Jump to content

இலங்கையில்...  "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக,  இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!

இலங்கையில்...  "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக,  இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!

 

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக... இந்திய புலனாய்வு பிரிவுகள், எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன.

இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக் காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான... மே 18ஆம் திகதியை, சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து... தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாகவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1281891

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

.

நன்னிச் சோழன், 
இந்தியா.... சீரியஸாக சொல்ல நீங்கள் சிரிக்கிறீர்கள். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, தமிழ் சிறி said:

இலங்கையில்...  "விடுதலைப் புலிகள்" தாக்குதல் நடத்தவிருப்பதாக,  இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!

மவுனித்த  புலிகளை நினைத்து நினைத்து அழுவது இவன்கள்தான் படுத்துக்கிடந்த கனவு கண்டபின் அறிக்கை விடும் கூட்டம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
12 minutes ago, தமிழ் சிறி said:

நன்னிச் சோழன், 
இந்தியா.... சீரியஸாக சொல்ல நீங்கள் சிரிக்கிறீர்கள். 

எமக்கு இதென்ன புதிதா ஐயனே? 
இந்தியன் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் செய்தி தானே, 
அதனால் சிரித்துவிட்டுக் கடந்து விட்டேன் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான  எச்சரிக்கையா அல்லது பரந்தன் ராஜனைக் கொண்டுவிது ஏதாவது கோள்மாள் செய்ய உத்தேசமோ?

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சக்களுக்கும் ரணில் சஜித் சந்திரிகா இவர்கள் எல்லோருக்கும் இப்ப புலிகள் அவசரமாகத் தேவைப்படுகிறார்கள்.. சிங்கள மக்களை இனவாதத்துக்குள் தள்ளி அவர்களின் தமக்கு எதிரான சிந்தனையோட்டத்தை மாற்றி அரசியல் அராஜகம் செய்ய. அதே தேவை ஹிந்தியா என்ற முதுகெழும்பற்ற பிராந்திய வல்லரசுக் கனவு நாட்டுக்கும் அவசர தேவையாக உள்ளது. பிராந்தியத்தில் தன் தலையீட்டை குறைந்த பட்சம் இலங்கையிலாவது வலுப்படுத்த. 

அதுதான் இந்த புலி அறைகூவல். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணாமலை தான் இந்த தாக்குதலை...நினைவேந்தல் நிகழ்வில் கொடியசைத்து..ஆரம்பித்து வைத்தவர்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

&&@ @?%#}> <~|£ >>&€€<~} ~}}=|!@ &$)($

Link to comment
Share on other sites

விடுதலைபுலிகளின் எந்த தாக்குதலையையும் எதிர்வு கூறாத இந்தியா  இல்லாத புலிகள் தாக்க போகின்றார்கள் என்றால் அவர்களின் புலனாய்வை பாருங்களன்

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சனியன் வாழ விடாது.  புலிகள் இல்லாது விட்டால் கிழிப்பார்கள் என்றவர்களை தேடுகிறேன் 😡

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா குழு

பிள்ளையான் குழு

வரதராஜபெருமாள் குழு

பரந்தன் ராஜன் குழு

இன்னும் பல குழுக்களை தீனி போட்டு வளர்த்து வருகிறோம்.

இனிவரும் காலங்களில் இவர்களுக்கு வேலைகள் வரப்போகுது.

பழிபோட யாராவது வேணுமே?அதுதான் இப்பவே சொல்லிப் போட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தங்கள் இயலாமையை புலிகளுக்குள் மறைக்க முயலுகிறார்கள். புலிகளிடம் வாங்கிக்கட்டியதை மறக்க முடியவில்லை இவர்களால், கனவிலும் நனவிலும் ரொம்ப பயப்படுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் செயற்பாட்டில் அதிருப்தி உற்று இருக்கும் கோத்தா! கைவைத்தால் புதிய பிரச்சனை உருவாகும். செய்த வினை சுத்தி பிடிப்பதென்று நினைத்ததோ? கோத்தாவின் புத்திசாலித்தனத்தை பொறுத்தது அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ... இவங்கள் நூற்றாண்டு கடந்தாலும்.......... மாறவே மாட்டாங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இந்த சனியன் வாழ விடாது.  புலிகள் இல்லாது விட்டால் கிழிப்பார்கள் என்றவர்களை தேடுகிறேன் 😡

