Jump to content

"அல் ஜசீரா" ஊடகவியலாளரின்... இறுதிச் சடங்கில், மோதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அல் ஜசீரா ஊடகவியலாளரின் இறுதிச் சடங்கில் மோதல்!

"அல் ஜசீரா" ஊடகவியலாளரின்... இறுதிச் சடங்கில், மோதல்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கொல்லப்பட்ட அல் ஜசீரா ஊடகவியலாளர் ஷிரீன் அபு அக்லாவின், இறுதிச் சடங்கில் இஸ்ரேலிய பொலிஸார் துக்கத்தில் கலந்து கொண்டவர்களை தாக்கியுள்ளனர்.

பொலிஸார், சிலர் தடியடிகளைப் பயன்படுத்தி, பாலஸ்தீனியர்களின் கூட்டத்திற்குள் நுழைந்ததால், ஷிரீன் அபு அக்லாவை வைத்திருந்த சவப்பெட்டி கிட்டத்தட்ட விழுந்தது.

ஆனால், இஸ்ரேலிய பொலிஸார் மீது கற்களை வீசி தாக்கிய பின்னரே, தாம் அவர்களை தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மருத்துவமனை வளாகத்தில் சவப்பெட்டியைச் சுற்றி திரண்டிருந்த மக்கள், அபு அக்லாவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர். அதிகாரிகள் கூட்டத்தை பின்னுக்குத் தள்ளுவதற்கு முன்பு, அங்கு சிறிய பதற்றம் ஏற்பட்டிருந்தது.

வியாழக்கிழமை, பாலஸ்தீனிய ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் வளாகத்தில் ஒரு இறுதிச் சடங்கின் அரிதான நிகழ்வு அவருக்கு வழங்கப்பட்டது. அங்கு அவரது சவப்பெட்டி பாலஸ்தீனியக் கொடியால் மூடப்பட்டிருந்தது. ஜனாதிபதி அப்பாஸ் அவருக்கு அஞ்சலி செலுத்தினார், பாலஸ்தீனிய நோக்கத்தை பாதுகாக்க ‘தன் உயிரை தியாகம் செய்த’ ‘சுதந்திர வார்த்தையின் தியாகி’ என்று வர்ணித்தார்.

அவர் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலே முழுப் பொறுப்பு என்றும், போர்க் குற்றங்களை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை பரிந்துரைப்பதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ‘அப்பாஸ் எந்த அடிப்படையும் இல்லாமல் இஸ்ரேல் மீது பழி சுமத்துகிறார்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

அபு அக்லா புதன்கிழமை அதிகாலையில் ஜெனின் அகதிகள் முகாமில் இஸ்ரேலிய தாக்குதல் குறித்து அறிக்கை அளித்தார். அப்போது, அபு அக்லா புதன்கிழமை சர்ச்சைக்குரிய சூழ்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதன்போது, மற்றொரு பாலஸ்தீனிய பத்திரிகையாளர் அல் ஜசீரா தயாரிப்பாளர் அலி சமூதி வன்முறையின் போது சுடப்பட்டு காயமடைந்தார்.

51 வயதான பாலஸ்தீனிய அமெரிக்கரான ஷிரீன் அபு அக்லா, அல் ஜசீராவின் அரபு செய்தி சேவையின் மூத்த ஊடகவியலாளராக இருந்தார் மற்றும் இரண்டு தசாப்தங்களாக இஸ்ரேல்- பாலஸ்தீன மோதல்கள் குறித்து செய்தி வெளியிட்டார்.

https://athavannews.com/2022/1281797

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊடகமும் நடுநிலை ஊடகங்கள் இல்லை. அதிலும் அல் ஜசீரா இல்லவே இல்லை. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகள்  பெரிய வெள்ளி குண்டுத் தாக்குதலை நடத்திய பொழுது அல் ஜாசீரா எப்படி அமுக்கி வாசித்தார்கள் என்று எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பகிடி said:

எந்த ஊடகமும் நடுநிலை ஊடகங்கள் இல்லை. அதிலும் அல் ஜசீரா இல்லவே இல்லை. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகள்  பெரிய வெள்ளி குண்டுத் தாக்குதலை நடத்திய பொழுது அல் ஜாசீரா எப்படி அமுக்கி வாசித்தார்கள் என்று எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு 

https://www.aljazeera.com/tag/sri-lanka-bombing/

 

https://www.aljazeera.com/news/2019/5/2/sri-lanka-bombings-all-the-latest-updates

 

எதற்கும் கண்ணோட்டம் இருக்கிறது, உங்களுடையது உட்பட.

