Jump to content

உக்ரேனில் ரஸ்ஸிய றாணுவ பட்டாலியன் தாக்கியழிப்பு, பல கனரக வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனில் ரஸ்ஸிய றாணுவ பட்டாலியன் தாக்கியழிப்பு, பல கனரக வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன

The Russians Lost An Entire Battalion Trying To Cross A River In Eastern  Ukraine

உக்ரேனிலிருந்து ரஸ்ஸியாவினால் சுதந்திரப் பிராந்தியங்களாக அறிவித்துப் பிரிக்கப்பட்ட டொனெஸ்ட் பிராந்தியத்தினை உக்ரேனுடன் இணைக்கும் ஆற்றின் மீதான பாலத்தினைக் கடக்க எத்தனித்த ரஸ்ஸிய பட்டாலியன் ஒன்று மீது உக்ரேனிய விசேட படைகள் நடத்திய தாக்குதலில் பல ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.

Charred remains of another Russian convoy: drone footage shows the  aftermath of the Ukrainian ambush - Global Happenings

கிழக்கு உக்ரேனில் இருக்கும் இந்த ஆற்றினை செயற்கையான மிதக்கும் பொன்டூன் பாலங்களைப் பாவித்து ரஸ்ஸிய ராணுவம் கடக்க எத்தனித்திருந்தது. இந்த பாலம் பூர்த்தியானதும் ஆற்றினைக் கடப்பதற்கென்று தாங்கிகள் உட்பட பல கனரக வாகனங்களின் அணியொன்று ஆற்றின் அருகே காத்திருந்த வேளையில் இப்பாலத்தின்மீதும், அருகே அணிவகுத்து நின்ற ரஸ்ஸிய அணிமீதும் பலமான தாக்குதல்களை உக்ரேனிய ராணுவம் மேற்கொண்டிருக்கிறது.

இத்தாக்குதலில் சுமார் மூன்று டசின் தாங்கிகள் உட்பட பல கனரக வாகங்கள் அழிக்கப்பட்டிருப்பதுடன், ஏறக்குறைய ஆயிரம் ரஸ்ஸிய ராணுவ வீரர்கள் ஒன்றில் கொல்லப்பட்டோ அல்லது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டோ இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Russian battalion wiped out trying to cross river of death | News | The  Times

செய்மதிகளூடாக எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இத்தாக்குதலின் வீரியத்தைக் கட்டியங்கூறி நிற்கின்றன.

ஆனாலும், கிழக்கில் ரஸ்ஸியா நடத்திவரும் ஆக்கிரமிப்பு இத்தாக்குதலின்மூலம் நிறுத்தபடுமென்று தாம் நம்பவில்லை என்று மேறுகுலக ராணுவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆற்றைக் கடக்க முற்பட்ட படைப்பிரிவு உக்ரேனுடையதா அல்லது ரஸ்யாவினுடையதா என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

இவை பெரும்பாலும் உக்ரேனுடைய இராணுவத்தின் ஒரு பிரிவினர் என்றே இராணுவ வல்லுனர்களால் / அவதானிகளால் ஊகிக்கப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

ஆற்றைக் கடக்க முற்பட்ட படைப்பிரிவு உக்ரேனுடையதா அல்லது ரஸ்யாவினுடையதா என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

இவை பெரும்பாலும் உக்ரேனுடைய இராணுவத்தின் ஒரு பிரிவினர் என்றே இராணுவ வல்லுனர்களால் / அவதானிகளால் ஊகிக்கப்படுகிறது. 

