Jump to content

புதிய பிரதமராக... ரணில்? – இன்று அல்லது நாளை, பதவியேற்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

அமைச்சுப் பதவி, பங்கு போடுகிறார்களாம்…..
விஜயகலா மகேஸ்வரனை…  ஊரிலை நிக்காமல்,  
உடனே கொழும்புக்கு போகச் சொல்லுங்கோ. 😛
 

பிள்ளையானும், சுரேன் ராகவனும் தான்… பாவங்கள்.
இரண்டு நாள் கூட… அமைச்சராக இருக்க முடியாமல் போட்டுது. 😂

டக்கியர், என்ன பாவம் செய்தவர்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

இந்த ஆளை வைத்து மேற்கு நாடுகளில் கடன் வாங்க திட்டமிடப்படுது.

தோழரை கண்டதில் மகிழ்ச்சி 👌 தொடர்ந்து இணைந்திருங்கள்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சவாலான பணியை பெறுப்பேற்றுள்ள பிரதமர் ரணிலுடன் ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன் - ஜனாதிபதி

(இராஜதுரை ஹஷான்)

உறுதியான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

No description available.

நாடு மிகவும் கொந்தளிப்பான தருணத்தில் இருக்கும் நிலையில் மிகவும் சவாலான பணியை பொறுப்பேற்பதற்கு முன்வந்து பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் உறுதியான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
 

https://www.virakesari.lk/article/127389

சுமந்திரன் என்ன கூறுகின்றார்? 

இலங்கையில் புதிதாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சுமந்திரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில்,

“ஜனாதிபதி முற்றாக பெரும்பான்மை தன்மையை இழந்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது பாராளுமன்றில் வாக்களிப்பு நடத்த உள்ளது.

இதேவேளை, விக்ரமசிங்கவிற்கு ஆரம்பத்திலிருந்தே தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.” என்றுள்ளார். (R)
https://www.tamilmirror.lk/செய்திகள்/சுமந்திரன்-என்ன-கூறுகின்றார்/175-296343

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கிருபன் said:

சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில்,

“ஜனாதிபதி முற்றாக பெரும்பான்மை தன்மையை இழந்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

விரைவில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது பாராளுமன்றில் வாக்களிப்பு நடத்த உள்ளது.

இதேவேளை, விக்ரமசிங்கவிற்கு ஆரம்பத்திலிருந்தே தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை. அவர் தனது தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.” என்றுள்ளார். (R)
https://www.tamilmirror.lk/செய்திகள்/சுமந்திரன்-என்ன-கூறுகின்றார்/175-296343

இது பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இது பொருள்.

நமக்கு புரிவதே, தெரியாத சுமந்தின் பிழையான அரசியல் புரிதல்....

ரணில், இந்திய, மேற்கு தெரிவு.

இவருக்கு, கோத்தாவின் மொட்டு கட்சி, இதொக, மற்றும் பதவிக்கு அழையும், நம்ம ரவூப் நாணா கட்சி, ரிசாட் கட்சி, சஜித்திடம் இருந்து, கிளம்பப்போகும் கோஸ்டிகள் ஆதரவு கிடைக்கும்.

பெரும்பான்மை நிரூபணம் ஆகும். 🤗

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் அலசல்👇🏾
 

புதிய பிரதமர் யார்?

இந்தக் கேள்விதான் நாடு முழுக்க இப்போது பேசுபொருள். பிரதமர் தெரிவில், உள்ளூர் அரசியல் காய்நகர்த்தல்கள் மட்டுமல்ல, வெளிச் சக்திகளின் புவிசார் அரசியல் நிகழ்ச்சிநிரலும் (Geopolitical Agenda) உள்ளது.

புதிய பிரதமர் தெரிவும் புதிய அமைச்சரவை நியமனமும், ஒரு வார காலத்திற்குள் நடந்தேறும் என, ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவே முன்னாள் பிரதமர் ரணிலோடு ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அரசியல் அரங்கில் பிரதமர் பதவிக்காக அடிபட்ட, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் இப்போது பின்தள்ளப்பட்டு விட்டது.

பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து (SJB) விலகி, சுயாதீனமாக செயற்படப் போவதாக ஹரீன் பெர்னாண்டோ நேற்றிரவு அறிவித்திருக்கிறார். மனுஷ நாணயக்கார, ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட பலர் ஹரீனுடன் அணி சேர்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பிளவு அரசியல் வட்டாரங்களில் முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். புதிய ஜனாதிபதியாக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை (கவனிக்க: சஜித்தை அல்ல), ஹரீன் பாராளுமன்றத்தில் பரிந்துரை செய்ததையும், அப்போதே லக்ஷ்மன் கிரியெல்ல அதை மறுத்ததையும் இங்கு சுட்டிக் காட்டலாம். மேதினத்தில் ஹரீனுக்கும் பொன்சேகாவுக்குமிடையே நடந்த வாக்குவாதத்தையும் இந்தப் பின்னணியில் புரிந்து கொள்ள முடியும்.

