்ந்தது, ஜோன்ஸ்டனின் முதல் முயற்சி வெற்றி.
இரண்டாவது இலக்கு கோள்பேஸ்.
அடியாட்களை நகர்த்த ஆயத்தம் செய்யப்பட்டது (இந்த தகவல் நமக்கு கிட்டிய மறுகணமே செய்தியை பகிர்ந்தோம் “ கோள்பேஸிலும் முறுகல் நிலை ஏற்படும் அபாயம்” என்று)
இதேவேளை இவர்களின் இந்த நாசகார திட்டம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் காதில் கசிந்தது. உடனடியாக அவரும் அறிக்கை விட்டார்.
கோள்பேஸில் இடம்பெறும் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு குந்தகம் விளைவித்தால் இனிமேல் கட்சிதலைவர்கள் கூட்டத்திற்கு நானும் வருகை தரமாட்டேன் என அறிவிப்பு செய்தார்.
இந்த தகவல்கள் தீயாய் பறந்தது, பல்கலைக்கழக மாணவர் அணி, தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், பிரதேச வாசிகள் என கணப்பொழுதில் கூட்டம் சுற்றி வளைத்தது.
இந்த இடைவெளிக்குள் கோள்பேஸ் சென்ற அடியாட்கள் கூட்டம் அங்கிருந்த சொற்பமானோரை தாறுமாறாக தாக்கி துவம்சம் செய்தது, தீயிட்டு கொழுத்தியது.
சம்பவம் அறிந்து திரண்டு வந்த மக்கள், அடியாட்களை கங்காராமை வாவிக்கரை வரை விரட்டி சென்று அசுத்த நீரில் ஊற விட்டு அமுக்கி எடுத்தனர்.
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர் மஹிந்த ஆதரவாளர்கள்.
அத்தோடு நின்று விடவில்லை, நாட்டின் நாலாபுறமும் அடியாட்களை தேடி மக்கள் வீதிகளில் பஸ் மறித்து வலைவிரித்தனர், தீ வைத்தனர், தவிடுபொடியாக்கினர்.
சம்பவம் பெருக்கெடுத்தது….
மூச்சு திணறடித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் சாமர்த்தியத்தை சற்றும் எதிர்பார்த்திராத ஜோன்ஸ்டன் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கதிகலங்கி போயினர்.
ஜனாதிபதியும் கடுப்பானார்..
ஏற்கனவே டைப் செய்து வைக்கப்பட்டிருந்த #ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பப்பட்டது.
அப்போதாவது மக்களின் கொந்தளிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது…
ஆனால் மக்கள் விட்ட பாடில்லை, அடிதடி தொடர்ந்தது…
மக்களை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை.
அடுத்தது ?
கொழும்பில் ஊரடங்கு!
ம்ஹும்..
பின்னர் மேல்மாகாணம்!
ம்ஹும்..
பின்னர் நாடு முழுவதும்!
ம்ஹும்..
பின்னர் 2 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு எனும் அறிவிப்பு பறந்தது.
மக்களின் பட்டினிக்கும், பொருள் பற்றாக்குறைக்கும், விலை அதிகரிப்பிற்கும் முன்னால் அதிபரின் அவசரகால நிலையும், ஊரடங்கு அறிவிப்பும், தூசுக்கும் கணக்கெடுக்கப்படவில்லை.
போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது.
அலரிமாளிகையின் உள்ளே ஒழிந்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் அடியாட்களையும் எம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென வெறிகொண்டெழுந்த மக்கள் விழித்திருந்து விடாது போராடினார்கள்.
சம்பவம் உச்சமடைந்தது, கட்டுப்படுத்த பொலிசார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டு செய்தனர்.
இறுதியில் பொலிஸ் தரப்பில் ஒருவரும், போராட்ட தரப்பில் ஒருவருமாக இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளியேற்றிய விரக்தியின் வெறித்தனத்தில் வீரகெட்டியவிலும் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். (அதில் ஒருவர் முஸ்லிம் இளைஞர்)
நீர்கொழும்பிலும் 27 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
பொலன்னறுவை எம்பி ஒருவரும் தன்னைத்தானே சுட்டு மாய்த்துக்கொண்டார்.
இதுவரை மொத்தமாக 7 பேர் பலியான நிலையில் பொதுஜனபெரமுன ஆதரவாளர்களின் சிறிய, பெரிய சுமார் 64 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
32 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
250 ற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை மஹிந்த ஆதரவாளர்களால் நேற்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டித்து நீர், மின்சாரம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட சுமார் 2000 தொழிற்சங்கங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் நாட்டுக்கு பலகோடி ரூபா நஷ்ட்டம் ஏற்படுகிறது.