உக்ரேன் இராணுவம்... தன்னுடைய இழப்பை மறைக்க, 
ரஷ்ய ராணுவம் என்று சொல்லி மாட்டுப் பட்டுப் போய் நிக்குது. 😂
பொய்ச்  செய்திகளை பரப்புவதில், 
உலகிலேயே... உக்ரேன் முதன்மையான நாடு. நாசிக் கூட்டம். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

உக்ரேனில் ரஸ்ஸிய றாணுவ பட்டாலியன் தாக்கியழிப்பு, பல கனரக வாகனங்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன

மகிழ்ச்சி  நான் ரஷ்ய தொலைக்காட்சி சனல்களையே பார்த்து கொண்டிருப்பதால் இந்த செய்தியை காணவில்லை😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

உக்ரேன் இராணுவம்... தன்னுடைய இழப்பை மறைக்க, 
ரஷ்ய ராணுவம் என்று சொல்லி மாட்டுப் பட்டுப் போய் நிக்குது. 😂
பொய்ச்  செய்திகளை பரப்புவதில், 
உலகிலேயே... உக்ரேன் முதன்மையான நாடு. நாசிக் கூட்டம். 😡

உக்ரேனுக்கு நடந்த அடி பலம் எண்டபடியாலை தானே இவையாள் புது ரெக்னிக் ஆயுதங்களை குடுக்க வெளிக்கிடினம்.😂

உக்ரேன் நாஷிகளை அழிக்கும் மட்டும் ரஷ்யா தன்ரை தாக்குதலை நிப்பாட்டாது எண்டு நான் நினைக்கிறன்👍👍👍👍💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்திக்கு 'உண்மை' வடிவம் கொடுக்க பிரிட்டனும் பிபிசியும் படுற பாடிருக்கே.. அப்படி இருந்தும் இது ஒரு மிகைப்படுத்திய செய்தின்னு சொல்ல வேண்டி வந்திட்டுது. 

உக்ரைனை விட உக்ரைனுக்கு ஊட்டிக்கொடுக்கிறவை தான் ரஷ்சியா தோற்பதாகக் காட்டுவதில் உறுதியா இருக்கினம். ஏன்னா.. தங்கட உதவி எல்லாம் வீணாப் போனது என்று தெரிந்தால்.. தங்கட பலமெல்லாம்.. வீணாப் போவது வெளில தெரிந்திடுமே என்ற பயம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(மேற்கத்திய ஊடகமாம் Channel 4 )  வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

மேற்கத்திய ஊடகமாம் Channel 4 )  வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

தனக்காக தமிழர்களிடம் தமிழில் பிரசாரம் செய்ய தமிழர்கள் கிடைத்தது விளாடிமிர் புரினின் பெரிய அதிஷ்டம்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kapithan said:

ஆற்றைக் கடக்க முற்பட்ட படைப்பிரிவு உக்ரேனுடையதா அல்லது ரஸ்யாவினுடையதா என்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. 

இவை பெரும்பாலும் உக்ரேனுடைய இராணுவத்தின் ஒரு பிரிவினர் என்றே இராணுவ வல்லுனர்களால் / அவதானிகளால் ஊகிக்கப்படுகிறது. 

CNN வந்து சொன்னால் நம்புவம். 😁

ஈராக்கிலை மனிதகுலத்துக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய கெமிக்கல் ஆயுதம் இருக்கெண்டு சொன்ன மாதிரி.....  🤪

CNN ன்ரை திறம் தெரிஞ்சு தானே டொனால்ட் ரம்ப் எட்டத்தையே வைச்சிருந்தவர் :cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

(மேற்கத்திய ஊடகமாம் Channel 4 )  வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

அந்த ஒரு ஊடகம் செய்த நற்செயலுக்காக ஏனைய ஊத்தைவாளிவ் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை நம்ப வேண்டிய நன்றிக்கடன் ஒருவருக்கும் இருக்கக்கூடாது.

மேற்குலகம் எமக்கு தஞ்சம் தந்தது என்பதற்காக எம்மவர் அழிவுகளை உதாசினப்படுத்தி தமக்கானவர்களின் அழிவுகளை நியாயப்படுத்தும் மேற்குலக ஊடகங்களை நானும் என்னைப்போன்றவர்களும் வெறுக்கின்றோம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நீதி நேர்மை நியாயம் தர்மம் அதர்மம் எல்லாம் பார்க்க கூடாது நமது இனம் வாழனும் அவ்வளவே அதுக்கு என்ன வழி ?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இங்கு நீதி நேர்மை நியாயம் தர்மம் அதர்மம் எல்லாம் பார்க்க கூடாது நமது இனம் வாழனும் அவ்வளவே அதுக்கு என்ன வழி ?

