Jump to content

மஹிந்த ஆதரவாளர்கள் மீதும்... அவர்களை ஏற்றிவந்த பேருந்துகள் மீதும், சரமாரி தாக்குதல் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மஹிந்தவின் மெதமுலன இல்லமும் தீக்கிரை
 
இது வரைக்கும்... எரியூட்டப்பட்ட,  வீடுகள்.
 
1-சனத் நிஷாந்தவின் வீடுகள்
2- திஸ்ஸ குட்டி ஆராச்சி வீடு
3- குருணாகல மேயர் இல்லம்
4- ஜான்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்
5- மொரட்டுவாவின் மேயர் இல்லம்
6 - என் அனுஷா பாஸ்குவல் வீடு
7- பிரசன்னா ரணதுங்காவின் வீடு
8- ரமேஷ் பதிரானா வீடு
9- புனித பண்டாராவின் வீடு
10-ராஜபக்ஷவின் பெற்றோரின் கல்லறை 
நீர்கொழும்பில்
11-அவென்ரா கார்டன் ஹோட்டல்
12- அருந்திகாவின் வீடு
13 கனக ஹேரத்தின் வீடு
14- காமினி லோகுவின் வீடு
15-ரமேஷ் பதிரானாவின் வீடு காலேவில்
16- ,17 - மொரட்டுவா மேயர் சமன் லாலின் வீடு
லான்சாவின் (2 வீடுகள்)
18- பந்துல குணவர்த்தனவின் வீடு
19 - அலி சப்ரி ரஹீமின் வீடு
 
Edited by தமிழ் சிறி
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 132
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அடித்துக் கொலை என்றால்... 
விசாரணை, நீதிமன்றம் என்று, இழுபட வேண்டும் என்பதால்...
தற்கொலை என்று, சுருக்கமாக அலுவலை முடித்து இருக்கிறார்கள்.

உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோன்சன் பெர்னாடோவின் மயிரை தொட விடமாட்டேன் எண்டார், குருநாகல் மேயர். 

இப்ப, ஜோன்சன் வீடு, மகிந்தா வீடு எல்லாம் எரியுது.

மேதுமில்லன்னா ராஜபக்சக்களின் பரம்பரை வீடு தீக்கிரையாகி தரைமட்டமானது.

அவரது மகன்களில் ஒருவரின் லம்போகினி காரும் தப்பவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, body of water and text

Mahinda~ சொல்லிடாதீங்க🙏

That சாராய Gang~ எதடா சொல்ல வேணாங்கிற?🤔

Mahinda~ அடிச்சு கூட கேப்பாங்க
ஒண்டயும் சொல்லிடாதீங்க 
🙏  🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Elugnajiru said:

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

விதம் விதமாக கதைகள் வருகிறது, ஏது உண்மை என்று தெரியவில்லை. கோத்தா மஹிந்தவை போடும் அளவுக்கு வருமா? அவர்களின் ஆதரவு தளத்தை முற்றிலும் இழந்து விடுவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Elugnajiru said:

 

3 hours ago, நீர்வேலியான் said:

கோத்தா என்ன செய்கிறார்? எப்பிடியும் சும்மா இருக்க மாட்டார் 

அனேகமாக கொத்தா மகிந்தவைப் போட்டுத்தள்ளக்கூடும்

 

கோத்தாவுக்கு எதிராக திரண்ட மக்களை மகிந்த பக்கம் திருப்பி இதுவரை பாதுகாப்பாக இருக்கிறார்.

இதுவே அவருக்கு பெரிய வெற்றியே.

கோத்தாவின் தேவை கருதி பிக்குகள் தான் திசை திருப்பிவிட்டுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people, people standing and outdoors

மகிந்த... அனுப்பிய ஆள் ஒருத்தன்,
"ஜட்டி"  போடாமல் வந்து... அசிங்கப் பட்டுப் போனான். 😂  🤣

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

இது என்ன புதிதா அவர்களுக்கு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கிருபன் said:

அசிங்கம் பிடிச்ச சிங்களவர்.
உடுப்பைக் கழட்டி அவமானப்படுத்தும் காட்டான்கள்🤬

No...no..no... it is photo shoot:::

Rajapaksa-Thug-was-attacked-by-people-Gota-Go-Home-.jpeg?fit=498%2C356&ssl=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, விசுகு said:

இது என்ன புதிதா அவர்களுக்கு???