ராஜபக்சக்களுக்கு மிகவும் தோதான ஒரு தெரிவு ரணில்தான். அத்தோடு பிராந்திய - சர்வதேச கூட்டணிக்கும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ரணில் மிகவும் ஏற்புடையவர்.

இவ்வாறான அரசியல் அணிச் சேர்க்கைகள், புவிசார் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் தொடர்புபட்டிருப்பதை ஊகிப்பதொன்றும் அவ்வளவு கடினமானதல்ல.

ஐந்து முறை பிரதமராக இருந்த ரணிலுக்கு, இந்த நெருக்கடி நிலமையைக் 'கையாளக் கூடிய' (கவனிக்க: 'தீர்க்கக் கூடிய' என்று சொல்லவில்லை) திறமையும் நீண்ட அனுபவமும் உள்ளது என்தில் சந்தேகம் இல்லை.

ஆனால், இந்த மக்கள் போராட்டத்தின் அபிலாசைகளை திசைதிருப்பும் 'டீல்' அரசியலில், அவரது வகிபாகம் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரிந்ததுதான். இன்னும் சில வாரங்களில் அது இன்னும் தெளிவாகத் தெரிந்து விடும். ராஜபக்சக்களுக்கு வசதியானதும் பாதுகாப்பானதுமான ஒரு வெளிச்செல்லும் உத்தியை (Exit Strategy) அவர் ஏற்படுத்திக் கொடுப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இந்தியா மற்றும் மேற்கு முகாமினதும் பன்னாட்டு நிறுவனங்களினதும் நிதியுதவியை வென்றெடுப்பதில் ரணில் வெற்றிபெறுவார் என்பதிலும் சந்தேகமில்லை. 

ஒரு வகையில் ரணில் அவசியமானவர். இன்னொரு வகையில் ஆபத்தானவர். இதன் பரிமாணம் பற்றிய  ஒவ்வொருவரின் புரிதல் அளவும் வேறுபட்டது. இந்த 'ஆபத்தான அவசியத்தை' இடைக்காலத் தீர்வாகக் கையாளலாம் என்று ராஜபக்சக்களும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளும் எண்ணுகின்றன. 

இந்த அரசியல் சுழியில் அடிபட்டுப் போகப் போவது சஜித்தான். எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை சரியாகச் செய்ய இயலாத தடுமாற்றமும், நெருக்கடி காலகட்டத்திற்கு தலைமை வழங்க முடியாத அவரது இயலாமையும், அவரது அரசியல் முக்கியத்துவத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கின்றன.

செயல்வேகம் குன்றிய, உயர் பதவிக்கு அவசியமான அறிவாளுமைப் போதாமையுடைய அவரை, பிரேமதாஸவின் மகன் என்பதற்காக மட்டும் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அநேகமாக, அடுத்த தேர்தலில் சஜித் மிகவும் பலவீனப்பட்டு நிற்பார். ஐக்கிய மக்கள் சக்தியும் பலவீனமடைந்து விடும்.

இது ஒரு புறம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலமடையச் செய்யும். மறுபுறம், ஆட்டம் கண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் வாக்கு வங்கியை, சுதந்திரக் கட்சி குறி வைத்து இயங்கும். இது அதிகார சமநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்தப் புதிய அரசியல் நகர்வுகளால், தற்போது நலிவடைந்து பின்தள்ளப்பட்டிருக்கும் பிரதான கட்சிகளான ஐ.தே.க மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன ஒப்பீட்டளவில் முன்னரங்குக்கு வரும் சாத்தியங்கள் அதிகம். அதனால்தான் சந்திரிக்கா தரப்பும் களமாடுகிறது.

இதேவேளை, சம்பிக்க ரணவக்கவும் அவரது 43 ஆவது படையணியும் சஜித் அணியிலிருந்து ஒதுங்கி, தற்போது அடிபட்டு நிற்கும் சிங்களத் தேசியவாதத்தின் மீட்பராக தம்மை முன்னிறுத்தி இயங்குகின்றனர். அடுத்த பிரதமருக்கான போட்டிக் களத்தில் சம்பிக்கவும் தலைகாட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், இது நாட்டுக்கு மிக ஆபத்தான முன்னெடுப்பு.

இது இவ்வாறிருக்க, பிரதான கட்சிகள் மீதான அதிருப்தி அலையொன்று நாட்டில் பலமாக உருவெடுத்திருக்கிறது. சீரியஸான மாற்றத்தையே இது வேண்டி நிற்கிறது. இதன் பலனை அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அறுவடை செய்யும் வாய்ப்புகளே அதிகம். அதற்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நகர்வு இன்னும் விரிவும் வீரியமும் பெற வேண்டும். 

