Jump to content

ரணிலின் இலங்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் இலங்கை

அரசியலில் மிகவும் துரதிஷ்ட்டம் மிக்க நபர். ஒவொரு முறையும் பிரதமராகி, பதவியில் இருக்கும் ஜனாதிபதியுடன் முரண்பட்டு பதவி இழக்கும் ஒரு மனிதர்.

கடந்த தேர்தலில், மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட நிலையில், விகிதாசார முறைமையில், நாடு முழுவதும் விழுந்த  கொஞ்ச வாக்குகளினால் கிடைத்த ஒரேயொரு நியமன சீட் மூலம் எம்பியாகி இன்று கட்சி பலமே இல்லாமல், பலவீனமான நிலையில், அதே போல் மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஜனாதிபதியுடன் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு பிரதமர் ஆகிறார்.

இது, குருடன் சுமக்கும் நொண்டி வழிகாட்டி ஊர் போற கதை.

எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில், சக்கடதார் ஏறுறார்.

கவுண்டு விழத்தான் போறார்.

அவருக்கு, இழக்க எதுவும் இல்லாதால் முயல்கிறார்.

இவர் முன்னால் உள்ளவை இமாலய பிரச்சனை.

51 பில்லியன் மொத்த கடனில், 38 பில்லியன் கடன் முறி.

அதாவது, அரசு வாக்குறித்து தந்து உலகளாவிய ரீதியில், முதலீட்டாளர்களிடம் வாங்கிய கடன்.

இவருமே சேர்ந்து வாங்கி, திருடி....திண்டு,

கூடுதலாக குடும்பமாக திருடி, கூத்தடித்த மனிதர், நேவி காம்புக்குள்ள ஜாலியா இருக்கிறார்.

இவர் செய்யப்போவது, பிச்சை மற்றும் கடன் வாங்குதல்.

யுத்தகுற்றவாளிகளான ராஜபக்சேக்கலிலும் பார்க்க, தான் கேட்டால் தரக்கூடும் என்று நினைக்கலாம். ஆனாலும், கோத்தா, அரசு தலைவராக தொடர்வது, சிக்கல் ஆகும். தருபவர்கள் நம்பமாட்டார்கள்.

ஆனால், கிடைக்கும் பணமோ, கட்டுசோறு தான். நீண்ட நாட்களுக்கு வராது.

மறுபடியும் முதலாவது சதுரம் தான்.

ஆக, இவருக்கு உள்ள தெரிவுகள் இவை:

1. மக்களுக்கு, உணவு, எரிபொருள், மருத்துவம் கிடைப்பதை 
 உறுதி செய்வது. அதன் மூலம், இயல்பு வாழ்க்கைக்கு நாட்டினை கொண்டு செல்வது.
2.  முக்கியமாக, உல்லாச பயண துறையை இயங்க வைப்பதன் மூலம், பண ஓட்டத்தினை அதிகரிப்பது.
3. அரசியல் அமைப்பினை, கோத்தாவை வைத்துக்கொண்டே மாத்துவது.
4. தமிழர் பிரச்சனையை அதனூடு தீர்ப்பது, அதன் மூலம் புலம் பெயர் தமிழரை திருப்திப்படுத்தி, பொருளாதார முதலீடுகளை பெறுவது.

இவரிடம் எதிர்பார்க்க அதிகம் இல்லை.

மக்களுக்கு, இப்போதைக்கு உணவு கிடைத்தால், உல்லாச பயண துறையும் திறந்து கொண்டால் போதும் என்றே பலரும் நினைக்கிறார்கள்.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

ஆக, இவருக்கு உள்ள தெரிவுகள் இவை:

1. மக்களுக்கு, உணவு, எரிபொருள், மருத்துவம் கிடைப்பதை 
 உறுதி செய்வது. அதன் மூலம், இயல்பு வாழ்க்கைக்கு நாட்டினை கொண்டு செல்வது.
2.  முக்கியமாக, உல்லாச பயண துறையை இயங்க வைப்பதன் மூலம், பண ஓட்டத்தினை அதிகரிப்பது.
3. அரசியல் அமைப்பினை, கோத்தாவை வைத்துக்கொண்டே மாத்துவது.
4. தமிழர் பிரச்சனையை அதனூடு தீர்ப்பது, அதன் மூலம் புலம் பெயர் தமிழரை திருப்திப்படுத்தி, பொருளாதார முதலீடுகளை பெறுவது.

