Jump to content

"அல் ஜசீரா" ஊடகவியலாளரின்... இறுதிச் சடங்கில், மோதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அல் ஜசீரா ஊடகவியலாளரின் இறுதிச் சடங்கில் மோதல்!

"அல் ஜசீரா" ஊடகவியலாளரின்... இறுதிச் சடங்கில், மோதல்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்ட அல் ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லாவின், இறுதிச் சடங்கில் இஸ்ரேலிய பொலிஸார் துக்கத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கியுள்ளனர்.

பொலிஸார், சிலர் தடியடிகளைப் பயன்படுத்தி, பாலஸ்தீனியர்களின் கூட்டத்திற்குள் நுழைந்ததால், ஷிரீன் அபு அக்லாவை வைத்திருந்த சவப்பெட்டி கிட்டத்தட்ட விழுந்தது.

ஆனால், இஸ்ரேலிய பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கிய பின்னரே, தாம் அவர்களை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் சவப்பெட்டியைச் சுற்றி திரண்டிருந்த மக்கள், அபு அக்லாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அதிகாரிகள் கூட்டத்தை பின்னுக்குத் தள்ளுவதற்கு முன்பு, அங்கு சிறிய பதற்றம் ஏற்பட்டிருந்தது.

வியாழக்கிழமை, பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் வளாகத்தில் ஒரு இறுதிச் சடங்கின் அரிதான நிகழ்வு அவருக்கு வழங்கப்பட்டது. அங்கு அவரது சவப்பெட்டி பாலஸ்தீனியக் கொடியால் மூடப்பட்டிருந்தது. ஜனாதிபதி அப்பாஸ் அவருக்கு அஞ்சலி செலுத்தினார், பாலஸ்தீனிய நோக்கத்தை பாதுகாக்க ‘தன் உயிரை தியாகம் செய்த’ ‘சுதந்திர வார்த்தையின் தியாகி’ என்று வர்ணித்தார்.

அவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலே முழுப் பொறுப்பு என்றும், போர்க் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை பரிந்துரைப்பதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ‘அப்பாஸ் எந்த அடிப்படையும் இல்லாமல் இஸ்ரேல் மீது பழி சுமத்துகிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அபு அக்லா புதன்கிழமை அதிகாலையில் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து அறிக்கை அளித்தார். அப்போது, அபு அக்லா புதன்கிழமை சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன்போது, மற்றொரு பாலஸ்தீனிய பத்திரிகையாளர் அல் ஜசீரா தயாரிப்பாளர் அலி சமூதி வன்முறையின் போது சுடப்பட்டு காயமடைந்தார்.

51 வயதான பாலஸ்தீனிய அமெரிக்கரான ஷிரீன் அபு அக்லா, அல் ஜசீராவின் அரபு செய்தி சேவையின் மூத்த ஊடகவியலாளராக இருந்தார் மற்றும் இரண்டு தசாப்தங்களாக இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்கள் குறித்து செய்தி வெளியிட்டார்.

https://athavannews.com/2022/1281797

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊடகமும் நடுநிலை ஊடகங்கள் இல்லை. அதிலும் அல் ஜசீரா இல்லவே இல்லை. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகள்  பெரிய வெள்ளி குண்டுத் தாக்குதலை நடத்திய பொழுது அல் ஜாசீரா எப்படி அமுக்கி வாசித்தார்கள் என்று எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

எந்த ஊடகமும் நடுநிலை ஊடகங்கள் இல்லை. அதிலும் அல் ஜசீரா இல்லவே இல்லை. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகள்  பெரிய வெள்ளி குண்டுத் தாக்குதலை நடத்திய பொழுது அல் ஜாசீரா எப்படி அமுக்கி வாசித்தார்கள் என்று எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு 

https://www.aljazeera.com/tag/sri-lanka-bombing/

 

https://www.aljazeera.com/news/2019/5/2/sri-lanka-bombings-all-the-latest-updates

 

எதற்கும் கண்ணோட்டம் இருக்கிறது, உங்களுடையது உட்பட.

அல்ஜஷீரா, இந்த தாக்குதல் செய்தி மற்றும் ஆய்வுகளித்திற்காக ஓர் பகுதியை உருவாக்கி வைத்து உள்ளது.

சில வேளைகளில், அல்ஜஷீரா செய்திகல், நீங்கள் எதிர்பார்க்கும் தொனியில் இல்லாமல் இருந்து இருக்கலாம்.

அல்ஜஸ்ஸிர, பொதுவாக தொடர்பு பட்டு இருக்கக் கூடிய தரப்புகளை தானாக சாடாமல், அதன் அல்லது வேறு கண்ணோட்டத்தை திணிக்காமல்  செய்திகளை பிரசுரிப்பதில் பத்திரிகை துறை நிபுணத்துவம் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

https://www.aljazeera.com/tag/sri-lanka-bombing/

 

https://www.aljazeera.com/news/2019/5/2/sri-lanka-bombings-all-the-latest-updates

 

எதற்கும் கண்ணோட்டம் இருக்கிறது, உங்களுடையது உட்பட.

அல்ஜஷீரா, இந்த தாக்குதல் செய்தி மற்றும் ஆய்வுகளித்திற்காக ஓர் பகுதியை உருவாக்கி வைத்து உள்ளது.

சில வேளைகளில், அல்ஜஷீரா செய்திகல், நீங்கள் எதிர்பார்க்கும் தொனியில் இல்லாமல் இருந்து இருக்கலாம்.

அல்ஜஸ்ஸிர, பொதுவாக தொடர்பு பட்டு இருக்கக் கூடிய தரப்புகளை தானாக சாடாமல், அதன் அல்லது வேறு கண்ணோட்டத்தை திணிக்காமல்  செய்திகளை பிரசுரிப்பதில் பத்திரிகை துறை நிபுணத்துவம் உள்ளது. 

ஆனால் அந்த கண்ணோட்டத்தை இஷ்ரேல் பலஸ்த்தெனியா பிரச்சனையில் காண்பிப்பதில்லையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பகிடி said:

அதிலும் அல் ஜசீரா இல்லவே இல்லை.

ஓம் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்ஜசீரா பத்திரிக்கையாளர் பாலஸ்த்தீனத்தைச் சேர்ந்த கிறீஸ்த்தவர். தனது மக்கள் சார்பாக அவர் செய்தி சேகரித்தால்க்கூட அது  தவறில்லையே. தமிழ்நெட் செய்தது சரியென்றால், இவர் செய்ததும் சரியே.

அவரை வேண்டுமென்று கொன்றதா அல்லது தவறுதலாகக் கொன்றதா என்பது ஒரு புறமிருக்க, பாலஸ்த்தீனரின் கொலைகள் பற்றி இஸ்ரேலியர்கள் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததுமில்லை, அக்கறைப்பட்டதுமில்லை. கிட்டத்தட்ட தமிழனெல்லாம் புலி - புலியெல்லாம் தமிழன் கதைதான் அங்கும்.

அதுவும் அவரது மரண ஊர்வலத்தில் இஸ்ரேல் நடந்துகொண்ட முறை, சிங்கள ராணுவத்தின் அராஜகத்திற்கு ஒப்பானது. அவரது பேழையினைக் காவிச்சென்றவர்களை அடித்துத் துன்புருத்தி பேழை கீழே விழுமளவும் அராஜகம் பண்ணியிருக்கிறார்கள். அவரது உடலை நடைபவனியாக எடுத்துச் செல்வதைத் தடுத்து காரில் காவின் செல்லும்வரை இந்த அக்கிரமம் தொடர்ந்திருக்கிறது.

 

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.