எது எப்படிப் போனாலும்,திசைகாட்டி முன்னெப்போதை விடவும் பெருமளவு ஆசனங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கலாம். அந்த வகையில், புதிய பாராளுமன்றத்தில் அதுவும் ஒரு தீர்மானகரமான சக்தியாக இருக்கும். 

எது எப்படியோ, அடுத்து வரும் ஆறு மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்குப் பின்னர், பொதுத் தேர்தலொன்று இடம்பெறும் சாத்தியம் மிக அதிகளவில் உள்ளது. இப்போதுள்ள அரசியல் ஸ்திரமின்மையில் இருந்து வெளியேற அதுவே பொருத்தமான தீர்வாகும்.

புதிய பிரதமர் தெரிவு, அடுத்த தேர்தலை மையமாகக் கொண்ட ஒரு நகர்வு என்பதை, அரசியல் நடப்புகளை நன்கு ஊன்றிக் கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

அதனால்தான் புதிய பிரதமராவதற்குத் தயார் என்று ஏகப்பட்ட ஆட்கள் அறிவிப்புச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பலமுனைகளில் துண்டு துண்டாக உடைந்து நிற்கும் அரசியல் தரப்புகளை, தேர்தலின் பின்னர் அணி சேர்க்கும் வேலையை பிராந்திய மற்றும் புவிசார் அரசியல் சக்திகள் செய்யும்.

இலங்கை விவகாரத்தில் ஒப்பீட்டளவில் சீனாவின் செல்வாக்கு குறைந்து, இந்தியாவின் கை ஓங்கியிருக்கிறது என்பது பகிரங்க ரகசியம். தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்குக் கிடைத்த பொன்முட்டையாக ஆகியிருக்கிறது.

இந்த நகர்வுகள் இடைக்காலத் தீர்வாகவே வருகின்றன. அதேவேளை, இவை இறுதித் தீர்வில் தாக்கம் செலுத்த வல்லன.

மக்கள் போராட்டத்தைத் திசைதிருப்பவும், தமக்கு வாய்ப்பாக வளைத்தெடுக்கவும் பல்வேறு சக்திகள் களமிறங்கியுள்ளதைக் காண முடிகிறது.  
எந்த சக்தி வந்து எந்த ஆட்டத்தைப் போட்டாவும், நாம்தான் விழிப்பாக இருக்க வேண்டும். ஏமாறக் கூடாது.

இந்த நாட்டுக்கு ஒரு தீர்க்கமான மாற்றம் தேவை. அது அடிப்படையான முறைமை மாற்றம் (System Change) என்பதில் மக்களாகிய நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்திலிருந்து நாம் பாடம் படிக்கத் தயாரென்றால்தான், நமது தலைவிதியை மாற்ற முடியும். இல்லாவிட்டால் 'பழைய குருடி கதவைத் திறடி' கதைதான் தொடரும்.

தலைப்புச் செய்திகளை மட்டும் பார்த்து விட்டு நகரப் போகிறோமா? அல்லது நமது எதிர்காலத்தை ஆக்கபூர்வமாக வடிவமைக்கப் போகிறோமா?

இப்போதைக்கு யார் பிரதமராக வந்தாலும், நாம் காரியத்தில் கண்ணாய் இருக்க வேண்டும்.

சிராஜ் மஷ்ஹூர்
12.05.2022
 

https://www.facebook.com/100004555895600/posts/2177783849050124/?d=n

Link to comment
Share on other sites

“2ஆம் உலக யுத்தம் தொடங்கிய போது வின்சன்ட் சேர்ச் நான்கே நான்கு பேரின் ஆதரவில் தான் பிரித்தானியாவின் பிரதமராக ஆனார். ஏன்? ஏனென்றால் அது நெருக்கடி காலம். நானும் அப்படித்தான்.”
ரணில் பதவியேற்றதும் சொன்னது இது.
பிரேமதாச 1993 மே தினத்தன்று கொல்லப்பட்ட வேளை டீ.பி.விஜேதுங்க ஜனாதிபதியின் இடத்துக்கு நிரப்பப்பட்டார். அது தொடக்கம் ஆறு தடவைகள் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கிறார்.
• 17 மே 1993 – 19 ஓகஸ்ட் 1994
• 09 டிசம்பர் 2001 – 6 ஏப்ரல் 2004
• 08 ஜனவரி 2015 - 26 ஓகஸ்ட் 2015,
• 17 ஓகஸ்ட் 2015 – 20 ஒக்டோபர் 2018
• 16 டிசம்பர் 2018 – 21 நவம்பர் 2019
• இப்போது 12 மே 2022 அன்று ஆறாவது தடவை பிரதமராக பதவியேற்றிருக்கிறார்
 
ரணில் – மகிந்த :
• 2004 – ரணில் போனார் மகிந்த வந்தார்
• 2015 – மகிந்த போனார் ரணில் வந்தார்
• 2018 – ரணில் போனார் மகிந்த வந்தார்
• 2018 – மகிந்த போனார் ரணில் வந்தார்
• 2019 – ரணில் போனார் மகிந்த வந்தார்
• 2022 – மகிந்த போனார் ரணில் வந்தார்.
 