ராஜபக்‌ஷக்களின் ஆதரவாளர், எதிர்ப்பாளர்  இரண்டு பக்கமும் காடைத்தனத்தைக் காட்டும் சிங்களவர்கள்தான் இருக்கின்றார்கள்.
இதே காட்டான்கள்தான் முள்ளிவாய்க்காலில் தமிழரையும் குடும்பங்களின் முன்னிலையிலேயே நிர்வாணப்படுத்தினார்கள். அடிப்பது, உதைப்பதை விட நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்துவது அவர்களின் விகாரமான மனப்பான்மையைத்தான் காட்டுகின்றது.

இதில் தமிழர்கள் இரசிக்க எதுவுமில்லை. நாளை இந்த இரண்டு பக்கமும் சேர்ந்து தமிழரையும், முஸ்லிம்களையும் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தவும் கூடும். ஏற்கனவே செய்தவர்கள்தானே!

  • Like 11
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மகிந்த கோத்தா கூட்டுக் கும்பலால் தமிழ் பேசும் மக்கள் மீது திருப்பாதிருக்க.. பன்னாட்டு சமூகம் அக்கறையோடு துரிதமாகச் செயற்படுவதோடு.. இலங்கையில் அரசியல் மற்றும் பொருண்மிய நெருக்கடிக்கு உரிய வகையில் எல்லா மக்களும் விரும்பக் கூடிய தீர்வை பன்னாட்டு சமூகம் முன்வைப்பதோடு அமுலாக்க வேண்டும். 

ஒரு காலத்தில் பிலிப்பைன்ஸ் மக்களால் நேசிக்கப்பட்ட மார்க்கோஸை மக்கள் தூக்கி எறிந்துவிட்டு அக்கினோவை பதவிக்கு கொண்டு வந்த வரலாறுகள் தான் ஞாபகத்தின் பக்கங்களில் வந்து போகிறது. 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ராசாக்கள்

கொண்டு  வந்து  கொட்டுங்கள் நல்ல  செய்தியை....

ஆட்டுக்கிடாய்  அடிக்கலாமா  மாடே  போதுமா  என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்😂

தம்பி விசுகு.   அப்போ தமிழ்ஈழம். வேண்டாமா  ?ஆடும்  ...மாடும்....போதுமா  ....?  😂🙏👍😂🙏👍😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீடுகளை எரிப்போருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரணில் வீட்டையோ அவருக்க ஆதரவாக இருக்கும் தமிழ் எம்பிக்களின் வீட்டையோ எரித்து விடாதீர்கள்.தில் இருந்தால் அவர்களின் வீட்டுப்பக்கம் முடிந்தால் போய் பாருங்கோ பார்ப்போம்.வீடுகளை எரிப்போருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து ரணில் வீட்டையோ அவருக்க ஆதரவாக இருக்கும் தமிழ் எம்பிக்களின் வீட்டையோ எரித்து விடாதீர்கள்.தில் இருந்தால் அவர்களின் வீட்டுப்பக்கம் முடிந்தால் போய் பாருங்கோ பார்ப்போம்.

