Jump to content

மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்!

பொருளாதார நெருக்கடி நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய நான்கு குழுக்களை நியமிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்தன மற்றும் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாகல காரியவசம் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுக்கள் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்ப்பதற்காக யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கூறினார்.
 

http://www.samakalam.com/மக்கள்-பிரச்சனைகளை-ஆராய/

 

Link to comment
Share on other sites

திரும்பவும் முதலில் இருந்தா....! முடியல.

அப்படியே இவர்கள் ஒவ்வொருவரும் கலந்துரையாட இன்னொரு குழுவை அமைப்பினம். அந்தக் குழு திட்டமிடலுக்காக இன்னொரு குழுவை அமைக்க, அந்தக் குழு செயற்பாட்டுக்காக புதுக் குழுவை அமைக்க, அந்தப் புதுக் குழு செயற்பாடல்களில் உள்ள சிக்கல்களைப் பற்றி ஆராய பிறிதொரு குழுவை அமைக்க...

குழுவும் குழுவும் குழுக்கல்களாக சேர்ந்து கூத்தாட்டம் போட்டே ஆடிக் கழிப்பாரே பாராய்...அவர் ஆடி களைப்பாரே பாராய்!
 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

மக்கள் பிரச்சனைகளை ஆராய குழுக்களை நியமித்தார் பிரதமர்!

வழமைபோல ஆணைக்குழுக்கள் அமைக்கலையோ?

10 minutes ago, கிருபன் said:

உரப் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

சாகல காரியவசம் எரிபொருள் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தமிழர்களா?

அண்ணன் தம்பிகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

திரும்பவும் முதலில் இருந்தா....! முடியல.

மக்கள் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யவும் திசைதிருப்புவதற்குமான திட்டம். அதனால், அதனை, அவன் முடிப்பான் என்று கோத்தா டீலைப்போட்டுக் குடுத்திருக்கிறார். நரியார் இறங்கியிருக்கிறார். இரண்டாவது நிலையிலிருந்த மக்கள் சக்தியிடம் கொடுக்காது சனநாயக மரபற்று நரியாரிடம் சும்மா கொடுத்திருப்பார்களா? இன்னும் சிலவாரங்களில் சாயம் களன்றுவிடும்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியல்வாதி தான் சார்ந்த சமூகத்தின் குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் உடனுக்குடன் தானே அறிந்தவராக இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு மேல் இலங்கைத் தீவில் போராட்டங்கள் நடக்குது எதற்காக எனப் புரிந்துகொள்ளாது குழு அமைச்சு ஆராய்கிறாராம் இவர் எல்லாம் ஒரு அரசியல் தலைவர்.

 

1     நாட்டில் அனைவரையும் உற்பத்தியில் ஈடுபட வைக்கவேண்டும் அரச ஊழியர்கள் சும்மா போய் வாங்கு மேசையத் தேக்கிறதை விட்டுட்டு ஐந்து நாள் வேலை யில் ஒருநாள் கலத்தில் இறங்கி பராமரிப்புப் பணிகளிலும் உற்பத்தித் துறைகளிலும் வேலை செய்யவேண்டும்

2   ஆசிரியர்கள் கடந்த இரண்டு ஆண்டில் சுமார் ஒருமாதம்கூட வேலைக்குப் போகவில்லை. தவணை விடுமுறை நாதளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடவேண்டும்.

3   அரச பாடசாலை ஆசிரியர்கள் தனியாக தனியார் கல்விச்சேவைகளில் ரியூசன் எடுத்தால் வேலை காலி. தவிர அவரது சேவைக்காலத்தில் படிப்பித்த மாணவர்களது தேர்ச்சிக்கு அவரே பொறுப்புக்கூறவேண்டும்.