இலங்கையின் வரலாற்றில் ஆறு தடவைகள் பிரதமராக இருந்த சாதனையும் ரணிலுக்குத் தான். ஒரு தடவை கூட முழுமையாக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ய முடியாமல் போன பிரதமரும் ரணில் தான்.
77 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக 45 ஆண்டுகள் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்திருக்கிறார்.
ஒன்பது தேர்தலில் போட்டியிட்டு ஐந்து தடவைகள் கொழும்பு மாவட்டத்தில் அதிக விருப்புகளை பெற்றிருந்த அவர் இறுதித் தேர்தலில் தோற்றே போனார்.
பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப் போனவர் பிரதமராக ஆகியிருக்கிறார். ஐக்கிய தேசியக் கட்சி முற்றுமுழுதாக தோற்றுப் போய் வெறும் போனஸ் ஆசனத்தை மட்டுமே பெற்றுக்கொண்ட நிலையில் அந்த ஒரேயொரு போனஸ் ஆசனத்தின் வழியாக வந்தவர் ரணில்.
பாராளுமன்ற வரலாற்றில் ஒரே ஒரு ஆசனத்தைப் பெற்ற கட்சியொன்றைச் சேர்ந்தவர் பிரதமராக தெரிவாகும் முதல் சந்தர்ப்பமாகவும் இது இருக்கும்.
 
-சரவணன் 
 
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: மக்களை எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீட்டெடுப்பேன் - புதிய பிரதமர் ரணில் உறுதி

12 மே 2022, 13:46 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை பிரதமர் ரணில்

பட மூலாதாரம்,SL PRESIDENT’S MEDIA DIVISION

இலங்கை மக்களை எதிர்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கவுள்ள சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமராக வியாழக்கிழமை மாலையில் பதவியேற்றுக் கொண்ட பிறகு ஊடகங்களுக்கு பேசினார் ரணில். அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்கும் நடவடிக்கைகளை தனியாக தம்மால் முன்னெடுக்க முடியாது என்றும் ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் உதவிகள் அத்தியாவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

மூன்று வேளைகளும் உணவு உட்கொள்ளும் வகையிலான பிரஜைகளாக இலங்கையர்கள் இருக்க வேண்டும். இலங்கை ரூபாவிற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன், இளைஞர்களுக்கு எதிர்காலமொன்று இருக்க வேண்டும் என்றும் ரணில் தெரிவித்தார்.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என தெரிவித்த அவர், திங்கட்கிழமை அளவிலேயே அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் எனவும் ரணில் குறிப்பிட்டார்.

இலங்கையில் தீவிரமாகி வரும் அரசு எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரணில், போராட்டத்தை தொடர்ந்தும் நடத்திச் செல்ல இடமளிப்பதாக தெரிவித்தார்.

''கோட்டா கோ கம மீது நான் கை வைக்க மாட்டேன். அதனை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். போலீஸாரும் அதற்கு எதையும் செய்ய மாட்டார்கள். போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்" என்றும் ரணில் கூறினார். இதைத்தொடர்ந்து ரணிலிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள் மற்றும் அதற்கு அவர் அளித்த பதில்களின் விவரம்:

 

ரணில் விக்ரமசிங்க

கேள்வி:- ரணில் கோ கம என்ற ஒரு போராட்ட வடிவம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தற்போது கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. அது குறித்து உங்களின் கருத்து என்ன?

பதில் :- ரணில் கோ கம என்று ஒன்று உருவாக்கவில்லை. ரணில் கோ ஹோம் கம என்ற உருவாக்கி, எமது வீட்டிற்கு முன்பாக இருந்தனர். அது பிரச்னையாகியது. இந்த இடத்தில் ஒன்று மாத்திரமே உள்ளது. கோட்டா கோ கம என்ற அமைப்பு மாத்திரமே உள்ளது. ஏனையோருக்கும் கோ ஹோம் என கூற முடியும் அல்லவா?"

கேள்வி:- நாட்டில் தற்போது அரசியல் ஸ்திரமற்ற நிலைமை ஒன்று காணப்படுகின்றது. இதற்கு நிரந்தர தீர்வொன்று கிடைக்குமா?

பதில் :- ஆம்... ஆம்..

கேள்வி:- பெரும்பான்மை தொடர்பில் ஏதாவது பிரச்னை வருமா?

பதில் :- இல்லை. இல்லை.. பெரும்பான்மை தொடர்பில் பிரச்னை இல்லை. பெரும்பான்மை காண்பிக்கின்றேன்.

கேள்வி:- நாடாளுமன்றத்திற்குள் எவ்வாறு பெரும்பான்மையை காண்பிப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து பெரும்பான்மை கிடைத்துள்ளதையா நீங்கள்

கூறுகின்றீர்கள்?

