Jump to content

சிங்கள இனவெறி - உண்மை நிலை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, vasee said:

எந்த நிக்ழ்விலும் யாரும் துண்டு பிரசுரம் கொடுக்கலாம், அதில் தவ்றில்லை.  கூற வந்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களைப்போலவே தமிழர்களுக்கும் இனவாதமுண்டு, இஸ்லாமியர்களிடமும் உண்டு. அனைவரும் தவறு செய்தவர்கள்தான், ஆனால் அனைவரும் தவறுகளை ஏற்றுகொள்ள முன்வருவதில்லை.

 

நடு நிலையாக சரியான கருத்தை தெரிவித்துள்ளீர்கள். இவ்வாறு நடுநிலையாக கருத்து தெரிவிக்கு துணிவு வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு விதத்தில் நன்மை, அவர் வெளிப்படையாக செய்கிறார். அவ்வளவு பாதிப்பு இல்லை, உடனடி ஆத்திரம், ஏமாற்றம் போன்றவற்றை தவிர.

அனால், சிங்கள கல்விமான்கள், புத்தி ஜீவிகள், மற்றும் திறமை மற்றும் புலமை  சார் கூட்டம், நிறுவன இயக்குனர்கள்   போன்றவர்கள் செய்யும், திட்டமிட்ட தமிழர்களின் பூர்விகத்தை துடைத்து எறிவது எனும் வேலை திட்டத்தை உணர்ந்தால், சிங்களவரில் அப்படி செய்யாத அப்பாவிக்சல் இருப்பினும், முழு சிங்கள இனத்தையும் துடைத்து அழிக்க  வேண் டும் எனும் எண்ணமே வரும்.

மற்றது, ஹிந்தியா எந்த விதத்தில் தடுத்தாலும் சுதந்த்திர அரசு தமிழருக்கு அமைய வேண்டும் என்பதில் தமிழரின் நீண்ட காலா குறி விட்டுப் போகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல்.
நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்

Edited by Sabesh
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இன்று தமிழர் நாம் படும் அவஸ்த்தைக்கு நம் முன்னோர்களே காரணம் என்பேன்.

மலையகத் தமிழரை அன்று திருப்பி அனுப்புவதை நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்த்து இருந்தால் இன்று இலங்கை சனத்தொகையில் 40 வீதம் தமிழர் இருந்திருப்போம்.

ஒரு நாள் மலையகத் தமிழரை  நாடற்றவர்கள் ஆக்கி கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பும் வீடியோ ஒன்று பார்த்தேன். ஒரு வயசு போன அம்மா தேம்பித் தேம்பி அழுறா.. அந்தக் கண்ணீர் வலிமிகுந்தது..தலைமுறை தாண்டியும் காவு வாங்கும் சக்தி கொண்டது.

எத்தனை வீட்டு  வேலை செய்த மலையக பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் அன்று இறந்து இருப்பார்கள்? இறந்த மகளின் உடலை வாங்க வர பணமில்லாமல் வாழ்ந்து செத்த பெற்றோரின் கண்ணீற்கு என்னை விடை?

இது சம்பந்தமாக ஓரளவுக்கேனும் நாம் யோசிப்பதில்லை, மனம் கசப்பதும் இல்லை.இலகுவாக வேறு ஒருவர் தவறு என்று கடந்து போய் விடுகின்றோம்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

காலம் எங்களுக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தபொழுது, அதை எங்கள் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை நசுக்க பயன்படுத்தினோமேயன்றி  அவர்களை தூக்கி விட  என்றும் நாங்கள் நினைத்ததில்லை. 

இவ்வளவத்தையும் செய்து விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்றால்..

 

 

 

Edited by பகிடி
  • Like 9
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, பகிடி said:

இலங்கையில் இன்று தமிழர் நாம் படும் அவஸ்த்தைக்கு நம் முன்னோர்களே காரணம் என்பேன்.

மலையகத் தமிழரை அன்று திருப்பி அனுப்புவதை நாம் எல்லோரும் சேர்ந்து எதிர்த்து இருந்தால் இன்று இலங்கை சனத்தொகையில் 40 வீதம் தமிழர் இருந்திருப்போம்.

ஒரு நாள் மலையகத் தமிழரை  நாடற்றவர்கள் ஆக்கி கப்பலில் இந்தியாவுக்கு அனுப்பும் வீடியோ ஒன்று பார்த்தேன். ஒரு வயசு போன அம்மா தேம்பித் தேம்பி அழுறா.. அந்தக் கண்ணீர் வலிமிகுந்தது..தலைமுறை தாண்டியும் காவு வாங்கும் சக்தி கொண்டது.

எத்தனை வீட்டு வேலைக்கு வேலை செய்த மலையக பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் அன்று இறந்து இருப்பார்கள்? இறந்த உடலை வாங்க வர பணமில்லாமல் வாழ்ந்து செத்த பெற்றோரின் கண்ணீற்கு என்னை விடை?

இது சம்பந்தமாக ஓரளவுக்கேனும் நாம் யோசிப்பதில்லை, மனம் கசப்பதும் இல்லை.இலகுவாக வேறு ஒருவர் தவறு என்று கடந்து போய் விடுகின்றோம்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

காலம் எங்களுக்கு அதிகாரத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தபொழுது, அதை எங்கள் சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களை நசுக்க பயன்படுத்தினோமேயன்றி  அவர்களை தூக்கி விட  என்றும் நாங்கள் நினைத்ததில்லை. 

