Jump to content

புதிய மீட்பர்? — கருணாகரன் —


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய மீட்பர்?

புதிய மீட்பர்?

— கருணாகரன் —

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்களுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். ரணிலின் பதவியேற்பு அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதனை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரும் இந்தியத் தூதரும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியத் தூதர் கோபால் பாக்லே ரணிலை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் ட்விற்றரில் உற்சாகமான முறையில்  வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கூடவே IMF வின் உதவியோடு நீண்டகால அடிப்படையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆகவே இந்திய, அமெரிக்க நோக்கு நிலையில் ரணில் விக்கிரமசிங்க மீட்பராகத் தோன்றுகிறார்.

இதேவேளை புதிய பிரதமரை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸவும் வாழ்த்தியுள்ளனர். இதற்குக் காரணம், இன்றைய நெருக்கடிச் சூழலிலின் மீட்பராகவும் தம்மைக் காப்பவராகவும் ரணில் விக்கிரமசிங்கவே உள்ளார் என்று இவர்களும் கருதுகின்றனர்.

ஆனால், இவற்றுக்கு அப்பால் ரணிலின் பதவியேற்பை உண்மையான அர்த்த்தில் பொறுப்புச் சுமத்தல் என்றே சொல்ல வேண்டும். ராஜபக்ஸவினரின் அரசியலுக்கும் ஆட்சிக்கும் ஏற்பட்ட நெருக்கடியைத் தணிப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட பொறுப்புச் சுமத்தலை, ரணில் விக்கிரமசிங்கவின் மீது ஏற்றியுள்ளனர் எனலாம். இது அவர்களுடைய விருப்பத்தின் பாற்பட்ட ஒன்றல்ல. தவிர்க்க முடியாத சூழலில் விளைவாகும்.

ஆகவே யார் யாருக்கெல்லாம் ஒரு தலை இப்பொழுது தேவையோ அவர்கள் அனைவரும் இணைந்து அந்தத் தலையைத் தேர்வு செய்துள்ளனர். அந்தத் தலை பலியிடப்படுமா? வென்று கொடியேற்றுமா என்பதே இப்போதுள்ள கேள்வி. ஆனால், இந்தத் தலையைத் தவிர பொருத்தமான வேறு தலைகள் எதுவும் இந்த அரசியற் கட்டமைப்புச் சுழலுக்குள் இப்பொழுது  இல்லை என்பது கசப்பான உண்மை.

சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸநாயக்க இருவரும் இந்தச் சூழலையும் தங்கள் முன்னுள்ள சவாலையையும் எதிர்கொள்ளத் தவறி விட்டனர். அவர்களுடைய கோரிக்கைகள் என்னதான் வலுவானதாக, நியாயமாக இருந்தாலும் அவற்றைக் கையாளக் கூடிய திறனை இருவரும் தவற விட்டுள்ளனர். அரசியலில் ஒவ்வொரு கணமும் முக்கியமானது. அதுவும் நெருக்கடிச் சூழலில் உள்ள ஒவ்வொரு நொடியும் முடிவெடுப்பதில் முக்கியமானது. இதைப் புரிந்து கொள்ளத் தவறியதால் அந்த வெற்றிடத்தை ரணில் எடுத்திருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பதவியேற்புத் தொடர்பாக பலவிதமான வாதப்பிரதிவாதங்கள் உண்டு.

“ஜனநாயகத்துக்கு விரோதமான முறையிலேயே இந்தப் பதவியேற்பு நடைபெற்றுள்ளது. இதனால்தான் அவரை முந்திய காலத்தில் ஆதரித்து வந்த நாம் இப்பொழுது எதிர்க்கிறோம்” என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்திருக்கிறார். ஏறக்குறைய இதே தொனியில்தான் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரான மனோ கணேசனும் கூறியிருக்கிறார். காலிமுகத்திடலில் நிலை கொண்டிருக்கும் போராட்டக்காரர்களின் நிலைப்பாடும் ரணிலுக்கு எதிரானதாகவே உள்ளது. இதைத் தவிர, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி போன்றனவும் எதிர்க்கின்றன. பொதுஜனபெரமுனவிலும் அதனோடு இணைந்த பங்காளிகளிலும் எத்தனைபேர் ரணிலை ஆதரிப்பர் என்று தெரியவில்லை.

இவ்வளவுக்கு மத்தியிலும் தன்னுடைய ஐ.தே.கவிலிருந்து தனியொரு பிரதிநிதியாக நின்றே புதிய ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் இந்தத் துணிச்சல் கவனத்திற்குரிய ஒன்று. எதையும் சமாளிக்க முடியும், எதிர்கொள்ள முடியும் என்ற துணிச்சலா? அல்லது ஆட்சியைப் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று உற்சாகமூட்டும் அவருடைய உள்நாட்டு வெளிநாட்டு ஆட்களின் தூண்டலா? அல்லது கடந்த ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவமும் ஐந்து தடவைகள் பிரதமராக இருந்ததன் விளைவா என்று தெரியவில்லை.