அல்ஜஷீரா, இந்த தாக்குதல் செய்தி மற்றும் ஆய்வுகளித்திற்காக ஓர் பகுதியை உருவாக்கி வைத்து உள்ளது.

சில வேளைகளில், அல்ஜஷீரா செய்திகல், நீங்கள் எதிர்பார்க்கும் தொனியில் இல்லாமல் இருந்து இருக்கலாம்.

அல்ஜஸ்ஸிர, பொதுவாக தொடர்பு பட்டு இருக்கக் கூடிய தரப்புகளை தானாக சாடாமல், அதன் அல்லது வேறு கண்ணோட்டத்தை திணிக்காமல்  செய்திகளை பிரசுரிப்பதில் பத்திரிகை துறை நிபுணத்துவம் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

https://www.aljazeera.com/tag/sri-lanka-bombing/

 

https://www.aljazeera.com/news/2019/5/2/sri-lanka-bombings-all-the-latest-updates

 

எதற்கும் கண்ணோட்டம் இருக்கிறது, உங்களுடையது உட்பட.

அல்ஜஷீரா, இந்த தாக்குதல் செய்தி மற்றும் ஆய்வுகளித்திற்காக ஓர் பகுதியை உருவாக்கி வைத்து உள்ளது.

சில வேளைகளில், அல்ஜஷீரா செய்திகல், நீங்கள் எதிர்பார்க்கும் தொனியில் இல்லாமல் இருந்து இருக்கலாம்.

அல்ஜஸ்ஸிர, பொதுவாக தொடர்பு பட்டு இருக்கக் கூடிய தரப்புகளை தானாக சாடாமல், அதன் அல்லது வேறு கண்ணோட்டத்தை திணிக்காமல்  செய்திகளை பிரசுரிப்பதில் பத்திரிகை துறை நிபுணத்துவம் உள்ளது. 

ஆனால் அந்த கண்ணோட்டத்தை இஷ்ரேல் பலஸ்த்தெனியா பிரச்சனையில் காண்பிப்பதில்லையே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பகிடி said:

அதிலும் அல் ஜசீரா இல்லவே இல்லை.

ஓம் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்ஜசீரா பத்திரிக்கையாளர் பாலஸ்த்தீனத்தைச் சேர்ந்த கிறீஸ்த்தவர். தனது மக்கள் சார்பாக அவர் செய்தி சேகரித்தால்க்கூட அது  தவறில்லையே. தமிழ்நெட் செய்தது சரியென்றால், இவர் செய்ததும் சரியே.

அவரை வேண்டுமென்று கொன்றதா அல்லது தவறுதலாகக் கொன்றதா என்பது ஒரு புறமிருக்க, பாலஸ்த்தீனரின் கொலைகள் பற்றி இஸ்ரேலியர்கள் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததுமில்லை, அக்கறைப்பட்டதுமில்லை. கிட்டத்தட்ட தமிழனெல்லாம் புலி - புலியெல்லாம் தமிழன் கதைதான் அங்கும்.

அதுவும் அவரது மரண ஊர்வலத்தில் இஸ்ரேல் நடந்துகொண்ட முறை, சிங்கள ராணுவத்தின் அராஜகத்திற்கு ஒப்பானது. அவரது பேழையினைக் காவிச்சென்றவர்களை அடித்துத் துன்புருத்தி பேழை கீழே விழுமளவும் அராஜகம் பண்ணியிருக்கிறார்கள். அவரது உடலை நடைபவனியாக எடுத்துச் செல்வதைத் தடுத்து காரில் காவின் செல்லும்வரை இந்த அக்கிரமம் தொடர்ந்திருக்கிறது.

 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.