பதில்:- எனக்கு இரண்டு பக்கங்களிலும் பெரும்பான்மை உள்ளது. நான் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். இந்த நாட்டு மக்கள் இன்று துன்பங்களை அனுபவித்து வருவதை நிறுத்த வேண்டுமா? இல்லையா? நீங்கள் கூறுகின்றீர்கள், குறுகிய அரசியலை நடத்துவதற்காக மூன்று வேளைகளிலும் உணவு உட்கொள்ளா விட்டாலும் பரவாயில்லை. எமக்கு பெட்ரோல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எமக்கு டீசல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எமக்கு மின்சாரம் இல்லை என்றாலும் பரவாயில்லை. இந்த அனைத்தையும் நான் பெற்றுக்கொடுப்பேன், நாடாளுமன்றத்திலுள்ள அனைவரது ஆதரவுடனும் இதனை நான் பெற்றுக்கொடுப்பேன்.

ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார். அவருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என கடுமையான சூழ்நிலை நிலவுகிறது. இவற்றைத் தடுக்க ஆளும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியாகக் கூறி பொதுமக்கள் இலங்கையின் பல நகரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபயவும் பிரதமர் பதவி வகித்து வந்த மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலக வேண்டும் என்று குரல்கள் ஒலித்து வந்த வேளையில், மஹிந்த மட்டும் கடந்த திங்கட்கிழமை பதவி விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால அரசை அமைப்பது தொடர்பாக எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக ஒரே ஒரு உறுப்பினர் பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய கூட்டணியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 73 வயதான ரணில் விக்ரமசிங்கவுடனும் கோட்டாபய ராஜபக்ஷ பேசினார்.

இந்த நிலையில், ரணில் இன்று நாட்டின் பிரதமராக பதவியேற்றிருக்கிறார்.

நாட்டின் பிரதமராக ஐந்து முறை பதவி வகித்த விக்ரமசிங்க, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறிசேனவால் மீண்டும் அவர் பிரதமராக பதவியேற்றார்.

ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி ஆதரவுடன் அவர் பிரதமராகச் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணிலுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

முன்னதாக, சஜித் பிரேமதாசாவை பிரதமர் பதவி ஏற்க வறுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியானது. ஆனால், ஜனாதிபதி பதவி விலகினால், அந்த வாய்ப்பை ஏற்பதாக சஜித் கூறியிருந்தார். இந்த நிலையில், அவருக்கு ஜனாதிபதி வழங்கியிருந்த அவகாசம் காலாவதியான நிலையில், நியமன உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க இலங்கை பிரதமராகியிருக்கிறார்.

அவருக்கு 160க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில், 1994ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசிய கட்சி தலைவராகவும் 1994, 2001, 2004, 2015 ஆகிய ஆண்டுகில் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேசிய பட்டியல் உறுப்பினராக இருக்கிறார் ரணில்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் பலம் உளளது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61423157

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நிழலி said:
2ஆம் உலக யுத்தம் தொடங்கிய போது வின்சன்ட் சேர்ச் நான்கே நான்கு பேரின் ஆதரவில் தான் பிரித்தானியாவின் பிரதமராக ஆனார். ஏன்? ஏனென்றால் அது நெருக்கடி காலம். நானும் அப்படித்தான்.”
ரணில் பதவியேற்றதும் சொன்னது இது.

அதே யுத்த வெற்றி நாயகனை பொருளாதார மறுமலர்ச்சி பிரிட்டிஸ் க்கு தேவை  என்று வந்தவுடன் பிரிட்டிஸ் மக்கள் தூக்கி எறிந்ததும் வரலாற்றில் உள்ளது .

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க: தனியொரு எம்.பி ஆக இருந்து 6வது முறையாக பிரதமர் ஆன இவர் யார்?

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக
4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,UNP

இலங்கை வரலாறு காணாத அரசியல் பொருளாதார சிக்கலில், நிச்சயமற்ற நிலையில் தவிக்கும்போது 6-வது முறையாக பிரதமர் பதவி ஏற்றுள்ள ரணில் விக்ரமசிங்க இலங்கை அரசியலில் என்றுமே தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக திகழ்ந்து வருகின்றார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்றுமே இல்லாத தோல்வியை ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன சந்தித்திருந்தன.

தேர்தலின் ஊடாக ஒரு நாடாளுமன்ற ஆசனத்தை கூட ஐக்கிய தேசியக் கட்சியினால் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

எனினும், இலங்கையில் காணப்படுகின்ற தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாக, ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் கிடைத்தது.

இந்த ஒரு நாடாளுமன்ற ஆசனத்தின் ஊடாக, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்திலுள்ள 225 பேருக்கு மத்தியில் தனியொருவராக அமர்ந்து, தனது அரசியலை நடத்தி வந்தார்.