இப்போது இறுதி ஒப்சன் #கழன்று (தப்பி) செல்லுதல்!
#மஹிந்த, #பசில், #சமல் உள்ளிட்ட ராஜ்பக்‌ஷவின் குடும்பம் பலத்த பாதுகாப்புடன் திருகோண்மலை கடற்கரை முகாமில் தஞ்சமடைந்துள்ளது.
அங்கிருந்து #மாலைதீவா? இந்தியாவா அல்லது டுபாயில் தஞ்சம் பெறுவார்களா என்பதை எல்லாம் அடுத்து வரும் சில மணிநேரங்களில் நாம் கண்டறிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் வரும்போதும் #பகை மூட்டி வெளியேறும் போதும் #தீ மூட்டி செல்லும் இந்த #கொடூரெ வெறித்தனம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் நிம்மதியை தரப்போவதில்லை என்பதே உண்மை.
காத்திருங்கள்…..
10.05.2022
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இறுதியாக இருந்த ஒப்சன்-3
1-இடைக்கால கூட்டரசு
2-ராணுவ பின்புல ஆட்சி
3-கலகம் அல்லது கழன்று செல்லுதல்(தப்பிச் செல்லுதல்)
வழமையாகவே மஹிந்தவின் வலது,இடது பக்கமாக இருந்து இடக்குமுடக்கான ஐடியாஸ் கொடுத்து அதில் வாசிகளை அள்ளிக்கொள்ளும் விமல், உதய, மைத்திரியின் #இடைக்கால கூட்டரசு #தந்திரம் இம்முறை பலிக்கவில்லை.
அடுத்தபடியாக இருந்த ஒப்சன்-2
அதில்-1 ராணுவ பின்புல உதவியுடனான ஆட்சி!
ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு பின்னால் இருந்து இயக்குவது! ராணுவம் அதற்கு கைவிரித்து விட்டது!
முப்படையும் முடிந்தளவு இப்போது மக்களோடு நிற்கிறது.
எனவே இறுதியாக இருந்த ஒப்சன் “செய் அல்லது செத்து மடி” என்பது போல் #கலகம் அல்லது கழன்று செல்லுதல். .
அதற்காக நாலாபுறம் ஆட்கள் அழைக்கப்பட்டார்கள், விசேடமாக #சீன பாணியில் சிறைக்கதிகளும் கொண்டுவரப்பட்டார்கள்.
அலரிமாளிகையில் ஆலோசனை நடந்தது.
கலகமா? கழர்வதா?
அரை மணிநேரம் தாருங்கள் கோள்பேஸை நான் கிளீன் செய்து தருகிறேன் என்று உசுப்பேற்றினார் ஜோன்ஸ்டன்.
ஜோன்ஸ்டனின் எண்ணப்படி கலகம்தான் என முடிவானது.
காரியம் தொடர்ந்தது, அலரிமாளிகை முன்னால் இருந்த #மைனாகோகம அடியாட்களிடம் வீழ்ந்தது, ஜோன்ஸ்டனின் முதல் முயற்சி வெற்றி.
இரண்டாவது இலக்கு கோள்பேஸ்.
அடியாட்களை நகர்த்த ஆயத்தம் செய்யப்பட்டது (இந்த தகவல் நமக்கு கிட்டிய மறுகணமே செய்தியை பகிர்ந்தோம் “ கோள்பேஸிலும் முறுகல் நிலை ஏற்படும் அபாயம்” என்று)
இதேவேளை இவர்களின் இந்த நாசகார திட்டம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் காதில் கசிந்தது. உடனடியாக அவரும் அறிக்கை விட்டார்.
கோள்பேஸில் இடம்பெறும் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு குந்தகம் விளைவித்தால் இனிமேல் கட்சிதலைவர்கள் கூட்டத்திற்கு நானும் வருகை தரமாட்டேன் என அறிவிப்பு செய்தார்.
இந்த தகவல்கள் தீயாய் பறந்தது, பல்கலைக்கழக மாணவர் அணி, தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், பிரதேச வாசிகள் என கணப்பொழுதில் கூட்டம் சுற்றி வளைத்தது.
இந்த இடைவெளிக்குள் கோள்பேஸ் சென்ற அடியாட்கள் கூட்டம் அங்கிருந்த சொற்பமானோரை தாறுமாறாக தாக்கி துவம்சம் செய்தது, தீயிட்டு கொழுத்தியது.
