Jump to content

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

(நா.தனுஜா)

பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் ஸ்வாமி தெரிவித்துள்ளார்.

'மைனா கோ கம' மற்றும் 'கோட்டா கோ கம' ஆகிய இடங்களில் கடந்த திங்கட்கிழமை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத்தாக்குதல்களை அடுத்து நாடளாவிய ரீதியில் அமைதியின்மை நிலையொன்று தோற்றம் பெற்றுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவொன்றைச் செய்திருந்த சுப்ரமணியன் ஸ்வாமி, 'அரசியலமைப்பு முறைமையை நிலைநாட்டுவதற்கு இந்திய இராணுவம் அனுப்பிவைக்கப்படவேண்டும்' என்று வலியுறுத்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் அவர் செய்திருக்கும் மற்றொரு பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'பிரதமரின் இல்லங்களைக்கூட தீயிட்டுக்கொளுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது தாக்குதல் நடத்துவதெனில், அந்த கலகக்காரர்கள் இரக்கம் காண்பிக்கப்படுவதற்கு எவ்வகையிலும் தகுதியற்றவர்களாவர். எமது அயல்நாடு மற்றுமொரு லிபியாவாக மாறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது' என்று அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 

 

https://www.virakesari.lk/article/127323

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுக்கிலாம்..... பிரகளாம்....

நல்ல மப்பால எழும்பி..... அலம்பறை பண்ணுறார்....

அடிவாங்கிய பா.உ கள், அடிக்க ஆட்களை கொண்டு வந்தவர்கள்... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

இது வாங்கின காசுக்கு மேல கூவுது .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இது வாங்கின காசுக்கு மேல கூவுது .

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க வேணும் எண்டு கோரிய, அசட்டு  கிருமி.... இந்தாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

சூப்ரமணியன் சிலோன் பிரச்சனை கதைக்கலாம் ஆனால் ஈழத்தமிழன் அதுவும் புலம்பெயர் தமிழன் தமிழ்நாட்டு அரசியலை பற்றி கதைக்கப்படாது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க வேணும் எண்டு கோரிய, அசட்டு  கிருமி.... இந்தாள்.

நல்லதுதான் சொல்லியிருக்கார் அந்த செய்தியையும் சமூக வலைதளம்களில் உலாவ விடுவம் .

புதிய அவதார்  கோத்தா ராஜபாக்ஸ ஆதரவாளர் முகம் செம்மையாய் வாங்கி கட்டுது  அந்த அவதார்கள் .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

மகிந்தவுக்கு பாரத ரத்னா விருது கொடுங்க வேணும் எண்டு கோரிய, அசட்டு  கிருமி.... இந்தாள்.

இது கொடுத்த காசுக்கு மேலாக கூவேலை, இது தனக்கு வரவேண்டிய காசின்ற மிச்சம் வரவில்லை என்று அழுகிறது. மகிந்த திரும்ப வந்தால்தான் காசு அல்லது பெப்பே தான்… பாவம்

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ragaa said:

இது கொடுத்த காசுக்கு மேலாக கூவேலை, இது தனக்கு வரவேண்டிய காசின்ற மிச்சம் வரவில்லை என்று அழுகிறது. மகிந்த திரும்ப வந்தால்தான் காசு அல்லது பெப்பே தான்… பாவம்

அட இப்படியும் எடுத்துக்கொள்ளலாம் .

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியம் சுவாமி மகிந்த சகோதரர்களின் குடும்ப நண்பர். அவர்களுடன் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் செய்யக்கூடும். அனுதாபம், ஆவேசம் வராதா பின்ன.. மகிந்த சகோதரர்களின் ஆட்சி ஆட்டம் கண்டால் அதன் பின் சாமியை இலங்கையில் வேறு யார் அழைத்து, மரியாதை செய்து, கெளரவிக்க போகின்றார்கள்?