இவ்வாறு தனியொருவராக நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் ரணில் விக்ரமசிங்க, இன்று பிரதமர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஆளுமையாக பரிமாணம் பெற்றுள்ள இந்த ரணில் விக்ரமசிங்க யார்?

எசுமண்ட் விக்கிரமசிங்க மற்றும் நளினி விக்ரமசிங்க ஆகியோருக்கு 1949ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி ரணில் விக்ரமசிங்க மகனாக பிறந்தார்.

கொழும்பு ராயல் கல்லூரியில் கல்வியை தொடர்ந்த ரணில் விக்ரமசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை தொடர்ந்தார்.

தொழில் ரீதியாக வழக்குரைஞராக செயற்பட்ட அவர், பின்னர் அரசியலில் நுழைந்தார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை

 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,UNP

கம்பஹா மாவட்டத்திலிருந்து ரணில் விக்ரமசிங்க தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் களனி தொகுதி பிரதான அமைப்பாளராக 1970ம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டு, பின்னர் பியகம தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

பியகம தொகுதியிலிருந்து நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற ரணில் விக்ரமசிங்க, ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையிலான அரசாங்கத்தில் இளம் அமைச்சராக பதவி வகித்தார்.

இளையோர் விவகாரம் மற்றும் தொழில் வாய்ப்பு அமைச்சர் பதவியே, ரணில் விக்ரமசிங்கவிற்கு கிடைத்த முதலாவது அமைச்சு பொறுப்பாகும்.

இவ்வாறு தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்த ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிர்க்க முடியாத ஒரு தலைமைத்துவத்தை நோக்கி நகரத் தொடங்கினார்.

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, 1993ம் ஆண்டு மே மாதம் முதலாம் தேதி, தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இதையடுத்து, இடைகால ஜனாதிபதியாக டி.பி.விஜேதுங்க நியமிக்கப்பட்ட நிலையில், அந்த அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க 1993ம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிரதமராக நியமிக்கப்பட்டார்.

 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதனைத் தொடர்ந்து, 2001ம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் நியமிக்கப்பட்டார்.

2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ரணில் - மைத்திரி கூட்டணி வெற்றியீட்டியதை அடுத்து, மூன்றாவது தடவையாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்டியதன் ஊடாக, நான்காவது தடவையாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

நல்லாட்சி காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழுப்பகர நிலைமையினால், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, ரணில் விக்ரமசிங்கவை அந்த பதவியிலிருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,UNP

எனினும், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, ரணில் விக்ரமசிங்க ஐந்தாவது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்தார்.

2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றியீட்டியதை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகிய ரணில் விக்ரமசிங்க, இந்த ஆட்சியின் கீழ் நடத்தப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் பாரிய வீழ்ச்சியுடன் தோல்வியை சந்தித்தார்.

எனினும், தேசிய பட்டியல் ஊடாக ஒரு ஆசனத்தை பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி, மீண்டும் நாடாளுமன்ற பிரவேசத்தை ரணில் விக்ரமசிங்க பெற்றார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வந்த பின்னணியில், ரணில் விக்ரமசிங்கவின் ஆளுமை மற்றும் சர்வதேச விவகார ஆளுமை ஆகியவற்றினால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஆளுமை அவருக்கு உள்ளதாக பெரும்பாலானோர் கூறியிருந்தனர்.

இவ்வாறான நிலையிலேயே, ரணில் விக்கிரமசிங்க 6வது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசியல் ரீதியில் பிரதமராக பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் பலம், பலவீனம், ஆளுமை என்ன?

இது தொடர்பில் மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழிடம் பேசினார்.

''ரணில் விக்கிரமசிங்கவின் பொறுமை, ராஜதந்திரிகளுடனான உறவு, அவசர தீர்மானங்களை எடுக்காமை போன்ற பல்வேறு பலங்கள் அவரிடம் உள்ளன. அத்துடன், அனைத்து கட்சிகளுடனான உறவு மற்றும் அனைத்து விதமான அரசியல் விமர்சனங்களையும் தாங்குதல் போன்றவை மிக பெரிய பலமாக இருக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மீது பல்வேறு வகையிலான விமர்சனங்களை முன்வைத்த போதிலும், அது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க எந்தவித பதிலும் கூறவில்லை. அது அவரின் நிலைப்பாடு என கூறி விமர்சனங்களை தாங்கிக்கொண்;டார். இதனாலேயே, இன்று அவர் பிரதமராக பதவியேற்கும் போதுகூட, அவரால் அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியதாக இருக்கின்றது. இவை அவரது பலம்" என்கிறார் ஆர்.சிவராஜா.

ரணில் விக்கிரமசிங்கவின் பலவீனம் என்ன?