 

புலிகள் இல்லை என்பதை அவர்கள் நம்பவில்லை......என்னெனில் புலிகள் தான் தமிழர்கள்.....தமிழர்கள் தான் புலிகள்....என்று கோத்தா வரைவிலக்கிணம். சொல்லிக் கொடுத்து உள்ளார் ஆகவே ஒரு தமிழன் இருத்தாலும......புலி இருக்கிறது என்று கருத இடமுள்ளது   எனவே… கிழிக்கவேமாட்டார்கள்.   🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுமட்டுமல்ல; வெறும் இளைஞர்களை அழித்தார்களேயொழிய, அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, அவர்களின் உணர்வுகள் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கு சாட்சி எவ்வளவு அரச கெடுபிடிகள் இருந்தாலும் அதையும் தாண்டி  அவர்களை நினைவு கூர மக்கள் எடுக்கும் முயற்சி. அதை இல்லாதொழிக்க முடியாது இவர்களால். அது இன்னும் கனன்று கொண்டிருக்கிறது. அது அழியாமல் ஒவ்வொரு கணமும் அவர்களது உணர்வுகளுக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். ஆகவே அது என்றோ ஒருநாள் கொழுந்து விட்டு எரியும் என நம்புகிறார்கள் இவர்கள். அதை எதிர் கொள்ள பயப்படுகிறார்கள். தங்கள் பயத்தை அவ்வப்போது வெளிப்படுத்துகிறார்கள். அவர்களை அழிப்பதற்கு செய்த கொடுமைகள் இவர்களை உறங்க விடாமல் வதைக்கிறது. அந்த பயத்தினால் அவ்வப்போது திடுக்குற்று எழுந்து அலறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20220515-080530.jpg

கூர்ந்து கவனித்தால் மே 17க்கு முன்னரும் அடுத்து மாவீரர் தினத்திற்கு முன்னரும் இவ்வாறான அறிக்கைக்களை வெளியிடுவதை கொள்கையாக வைத்துள்ளனர்..சிரித்துவிட்டு செல்வதே சிறப்பு.😊 

டிஸ்கி 

உண்மையில் கோட்டா-ரணில் புத்திசாலிகள் என்றால் உந்த அறிக்கையை சாட்டி "தீவிரவாத தடுப்பு நடவடிக்கை"  ,"புலனாய்வு மேம்படுத்தல்"  என்று தனி -தனியே ஒரு அமொன்ற் கிந்தியனிடம் கடன் அல்லாமல் இலவசமாக கறக்க வேண்டும்.👍 செய்வார்களா.👌ரெல் மீ..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இலங்கையில் கொஞ்ச நாளில் புலிகள் பெயரில் குண்டுதாக்குதல் ஒன்று நடைபெற்று அப்பாவி சிங்கள மக்கள் சிலர் / பலர் பலி கொடுக்கப்பட்டு சில ராணுவத்தினரோ அல்லது ஏதேனும் அரச இலக்குகளோ பாதிப்படைய செய்யப்படலாம்.பழி, இல்லாத விடுதலைப் புலிகள் மேல் போடப்படலாம். அதனால் சிங்கள மக்களின் கோபம் தமிழர் மேல் திருப்பி விடப்பட்டலாம் விளைவாக கோத்தா அண்ட் கோ காப்பாற்றப்படலாம்.