சிள்ளரை வாணிபத்திலிருந்து அனைத்து வியாபார நிறுவனங்களும் உணவுப்பொருளுக்கு குறிப்பிட்ட  நுகர்வு வரியும் ஏனையவற்றுக்கு குறுப்பிட்ட விற்பனை வரியும் வாடிக்கையாளரிடமிருந்து அறவிட்டு அரசுக்குக் கொடுக்கவேண்டும். அனைத்து விற்பனைகளும் ஆவணப்படுத்தப்பட்டு ரசீதுகள் கொடுக்கப்படல்வேண்டும். அதற்கான   பாவனை இயந்திரங்கள் கட்டாயமாக்கப்படல்வேண்டும்.

பராயமடையாத திருமணங்களையோ லிவிங் டூ கெதரையோ அனுமதிக்கமுடியாது பெற்றாருக்கு இதில் தொடர்பில்லை என பெற்றார் மறுத்தால் பராமரிப்பு இடங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்களை மாற்றவேண்டும்.

குடிச்சுபோட்டு வாகனமோட்டுவோருக்கு, அனுமதிப்பத்திரத்துக்கான வாழ்நாள் தடைவிதிக்கவேண்டும்.

அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனமோடுவோர் வாழ்நாளில் எந்தக்கலத்திலும் வாகன ஓட்டுனருக்கான அனுமதிப்பத்திரம் பெறமுடியாது.

என்னுடைய ஆட்சியில் நாடு இப்படித்தான் இருக்கும்.

போடுங்கோ புள்ளடி பூனைக்கு நேரே

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கே மக்களின் பிரச்சனை தெரியுது..... உந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு தெரியவில்லையாம் .....இந்த சைக்கிள் கப்பில தன்னுடைய கட்சியை வளர்த்து போடுவம் என நினைக்கிறார்  

9 minutes ago, Elugnajiru said:

ஒரு அரசியல்வாதி தான் சார்ந்த சமூகத்தின் குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் உடனுக்குடன் தானே அறிந்தவராக இருக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு மேல் இலங்கைத் தீவில் போராட்டங்கள் நடக்குது எதற்காக எனப் புரிந்துகொள்ளாது குழு அமைச்சு ஆராய்கிறாராம் இவர் எல்லாம் ஒரு அரசியல் தலைவர்.

 

1     நாட்டில் அனைவரையும் உற்பத்தியில் ஈடுபட வைக்கவேண்டும் அரச ஊழியர்கள் சும்மா போய் வாங்கு மேசையத் தேக்கிறதை விட்டுட்டு ஐந்து நாள் வேலை யில் ஒருநாள் கலத்தில் இறங்கி பராமரிப்புப் பணிகளிலும் உற்பத்தித் துறைகளிலும் வேலை செய்யவேண்டும்

2   ஆசிரியர்கள் கடந்த இரண்டு ஆண்டில் சுமார் ஒருமாதம்கூட வேலைக்குப் போகவில்லை. தவணை விடுமுறை நாதளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளில் ஈடுபடவேண்டும்.

3   அரச பாடசாலை ஆசிரியர்கள் தனியாக தனியார் கல்விச்சேவைகளில் ரியூசன் எடுத்தால் வேலை காலி. தவிர அவரது சேவைக்காலத்தில் படிப்பித்த மாணவர்களது தேர்ச்சிக்கு அவரே பொறுப்புக்கூறவேண்டும்.

சிள்ளரை வாணிபத்திலிருந்து அனைத்து வியாபார நிறுவனங்களும் உணவுப்பொருளுக்கு குறிப்பிட்ட  நுகர்வு வரியும் ஏனையவற்றுக்கு குறுப்பிட்ட விற்பனை வரியும் வாடிக்கையாளரிடமிருந்து அறவிட்டு அரசுக்குக் கொடுக்கவேண்டும். அனைத்து விற்பனைகளும் ஆவணப்படுத்தப்பட்டு ரசீதுகள் கொடுக்கப்படல்வேண்டும். அதற்கான   பாவனை இயந்திரங்கள் கட்டாயமாக்கப்படல்வேண்டும்.