உக்ரேனுக்காக மட்டும் மனமுருகி தேவாரம் பாடாதே. கட்டுரைகள் வரையாதே. கவிதைகள் வடியாதே. நீயும் உன் பாடுமாய் இரு.
நானும் அப்படியே இருப்பேன். 😁

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

தனக்காக தமிழர்களிடம் தமிழில் பிரசாரம் செய்ய தமிழர்கள் கிடைத்தது விளாடிமிர் புரினின் பெரிய அதிஷ்டம்.

நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோக்களுக்கு  தாளம் போட உங்களை போல ஆட்கள் இருக்கும் போது புட்டினுக்கும் ஆட்கள் இருப்பினம் தானே.!!!

2 hours ago, Sasi_varnam said:

(மேற்கத்திய ஊடகமாம் Channel 4 )  வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

எங்களை அழித்த அதே ஆட்கள் தான் நாசிஸ்டுகளுக்கு ஆயுதம். கொடுக்கினம். இரசாயன ஆயுத ஆய்வுகூடங்கள் வைத்து ஆய்வுகள் நடத்துகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

உக்ரேனுக்காக மட்டும் மனமுருகி தேவாரம் பாடாதே. கட்டுரைகள் வரையாதே. கவிதைகள் வடியாதே. நீயும் உன் பாடுமாய் இரு.
நானும் அப்படியே இருப்பேன். 😁

உக்கிரேனோ  ரசியாவோ இந்தியாவ அமெரிக்கனோ சீனாவோ ஜப்பானோ எமக்காக இதுவரை அழவில்லை  அழபோவதும் இல்லை காரணம் உலக அரசியல் அப்படிதான் அதை புரிந்து கொள்பவன் ஞானி .

பக்கத்து வீட்டு  வெள்ளைக்கு உங்கள் ஆட்கள் முறையாக பிரித்து போட்டு இங்கு வந்திருந்தால் நான் இங்கு வருகிறேன் என்று என்னிடம்  திட்டு வாங்குவார்  அவருக்கு சிட்டுக்குருவி புறா காகக்துக்கு நான் உணவளிப்பது துப்புரவாய் பிடிக்காது அதுகளால் நோய் பரவுதாம் . பிரான்சு பக்கம் போவதென்றால் தானே வந்து உதவுவார் காரணம் போர்டெக்ஸ் வைன். 

இந்த வைன்  கதை இங்கு சொல்வதுக்கு  காரணம் இருக்கு .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

தனக்காக தமிழர்களிடம் தமிழில் பிரசாரம் செய்ய தமிழர்கள் கிடைத்தது விளாடிமிர் புரினின் பெரிய அதிஷ்டம்.

ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான், வெனிசுவேலா, கொலம்பியா, கியூபா, வியட்னாம், லாவோஸ், கம்போடியா, போன்ற நாடுகளை அழித்தொழித்த அமெரிக்காவிற்கு ஒத்தூத ஆட்களிருக்கும்போது ரஸ்யாவிற்கு ஆட்களிருப்பது ஒன்றும் வியப்பில்லையே 😉

5 hours ago, Sasi_varnam said:

(மேற்கத்திய ஊடகமாம் Channel 4 )  வில் முள்ளிவாய்க்கால் அழிவுகள் பற்றி ஆதாரத்தோடு வெளியிட்டபோது 'கலம் மக்ரே' இன்னும் சில ஊடகவியலாளர்களை இப்படித்தான் இலங்கை அரசாங்கம் வெள்ளைப்புலிகள், பொய்யாக கோர்க்கப்பட்ட, சோடிக்கப்பட்ட செய்தி என்று பிரச்சாரம் செய்தது.. எனக்கு என்னவோ தெரியலை இதுவும் ஞாபகத்தில் வந்து தொலைக்குது.

நீங்கள் தற்போதும் channel 4 மட்டும்தான்  பார்க்கிறீர்களெனக் கூறுவதை நம்புகிறேன். 😉

3 hours ago, குமாரசாமி said:

அந்த ஒரு ஊடகம் செய்த நற்செயலுக்காக ஏனைய ஊத்தைவாளிவ் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை நம்ப வேண்டிய நன்றிக்கடன் ஒருவருக்கும் இருக்கக்கூடாது.