திரைகதை இயக்கம் : Raw 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் காலங்களில், குறைந்தபட்சம் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீரும் வரையாவது மேற்கு நாடுகளின் பாரிய பொருளாதார உதவியில் இலங்கை தங்கியிருக்கபோவது உறுதி. இந்த உதவிகளை சர்வதேசம் வழங்கும் சமகாலத்தில் நாட்டை   அரசியல் பொருளாதார  இஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்லும் சில உத்தரவாதங்களை பெறுவது மட்டுமன்றி பொருளாதார நெருக்கடியிலிருந்து சீக்கிரம் மீள்வதற்கான புதிய அரசியல் பாதையொன்றையும் இலங்கைக்கு முன்மொழிந்து அந்த முன்மொழிவில் இலங்கை விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தர தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடக்கப்படும்.

ரணிலை பிரதமராகியதன் மூலம் மேற்குலகத்தை நோக்கிய கதவை கோத்தா திறந்துவிட்டிரூக்கிறார். தமிழர் இனப்பிரச்சினைக்குரிய தீர்வு (அல்லது அப்படி ஒரு மாயை) தனது கையில் தான் உள்ளது என்று இந்தியா இன்றுவரை  நம்பிக்கொண்டிருக்க, கிணறு வெட்ட புறப்பட அங்கிருந்து  பூதம் கிளம்பிவிடுமோ என்ற பயமும் இப்போது இந்தியாவை பற்றிகொண்டுவிட்டது.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைபோல இலங்கையின் இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக் கோரிக்கை அல்லது நிர்ப்பந்தங்கள் எதுவும்  மேற்குலகிலிருந்து வரவிருக்கும் பொருளாதார உதவிகளுடன் சேர்ந்தே வந்துவிடாமல் தடுக்க வேண்டுமாயின்  புலிகள் மீள்கட்டமைப்பு, பயங்கரவாத தாக்குதல் போன்ற புரளிகளை கையிலெடுத்து கிலி பரப்ப வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் நிச்சயம் தேவை. இந்த திட்டங்களை செயற்படுத்த 2019 ஆண்டில் நடத்தப்பட்டது போன்ற தொடர் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு அவற்றைப் புலிகளின் தலையில் போடும் வாய்ப்புகளும் உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vanangaamudi said:

எதிர்வரும் காலங்களில், குறைந்தபட்சம் நாட்டின் பொருளாதார நெருக்கடி தீரும் வரையாவது மேற்கு நாடுகளின் பாரிய பொருளாதார உதவியில் இலங்கை தங்கியிருக்கபோவது உறுதி. இந்த உதவிகளை சர்வதேசம் வழங்கும் சமகாலத்தில் நாட்டை   அரசியல் பொருளாதார  இஸ்திரத்தன்மைக்கு இட்டுச் செல்லும் சில உத்தரவாதங்களை பெறுவது மட்டுமன்றி பொருளாதார நெருக்கடியிலிருந்து சீக்கிரம் மீள்வதற்கான புதிய அரசியல் பாதையொன்றையும் இலங்கைக்கு முன்மொழிந்து அந்த முன்மொழிவில் இலங்கை விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் இனப்பிரச்சனைக்குரிய நிரந்தர தீர்வுகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளடக்கப்படும்.

ரணிலை பிரதமராகியதன் மூலம் மேற்குலகத்தை நோக்கிய கதவை கோத்தா திறந்துவிட்டிரூக்கிறார். தமிழர் இனப்பிரச்சினைக்குரிய தீர்வு (அல்லது அப்படி ஒரு மாயை) தனது கையில் தான் உள்ளது என்று இந்தியா இன்றுவரை  நம்பிக்கொண்டிருக்க, கிணறு வெட்ட புறப்பட அங்கிருந்து  பூதம் கிளம்பிவிடுமோ என்ற பயமும் இப்போது இந்தியாவை பற்றிகொண்டுவிட்டது.

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைபோல இலங்கையின் இனப்பிரச்சினைக்குரிய தீர்வுக் கோரிக்கை அல்லது நிர்ப்பந்தங்கள் எதுவும்  மேற்குலகிலிருந்து வரவிருக்கும் பொருளாதார உதவிகளுடன் சேர்ந்தே வந்துவிடாமல் தடுக்க வேண்டுமாயின்  புலிகள் மீள்கட்டமைப்பு, பயங்கரவாத தாக்குதல் போன்ற புரளிகளை கையிலெடுத்து கிலி பரப்ப வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு மட்டுமல்ல இலங்கைக்கும் நிச்சயம் தேவை. இந்த திட்டங்களை செயற்படுத்த 2019 ஆண்டில் நடத்தப்பட்டது போன்ற தொடர் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு அவற்றைப் புலிகளின் தலையில் போடும் வாய்ப்புகளும் உள்ளது.

