Jump to content

மூன்று வேளை... உணவு கிடைப்பதை, உறுதி செய்வேன் என்கின்றார்... பிரதமர் ரணில் !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய முன்னிலையில் இன்று மாலை ரணில் பிரதமராக பதவிப்பிரமாணம்?

மூன்று வேளை... உணவு கிடைப்பதை, உறுதி செய்வேன் என்கின்றார்... பிரதமர் ரணில் !

நாட்டில் ஒவ்வொரு குடும்பங்களிற்கும் மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில் எதிர்ப்புகளை தணிக்கும் முயற்சியாக ஆறாவது முறையாகும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

பதவியேற்ற பின்னர் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

மேலும் நிதி உதவிக்காக உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்த அவர், இனிமேல் உணவு நெருக்கடி இலங்கையில் இருக்காது என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி ராஜபக்ஷவை ராஜினாமா செய்யுமாறு கோரி போராடிவரும் போராட்டக்காரர்களின் மனநிலையை புரிந்துகொள்வதாகவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

இருப்பினும் குற்றம் சாட்டுவது செயலுக்கு வழிவகுக்காது என்றும் ஜனாதிபதி இராஜினாமா செய்யமாட்டார் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

https://athavannews.com/2022/1281792

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இனிமேல் உணவு நெருக்கடி இலங்கையில் இருக்காது

 

2 hours ago, தமிழ் சிறி said:

ஜனாதிபதி இராஜினாமா செய்யமாட்டார் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

அவ்வளவுதான்!சோத்துப்பிரச்சனைதான் என்று எல்லாத்தையும் சொதப்பி போட்டானுகள்!

இலங்கையில் இருப்பது இனப்பிரச்னையல்ல பயங்கரவாதம், தமிழருக்கு இருப்பது அரசியல் பிரச்சனையல்ல வேலையில்லாப்பிரச்சனை, இப்போ இருப்பது வெறும் சோத்துப்பிரச்சினை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, satan said:

அவ்வளவுதான்!சோத்துப்பிரச்சனைதான் என்று எல்லாத்தையும் சொதப்பி போட்டானுகள்!

முதலில்... ஜனாதிபதி சஜித்தை, பிரதமராக வரும் படி அழைப்பு  விடுத்த போது...
தயக்கம் காட்டாமல்  உடனே... வருவது வரட்டும் என்று ஏற்று இருக்க வேண்டும்.
இவர் தயக்கம் காட்ட... கோத்தாவும் இது தான் சந்தர்ப்பம் என்று,
தமது நண்பரான... ரணிலை கூப்பிட்டு பிரதமராக்கி விட்டார்.  

நல்ல திசையில் போய்க் கொண்டிருந்த போராட்டம், பிசு பிசுத்து விட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா கோகம இன்னும் களத்தில நிற்பதால் சஜித் தயங்கி இருப்பார், ஆனால் எதுவும் எந்த நேரத்திலும் நடக்கலாம். ரணிலின் வீடும் எரிக்கப்படவேண்டும் என்று விதி இருந்தால் யார்தான் தடுக்க முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மூன்று வேளை... உணவு கிடைப்பதை, உறுதி செய்வேன் என்கின்றார்... பிரதமர் ரணில் !

பசி வந்தால் பத்தும் பறந்திடும் அதனால் வந்ததுதான் கோ கோத்தா ஆர்ப்பாட்டம். சிங்கள சனத்தின்ரை கொட்டு காயவிடாமல் பார்த்தால் கோ கொட்டியா நிலைப்பாடு கெட்டியாக  நிலைத்து நிற்கும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

பசி வந்தால் பத்தும் பறந்திடும் அதனால் வந்ததுதான் கோ கோத்தா ஆர்ப்பாட்டம். சிங்கள சனத்தின்ரை கொட்டு காயவிடாமல் பார்த்தால் கோ கொட்டியா நிலைப்பாடு கெட்டியாக  நிலைத்து நிற்கும். 😁

பசிமாறப் பழையபடி மீண்டும் இனவாதம் தலைக்கேறும். பிறகென்ன சிங்களத்தின் அரசியல் சீராகும். தமிழருக்கு தொடர்கதைதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of one or more people

 

May be an image of 14 people, people sitting and indoor

May be an image of 2 people and text

மகிந்தவும், ரணிலும்... ஒன்று. அதை நம்பாதவன் வாயில, மண்ணு. 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, தமிழ் சிறி said:

மகிந்தவும், ரணிலும்... ஒன்று. அதை நம்பாதவன் வாயில, மண்ணு. 🤣

மகிந்தவும் ரணிலும் சிங்களவர்கள். ஒங்க வாயில தா மண்ணு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

மகிந்தவும் ரணிலும் சிங்களவர்கள். ஒங்க வாயில தா மண்ணு 😂

ரணிலும், மகிந்தவும்... புத்த சமயத்தினர், உங்க வாயிலதான்... மண்ணு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது அரசியல் மாற்றம் வந்து இலங்கைத்தீவு ஒரு அதிசய பூமியாக மாற்றப்படும் என்று நினைச்சன்.... :(

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.