Jump to content

நள்ளிரவில் வீடுகளுக்கு இராணுவம் தீ வைத்ததா.....! கொந்தளிக்கும் அரசியல்வாதிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸாரின் கடமையே தவிர இராணுவத்தின் கடமை அல்ல என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் பொலிஸ் மா அதிபரும் இராணுவத் தளபதியும் தமது சொத்துக்களைப் பாதுகாக்கத் தவறியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது பொலிஸாருக்குரிய விடயம் என்பதை அறிந்த ஜனாதிபதி, பொலிஸ் மா அதிபரை கூட்டத்திற்கு அழைத்திருந்தார்.

 

நள்ளிரவில் வீடுகளுக்கு இராணுவம் தீ வைத்ததா.....! கொந்தளிக்கும் அரசியல்வாதிகள்

எப்படியிருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபர் மீது குற்றம் சுமத்தி வரும் நிலையில், தமது சொத்துக்களை பாதுகாக்க தவறிய இராணுவ தளபதி சவேந்திர சில்வாவும் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

 

இதன்போது இராணுவத் தளபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜனாதிபதி, நாட்டின் சட்டத்திற்கு அமைவாக பொலிஸாரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால், அவ்வாறான சம்பவத்தில் இராணுவம் தலையிடுமாறு பொலிஸார் கோரிக்கை விடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் இவ்வாறான விடயத்தில் தலையிடுவதற்கு இராணுவத்திற்கு சட்டரீதியாக அனுமதி இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

இதன் போது, வடமத்திய மாகாண முன்னாள் அமைச்சர் ஒருவர் தலையிட்டு கருத்து வெளியிட்டுள்ள நிலையில், 40 இராணுவத்தினர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மக்கள் தனது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் இராணுவம் ஒன்றும் செய்யவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

நள்ளிரவில் வீடுகளுக்கு இராணுவம் தீ வைத்ததா.....! கொந்தளிக்கும் அரசியல்வாதிகள்

இது தொடர்பில் இராணுவத் தளபதியிடமும் ஜனாதிபதி வினவியிருந்ததுடன், இராணுவத் தளபதி, குறித்த அமைச்சரிடம் அப்போது அவர் வீட்டில் இருந்தாரா என வினவியுள்ளார்.

கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த போதிலும் வடமாகாணத்தில் உள்ளவர்கள் தமது வீட்டிற்கு தீ வைப்பதை சிசிடிவி கமராக்களில் பார்த்ததாக முன்னாள் அமைச்சர் பதிலளித்திருந்தார். இதன்படி குறித்த சிசிடிவி காட்சிகளை தமக்கு வழங்குமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளதுடன், குறித்த காணொளிக் காட்சிகளின் மூன்று பகுதிகளை உடனடியாக இராணுவத் தளபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அதனை பார்வையிட்ட இராணுவத் தளபதி, ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தவிர வேறு எவரும் சம்பவ இடத்தில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலிஸாரின் ஊடாக இராணுவத்தின் பாதுகாப்பு கோரிய சில வீடுகளுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிரசன்ன ரணதுங்கவின் கொழும்பிலுள்ள வீடு, கெஹலிய ரம்புக்வெல்லவின் கொழும்பிலுள்ள வீடு மற்றும் இராணுவத்தினால் பாதுகாப்பு கோரிய ஆறு வீடுகளின் சொத்துக்களை பாதுகாக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கு தீ வைப்புத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-shavendra-silva-angry-1652583550

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பெருமாள் said:

கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த போதிலும் வட மாகாணத்தில் உள்ளவர்கள் தமது வீட்டிற்கு தீ வைப்பதை சிசிடிவி கமராக்களில் பார்த்ததாக முன்னாள் அமைச்சர் பதிலளித்திருந்தார். இதன்படி குறித்த சிசிடிவி காட்சிகளை தமக்கு வழங்குமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளதுடன், குறித்த காணொளிக் காட்சிகளின் மூன்று பகுதிகளை உடனடியாக இராணுவத் தளபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

https://tamilwin.com/article/sri-lanka-economic-crisis-shavendra-silva-angry-1652583550

வட மாகாணத்தில் உள்ளவர்கள் ஏன்? அந்த அமைச்சரின் வீட்டுக்கு தீ வைக்கிறார்கள்.
சிங்களப் பகுதிக்கு...  தமிழர்கள்  சென்று தீ வைப்பது சாத்தியமானதா?
தமிழருக்கு, ஆயிரம் பிரச்சினை இருக்க... 
இதற்குள் தமிழரை இழுத்து விடுவதில், எல்லாரும் குறியாக இருக்கிறார்கள். 😮

முதலில்... காலிமுகத்திடலுக்கு, தமிழரை போகக் சொன்ன... 
சுமந்திரனை, கட்டி வைத்து... வெளுக்க வேண்டும். 😡 

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

5 hours ago, பெருமாள் said:

வடமாகாணத்தில் உள்ளவர்கள் தமது வீட்டிற்கு தீ வைப்பதை சிசிடிவி கமராக்களில் பார்த்ததாக முன்னாள் அமைச்சர் பதிலளித்திருந்தார்.

என்னதான் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை அது இது என்று உலகமகா வல்லரசுகள் பல மில்லியன்கள், பில்லியன்கள் செலவுசெய்து கண்டுபிடித்தாலும், ஒரு தீப்பந்தத்தை ஒரு சதமும் செலவின்றி, அதுவும் சிறிலங்காவின் வடமாகாணத்திலிருந்து கொழும்புக்கு குறிதவறாமல் பாயவைக்கும் தொழில் நுட்பத் திறன் வடமாகாணத்தவனுக்கு மட்டுமே உண்டு. 😋

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு சென்றிருந்த போதிலும் வடமாகாணத்தில் உள்ளவர்கள் தமது வீட்டிற்கு தீ வைப்பதை சிசிடிவி கமராக்களில் பார்த்ததாக முன்னாள் அமைச்சர் பதிலளித்திருந்தார். இதன்படி குறித்த சிசிடிவி காட்சிகளை தமக்கு வழங்குமாறு இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளதுடன், குறித்த காணொளிக் காட்சிகளின் மூன்று பகுதிகளை உடனடியாக இராணுவத் தளபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

 

என்னமாக் கோத்து விடுகிறாங்கப்பா.....ரசியனின் மூளை போலக் கிடக்கு..

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.