''பலவீனம்... மஹிந்த ராஜபக்ஷ, பிரேமதாஸ போன்ற தலைவர்களை போன்று, அடிமட்ட மக்களை கவனிப்பது இல்லை என்பதே அவரது பலவீனமாகும். ஆனால் அவரது பலவீனம் என்னவென்று இப்போது அவருக்கு தெரியும். அதை இப்போது அவர் சரி செய்துக்கொள்ள முடியும். சாதாரண குடிசைவாசியின் வீட்டிற்குள் அவரால் செல்ல முடியாது. ஏனென்றால், அவர் வாழ்ந்த அரசியல் சூழல் அப்படியாக இருந்தது. ஏமாற்றுவதற்காக அவ்வாறு அவரால் செய்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அதுவே அவரது பலவீனமாகும். அப்படி செய்திருந்தால் அவர் போலியாகியிருப்பார். ஆனால் இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில், அந்த போலி நாடகத்திற்கு இடமில்லை. அதனாலேயே ரணில் மீண்டும் உள்ளே வருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. பலவீனம் உதவி செய்த ஒரே தலைவன் ரணில் விக்ரமசிங்க தான்" என அவர் கூறுகின்றார்.

 

மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா

பட மூலாதாரம்,SIVARAJA

 

படக்குறிப்பு,

மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா

ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு உறவுகள்?

''ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் மிகவும் பரந்தது. சாதாரண நிலையில் வந்து, இன்று இலங்கையின் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். அவருடைய காலப் பகுதியிலேயே இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை எல்லாம் நல்லதொரு இடத்திற்கு வந்தது. அப்போதிருந்து, இன்று வரையான அரசியல் அனுபவம்தான் வெளிநாட்டு தொடர்புகளுக்கு மேலும் உறுதுணையாக இருந்தது.

கொழும்பில் ஒரு வெளிநாட்டு நிகழ்வு நடந்தால், அவர் எதிர்கட்சியில் இருந்தாலும், சாதாரண எம்.பியாக இருந்தாலும் அவருக்கு அந்த நிகழ்வில் முன்னுரிமை கொடுக்கப்படும். நாடாளுமன்றத்தில் இவர் பேச ஆரம்பித்தால், சபாநாயகர் அதற்கான மரியாதை கொடுப்பார். ஏனென்றால், அவர் ஐந்து தடவைகள் பிரதமராக இருந்துள்ளார். அதற்குரிய அனுபவம் தான். சீனாவையும், இந்தியாவையும் எவ்வாறு நடுநிலையாக கையாள வேண்டும் என்பதை அறிந்த ஒரேயொருவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமே. அதனாலேயே விடுதலைப் புலிகளுடனான சமாதான பேச்சுவார்த்தையை நடத்த அனைத்து நாடுகளும் முன்வந்திருந்தன. அந்த உறவு இருந்ததால் தான் இவ்வாறு நடந்தது. எந்தவொரு தலைவருக்கும் இல்லாத ஒரு சர்வதேச தொடர்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருக்கின்றது. அதுதான் சர்வதேசத்துடனான அவரின் பலம்" என மூத்த ஊடகவியலாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61418553

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனியாக போன ரணில் 113 பேருடன் இப்பொழுது போகிறார். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி. இதற்கு உதாரணம் ரணில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இலங்கை நெருக்கடி: மக்களை எல்லா பிரச்னைகளில் இருந்தும் மீட்டெடுப்பேன் - புதிய பிரதமர் ரணில் உறுதி

12 மே 2022, 13:46 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

இலங்கை பிரதமர் ரணில்

அண்மைக்கால போராட்டங்களின் சாரம்சமே கோ கோத்தபாய தானே?
மகிந்த போனாலும் கோத்தபாய ஏன் இன்னும் போகாமல் இருக்கிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அண்மைக்கால போராட்டங்களின் சாரம்சமே கோ கோத்தபாய தானே?
மகிந்த போனாலும் கோத்தபாய ஏன் இன்னும் போகாமல் இருக்கிறார்?

கோத்தபாயவுக்கு…. வருகின்ற செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்,
நம்பிக்கையில்லா தீர்மானம். கொண்டு வருகின்றார்கள்.
அதில் அவருக்கு பாதகமாக வந்தால், அவர் போக வேண்டி வர…
பிரதமர் ரணில் ஜனாதிபதி ஆகின்றார். இது, திட்டம் என்கிறார்கள்.

அந்த நம்பிக்கயில்லா தீர்மானத்தில்… கோத்தா வென்றால்.
ஆதரவாக வாக்களித்த எம்.பி. களின் வீடு கொழுத்துதல் என்று கலவரம் தொடரலாம்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, தமிழ் சிறி said:

கோத்தபாயவுக்கு…. வருகின்ற செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்,
நம்பிக்கையில்லா தீர்மானம். கொண்டு வருகின்றார்கள்.
அதில் அவருக்கு பாதகமாக வந்தால், அவர் போக வேண்டி வர…
பிரதமர் ரணில் ஜனாதிபதி ஆகின்றார். இது, திட்டம் என்கிறார்கள்.