தனது முன்னைய டிவிட்டர் பதிவுகளில் பிரேமதாசாவே இலங்கையில் இந்திய இராணுவத்தின் தோல்விக்கு காரணம் என்றும் கூறி உள்ளார். சாமி சஜித் அதிகாரத்தை பிடிப்பதை விரும்பமாட்டார் என்றே தோன்றுகின்றது. 

சாமியை டுவிட்டரில் பத்து மில்லியன் கணக்குகள் பின் தொடர்கின்றன. டுவிட்டருக்கு வந்த சோதனை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.  

07sld1.jpg

வெளியல நின்று சவுண்ட் கொடுக்காமல் நண்பனுக்காக களத்தில் இறங்குவதே சிறப்பு.👌

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

உடுத்தியுள்ள வேட்டியானது உடலில் இருந்து அவிழ்ந்து கீழே நழுவியபோது உடனே கை விரைந்து சென்று அதை சரிசெய்துவிடுகிறது. அதுபோல, ஒருவனுக்கு துன்பம் நேரிட்டபோது, உடனே சென்று அந்தத் துன்பத்தை நீக்கி விடுவதற்கு, உதவுவது சிறந்த நட்பாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

பிரதமரின் இல்லத்தைத் தீயிட்டுக்கொளுத்துபவர்கள் இரக்கம் காண்பிப்பதற்குத் தகுதியற்றவர்கள் - சுப்ரமணியன் ஸ்வாமி

இதனை... சு.சாமி, "கோத்தாகோகம" வில் நின்று சொல்ல துணிவு இருக்கின்றதா?
வாய்... இருந்தால், என்னத்தையும் கதைக்கிறாததா?
அவனனவன்  வேதனை, அவனுக்குத்தான் தெரியும்.
இதற்குள்.... கதைக்க, உமக்கு என்ன, அருகதை இருக்கு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதம்ர் என்றவுடன் மோடி நினைவுக்கு வந்துவிட்டது சுவாமிக்கு..😆

முன்னம் இட்ட தீ இந்தியாவுக்கும் பரவும் என்கின்ற பயம் போல...😆

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இதனை... சு.சாமி, "கோத்தாகோகம" வில் நின்று சொல்ல துணிவு இருக்கின்றதா?

அறளை பேந்த சூப்ரமணியம் அங்கை நிண்டு கொண்டு கோ கோத்தபாய எண்டு கத்தினாலும் கத்தும்.....இந்த கலியாணம் தெரியும் தானே 😂

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

அறளை பேந்த சூப்ரமணியம் அங்கை நிண்டு கொண்டு கோ கோத்தபாய எண்டு கத்தினாலும் கத்தும்.....இந்த கலியாணம் தெரியும் தானே 😂

 

 

ரொம்ப குசும்பு பிடித்த அல்லது மறை கழன்ற சாமி போல் உள்ளதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமி நடிக்குது.....

யோவ் சாமி..... நம்ம முன்னாள் பிரதமர் மற்றும் அவரது அல்லக்கைகள் வீடுகளை எரிச்சதுக்கு பின்னால் பக்கா திட்டமிடல், வேகம்..... ஒழுங்கமைப்பு..... எல்லாத்தும் காரணம்.... உங்கள் ரோ என்று.... புலம்புகிறார்.... திருகோணமலையில் இருந்து ஒருத்தர்....

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமிக்கு தான் செய்த அநியாயத்துக்கு தன் வீடுகளையும் எரிச்சிடுவாங்களோன்ன பயத்தில உளறுது. மகிந்தாவிட்ட வாங்கி பெட்டிகள் அனைத்தும் பாவத்தின் கணக்கென்னு.. சாமிக்கு விளங்கும் போது.. உடம்பு ஊசலாடுமோ தெரியல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

ரொம்ப குசும்பு பிடித்த அல்லது மறை கழன்ற சாமி போல் உள்ளதே. 

 செய்தது பிழை எண்டு தெரிஞ்சும்..... நிண்டு சாந்தி முகுர்த்தம்  நடத்தீட்டு போற பிளான்போல பல்லை காட்டிகொண்டு நிக்குது 😁

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.