மேற்குலகம் எமக்கு தஞ்சம் தந்தது என்பதற்காக எம்மவர் அழிவுகளை உதாசினப்படுத்தி தமக்கானவர்களின் அழிவுகளை நியாயப்படுத்தும் மேற்குலக ஊடகங்களை நானும் என்னைப்போன்றவர்களும் வெறுக்கின்றோம்.

சசி தன்னை நன்றியுணர்வுள்ள ஆள் எனக் கூறுவதாக அர்த்தம் கொள்ளலாமா ? 

அழிவுக்குள்ளான அந்தப் படைப்பிரிவு ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களது என்று ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவனுடையதாக இருந்தாலும் சந்தோசமே. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

அவருக்கு சிட்டுக்குருவி புறா காகக்துக்கு நான் உணவளிப்பது துப்புரவாய் பிடிக்காது அதுகளால் நோய் பரவுதாம்

இந்த ஒரு விஷயத்தில் நான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்..

பறவைகள் மிருகங்களுக்கு நாங்கள் உணவளித்தால் அவை தமது இரைதேடும் திறமையை இழந்து அத்திறமை அதன் குஞ்சுகளுக்கும் இல்லாமல் போய் ஒரு கட்டத்தில் இவ்வுயிரினம் அருக நேரலாம். நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதும் உண்மை தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

உக்கிரேனோ  ரசியாவோ இந்தியாவ அமெரிக்கனோ சீனாவோ ஜப்பானோ எமக்காக இதுவரை அழவில்லை  அழபோவதும் இல்லை காரணம் உலக அரசியல் அப்படிதான் அதை புரிந்து கொள்பவன் ஞானி

அதைத்தான் திரும்பதிரும்ப கூறுகின்றேன். உனக்காக அழாதவனுக்கு நீ ஏன் அழவேண்டும்?
அழுத கண்ணீரும் கடன்.

அரசியல்,வியாபார,கௌரவ குறைச்சலுக்காக  நடக்கும் சண்டையை  இனவிடுதலை போரில் அழிந்த  முள்ளிவாக்காலுடன் ஒப்பிட ஒரு மனத்தைரியம் வேண்டும்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அதைத்தான் திரும்பதிரும்ப கூறுகின்றேன். உனக்காக அழாதவனுக்கு நீ ஏன் அழவேண்டும்?
அழுத கண்ணீரும் கடன்.

சமீபத்தில் யாழ் வந்த அமெரிக்க தூதர் தமிழ் மக்களின் கதையை கேட்டு அழுதவவாம் அதாவது வெளியாள்  நீதி நேர்மை நியாயம் தர்மம் அதர்மம்  கருணை உண்மை எல்லாம் இருப்பது போல் அது இந்த உலகிற்கு தேவையென்பது போல் நடிக்கணும் நடிக்க தெரிந்து இருக்கனும் உள்ளுக்குள் நமது இனம் நாடு என்று வரும் போது அதெல்லாவற்ரையும் தூக்கி எறிந்து விடணும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

சமீபத்தில் யாழ் வந்த அமெரிக்க தூதர் தமிழ் மக்களின் கதையை கேட்டு அழுதவவாம் அதாவது வெளியாள்  நீதி நேர்மை நியாயம் தர்மம் அதர்மம்  கருணை உண்மை எல்லாம் இருப்பது போல் அது இந்த உலகிற்கு தேவையென்பது போல் நடிக்கணும் நடிக்க தெரிந்து இருக்கனும் உள்ளுக்குள் நமது இனம் நாடு என்று வரும் போது அதெல்லாவற்ரையும் தூக்கி எறிந்து விடணும் .

ஒரு உண்மைச்சம்பவம் சொல்கிறேன் கேளுங்கள். நம்புவதும் நம்பாமல் விடுவதும் உங்கள் பிரச்சனை.