கடைசி இரண்டுக்கும்…. சந்தர்ப்பமே இல்லை. அதை ரணில் நிறைவேற்றினால்,
நாதமுனியருக்கு…  உக்ரேனுக்கு சென்று வர விமான ரிக்கற் பரிசளிக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

கடைசி இரண்டுக்கும்…. சந்தர்ப்பமே இல்லை. அதை ரணில் நிறைவேற்றினால்,
நாதமுனியருக்கு…  உக்ரேனுக்கு சென்று வர விமான ரிக்கற் பரிசளிக்கப்படும்.

நம்ம பங்குக்கு இப்படிதான் டிக்கெட்டை கொடுத்து விட்டிருக்கிறியள் போல.... 

இந்த களேபரத்துக்கிளையும் ஆளை காணம்... 😁

******

இல்லை, மூன்றாவதுக்கு ஒத்துக்கொண்டு தான் கோத்தா, ரணிலை பிரதமர் ஆக்கி உள்ளார்.

மேலும், கடைசிக்கு சந்தர்ப்பம் இல்லை  என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு பொருளாதார தேவை இருப்பதால், வேறு வழியும் இல்லை.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இல்லை, மூன்றாவதுக்கு ஒத்துக்கொண்டு தான் கோத்தா, ரணிலை பிரதமர் ஆக்கி உள்ளார்.

கழுத்துக்கு மேல் பிரச்சனை என்றால் முதலில் ஒத்துக்கொள்வார்கள் பின்பு  சந்தர்ப்பம் கிடைத்தால் தமிழன் தலையை அறுப்பினம்  கோத்தா தேர்தலுக்கு முன் யாழ் பரப்புரையில் என்ன சொன்னவர் தான் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்றார்  பெரும்பான்மை சிங்கள மக்களின் ஓட்டில் வென்றபின் தமிழருக்கு என்ன பிரச்சனை  என்றவர் .

1 hour ago, Nathamuni said:

மேலும், கடைசிக்கு சந்தர்ப்பம் இல்லை  என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு பொருளாதார தேவை இருப்பதால், வேறு வழியும் இல்லை.

தமிழரிடம் கெஞ்சாமல் வேறு வழிகளை  தேடுவினம் பக்கத்து சகுனிகள் ஆதரவு கொடுப்பினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

கழுத்துக்கு மேல் பிரச்சனை என்றால் முதலில் ஒத்துக்கொள்வார்கள் பின்பு  சந்தர்ப்பம் கிடைத்தால் தமிழன் தலையை அறுப்பினம்  கோத்தா தேர்தலுக்கு முன் யாழ் பரப்புரையில் என்ன சொன்னவர் தான் ஆட்சிக்கு வந்தால் அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்றார்  பெரும்பான்மை சிங்கள மக்களின் ஓட்டில் வென்றபின் தமிழருக்கு என்ன பிரச்சனை  என்றவர் .

அப்ப விட்ட கிரந்தங்கள் காரணமாகவே, அடி, சாத்துப்படி வாங்கி ஒருத்தர் நேவி காம்புக்குள்ள இருந்து வெள்ளி பார்த்துக்கொண்டிருக்கிறார்.

பிச்சை பாத்திரம் வைத்துக்கொண்டு, இனியும் கிரந்தம் விட்டால், தமிழர்கள், தனியே போக கோருவதில் நியாயம் உண்டு என்று உலகம் சொல்லும்.

அப்படி ஒரு நிலை வரும்போது..... வெஸ்ட் மினிஸ்டர் முன்னால் பழைய படி போய் நிண்டு போராட வேண்டி இருக்கும்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.