ஆனால், அடுத்து வரும் நாட்களில் தன்னை அவர் எப்படிப் பலப்படுத்தப்போகிறார்? பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை எப்படி நிரூபிக்கப்போகிறார்? யார் யாரெல்லாம் அவருடைய அமைச்சரவையில் இடம்பெறப்போகின்றனர்? ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவுக்கும் அவருக்கும் இடையில் என்னமாதிரியான உடன்பாடும் (இணக்கமும்) புரிந்துணர்வும் உள்ளன? இது எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்? (இப்படித்தான் தேனிலவாகத் தொடங்கப்பட்ட மைத்திரி – ரணில் நல்லாட்சிக்கால உறவு பின்னர் பாவற்காயாகக் கசப்படைந்தது) என்ற பல பரீட்சைகளை அவர் வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டும்.

இதேவேளை இங்கே நாம் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்புப் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும்போது அதை ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிக்கும் அமெரிக்காவும் இந்தியாவும் பாராட்டியுள்ளன என்பது.

சரி, தன்னைச் சுற்றியுள்ள நெருக்கடிகளைக் கடந்து அல்லது வென்று ஆட்சியமைத்தாலும் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளை எப்படி அவர் வெல்லப்போகிறார்?

இரட்டை நெருக்கடியை எதிர்கொள்ளும் ஒரு இக்கட்டான வரலாற்றுச் சூழலில் – அரசியலில் – ரணில் இருக்கிறார் என்பதே அவருடைய அரசியல் வெற்றியும் எதிர்காலமுமாகும்.

தன்னைச் சுற்றியுள்ள நெருக்கடிகளை வெற்றி கொள்வதை அடுத்த ஒரு வார காலம் நிரூபித்து விடும். அல்லது அடுத்த சில வாரங்களில் தெரிந்து விடும். ஆனால், நாடு எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடியை அவர் எப்படி வெற்றி கொள்ளப்போகிறார் என்பதற்கு எவ்வளவு காலம் பொறுத்திருக்க வேண்டும்?

இன்றைய நிலையில் ஒரு நாளைக் கூட பொறுத்துக் கொள்வதற்கு மக்கள் தயாராக இல்லை. அவர்களுடைய வாழ்க்கைச் சுமை குறையும் வரை, பொருளாதார நெருக்கடி தீரும் வரை அவர்கள் பொறுதியடையப்போவதில்லை. ஆகவே சூழல் எப்போதும் கொதிநிலையில்தான் இருக்கப்போகிறது.

இதைத் தணிப்பதற்கு உடனடியான – நீண்டகால அடிப்படையிலான பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்களும் நடவடிக்கைகளும் அவசியம். இந்த நடவடிக்கைகள் வழமையைப்போல மந்த கதியிலானவையாக இல்லாமல் துரித கதியிலானதாக இருக்க வேண்டும். இதைக் கண்காணிப்புச் செய்யும் பொறிமுறையும் அவசியம். அப்படிச் செய்தால்தான் நிலைமையை ஓரளவுக்கேனும் சீர் செய்ய முடியும்.

இதற்கெல்லாம் பொருத்தமான விதிமுறைகளும் சட்டங்களும் உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, இலவசங்கள், நிவாரணங்களை மட்டுப்படுத்துவதை எடுத்துக் கொள்ளலாம். பாடசாலை மாணவர்களுக்கான சீருடையும் பாடப்புத்தகங்களும் இப்பொழுது அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. இதைக் குறைக்க நேரிடலாம்.

வசதி உள்ளோருக்கு வழங்கலை இடை நிறுத்தலாம். அதற்கான விதிமுறை உருவாக்கப்பட வேண்டும். கற்பித்தல் அனைவருக்கும் வழமையைப்போல இருக்கும். சீருடையும் பாடப்புத்தகமும் மட்டும் தரப்படுத்தலின் அடிப்படையில் வழங்கப்படுவதாக அமையலாம்.

இதைப்போல மதுபோதையில் விபத்துக்குள்ளாவோர், அடிதடி சண்டை வன்முறைகளில் காயமடைவோருக்கெல்லாம் மருத்துவம் அரச மருத்துவமனைகளில் வழமையைப்போல மருத்துவம் செய்யப்படும். ஆனால், அவர்கள் பொலிஸ் விசாரணையின் அடிப்படையில் மருத்துவக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இவ்வாறே போதை வஸ்துப் பயன்படுத்தலுக்குச் செய்யப்படும் புனர்வாழ்வு மற்றும் சிகிச்சைக்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று கோரப்படலாம்.

இதைப்போல நீதி மன்றத்தினால் சட்டரீதியாக ஏற்கப்படும் உடமைகள் நீண்ட கால தாமதமின்றி ஏலத்தில் விடப்பட வேண்டும். அதற்கிசைவாக நீதி விசாரணைகள் துரிதமாக்கப்படுவது அவசியம். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தல் வேண்டும்.