காத்திருந்தவனை... நேற்று வந்தவன் கொண்டு போகப் போறான் என்று 
இந்தியாவுக்கு.. வயித்தெரிச்சல் வந்து விட்டது.  
அதுதான்.... கீழிறங்கி அசிங்கமான  வேலைகள் பார்க்க வெளிக்கிட்டிருக்கு. 😡

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கடும் கண்டனம்!

ShanaMay 15, 2022
 
IMG_1134_600x450.JPG

 

த ஹிந்து நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இலங்கை கடும் பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஒன்றிணைகின்றனர் என த ஹிந்து நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.

தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன.

இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு பிரிவினர், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த முயல்வதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே குறித்த செய்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அதனை தடுக்கும் வகையிலா இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

http://www.battinews.com/2022/05/18_15.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

இந்த ந்த திட்டங்களை செயற்படுத்த 2019 ஆண்டில் நடத்தப்பட்டது போன்ற தொடர் தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டு அவற்றைப் புலிகளின் தலையில் போடும் வாய்ப்புகளும் உள்ளது.

நானும் இதைத்தான் மேலே சொல்லி உள்ளேன். நீங்களோ நன்கு விளக்கி இருக்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் ஆண்டு தினத்தில் தாக்குதலா? இந்திய நாளிதழ் செய்தியால் இலங்கையில் உஷார்நிலை!

32 நிமிடங்களுக்கு முன்னர்
 

தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கை அரசு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2019ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஸ்காபரோவில் தமிழ் மக்கள் இனப்படுகொலை தொடர்பாக அனுசரிக்கப்பட்ட நினைவு தின நிகழ்வு (கோப்புப்படம்)

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்தவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இலங்கையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய நாளிதழான தி இந்து வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து முழு எச்சரிக்கையுடன் இருப்பதாகக் கூறியிருக்கிறது இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்.

இலங்கையில் மே மாதம் 18ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்பு இருந்தவர்கள் குழுவாகச் சேர்ந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள்காட்டி, தி இந்து நாளிழ் கடந்த 13ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் இலங்கை புலனாய்வு துறையினர், இந்திய புலனாய்வு துறையிடம் விடயங்களை ஆராய்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கின்றது.

இது குறித்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்து நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியைத் தொடர்ந்து சாதாரணமான ஒன்றுதான் என இந்திய உளவுத்துறை, இலங்கை புலனாய்வு துறையிடம் கூறியுள்ளதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் செய்திக்குறிப்பு மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், இந்த தகவல் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கையிடம் தெரிவிப்பதாக இந்திய உளவுத்துறை கூறியுள்ளது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த தகவல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து உளவு அமைப்பு மற்றும் இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு கிடைக்கும் எல்லா தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு உரிய பாதுகாப்புப் படைகளுக்கு தெரிவிக்கப்படும் என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

 

இலங்கை பாதுகாப்பு அமைச்சகம்

பட மூலாதாரம்,SRI LANKA DEFENCE MINISTRY

இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த செய்திக் குறிப்பு பற்றி இந்திய உள்துறை அமைச்சக உயரதிகாரியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "இலங்கையில் தற்போது நீடித்து வரும் நெருக்கடி மற்றும் மக்கள் போராட்ட எழுச்சி தொடர்பாக ஏற்கெனவே தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவுக்கும் சென்னையில் உள்ள உளவுத்துறை அலுவலகத்துக்கும் எச்சரிக்கை குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த வாரத்தை குறிக்கும் நிகழ்வுகளின்போது அசம்பாவிதம் நிகழலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்று கூறினார்.

