என் மனதுக்கு இனிய அருமையான பாடல்களை பாடிய இசைக் குயில் வாணி ஜெயராம் அம்மா அவர்களுக்கு என் அஞ்சலி.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம், நித்தம் நித்தம் நெல்லிச் சோறு, யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது போன்ற பாடல்கள் இன்றும் நான் அடிக்கடி கேட்டு ரசிப்பவை..
தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும், வீசும் காற்றே தூது செல்லு, நல்லூர் வீதியில் நடந்தது ஒரு யாகம் போன்ற மறக்க முடியாத தாயக விடுதலைப் பாடல்களை விடுதலைப் புலிகளுக்காக, இந்திய ஏவல் படைகள் தாயகத்தை ஆக்கிரமித்து படுகொலைகளை அரங்கேற்றிக் கொண்டிருந்த காலத்தில் வாணி ஜெயராம் அவர்கள் பாடி இருந்தார்.
உங்கள் குரல் எம் நினைவுகளில் என்றும் இசைத்துக் கொண்டு தான் இருக்கும்
Recommended Posts