சென்ற  இரு வாரங்களாக ஒரு உக்ரேனிய பெண் என்னுடன் வேலை செய்கின்றார். அவர் ஜேர்மனிக்கு விருந்தாளியாக வந்துள்ளார்(அகதி)  நான் அவரிடம் சொல்லாத ஆறுதல் வார்த்தைகள் இல்லை. புட்டினை திட்டாத வார்த்தைகளும் இல்லை.

நிற்க....

அவர் என்னிடம் ஒரு  சிறிய விளக்கம் கேட்டார். அதை இன்றிரவு 22.00 மணிக்கு பின்னர் கூறுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

அவர் என்னிடம் ஒரு  சிறிய விளக்கம் கேட்டார். அதை இன்றிரவு 22.00 மணிக்கு பின்னர் கூறுகின்றேன்.

இன்றைக்கு இரவு 22:00 மணி எப்ப வரும் என்று,
ஆவலுடன்…. பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

அவர் என்னிடம் ஒரு  சிறிய விளக்கம் கேட்டார். அதை இன்றிரவு 22.00 மணிக்கு பின்னர் கூறுகின்றேன்.

21.59 க்கு அட்டமிநவமி கூடுது சார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, kalyani said:

நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோக்களுக்கு  தாளம் போட உங்களை போல ஆட்கள் இருக்கும் போது புட்டினுக்கும் ஆட்கள் இருப்பினம் தானே.!!!

ஜனநாயக மேற்குலக நாடுகளின் பக்கம் சேரவிரும்பும் உக்ரைனை ஆக்கிரமிக்க வெறிகொண்டு போர் செய்கின்ற ரஷ்யாவின் அநீதியோடு நீங்கள் சொல்கின்ற

20 hours ago, kalyani said:

நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோக்களுக்கு  தாளம் போட உங்களை போல ஆட்கள் இருக்கும் போது புட்டினுக்கும் ஆட்கள் இருப்பினம் தானே.!!!

நாசிட்டுகளுக்கும் திருட்டு நேட்டோ  நாடுகள் தான் எங்களுக்கு கல்வி, வேலைவாய்பு தந்து வாழ்கையில் நல்ல நிலைக்கு வர உதவியவை. இந்த நாடுகளில் இருந்து தான் இலங்கைக்கு உறவினர்கள் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்பி உதவிகள் செய்ய முடிகின்றது.  இலங்கையில் தமிழர்கள் ஒரளவுக்காவது பாதுகாப்பாக இருக்கவும் இந்த நாடுகளே தலையிடுகின்றன.  ஆகவே நாம் நாசிட்டு திருட்டு நேட்டோ நாடுகளுக்காக தாளமும் போடுவோம் தேவாரமும் பாடுவோம். ஆனால்  இந்த நாடுகளில் வளமான வாழ்க்கையை அனுபவிக்கும் இலங்கை தமிழர்கள் சிலர்  இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிற்கின்ற ரஷ்யாவுக்காக தேவாரம் பாடுவது தான் விளங்கவில்லை.

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டினை திட்டாத வார்த்தைகளும் இல்லை

புட்டினை திட்டலாமா மனித காப்பாளர் புரினை திட்டலாமா 😭

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புட்டினை திட்டாத வார்த்தைகளும் இல்லை

புட்டினை திட்டலாமா மனித காப்பாளர் புரினை திட்டலாமா 😭

நீங்களும் விடுறதாய் இல்லை.

ரஸ்ஸியாவினால் உக்ரேனில் ஏற்படுத்தப்படும் அழிவும், ரஸ்ஸியாவுக்கு ஏற்பட்டுவரும் ஆள், தளபாட இழப்பும் பரம ரகசியமல்ல. இங்கே சிலர் அதனை பொய்யென்று நிறுவ தலைகீழாய் முயன்றாலும், அதுவே உண்மையென்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே நீங்கள் அவ்வளவாகச் சிரமப்படத் தேவையில்லையென்பதே எனது தாழ்மையான கருத்து!

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
    • 7 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரிப்பு! நாட்டின் 07 மாகாணங்களில் இன்று (18) வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இம்மாதத்தின் இறுதிவரை நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை தரச்சுட்டெண் அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. https://thinakkural.lk/article/299507
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.