விதி மீறல்களுக்காக விதிக்கப்படும் பொலிஸ் தண்டப்பணம் உடனடியாகச் செலுத்தப்படத்தக்க மாற்றம் செய்யப்பட வேண்டும். குற்றம் மற்றும் தண்டப்பணத்தைச் செலுத்துவதற்காக நீதி மன்றத்துக்குச் செல்லுதல் அல்லது பொலிஸ் மற்றும் தபால் நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருத்தலின் சிரமங்களால் பொலிஸூக்குக் கையூட்டுக் கொடுத்துத் தப்பி விடுவதே வழமையாக உள்ளது. இது ஊழலை வளர்ப்பதோடு அரசுக்குச் சேரவேண்டிய வருமானத்தையும் இழக்க வைக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என மக்கள் பிரதிநிதிகள் தமது பிரதேசங்களில் மக்களோடு இணைந்து பணியாற்ற வேண்டும். அந்தப் பணிகளின் விவரம் பகிரங்கப்படுத்தப்படுதல் அவசியம். அதாவது, அந்தப் பணிகளின் அடைவுமட்டம் குறித்த விவரம். இல்லையெனில் அதற்கான பொறுப்புச் சொல்லுதல் – காரணமுரைத்தல் வேண்டும்.

இப்படி ஒவ்வொரு விடயங்களிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதற்கான விதிமுறைகளையும் சட்டங்களையும் உருவாக்குவது அவசியம். ஒட்டுமொத்த நிர்வாக முறைமைகளில் திருத்தங்களும் மாற்றங்களும் செய்யப்பட வேண்டும்.

பலரும் சொல்வது அல்லது கருதுவது அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என. அதுவும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து, பாராளுமன்றத்துக்கு அதிகாரமுள்ள வகையிலான திருத்தம் தேவை என. அதோடு வங்கிச் சட்டங்கள் தொடக்கம் நிதி நிறுவனங்கள், நிர்வாக முறைமைகள், பிற அமைப்புகள், துறைகள் போன்றவற்றில் எல்லாம் புதிய திருத்தங்களும் மாற்றங்களும் தேவை.

இதைப்போல முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இலகு நிர்வாக நடைமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். கூடவே இதற்கென தனியான ஒரு அமைப்பும் தேவை. அதோடு முதலீட்டாளர்களை ஈர்க்கத்தக்க வகையிலான  நிபுணத்துவத்தையுடைய குழுவின் அறிமுக ஊடாட்டமும் வேண்டும்.

ஒட்டு மொத்தத்தில் நாட்டு மக்கள் அனைவரிடத்திலும் நெருக்கடிகளிலிருந்து மீள வேண்டும் என்ற எண்ணமும் தேசத்துக்காக உழைக்க வேண்டும் என்ற சிரத்தையும் ஒரு நிகழ் பண்பாடாக உருவாக்கப்படுவது அவசியம். ஒரு நிமிடத்தைக் கூட பயனற்றதாகச் செலவழிக்கக் கூடாது, செலவழிக்க முடியாது என்ற வகையில் வாழ்க்கை முறையில் மாற்றம் வேண்டும்.

இப்பொழுது அரசு வேறு. மக்கள் வேறு. அதாவது நாம் வேறு என்ற வகையிலான சிந்தனை முறையே பலரிடத்திலும் உள்ளது. இதனால்தான் தாம் என்னவும் செய்யலாம் என்ற எண்ணத்தோடு பொறுப்பற்ற விதமாகப் பலரும் நடக்கின்றனர்.

அப்படியல்ல. நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறும், ஒவ்வொரு பொறுப்பின்மைகளும் தேசத்தையே பாதிக்கிறது. தேசத்தின் பாதிப்பு மறுவளமாக நம்மையே தாக்குகின்றது என்ற புரிதலை – என்ற உண்மையை – உணர்த்த வேண்டும்.

இவ்வாறு செய்யப்படும்போது கிட்டத்தட்ட அடிப்படை மாற்றம் ஒன்று நிகழும். அது தற்போது கோரப்படும் கட்டமைப்பு மாற்றத்துக் (System change) கிட்டவாகச் செல்லக் கூடியதாக இருக்கும். இதுவே நெருக்கடிகளிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியை ஏற்படுத்தும்.

இவ்வாறு பலவற்றைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். ஆனால், இவற்றைக் குறித்துச் சிந்திக்காமல் தனியே ஒற்றைப் பரிமாணத்தில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இனவாத அடிப்படையில் செயற்படும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினர் எப்படிச் சிந்திப்பர், செயற்படுவர் என்பதை இவர்களிற் பலரும் சிந்திப்பதில்லை. நிறைவேற்று அதிகாரமுறை அறிமுகமாகுவதற்கு முன்பு இருந்த பாராளுமன்றத்தில் என்ன வகையான நடைமுறைகளும் நல்விளைவுகளும் இருந்தன? இனப்பிரச்சினை கூட எப்படிக் கையாளப்பட்டது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

இது ஒரு புறமிருக்க, விரும்பும் மாற்றங்கள் அனைத்தும் நடக்கின்றனவோ இல்லையோ நாம் சாத்தியமாகும் மாற்றங்களைக் குறித்துச் சிந்திக்க வேண்டும். ரணில் என்பது எதன் குறியீடு என்று இன்னும் சில நாளில் புரிந்து விடும்.
 

 

https://arangamnews.com/?p=7693

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.