அந்த நம்பிக்கயில்லா தீர்மானத்தில்… கோத்தா வென்றால்.
ஆதரவாக வாக்களித்த எம்.பி. களின் வீடு கொழுத்துதல் என்று கலவரம் தொடரலாம்.

 

கோத்தாவுக்கு எதிராக எத்தனை வாக்குகள் விழவேண்டும்?

முழு பாராளுமன்ற உறுப்பினர்களும் கோத்தாவை நிராகரித்தாலே ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென எண்ணுகிறேன்.

இதுபற்றி யாராவது கூடுதல் தகவல் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

 

கோத்தாவுக்கு எதிராக எத்தனை வாக்குகள் விழவேண்டும்?

முழு பாராளுமன்ற உறுப்பினர்களும் கோத்தாவை நிராகரித்தாலே ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென எண்ணுகிறேன்.

இதுபற்றி யாராவது கூடுதல் தகவல் தெரியுமா?

அதனைப் பற்றி சரியாகத் தெரியவில்லை, ஈழப்பிரியன்.
முழு பாராளுமன்றமும் நிராகரிப்பது என்றால்…
அத்தைக்கு… மீசை முளைச்ச கதைதான். 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'வடைத்தீவு காகம் கா கா... என்றது வடை கீழே விழுந்தது நரி வடையைத் தூக்கிக் கொண்டு ஓடியது'

காகம்... கா,கா, என்றது....
வடை... கீழே விழுந்தது,
நரி... வடையை, தூக்கிக் கொண்டு ஓடியது. 🤣

Andavar Selva 

 

##################    #################   #################

 

May be an image of text that says 'நான் பிரதமர் பதவியை ஏற்பதென்றால் கோட்டா பதவி விலக வேண்டும் சஜித் நான் பிரதமர் பதவியை ஏற்பதென்றால் கோட்டா பதவி விலக வேண்டும் அனுர நான் பிரதமர் பதவியை ஏற்பதென்றால் எந்தக் காரணம் கொண்டும் கோல்பேஸ் ஆர்ப்பாட்டக் காரர்களை அகற்ற எத்தணிக்கக் கூடாது ரணில் மேலே உள்ள இருவரும் சொன்ன அதே விடயத்தை ரணில் எவ்வாறு சொல்லியிருக்கார் பார்த்தீர்களா??? இதுதான் ரணிலுக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.'

மூவரும் சொல்லிய விடயம், ஒன்றுதான்.
எதை எப்படிச் சொல்லுவது என்பதே.. தந்திரம்.
தந்திரமானது,  நரி. 😂
 
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அந்த நம்பிக்கயில்லா தீர்மானத்தில்… கோத்தா வென்றால்.
ஆதரவாக வாக்களித்த எம்.பி. களின் வீடு கொழுத்துதல் என்று கலவரம் தொடரலாம்.

அப்பிடியெண்டால் ஒவ்வொருத்தருக்கும் எங்கையெங்கை வீடுகள் கிடக்கு எத்தினை வீடுகள் கிடக்கு எண்ட விபரங்களை இப்பவே திரட்டி வைச்சிருப்பினம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

 

கோத்தாவுக்கு எதிராக எத்தனை வாக்குகள் விழவேண்டும்?

முழு பாராளுமன்ற உறுப்பினர்களும் கோத்தாவை நிராகரித்தாலே ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென எண்ணுகிறேன்.

இதுபற்றி யாராவது கூடுதல் தகவல் தெரியுமா?

2/3 வாக்குகள் தேவை 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அப்பிடியெண்டால் ஒவ்வொருத்தருக்கும் எங்கையெங்கை வீடுகள் கிடக்கு எத்தினை வீடுகள் கிடக்கு எண்ட விபரங்களை இப்பவே திரட்டி வைச்சிருப்பினம் 😎

விரும்பினால் நீங்களும் உதவலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of one or more people

 

May be an image of 3 people, people standing and text that says 'சஜித் கோட்டா ரணில்'

அவள், பறந்து போனாளே... 

 

May be an illustration

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூவரும் சொன்னது ஒன்று தான் ஆனால் ரணில் பிரதமர் பதவியை எற்றதான் மூலம் செய்தது சொன்னதுக்கு நேர் எதிரானது ....கோத்தா [நண்பரே ]உமது மிகுதி பதவிக்காலம் வரைபதவியில் இரு.  என்பதாகும்.  இந்த பிரதமர் பதவி கோத்தா விரும்பும் நேரம் கலைக்க முடியும் என்னெனில்  ரணில் தனியாக நிற்கிறார்.  பெரும்பான்மை இல்லை என்பதுடன் சிறுபான்மை கூட இல்லை 🤣😂உண்மையில் அருமையாக நடந்த போராட்டத்தை பலவீனமாக செய்து விட்டார் ஒரே காரணம் சாதி குறைந்த சஜித் பிரதமர்...ஐனதிபதி. ....பதவிகள் வகிக்கக்கூடாது என்ற கொள்கை ஆகும்   

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.