வலிகள் வேறு வேறானாலும்
சிலவற்றையாவது அவர்கள் உணர காலம் அவர்களை கட்டாயப்படுத்துகிறது
இதுவரை எரிக்கப்பட்ட மகிந்த, அவரது அரச அமைச்சர் கள் மற்றும் ஆதரவாளர்களின் வீட்டு விபரங்கள்
1-சனத் நிஷாந்தவின் வீடு
2-திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு
3-குருநாகல் மேயர் மாளிகை
4-ஜான்ஸ்டன் வீடு மற்றும் அலுவலகம்
5-மொரட்டுவை மேயர் மாளிகை
6-எம்பி அனுஷா பாஸ்குவலின் வீடு
7-பிரசன்ன ரணதுங்கவின் வீடு
8-ரமேஷ் பத்திரனவின் வீடு
9-சாந்த பண்டாரவின் வீடு
10-ராஜபக்சே பெற்றோரின் கல்லறை
11- நீர்கொழும்பில் உள்ள அவென்ரா கார்டன் ஹோட்டல்
12-அருந்திகாவின் வீடு
13-கனக ஹேரத்தின் வீடு
14-காமினி லொகுகேவின் வீடு
15-காலியில் உள்ள ரமேஷ் பத்திரனவின் வீடு
16-மொரட்டுவை மேயர் சமன் லால் இல்லம்
லான்சாவின் 17-2 வீடுகள்
18-வென்னப்புவ நைனாமடம ட்ரெவின் பெர்னாண்டோ வீடு
19-யானை சபர் வீடு
20-பந்துல குணவர்தன வீடு
21. வீரகெட்டிய மெதமுலன வீடு
22.கேகல்ல மஹிபால ஹேரத் ஹவுஸ் 10pm 9/05/2022
23-கொட்டிகாவத்தை ரேணுகா பெரேரா இல்லம் இரவு 10.30
24-கம்பஹா நாலக கொடஹேவா இல்லம் இரவு 10.40
25- விமல் வீரவன்சவின் வீடு இரவு 10.45
26-அசோசியேட் சூப்பர் சென்டர் காலி இரவு 10.50
27- சிறிபாலகம்லத் வீடு இரவு 11 மணி
28- கெஹலிய ரபுக்வெல்ல வீடு இரவு 11.10
29-ரோஹித அபேகுணவர்தன இல்லம் இரவு 11.15
30-நீர்கொழும்பு குரான கிராண்டீசா ஹோட்டல் இரவு 11.40
31-காஞ்சனா விஜேசேகர இல்லம் இரவு 11.45
32-துமிந்த திசாநாயக்க வீடு இரவு 11.45
33-அலிசப்ரி ரஹீம் வீடு (புத்தளம்)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

மனுசியை தமிழ்கடக்கு அனுப்பிட்டன்...மட்டனும்வேணும்..சிக்கனும் வேணும்...மாடும் வேணும்...பத்துப் பேரைக்கூப்பிட்டு பார்ட்டி போடப்போறன்...கையும் ஓடேல்லை காலும் ஓடாதாம் சந்தோசத்திலை..இந்தக் காட்ட்சிகளை 77 ..83 ல் நேரில் கண்ட நினைவு..தெய்வம்  நின்றறுக்கும்..

இவ்வளவையும் வாங்கிப்போட்டு விட்டு சந்தோஷத்தில நீங்கள் சாப்பிட மறந்திடாதீங்கோ!

7 hours ago, தமிழ் சிறி said:

பெனியன், போடத்  தெரிஞ்சவனுக்கு... ஜட்டி போடத்  தெரியலையே..

அவ்வளவு அவசரம்.

7 hours ago, தமிழ் சிறி said:

 வயிறு நோக  சிரிக்க... மேலே உள்ள காணொளியை பாருங்கள். 👆

எங்கள் சொத்துக்கள், உடல்கள்,  நூலகம் எரியூட்டி விடுதிகளில் இருந்து ரசித்தார்கள், நம்மால் முடியவில்லை! அத்தனையும் ஏழைகளின் வயிறு எரிய சேர்த்து கட்டினவையை இப்போ தீ கொண்டு போகுது. 

10 hours ago, தமிழ் சிறி said:

நாடு முழுக்க...  
அவசரகால சட்டமும்,  ஊரடங்கு சட்டமும் இருக்கின்ற நிலையில்... 
ஒரு எம்.பி. அடித்துக்  கொல்லப் படுகிறார், 
பத்து அமைச்சர்களின் வீடு... கொளுத்தப் பட்டுள்ளது,

இன்று காலை... பிரதம மந்திரியாக இருந்த மகிந்தவின், 
தங்காலை  வீடு  எரிகின்றது... என்றால் 

அதி உத்தமரான... ஜனாதிபதி  கோத்தபாய என்ன செய்கிறார்?
இராணுவம், போலிஸ், கடற்   படை, அதிரடிப் படை எல்லாம் எங்கே?