பராயமடையாத திருமணங்களையோ லிவிங் டூ கெதரையோ அனுமதிக்கமுடியாது பெற்றாருக்கு இதில் தொடர்பில்லை என பெற்றார் மறுத்தால் பராமரிப்பு இடங்களுக்குச் சம்பந்தப்பட்டவர்களை மாற்றவேண்டும்.

குடிச்சுபோட்டு வாகனமோட்டுவோருக்கு, அனுமதிப்பத்திரத்துக்கான வாழ்நாள் தடைவிதிக்கவேண்டும்.

அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனமோடுவோர் வாழ்நாளில் எந்தக்கலத்திலும் வாகன ஓட்டுனருக்கான அனுமதிப்பத்திரம் பெறமுடியாது.

என்னுடைய ஆட்சியில் நாடு இப்படித்தான் இருக்கும்.

போடுங்கோ புள்ளடி பூனைக்கு நேரே

நல்லது,, ஆனால் இடது சாரி வாடை அடிக்கின்றது,ஆகவே நீங்கள் ஆட்சி அமைக்க நான் IMF கதைக்க மாட்டேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

மக்கள் போராட்டங்களை நீர்த்துப்போகச் செய்யவும் திசைதிருப்புவதற்குமான திட்டம். அதனால், அதனை, அவன் முடிப்பான் என்று கோத்தா டீலைப்போட்டுக் குடுத்திருக்கிறார். நரியார் இறங்கியிருக்கிறார். இரண்டாவது நிலையிலிருந்த மக்கள் சக்தியிடம் கொடுக்காது சனநாயக மரபற்று நரியாரிடம் சும்மா கொடுத்திருப்பார்களா? இன்னும் சிலவாரங்களில் சாயம் களன்றுவிடும்தானே.

இந்த இடத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார்....ஜே வி பி செய்தியின் ...வெட்டுத்துண்டு

 

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய போராடுபவர்களின் உணர்வுடன் தான் உடன்படுகின்ற போதிலும் அது நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பலனளிக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இந்த இடத்தில் இப்படிச் சொல்லியிருக்கிறார்....ஜே வி பி செய்தியின் ...வெட்டுத்துண்டு

 

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி நீக்கம் செய்ய போராடுபவர்களின் உணர்வுடன் தான் உடன்படுகின்ற போதிலும் அது நடக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது பலனளிக்காது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

ரணில் மற்றக் கட்சிகள் சுட்டுவதுபோல், கோத்தாவின் முகவரேயன்றி வேறல்ல. யுத்தம் முடிந்து நாடு பெரும் இன்னலை எதிர்கொள்ள வெற்று மென்போக்கான கருத்துகளோடு நகர்ந்து இன்று பிரதமராகியுள்ளார். நாளை மொட்டுக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றாலும் ஆச்சரியப்பட முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nochchi said:

ரணில் மற்றக் கட்சிகள் சுட்டுவதுபோல், கோத்தாவின் முகவரேயன்றி வேறல்ல. யுத்தம் முடிந்து நாடு பெரும் இன்னலை எதிர்கொள்ள வெற்று மென்போக்கான கருத்துகளோடு நகர்ந்து இன்று பிரதமராகியுள்ளார். நாளை மொட்டுக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றாலும் ஆச்சரியப்பட முடியாது

இதற்க்காகத்தான்  கோ கோத்தா போராட்ட ஆரம்பகாலம் முதல் சொல்கிறேன். ஈழத்தமிழனே அமைதியாக உன் வேலையும் உன் பாடும் என இருந்து தொலை....

சிங்களத்துக்கு காய்ஞ்ச வயிறு குளிர்ந்தால் இனவாதம் தலைக்கேறும்.

சுமந்திரன் ஓ போடட்டும்....அது அவர் தொழில்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.