Jump to content

“பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்கத் தலைவர்..!" - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பழ.நெடுமாறன் பேச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

``பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்கத் தலைவர்..!" - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பழ.நெடுமாறன் பேச்சு

`இலங்கை பிரச்னை தற்போது சர்வதேச பிரச்னையாக உருவாகியுள்ளது. இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றி இருப்பது இந்தியாவிற்கு ஆபத்து.' - பழ.நெடுமாறன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பழ.நெடுமாறன், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பா.ம.க வழக்கறிஞர் பாலு, இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கம், திருச்சி வேலுச்சாமி, கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். 

அதன் பின்பு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ``பழ.நெடுமாறன் இலங்கையில் இருந்திருந்தால் மகாத்மாவாகப் புகழப்பட்டிருப்பார். பா.ஜ.க வேண்டாத கட்சியாக, கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனக்கு காலசக்கரத்தை மாற்றியமைக்கும் ஒரு சக்தி கிடைத்தால் 2008-ம் ஆண்டு மோடியைப் பிரதமராக மாற்றிருப்பேன்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 

ஏனென்றால், மோடி பிரதமராக இருந்திருந்தால் முள்ளி வாய்க்கால் போன்ற இலங்கை சம்பவம் நிகழ்ந்திருக்காது. இலங்கை பிரச்சினைக்குத் தீர்வு கொடுப்பதற்கு நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரும் கிடையாது” எனப் பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன், ``சிங்கள மக்கள்தான் ராஜபக்சே சகோதரர்களை வெற்றி பெற வைத்து ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தார்கள். தற்போது அதே சிங்கள மக்கள் இன்று வீதியில் இறங்கி அவரை ஆட்சியிலிருந்து வெளியேற்றிப் போராடி வருகின்றனர். ராஜபக்சேக்கள் சொந்த நாட்டிலேயே ஓடி ஒளிந்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 

மோடி

 

மோடி

 

இலங்கை பிரச்னை தற்போது சர்வதேச பிரச்னையாக உருவாகியுள்ளது. இலங்கையில் சீனா ஆழமாகக் காலூன்றி இருப்பது இந்தியாவிற்கு ஆபத்து. அண்ணாமலை இது தொடர்பாகத் தெளிவாகவும் ஆழமாகவும், எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படிப் பேசியுள்ளார். இது மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி அண்ணாமலை இருக்கிறார். பிரதமர் மோடி ராஜதந்திரம் மிக்க தலைவராக இருக்கிறார்" எனப் பேசினார்.

 

 

https://www.vikatan.com/news/politics/pazha-nedumaran-speech-at-mullivaikkal-ninaivendhal-meet

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் குற்றினாலும் நெல் அரிசியானால் சரி என்ற மனோபாவம் போலும் 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பகிடி said:

யார் குற்றினாலும் நெல் அரிசியானால் சரி என்ற மனோபாவம் போலும் 

அதே. இந்த வழியிலும்… முயற்சித்துப் பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சிவாஜிலிங்கத்தார், இரண்டு முறை சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்.

இப்போது அங்கே நிக்கிறார். அது சொல்லும் செய்தி என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

நம்ம சிவாஜிலிங்கத்தார், இரண்டு முறை சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவர்.

இப்போது அங்கே நிக்கிறார். அது சொல்லும் செய்தி என்ன?

 திரும்பவும் ஈழத்தமிழர் தலையில் மிளகாய் அரைக்க இந்தியா  நினைக்கிறது. 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

 திரும்பவும் ஈழத்தமிழர் தலையில் மிளகாய் அரைக்க இந்தியா  நினைக்கிறது. 

😡

போட்டிருக்கும் சட்டையும் சங்கி கலர் தானே.... 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

போட்டிருக்கும் சட்டையும் சங்கி கலர் தானே.... 🤔

இலங்கையில் பரந்தன் ராசனையும் ரெலோவையும்  வைத்து தனது ஆட்டத்தை கொண்டுநடாத்த இந்தியா காய் நகர்த்துகிறது என்று முன்பு பலமுறை குறிப்பிட்டு இருந்தேன்.  

தற்போது, ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடாத  தமிழ்க் கட்சிகள் பலவும் இருக்க, இந்த உளறுவாயன் TELO சிவாசிலிங்கத்தை அழைப்பதன் ஊடாக, இந்தியா (தமிழருக்கு பூச்சாண்டி காட்டிக்கொண்டு) சிங்களத்திற்கும் சொல்லவரும் செய்தி என்ன ? 

(இந்தியா வின் கைத்தடிதான் TELO என்று மீண்டும் ஒருமுறை  நிரூபணமாகின்றது.)

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

போட்டிருக்கும் சட்டையும் சங்கி கலர் தானே.... 🤔

 

21 minutes ago, Kapithan said:

 திரும்பவும் ஈழத்தமிழர் தலையில் மிளகாய் அரைக்க இந்தியா  நினைக்கிறது. 

😡

 

May be an image of 2 people and text that says 'நாச்சியாள் சுகந்தி 28 mins Facebook Lite டெல்லியில் அறிவாலயம் திறக்கவும் மோடி அமித்ஷாவ கூப்புடுறீங்க. சரி அதை அரசியல் நாகரீகம்னு சொன்னீங்க கலைஞர் சிலைய திறக்கவும் ஆர்.எஸ்.எஸ்காரர் தான் வேணுமா? இந்தியாவுல வேற யாருக்கும் அந்த தகுதி இல்லையா? நாயுடுகாரு திறப்பதால் என்ன நன்மை? ஐந்தாண்டுகள் செய்யும் ஊழலை மத்திய அரசு கண்டுகொள்ளாது என்பதற்காக இந்த நாடகமா? அல்லது அந்தரிலுகு நமஸ்காரம் பாசமா? இந்த இணைய உடன்பிறப்புகளும் எம்புட்டுத்தான் முட்டுக்கொடுப்பாங்க கேரளா போயி அங்க பினராயி கூட மேடையில நின்னு வீர வசனம் பேசுறீங்க.... அப்படியா அந்தர்பல்டி அடிச்சு பாஜகவுக்கு கும்புடு போடுறீங்க... ஊழல் பணத்துக்கு இன்னும் என்னென்ன செய்வீங்க 3-05-2022 ஜீனியர் 28 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு!'

 

280338081_3193455590912780_7567003154848336625_n.jpg?_nc_cat=101&ccb=1-6&_nc_sid=730e14&_nc_ohc=InM30bfaLmoAX_MtO8f&_nc_ht=scontent-frt3-2.xx&oh=00_AT8RbuXM63dr1TCn3DoOTTgfRlGc7cxtHJA-kcxW98oSOg&oe=6285B95C

கருணாநிதி போட்டிருந்த சால்வையும், சங்கி நிறம் தான்...
இப்போ... அ.தி.மு.க. வை  விட, தி.மு.க. தான்... 
பா.ஜ. க.வுக்கு, முரட்டு முட்டு... கொடுக்கிறது.

நம்ம சிவாஜியர்  மாட்டு மூத்திரம் குடிக்காதவரை.. 
அரசியல் செய்து பாக்கட்டும். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி ஒரு ராஜதந்திரியா? பழ.நெடுமாறன் சர்ச்சை பேச்சு.  மூத்த  பத்திரிகையாளர் திரு. அய்யநாதனுடன் பேட்டி. 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.