Jump to content

ரஷ்ய படையெடுப்பால்.... உக்ரைனில் இதுவரை, "3,500க்கும் மேற்பட்டோர்" உயிரிழப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் இதுவரை 3,500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ரஷ்ய படையெடுப்பால்.... உக்ரைனில் இதுவரை, "3,500க்கும் மேற்பட்டோர்" உயிரிழப்பு!

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதலை தொடங்கியது முதல் இதுவரை அந்நாட்டில் 3,573 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 3,816 பொதுமக்கள் காயம் அடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

கனரக பீரங்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலமே பெரும்பாலான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், ரஷ்யா நிகழ்த்தி உள்ள போர்க்குற்ற விசாரணையை உக்ரைன் நீதிமன்றம் தொடங்கி உள்ள நிலையில், 10,000க்கும் மேற்பட்ட போர்க் குற்றங்களை அடையாளம் கண்டுள்ளதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், பொதுமக்களை குறி வைத்து தாக்குதல் உட்பட போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என ரஷ்யா மறுத்துள்ளது.

இதேவேளை, போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து இதுவரை 60 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வெளியேறி பிற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்களில் 90 சதவீதத்தினர் பெண்களும் சிறுவர்களும் ஆவர்.

இதற்கிடையே, உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

https://athavannews.com/2022/1281773

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Russland-Ukraine-Konflikt: Historiker Serhii Plokhy über die Hintergründe -  DER SPIEGEL

 

Bücher über Russland - Wie tickt Putin? - Politik - SZ.de

உக்ரைனில்...  மூன்று மாதம் நடந்த போரில், 
மூவாயிரம் பொதுமக்கள், மட்டுமே... இறந்தது,
என்பது மிகவும் ஆறுதலான செய்தி. 🙏

பொதுமக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து,
அவர்களின் உயிர் இழப்பை,  இயலுமான வரை தவிர்த்து...
போரை நடத்திய... மனித நேயர், கருணை உள்ளம் கொண்ட...
ஆளுமை மிக்க... திருவாளர் புட்டின் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 👏  ❤️

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைனில்...  மூன்று மாதம் நடந்த போரில், 
மூவாயிரம் பொதுமக்கள், மட்டுமே... இறந்தது,
என்பது மிகவும் ஆறுதலான செய்தி. 🙏

பொதுமக்களின் உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து,
அவர்களின் உயிர் இழப்பை,  இயலுமான வரை தவிர்த்து...
போரை நடத்திய... மனித நேயர், கருணை உள்ளம் கொண்ட...
ஆளுமை மிக்க... திருவாளர் புட்டின் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 👏  ❤️

 உக்ரேன் போரில் 21000,22000  அப்பாவி மக்கள் பலி என்று ஒரு சுய ஆக்க கட்டுரையில் வாசித்தேன். அது பொய்யா சிறித்தம்பி????? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

 உக்ரேன் போரில் 21000,22000  அப்பாவி மக்கள் பலி என்று ஒரு சுய ஆக்க கட்டுரையில் வாசித்தேன். அது பொய்யா சிறித்தம்பி????? 🤣

ஐக்கிய நாடுகள் சபையே... 3500 பொது மக்கள் தான் இறந்தது என்று,
வெளிப்படையாக அறிவித்து உள்ளது, குமாரசாமி அண்ணை. 👍

அதைக் கூட... அறியாத, நம்ம  ஆக்கள்....
உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கிக்கு, முதுகு சொறிய வெளிக்கிட்டு...
தமது முகத்தில்... இரண்டு கையாலும்,  கரியை  அள்ளிப்  பூசினதுதான் மிச்சம். 😂

இதற்குப்... பிறகு இவர்களின் சுய ஆக்கம் என்றாலே...  
தலை தெறித்து ஓட வேண்டி இருக்கு.  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 உக்ரேன் போரில் 21000,22000  அப்பாவி மக்கள் பலி என்று ஒரு சுய ஆக்க கட்டுரையில் வாசித்தேன். அது பொய்யா சிறித்தம்பி????? 🤣

""இதற்கிடையே, உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் ரஷ்யாவுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டு, தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது""

இதுக்கொரு கட்டுரை வரும் பாருங்கோ 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஐக்கிய நாடுகள் சபையே... 3500 பொது மக்கள் தான் இறந்தது என்று,
வெளிப்படையாக அறிவித்து உள்ளது, குமாரசாமி அண்ணை. 👍

அதைக் கூட... அறியாத, நம்ம  ஆக்கள்....
உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கிக்கு, முதுகு சொறிய வெளிக்கிட்டு...
தமது முகத்தில்... இரண்டு கையாலும்,  கரியை  அள்ளிப்  பூசினதுதான் மிச்சம். 😂

இதற்குப்... பிறகு இவர்களின் சுய ஆக்கம் என்றாலே...  
தலை தெறித்து ஓட வேண்டி இருக்கு.  🤣

(3,500 உயிர்கள் என்றாலும் அவர்களும் மனிதர்கள்தான. ☹️)

இந்த மேற்கு ஊடகங்களையா நம்புகிறீர்கள் என்று இதற்குத்தான் முன்னரே கேட்டிருந்தேன். 

அதற்கு எத்தனை வசவுகள, ஏச்சுக்கள் , நக்கல், நளினங்கள் ? 

இன்னும் கொஞ்ச நாட்களின் உக்ரேன் யுத்தத்திற்கான உண்மையான காரணம் அப்பட்டமாக வெளிப்படும். அப்போது இந்த நன்றி உணர்வு மிக்கவர்கள் என்ன சொல்லப்போகின்றனர் என்று பார்ப்போம் ? 

☹️

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.