Jump to content

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அல் ஜசீரா செய்தியாளர் கொல்லப்பட்டார்

மேற்குக் கரையில்... இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அல் ஜசீரா செய்தியாளர் கொல்லப்பட்டார்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய சோதனையில் அல் ஜசீராவுக்கு செய்தி அளித்துக்கொண்டிருந்த பாலஸ்தீனிய-அமெரிக்க பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

51 வயதான ஷெரின் அபு அக்லா, இஸ்ரேலிய துருப்புக்களால் வேண்டுமென்றே சுடப்பட்டதாகவும் அவரது தயாரிப்பாளரும் சுடப்பட்டு காயமடைந்தார் என்றும் அறிவிக்கப்பட்டுட்டள்ளது,

துப்பாக்கிச் சூட்டின் போது பாலஸ்தீனிய ஆயுததாரிகளால் அவர்கள் சுடப்பட்டிருக்கலாம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

https://athavannews.com/2022/1281480

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா காலமானார்

13 மே 2022
 

ஷேக் கலீஃபா காலமானார்

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

ஷேக் கலீஃபா

உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவரான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73வது வயதில் காலமானார்.

ஷேக் கலீஃபா 2004ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராக இருந்தார், ஆனால் 2014இல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதிலிருந்து ஆளுகையில் அவரது பங்கு பெரும்பாலும் சடங்கு ரீதியாக மாறிப்போனது.

அவரது ஒன்றுவிட்ட சகோதரர் முகமது பின் சயீத் அல்-நஹ்யான் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விவகாரங்களுக்குப் பொறுப்பாக உள்ளார். அல்-நஹ்யான் குடும்பத்திற்கு $150bn (£123bn) சொத்து இருப்பதாக நம்பப்படுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக இருப்பதுடன், அதை உள்ளடக்கிய ஏழு எமிரேட்களின் எண்ணெய் வளம் மிக்க தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளராகவும் ஷேக் கலீஃபா இருந்தார். அவர் இறந்த தகவலை அதிகாரபூர்வ WAM செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அவரது மறைவையொட்டி வெள்ளிக்கிழமை முதல் அரைக்கம்பத்தில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் கொடிகள் பறக்க விடப்படும் என்றும் 40 நாட்களுக்கு அவரது மறைவுக்கான துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அதிபர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் முதல் மூன்று நாட்களுக்கு பொது மற்றும் தனியார் துறையில் பணிகள் நிறுத்தப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

ஷேக் கலீஃபா நவம்பர் 2004இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது அதிபராகப் பொறுப்பேற்றார், அபுதாபியின் 16ஆம் ஆட்சியாளராக அவரது தந்தைக்குப் பிறகு இவர் பதவிக்கு வந்தார்.

.தமது ஆட்சியின் முதல் பத்து ஆண்டுகளில், கூட்டாட்சி அரசாங்கம், அபுதாபி ஆகிய இரண்டின் பெரிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு ஷேக் கலீஃபா தலைமை தாங்கினார்.

ஆனால் பக்கவாதம் ஏற்பட்ட பிறகு, அவர் பொது வெளியில் அரிதாகவே காணப்பட்டார். அதே சமயம், ஆளுகை சார்பில் முக்கிய உத்தரவுகளை அவர் பிறப்பித்து வந்தார்.

தலைவர்கள் இரங்கல்

ஷேக் கலீஃபாவின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷரீஃப் இரங்கல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு தொலைநோக்கு தலைவரை இழந்துள்ளது, பாகிஸ்தான் ஒரு சிறந்த நண்பரை இழந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் எங்கள் இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஷபாஸ் ஷரீஃப் கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விரைவான வளர்ச்சியைக் கொண்டு வந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக ஷேக் கலீஃபா அன்புடன் நினைவுகூரப்படுவார் என்று தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசியலமைப்பின்படி, துபாய் ஆட்சியாளரான துணை அதிபர் ஷேக் முகமது பின் ரஷித் அல்-மக்தூம் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இடைக்கால அதிபராக செயல்படுவார்.

ஏழு எமிரேட்ஸ் ஆட்சியாளர்களை ஒன்றிணைக்கும் கூட்டாட்சி கவுன்சில், புதிய அதிபரை தேர்ந்தெடுக்க 30 நாட்களுக்குள் கூட வேண்டும்.

https://www.bbc.com/tamil/global-61438622

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஏராளன் said:

அவரது மறைவையொட்டி வெள்ளிக்கிழமை முதல் அரைக்கம்பத்தில் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் கொடிகள் பறக்க விடப்படும் என்றும் 40 நாட்களுக்கு அவரது மறைவுக்கான துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அதிபர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் முதல் மூன்று நாட்களுக்கு பொது மற்றும் தனியார் துறையில் பணிகள் நிறுத்தப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

நாற்பது நாட்கள், துக்கம் அனுஷ்டிப்பதிலேருந்தே.... 
அந்த மன்னர் நாட்டிற்கு நல்ல சேவைகளை ஆற்றி உள்ளார் போல் தெரிகின்றது.  
அத்துடன்... வெள்ளிக்கிழமை இறப்பது, 
முஸ்லீம்களுக்கு சிறப்பான நாள் என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.