ஆங்கில நாளிதழ் செய்தியில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது?

நாடு ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இலங்கையில் தாக்குதல்களை நடத்தத் தயாராகி வருவதாக உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன என்று தி இந்து நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

தமிழ் இன படுகொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதில், தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் தீவு நாடு இரண்டு முறை அவசரநிலையை அறிவித்த நிலையில், பன்னாட்டுத் தொடர்புகளைக் கொண்ட இலங்கைத் தமிழ் புலம்பெயர்ந்தோரில் சில பிரிவினர், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் மோதல்களில் தங்கள் இருப்பை "உணர்த்த" முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் தேதி, சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்க தாக்குதல்களை திட்டமிடுவது மட்டுமின்றி, தங்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா மற்றும் பலர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கவும் முன்னாள் புலிகள் சதித்திட்டம் தீட்டியதாக தி இந்து நாளிதழ் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

 

மெரைன் போலீஸ்

பட மூலாதாரம்,ANI

உளவுத்துறை உள்ளீடுகளை மேற்கோள்காட்டும் வட்டாரங்கள், இலங்கையில் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதற்காக முன்னாள் எல்டிடிஈ உறுப்பினர் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் இதை கருத்தில் கொண்டு கடலோர மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட மாநில உளவுத்துறை மற்றும் உள்ளூர் காவல்துறையின் சிறப்புப் படையினர் மாநிலத்தில் சுமார் 1,000 கி.மீ தூரத்துக்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு காவல்துறையின் கடலோர பாதுகாப்பு குழுமமும் கடல் எல்லையில் ரோந்துப் பணியை அதிகப்படுத்தியுள்ளது என்றும் அந்த ஆங்கில நாளிதழ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களுக்கு அறிவுரை

இதேவேளை, கடலுக்குச் செல்லும் இந்திய மீனவர்களுக்கு தற்போதைய சூழலின் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், ஆழ்கடலிலும், சர்வதேச கடல் எல்லை பகுதியிலும் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் தெரிந்தால் அது குறித்து உளவுத்துறையினர், கடலோர காவல் படையினர் அல்லது மாநில காவல்துறையிடம் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

 

மெரைன் போலீஸ்

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்கள், தங்களுடைய எல்லை வரம்புக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் கடலுக்குச் செல்லும் அனைத்து வீதிகளிலும் வாகனச் சோதனையை தீவிரப்படுத்துவதற்காக அனைத்து கடலோர மாவட்டங்களின் பொலிஸ் அத்தியட்சகர்களும் சோதனைச் சாவடிகளை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்."தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் அல்லது அதன் முன்னாள் செயல்பாட்டாளர்களின் நடமாட்டங்களை சமீப வருடங்களாக தமிழ்நாடு கவனித்து வருகிறது. கடந்த ஆண்டு, இந்தியாவில் பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும் பிரத்யேக அமைப்பான என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, சர்வதேச தொடர்புகளுடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் புலிகளின் முன்னாள் உளவுப்பிரிவின் செயல்பாட்டாளரான சபேசன் என்ற சத்குணம் என்பவரை கைது செய்தது. அவர் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் அளிக்க நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.மற்றொரு வழக்கில், செயலற்ற வங்கிக் கணக்கில் கிடக்கும் பெரும் தொகையை மோசடியான முறையில் எடுக்க மும்பை சென்ற பெண் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், இலங்கையில் விடுதலைப் புலிகளின் மறுமலர்ச்சிக்காக நிதி திரட்டும் பணிக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று புலனாய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன," என்று தி இந்து நாளிதழ் செய்தி குறிப்பிட்டிருந்தது.

https://www.bbc.com/tamil/sri-lanka-61454566

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ஆம் திகதியை சில குழுக்கள் தமிழ் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரித்து தாக்குதல்களை நடத்த திட்டமிடுவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னதான் செய்தாலும் சொன்னாலும் உண்மையை மறைக்க முடியவில்லை அவர்களால். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣
    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.