ஏதோ... நம்மால், முடிந்தது. 😎

இவர்கள் வெளியில் வந்தால் அவ்வளவேதான்! அவர்கள் கொடுத்த பயிற்சி அவர்களையே பதம் பாக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமார வெல்கம மீது தாக்குதல் – அவர் பயணித்த வாகனம் எரியூட்டப்பட்டது!

குமார வெல்கம மீது தாக்குதல் – அவர் பயணித்த வாகனம் எரியூட்டப்பட்டது!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொட்டாவ பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அவர் பயணித்த வாகனம் சேதமாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

https://athavannews.com/2022/1280978

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

தாக்குதலில்.... இமதுவ பிரதேச சபையின் தலைவர், உயிரிழப்பு

இமதுவ பிரதேச சபையின் தலைவர் ஏ.வி.சரத் குமார உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு காலத்திலும் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவு – கொழும்பின் தற்போதைய நிலை!

ஊரடங்கு காலத்திலும்.... பல வன்முறைச் சம்பவங்கள் பதிவு – கொழும்பின் தற்போதைய நிலை!

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளபோதிலும் நாட்டின் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக அலரி மாளிகை அருகே நேற்று இரவு மீண்டும் பொதுமக்கள் அப்பகுதியில் ஒன்று கூடி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அலரிமாளிகைக்குள் நுழைய தொடர்ச்சியாக முற்பட்டதால் அங்கு பதற்ற நிலை தொடர்ந்த நிலையில், பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தையும் முன்னெடுத்திருந்தனர்.

அதன் பின்னர் அலரி மாளிகையிலிருந்து வானை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடாத்தப்பட்டது.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஆளுங்கட்சி உறுப்பினர்கான சனத் நிஷாந்தவின் வீடு, குருநாகல் மேயரின் இல்லம், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வீடு மற்றும் அலுவலகம், பந்துல குணவர்தன , காமினி லொக்குகே , டி.பி . சன்ன ஜெயசுமண, மஹிபால ஹேரத் , ரமேஷ் பத்திரண , திஸ்ஸ குட்டியாராச்சி , சாந்த பண்டார , அலி சப்ரி ரஹீம் உட்பட்ட பலரின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுலனவின் இல்லத்திற்கும் தீவைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் கொழும்பின் பல பகுதிகளிலும் காட்சியளிப்பதை அவதானிக்க முடிகின்றது.

3-1-600x450.jpg

2-1-600x450.jpg

1-1-600x450.jpg

https://athavannews.com/2022/1280982

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

இது மகிந்த கோத்தா கூட்டுக் கும்பலால் தமிழ் பேசும் மக்கள் மீது திருப்பாதிருக்க.. பன்னாட்டு சமூகம் அக்கறையோடு துரிதமாகச் செயற்படுவதோடு.. இலங்கையில் அரசியல் மற்றும் பொருண்மிய நெருக்கடிக்கு உரிய வகையில் எல்லா மக்களும் விரும்பக் கூடிய தீர்வை பன்னாட்டு சமூகம் முன்வைப்பதோடு அமுலாக்க வேண்டும். 

அமெரிக்கா, கனடா பிரித்தானியா அவுஸ்ரேலியா போன்ற ஜனநாயக நாடுகளே இதில் அக்கறையோடு செயல்படும்.
மனித விரோத ரஷ்யா சீனா போன்றவை தமிழர்களை இலங்கை மக்களை ஒடுக்கும் செயற்பாட்டுக்கு ஆதரவாகவே செயல்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/cVPJtQlkTF/

சிங்கள காடையர்களினால் அப்பவியான நீர்கொழும்பு போதகரின் வீடு எரிக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

அமெரிக்கா, கனடா பிரித்தானியா அவுஸ்ரேலியா போன்ற ஜனநாயக நாடுகளே இதில் அக்கறையோடு செயல்படும்.

