Jump to content

கல்வராயன் மலைவாசிகள்: கொடுமையின் உச்சத்தை அனுபவிக்கும் கிராமங்கள் - கள நிலவரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கல்வராயன் மலைவாசிகள்: கொடுமையின் உச்சத்தை அனுபவிக்கும் கிராமங்கள் - கள நிலவரம்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
14 மே 2022
 

கல்வராயன் மலை

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை மீது உள்ள பல உள்ளடங்கிய கிராமங்களில் சரியான சாலை வசதிகள் இல்லாத காரணத்தால் பிரதான சாலையை அடைவதற்கு பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள். களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்.

கல்வராயன் மலையில் உள்ளடங்கி அமைந்திருக்கும் சின்னக் கருவேலம்பாடியிருந்து கீழே இறங்கும் மலைப் பாதை. அந்தக் கரடுமுரடான மலைப்பாதையில் கடுமையான மே மாத வெயிலில் தன் மனைவியுடன் நடந்துவந்து கொண்டிருக்கிறார் சின்னத் தம்பி.

ஒரு மரத்தடியில் சிறிய நிழலைப் பார்த்ததும் இருவரும் இளைப்பாறுகிறார்கள். "இந்தக் கருவேலம்பாடியிலிருந்து ஓர் அவசரத்திற்குக்கூட மருத்துவமனைக்குச் செல்ல முடியாது. இருசக்கர வாகனம் இருந்தால், அதில் போகலாம். அது இல்லாதவர்கள் நோயாளிகளைத் தூக்கித்தான் செல்ல வேண்டும். மைசூருக்குப் போய்வந்த ஒருவர் இடுப்பொடிந்து போய் கிடக்கிறார். அவரை வைத்தியத்திற்காக காரில் அழைத்துச் செல்ல முடியவில்லை. மெயின் ரோடு வரை கார் வருவதற்குக்கூட ஆறாயிரம் ஏழாயிரம் கேட்கிறார்கள். இதனால், அவர் வைத்தியமில்லாமல்தான் கிடக்கிறார்" என்கிறார் சின்னத்தம்பி.

சின்னத்தம்பியின் சொந்த ஊர் வெள்ளேரிக் காடு. திருமணமான பிறகு கருவேலம்பாடிக்கு வந்துவி்டடார். "இங்கே 24 வருடமாக இருக்கிறேன். போக்குவரத்து வசதியே கிடையாது. மிகச் சிறிய தார்ச் சாலையைப் போட்டுத்தந்தால் பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால், அதைச் செய்ய மறுக்கிறார்கள்" என்கிறார் சின்ன முத்து.

இது வெறும் கருவேலம்பாடி என்ற ஊரின் பிரச்னை மட்டுமல்ல. கல்வராயன் மலையில் அமைந்துள்ள பல கிராமங்களில் வசிப்பவர்கள் நிலை இதுதான்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கல்வராயன் மலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது. 2,000 அடி முதல் 3,000 அடிவரை உயரமுள்ளது இந்த மலை. இந்தப் பகுதியில் 44 பெரிய கிராமங்களும் 150க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்களும் அமைந்திருக்கின்றன. இதில் பெரும்பாலான சிறிய கிராமங்களை அணுகும் பாதையென்பது, சாதாரண மண் சாலையாகவே இன்னமும் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பாக எப்போதோ போடப்பட்ட இந்த மண் சாலைகள், மழையின் காரணமாக கரடுமுரடாக மாறி, ஆட்கள் நடந்து செல்லவே இயலாத சாலையாக மாறியிருக்கிறது.

 

கல்வராயன் மலை

இந்த மலையில் அமைந்துள்ள புழுவப்பாடி, தாழ்மதூர், மேல் முருவம், வண்டகப்பாடி, வெங்கோடு என பல கிராமங்கள் இதுபோல வாகனங்களால் அணுக முடியாத நிலையில் இருக்கின்றன. அதிலும் மேல் முருவம் கிராமத்திற்குச் செல்லும் பாதை என்பது நடக்கவே இயலாத பாதையாக இருக்கிறது.

"எங்க முப்பாட்டன் தலைமுறையில் இருந்து இந்த கிராமத்தில்தான் வாழ்ந்து வருகிறோம். எங்க ஊரில் சுமார் 120 குடும்பங்கள் இருக்கின்றன. மொத்தமாக 700 பேர் வரை வசிப்பார்கள். என் ஊரில் இருந்து பிரதான சாலைக்கு வர வேண்டுமென்றால் 3 கி.மீ.வரை மலைப் பாதையில் நடக்க வேண்டும். இங்கேயிருந்து வெள்ளிமலை (அருகில் உள்ள சிறிய டவுன்) செல்ல வேண்டுமென்றால் 15 கி.மீ. செல்ல வேண்டும். ஒரு பெரிய சந்தைப் பகுதிக்குப் போக வேண்டுமென்றால் தலைவாசல் (சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்) வரை செல்ல வேண்டும்.

