Jump to content

ரணில் விக்ரமசிங்கவையும், அரசாங்கத்தையும்... ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

ரணில் விக்ரமசிங்கவையும், அரசாங்கத்தையும்... ஏற்கத் தயாரில்லை – மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை!

பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் ரணில் விக்ரமசிங்கவையும் அரசாங்கத்தையும் ஏற்கத் தயாரில்லை என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கப்போகிறதோ அதுவூ....ம் நன்றாகவே நடக்கும்.

😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கப்போகிறதோ அதுவூ....ம் நன்றாகவே நடக்கும்.

😉

அப்ப  ரணில் பிரதமராக வாறது  நல்லதென்று சொல்லுறியளோ?? அவன் எல்லாரையும் வெண்ட நரி எல்லோ !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Eppothum Thamizhan said:

அப்ப  ரணில் பிரதமராக வாறது  நல்லதென்று சொல்லுறியளோ?? அவன் எல்லாரையும் வெண்ட நரி எல்லோ !!

உள்குத்து என்று  கேள்விப்பட்டிருப்பீர்களே 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

உள்குத்து என்று  கேள்விப்பட்டிருப்பீர்களே 😆

உள்குத்தெண்டு ஒரு கூந்தலுமில்லை, போர்க்குற்றத்தை மறைக்க நல்லிணக்க அரசாங்கத்தை கொண்டுவந்தது போலத்தான் இதுவும் அவர்களின் ஒரு நிகழ்ச்சிநிரல். பொருளாதார பிரச்சனை ஓரளவு தீர்ந்ததும் பழைய குருடி கதவை திறடி கதைதான்!!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

உள்குத்தெண்டு ஒரு கூந்தலுமில்லை, போர்க்குற்றத்தை மறைக்க நல்லிணக்க அரசாங்கத்தை கொண்டுவந்தது போலத்தான் இதுவும் அவர்களின் ஒரு நிகழ்ச்சிநிரல். பொருளாதார பிரச்சனை ஓரளவு தீர்ந்ததும் பழைய குருடி கதவை திறடி கதைதான்!!

விரைவில் ரணிலும் ஓட்டமெடுப்பார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சி அமைந்தபோது ராஜபக்ஸக்களை கைது செய்யாமல் பாதுகாப்பாய் அனுப்பிவைத்தது, ஐ. நாவில் இவர்களை காத்தது, இன்றுவரை இவர்களோடு பேச்சுவார்த்தையில் இருந்து பிரதமர் பதவியை ஏற்கிறார். புதிய மொத்தையில் பழைய கள் அவ்வளவே.

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.