நீங்கள் குறிப்பிட்ட சனநாயக நாடுகள் கடந்த பதினைந்து வருடங்களாக கோமாவிலா இருக்கின்றார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இறுதியாக இருந்த ஒப்சன்-3
1-இடைக்கால கூட்டரசு
2-ராணுவ பின்புல ஆட்சி
3-கலகம் அல்லது கழன்று செல்லுதல்(தப்பிச் செல்லுதல்)
வழமையாகவே மஹிந்தவின் வலது,இடது பக்கமாக இருந்து இடக்குமுடக்கான ஐடியாஸ் கொடுத்து அதில் வாசிகளை அள்ளிக்கொள்ளும் விமல், உதய, மைத்திரியின் #இடைக்கால கூட்டரசு #தந்திரம் இம்முறை பலிக்கவில்லை.
அடுத்தபடியாக இருந்த ஒப்சன்-2
அதில்-1 ராணுவ பின்புல உதவியுடனான ஆட்சி!
ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு பின்னால் இருந்து இயக்குவது! ராணுவம் அதற்கு கைவிரித்து விட்டது!
முப்படையும் முடிந்தளவு இப்போது மக்களோடு நிற்கிறது.
எனவே இறுதியாக இருந்த ஒப்சன் “செய் அல்லது செத்து மடி” என்பது போல் #கலகம் அல்லது கழன்று செல்லுதல். .
அதற்காக நாலாபுறம் ஆட்கள் அழைக்கப்பட்டார்கள், விசேடமாக #சீன பாணியில் சிறைக்கதிகளும் கொண்டுவரப்பட்டார்கள்.
அலரிமாளிகையில் ஆலோசனை நடந்தது.
கலகமா? கழர்வதா?
அரை மணிநேரம் தாருங்கள் கோள்பேஸை நான் கிளீன் செய்து தருகிறேன் என்று உசுப்பேற்றினார் ஜோன்ஸ்டன்.
ஜோன்ஸ்டனின் எண்ணப்படி கலகம்தான் என முடிவானது.
காரியம் தொடர்ந்தது, அலரிமாளிகை முன்னால் இருந்த #மைனாகோகம அடியாட்களிடம் வீழ்ந்தது, ஜோன்ஸ்டனின் முதல் முயற்சி வெற்றி.
இரண்டாவது இலக்கு கோள்பேஸ்.
அடியாட்களை நகர்த்த ஆயத்தம் செய்யப்பட்டது (இந்த தகவல் நமக்கு கிட்டிய மறுகணமே செய்தியை பகிர்ந்தோம் “ கோள்பேஸிலும் முறுகல் நிலை ஏற்படும் அபாயம்” என்று)
இதேவேளை இவர்களின் இந்த நாசகார திட்டம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் காதில் கசிந்தது. உடனடியாக அவரும் அறிக்கை விட்டார்.
கோள்பேஸில் இடம்பெறும் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு குந்தகம் விளைவித்தால் இனிமேல் கட்சிதலைவர்கள் கூட்டத்திற்கு நானும் வருகை தரமாட்டேன் என அறிவிப்பு செய்தார்.
இந்த தகவல்கள் தீயாய் பறந்தது, பல்கலைக்கழக மாணவர் அணி, தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், பிரதேச வாசிகள் என கணப்பொழுதில் கூட்டம் சுற்றி வளைத்தது.
இந்த இடைவெளிக்குள் கோள்பேஸ் சென்ற அடியாட்கள் கூட்டம் அங்கிருந்த சொற்பமானோரை தாறுமாறாக தாக்கி துவம்சம் செய்தது, தீயிட்டு கொழுத்தியது.
சம்பவம் அறிந்து திரண்டு வந்த மக்கள், அடியாட்களை கங்காராமை வாவிக்கரை வரை விரட்டி சென்று அசுத்த நீரில் ஊற விட்டு அமுக்கி எடுத்தனர்.
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர் மஹிந்த ஆதரவாளர்கள்.
அத்தோடு நின்று விடவில்லை, நாட்டின் நாலாபுறமும் அடியாட்களை தேடி மக்கள் வீதிகளில் பஸ் மறித்து வலைவிரித்தனர், தீ வைத்தனர், தவிடுபொடியாக்கினர்.
சம்பவம் பெருக்கெடுத்தது….
மூச்சு திணறடித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் சாமர்த்தியத்தை சற்றும் எதிர்பார்த்திராத ஜோன்ஸ்டன் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கதிகலங்கி போயினர்.
ஜனாதிபதியும் கடுப்பானார்..