எங்கள் ஊரிலிருந்து பிரதான சாலைக்கு வருவதற்கு அடிப்படை வசதியே கிடையாது. கரடு முரடாக ஒரு காட்டுப் பாதையில்தான் நடந்து வர வேண்டும். உடம்பு சரியில்லை என்றாலோ, பிரசவத்திற்கு செல்வதாக இருந்தாலோ தூளி போல கட்டித்தான் தூக்கி வர வேண்டும். இதனால், சரியான நேரத்தில் மருத்துவமனையை சென்றடைய முடியாது. நிறையப் பேர் இறந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் எழுத்தூர் பிரிவு வரைதான் வரும். இங்கே வரை, 3 கி.மீ. நடந்துதான் வர வேண்டும். ஒரு சிறிய தார் சாலை அமைத்துக்கொடுத்தால் சிறப்பாக இருக்கும்" என்கிறார் மேல் மருவம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ்.

இதுபோன்ற கிராமங்களில் வசிப்பவர்கள் அந்தந்த கிராமங்களிலேயே விவசாய வேலையோ, காட்டு வேலைகளையோ பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால், மருத்துவத்திற்குக் கண்டிப்பாக வெள்ளிமலையோ, கள்ளக்குறிச்சியோ போயாக வேண்டும்.

 

கடினமான வாழ்வை எதிர்கொள்ளும் கல்வராயன் மலைவாசிகள்: தீர்வு எப்போது?

"யாருக்காவது பிரசவ வலி வந்தால், மேலே இருந்து கீழே வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். ஆஸ்பத்திரிக்குப் போக இரண்டு - மூன்று மணி நேரம் ஆகிவிடும். பல பேருக்கு நடுவழியில் பிரசவம் ஆகியிருக்கிறது. குழந்தை இறந்துபோயிருக்கிறது. சாதாரண உடல்நலக் குறைபாடுகளுக்கு ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டு வந்தாலே மாலை நேரமாகிவிடும். இரு சக்கர வாகனத்தில் சிரமப்பட்டு போகலாம். ஆனால், பல சமயங்களில் நோயாளிகள் கீழே விழுந்திருக்கிறார்கள்" என்கிறார் ஆயத்துறைக் காட்டைச் சேர்ந்த செல்வி.

 

கல்வராயன் மலை

வெள்ளிமலையிலும்கூட ஒரு சிறிய அளவிலான அரசு மருத்துவமனையே இருக்கிறது. பெரிய பிரச்னைகள் என்றால், கள்ளக்குறிச்சிக்குத்தான் செல்ல வேண்டும். சாலைகளை எளிதில் அணுக முடியாதது, அவசர மருத்துவ உதவியை உடனடியாகப் பெற முடியாதது போன்ற பிரச்னைகள் தவிர, வேறு சில பிரச்னைகளும் இந்தப் பகுதி மக்களுக்கு இருக்கின்றன.

"இந்த கிராமங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாயப் பணிகளுக்கோ கூலிவேலைகளுக்கோதான் செல்கிறார்கள். இது வானம் பார்த்த பூமி. பம்ப்செட்டோ, கிணறுகளோ கிடையாது. பெரும்பாலும் மரவெள்ளிக் கிழங்கும் பருத்தியும்தான் பயிரிடுவார்கள். பல இடங்கள் காப்புக்காடுகளாக வரையறுக்கப்பட்டதால், அவர்களால் முழுமையாக விவசாயம் செய்யவும் முடியாது. இதனால் பலர் வேறு மாநிலங்களுக்கு விவசாயக் கூலிகளாகவும் செல்கிறார்கள். பலர் வேறு மாநிலங்களுக்கு மரம் வெட்டச் செல்கிறார்கள். அதில் சட்டரீதியாகவும் பல சிக்கல்கள் இருக்கின்றன" என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த கஜேந்திரன்.

கல்வராயன் மலையில் உள்ள உள்ளடங்கிய கிராமங்களின் பிரச்னை குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதரிடம் கேட்டபோது, இந்த கிராமங்களின் பல பகுதிகள் வனத்துறைக்குக் கீழ் வருவதால், சாலைகள் அமைப்பதில் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்தார்.

"மலை மேல் உள்ள பல கிராமங்கள் வனப்பகுதிக்குள் வருவதால், சாலைகளை போடுவதற்கான அனுமதிகளைப் பெறுவதில் சிரமம் இருக்கிறது. கடந்த வாரம்தான் வனத்துறை அதிகாரிகளுடன் இது தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. ஆனால், கண்டிப்பாக இந்தப் பகுதிகளுக்கு சாலை போடும் திட்டம் இருக்கிறது" என்று பிபிசியிடம் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

https://www.bbc.com/tamil/india-61448916

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Kalvarayan Hills: "பிரசவ வலி வந்தா, Hospital போக 3 மணி நேரம் ஆயிடும்" BBC Ground Report

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.