சம்பவம் அறிந்து திரண்டு வந்த மக்கள், அடியாட்களை கங்காராமை வாவிக்கரை வரை விரட்டி சென்று அசுத்த நீரில் ஊற விட்டு அமுக்கி எடுத்தனர்.
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர் மஹிந்த ஆதரவாளர்கள்.
அத்தோடு நின்று விடவில்லை, நாட்டின் நாலாபுறமும் அடியாட்களை தேடி மக்கள் வீதிகளில் பஸ் மறித்து வலைவிரித்தனர், தீ வைத்தனர், தவிடுபொடியாக்கினர்.
சம்பவம் பெருக்கெடுத்தது….
மூச்சு திணறடித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் சாமர்த்தியத்தை சற்றும் எதிர்பார்த்திராத ஜோன்ஸ்டன் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கதிகலங்கி போயினர்.
ஜனாதிபதியும் கடுப்பானார்..
ஏற்கனவே டைப் செய்து வைக்கப்பட்டிருந்த #ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பப்பட்டது.
அப்போதாவது மக்களின் கொந்தளிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது…
ஆனால் மக்கள் விட்ட பாடில்லை, அடிதடி தொடர்ந்தது…
மக்களை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை.
அடுத்தது ?
கொழும்பில் ஊரடங்கு!
ம்ஹும்..
பின்னர் மேல்மாகாணம்!
ம்ஹும்..
பின்னர் நாடு முழுவதும்!
ம்ஹும்..
பின்னர் 2 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு எனும் அறிவிப்பு பறந்தது.
மக்களின் பட்டினிக்கும், பொருள் பற்றாக்குறைக்கும், விலை அதிகரிப்பிற்கும் முன்னால் அதிபரின் அவசரகால நிலையும், ஊரடங்கு அறிவிப்பும், தூசுக்கும் கணக்கெடுக்கப்படவில்லை.
போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது.
அலரிமாளிகையின் உள்ளே ஒழிந்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் அடியாட்களையும் எம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென வெறிகொண்டெழுந்த மக்கள் விழித்திருந்து விடாது போராடினார்கள்.
சம்பவம் உச்சமடைந்தது, கட்டுப்படுத்த பொலிசார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டு செய்தனர்.
இறுதியில் பொலிஸ் தரப்பில் ஒருவரும், போராட்ட தரப்பில் ஒருவருமாக இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளியேற்றிய விரக்தியின் வெறித்தனத்தில் வீரகெட்டியவிலும் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். (அதில் ஒருவர் முஸ்லிம் இளைஞர்)
நீர்கொழும்பிலும் 27 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
பொலன்னறுவை எம்பி ஒருவரும் தன்னைத்தானே சுட்டு மாய்த்துக்கொண்டார்.
இதுவரை மொத்தமாக 7 பேர் பலியான நிலையில் பொதுஜனபெரமுன ஆதரவாளர்களின் சிறிய, பெரிய சுமார் 64 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
32 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
250 ற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை மஹிந்த ஆதரவாளர்களால் நேற்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டித்து நீர், மின்சாரம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட சுமார் 2000 தொழிற்சங்கங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் நாட்டுக்கு பலகோடி ரூபா நஷ்ட்டம் ஏற்படுகிறது.
இப்போது இறுதி ஒப்சன் #கழன்று (தப்பி) செல்லுதல்!
#மஹிந்த, #பசில், #சமல் உள்ளிட்ட ராஜ்பக்‌ஷவின் குடும்பம் பலத்த பாதுகாப்புடன் திருகோண்மலை கடற்கரை முகாமில் தஞ்சமடைந்துள்ளது.
அங்கிருந்து #மாலைதீவா? இந்தியாவா அல்லது டுபாயில் தஞ்சம் பெறுவார்களா என்பதை எல்லாம் அடுத்து வரும் சில மணிநேரங்களில் நாம் கண்டறிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் வரும்போதும் #பகை மூட்டி வெளியேறும் போதும் #தீ மூட்டி செல்லும் இந்த #கொடூரெ வெறித்தனம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் நிம்மதியை தரப்போவதில்லை என்பதே உண்மை.
காத்திருங்கள்…..
10.05.2022

அதெல்லாம் சரிதான,

இதனால் எங்களுக்கு என்ன நன்மை ?

🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நேற்று இரவு...   எரிக்கப்பட்ட பேருந்துகள்; நொறுக்கப்பட்ட கார்களின்... காணொளி   காட்சிகள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.