ஏற்கனவே டைப் செய்து வைக்கப்பட்டிருந்த #ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பப்பட்டது.
அப்போதாவது மக்களின் கொந்தளிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது…
ஆனால் மக்கள் விட்ட பாடில்லை, அடிதடி தொடர்ந்தது…
மக்களை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை.
அடுத்தது ?
கொழும்பில் ஊரடங்கு!
ம்ஹும்..
பின்னர் மேல்மாகாணம்!
ம்ஹும்..
பின்னர் நாடு முழுவதும்!
ம்ஹும்..
பின்னர் 2 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு எனும் அறிவிப்பு பறந்தது.
மக்களின் பட்டினிக்கும், பொருள் பற்றாக்குறைக்கும், விலை அதிகரிப்பிற்கும் முன்னால் அதிபரின் அவசரகால நிலையும், ஊரடங்கு அறிவிப்பும், தூசுக்கும் கணக்கெடுக்கப்படவில்லை.
போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது.
அலரிமாளிகையின் உள்ளே ஒழிந்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் அடியாட்களையும் எம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென வெறிகொண்டெழுந்த மக்கள் விழித்திருந்து விடாது போராடினார்கள்.
சம்பவம் உச்சமடைந்தது, கட்டுப்படுத்த பொலிசார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டு செய்தனர்.
இறுதியில் பொலிஸ் தரப்பில் ஒருவரும், போராட்ட தரப்பில் ஒருவருமாக இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளியேற்றிய விரக்தியின் வெறித்தனத்தில் வீரகெட்டியவிலும் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். (அதில் ஒருவர் முஸ்லிம் இளைஞர்)
நீர்கொழும்பிலும் 27 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
பொலன்னறுவை எம்பி ஒருவரும் தன்னைத்தானே சுட்டு மாய்த்துக்கொண்டார்.
இதுவரை மொத்தமாக 7 பேர் பலியான நிலையில் பொதுஜனபெரமுன ஆதரவாளர்களின் சிறிய, பெரிய சுமார் 64 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
32 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
250 ற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை மஹிந்த ஆதரவாளர்களால் நேற்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டித்து நீர், மின்சாரம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட சுமார் 2000 தொழிற்சங்கங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் நாட்டுக்கு பலகோடி ரூபா நஷ்ட்டம் ஏற்படுகிறது.
இப்போது இறுதி ஒப்சன் #கழன்று (தப்பி) செல்லுதல்!
#மஹிந்த, #பசில், #சமல் உள்ளிட்ட ராஜ்பக்‌ஷவின் குடும்பம் பலத்த பாதுகாப்புடன் திருகோண்மலை கடற்கரை முகாமில் தஞ்சமடைந்துள்ளது.
அங்கிருந்து #மாலைதீவா? இந்தியாவா அல்லது டுபாயில் தஞ்சம் பெறுவார்களா என்பதை எல்லாம் அடுத்து வரும் சில மணிநேரங்களில் நாம் கண்டறிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் வரும்போதும் #பகை மூட்டி வெளியேறும் போதும் #தீ மூட்டி செல்லும் இந்த #கொடூரெ வெறித்தனம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் நிம்மதியை தரப்போவதில்லை என்பதே உண்மை.
காத்திருங்கள்…..
10.05.2022
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:
எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்த நிலையில் இறுதியாக இருந்த ஒப்சன்-3
1-இடைக்கால கூட்டரசு
2-ராணுவ பின்புல ஆட்சி
3-கலகம் அல்லது கழன்று செல்லுதல்(தப்பிச் செல்லுதல்)
வழமையாகவே மஹிந்தவின் வலது,இடது பக்கமாக இருந்து இடக்குமுடக்கான ஐடியாஸ் கொடுத்து அதில் வாசிகளை அள்ளிக்கொள்ளும் விமல், உதய, மைத்திரியின் #இடைக்கால கூட்டரசு #தந்திரம் இம்முறை பலிக்கவில்லை.
அடுத்தபடியாக இருந்த ஒப்சன்-2
அதில்-1 ராணுவ பின்புல உதவியுடனான ஆட்சி!
ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு பின்னால் இருந்து இயக்குவது! ராணுவம் அதற்கு கைவிரித்து விட்டது!
முப்படையும் முடிந்தளவு இப்போது மக்களோடு நிற்கிறது.
எனவே இறுதியாக இருந்த ஒப்சன் “செய் அல்லது செத்து மடி” என்பது போல் #கலகம் அல்லது கழன்று செல்லுதல். .
அதற்காக நாலாபுறம் ஆட்கள் அழைக்கப்பட்டார்கள், விசேடமாக #சீன பாணியில் சிறைக்கதிகளும் கொண்டுவரப்பட்டார்கள்.
அலரிமாளிகையில் ஆலோசனை நடந்தது.
கலகமா? கழர்வதா?
அரை மணிநேரம் தாருங்கள் கோள்பேஸை நான் கிளீன் செய்து தருகிறேன் என்று உசுப்பேற்றினார் ஜோன்ஸ்டன்.
ஜோன்ஸ்டனின் எண்ணப்படி கலகம்தான் என முடிவானது.
காரியம் தொடர்ந்தது, அலரிமாளிகை முன்னால் இருந்த #மைனாகோகம அடியாட்களிடம் வீழ்ந்தது, ஜோன்ஸ்டனின் முதல் முயற்சி வெற்றி.
இரண்டாவது இலக்கு கோள்பேஸ்.
அடியாட்களை நகர்த்த ஆயத்தம் செய்யப்பட்டது (இந்த தகவல் நமக்கு கிட்டிய மறுகணமே செய்தியை பகிர்ந்தோம் “ கோள்பேஸிலும் முறுகல் நிலை ஏற்படும் அபாயம்” என்று)
இதேவேளை இவர்களின் இந்த நாசகார திட்டம் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் காதில் கசிந்தது. உடனடியாக அவரும் அறிக்கை விட்டார்.
கோள்பேஸில் இடம்பெறும் அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு அரசு குந்தகம் விளைவித்தால் இனிமேல் கட்சிதலைவர்கள் கூட்டத்திற்கு நானும் வருகை தரமாட்டேன் என அறிவிப்பு செய்தார்.
இந்த தகவல்கள் தீயாய் பறந்தது, பல்கலைக்கழக மாணவர் அணி, தொழிலாளர்கள், அரச ஊழியர்கள், பிரதேச வாசிகள் என கணப்பொழுதில் கூட்டம் சுற்றி வளைத்தது.
இந்த இடைவெளிக்குள் கோள்பேஸ் சென்ற அடியாட்கள் கூட்டம் அங்கிருந்த சொற்பமானோரை தாறுமாறாக தாக்கி துவம்சம் செய்தது, தீயிட்டு கொழுத்தியது.
சம்பவம் அறிந்து திரண்டு வந்த மக்கள், அடியாட்களை கங்காராமை வாவிக்கரை வரை விரட்டி சென்று அசுத்த நீரில் ஊற விட்டு அமுக்கி எடுத்தனர்.
காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர் மஹிந்த ஆதரவாளர்கள்.
அத்தோடு நின்று விடவில்லை, நாட்டின் நாலாபுறமும் அடியாட்களை தேடி மக்கள் வீதிகளில் பஸ் மறித்து வலைவிரித்தனர், தீ வைத்தனர், தவிடுபொடியாக்கினர்.
சம்பவம் பெருக்கெடுத்தது….
மூச்சு திணறடித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் சாமர்த்தியத்தை சற்றும் எதிர்பார்த்திராத ஜோன்ஸ்டன் மற்றும் மஹிந்த ராஜபக்‌ஷ கதிகலங்கி போயினர்.
ஜனாதிபதியும் கடுப்பானார்..
ஏற்கனவே டைப் செய்து வைக்கப்பட்டிருந்த #ராஜினாமா கடிதம் ஜனாதிபதிக்கு அவசரமாக அனுப்பப்பட்டது.
அப்போதாவது மக்களின் கொந்தளிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது…
ஆனால் மக்கள் விட்ட பாடில்லை, அடிதடி தொடர்ந்தது…
மக்களை இப்போது கட்டுப்படுத்த முடியவில்லை.
அடுத்தது ?
கொழும்பில் ஊரடங்கு!
ம்ஹும்..
பின்னர் மேல்மாகாணம்!
ம்ஹும்..
பின்னர் நாடு முழுவதும்!
ம்ஹும்..
பின்னர் 2 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு எனும் அறிவிப்பு பறந்தது.
மக்களின் பட்டினிக்கும், பொருள் பற்றாக்குறைக்கும், விலை அதிகரிப்பிற்கும் முன்னால் அதிபரின் அவசரகால நிலையும், ஊரடங்கு அறிவிப்பும், தூசுக்கும் கணக்கெடுக்கப்படவில்லை.
போராட்டம் விடிய விடிய தொடர்ந்தது.
அலரிமாளிகையின் உள்ளே ஒழிந்திருக்கும் அமைச்சர்கள் மற்றும் அடியாட்களையும் எம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென வெறிகொண்டெழுந்த மக்கள் விழித்திருந்து விடாது போராடினார்கள்.
சம்பவம் உச்சமடைந்தது, கட்டுப்படுத்த பொலிசார் வானை நோக்கி துப்பாக்கி வேட்டு செய்தனர்.
இறுதியில் பொலிஸ் தரப்பில் ஒருவரும், போராட்ட தரப்பில் ஒருவருமாக இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வெளியேற்றிய விரக்தியின் வெறித்தனத்தில் வீரகெட்டியவிலும் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். (அதில் ஒருவர் முஸ்லிம் இளைஞர்)
நீர்கொழும்பிலும் 27 வயது இளைஞர் ஒருவர் பலியானார்.
பொலன்னறுவை எம்பி ஒருவரும் தன்னைத்தானே சுட்டு மாய்த்துக்கொண்டார்.
இதுவரை மொத்தமாக 7 பேர் பலியான நிலையில் பொதுஜனபெரமுன ஆதரவாளர்களின் சிறிய, பெரிய சுமார் 64 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
32 ற்கும் மேற்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.
250 ற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை மஹிந்த ஆதரவாளர்களால் நேற்று(09) ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த வன்முறையை கண்டித்து நீர், மின்சாரம் மற்றும் துறைமுகம் உள்ளிட்ட சுமார் 2000 தொழிற்சங்கங்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் நாட்டுக்கு பலகோடி ரூபா நஷ்ட்டம் ஏற்படுகிறது.
இப்போது இறுதி ஒப்சன் #கழன்று (தப்பி) செல்லுதல்!
#மஹிந்த, #பசில், #சமல் உள்ளிட்ட ராஜ்பக்‌ஷவின் குடும்பம் பலத்த பாதுகாப்புடன் திருகோண்மலை கடற்கரை முகாமில் தஞ்சமடைந்துள்ளது.
அங்கிருந்து #மாலைதீவா? இந்தியாவா அல்லது டுபாயில் தஞ்சம் பெறுவார்களா என்பதை எல்லாம் அடுத்து வரும் சில மணிநேரங்களில் நாம் கண்டறிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் வரும்போதும் #பகை மூட்டி வெளியேறும் போதும் #தீ மூட்டி செல்லும் இந்த #கொடூரெ வெறித்தனம் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் நிம்மதியை தரப்போவதில்லை என்பதே உண்மை.
காத்திருங்கள்…..
10.05.2022

அதெல்லாம் சரிதான,

இதனால் எங்களுக்கு என்ன நன்மை ?

🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

நேற்று இரவு...   எரிக்கப்பட்ட பேருந்துகள்; நொறுக்கப்பட்ட கார்களின்... காணொளி   காட்சிகள்

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.