இவ்வளவத்தையும் செய்து விட்டு இப்பொழுது குத்துதே குடையுதே என்றால்..

 

 

 

எங்கள்  முன்னோர் என்ற எடுபட்ட  கூட்டத்தால் நாம் இப்படி நாடு நாடாய் அலையிரம் அந்த ஆறு லட்சம் மக்களின்  கண்ணீர்தான் இப்படி அலைக்கழிக்குது இந்த உண்மையை யாழ்ப்பானியம் மேட்டுக்குடிகள் என்பவர்கள்  என்று உணருகினமோ  அன்றுதான் எமக்கு  விடிவு .

சும்மா சொல்லக்கூடாது எம்மை  அடிமையாக்கிய பிரிடிஷ் காரனுக்கு சண்டை பிளேன் வாங்கி கொடுத்து பெருமை தேடும் ஆட்கள் .

  • Like 2
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

எந்த நிக்ழ்விலும் யாரும் துண்டு பிரசுரம் கொடுக்கலாம், அதில் தவ்றில்லை.  கூற வந்த விடயம் என்னவென்றால் சிங்களவர்களைப்போலவே தமிழர்களுக்கும் இனவாதமுண்டு, இஸ்லாமியர்களிடமும் உண்டு. அனைவரும் தவறு செய்தவர்கள்தான், ஆனால் அனைவரும் தவறுகளை ஏற்றுகொள்ள முன்வருவதில்லை.

ஈழத்தமிழர் கேட்டது சம உரிமை. தன்னின சுதந்திரம். வேறொன்றுமில்லை.ஈழத்தமிழர்கள் இனக்கலவரம் செய்யவில்லை.தனித்தமிழ் என்றும் கூறவில்லை. சிங்கள மக்களுடன் சேர்ந்தே வாழ விரும்பினார்கள்.

பக்கா இனவாதம் என்றால் முஸ்லீம் மக்களிடம் மட்டுமே உள்ளது. அவர்களுக்கு என்ன பிரச்சனை என இதுவரைக்கும் நானறியவில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எங்கள்  முன்னோர் என்ற எடுபட்ட  கூட்டத்தால் நாம் இப்படி நாடு நாடாய் அலையிரம் அந்த ஆறு லட்சம் மக்களின்  கண்ணீர்தான் இப்படி அலைக்கழிக்குது இந்த உண்மையை யாழ்ப்பானியம் மேட்டுக்குடிகள் என்பவர்கள்  என்று உணருகினமோ  அன்றுதான் எமக்கு  விடிவு .

சும்மா சொல்லக்கூடாது எம்மை  அடிமையாக்கிய பிரிடிஷ் காரனுக்கு சண்டை பிளேன் வாங்கி கொடுத்து பெருமை தேடும் ஆட்கள் .

சரி தான் ஆனால் இதில் யாழ்ப்பாண மேட்டுக்குடி என்று ஒரு தரப்பாரை மட்டும் வைவது தவறு.. எல்லாரும் மலையக தமிழரை பார்த்த பார்வையில் தவறு இருக்கின்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

Image

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sabesh said:

இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல்.
நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்

  ராஜபக்ஷ்ஸாக்கள் பதவி விலகவேண்டும் என்று ஒழுங்கு செய்த பேரணியில் அவர்களுக்கு அதற்கான காரணங்கள் இருந்ததுபோலவே தமிழருக்கும் அவர்கள் பதவி விலகவேண்டும் என்பதற்கு பலமான காரணங்கள் உண்டு. காரணங்கள் வேறாக இருந்தாலும் அவர்கள் பதவி விலகவேண்டும் என்பதில் இருபகுதியும் குறியாய் உள்ளது. இதில் இவருக்கு என்ன வந்தது? இருக்கட்டும், புலம்பெயர்ந்தோர் இனவாத அரசால் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைக்கும் பேரணிகளில் நுழைந்து, குழப்பி, ஆர்ப்பாட்டம் செய்யும் போது மட்டும் உங்களுக்கு அது சரியென தோன்றுமோ? அப்போ ஏன் நீங்கள் இந்த காரணத்தை கூறவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களிடம் மதவாத வெறி மிகவும் மோசமாக இருக்கிறது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Sabesh said:

இன்னொருவர் வேறு ஒரு விடையமாக ஒழுங்கு செய்த ஒரு எதிர்ப்பு / கண்டன பேரணியில் வேறொருவர் வேறொரு விடையமான துண்டு பிரசுரங்களை அனுமதி பெறாமல் வழங்குவது எந்த விதத்தில் நியாயமானது?  இது அவர்களின் நோக்கத்தை மற்றவர்கள் திசை மாற்றுவது போன்றதொரு செயல்.
நானாக அதில் இருந்தாலும் அதைத்தான் செய்வேன்

கோட்டா கோகம விலேயே இரு போராட்டங்களும் ஒன்றாக நடக்கும்போது அவுஸில் நடப்பதில் என்ன சிக்கல்.
இதிலிருந்து தெரிவதென்ன??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

கோட்டா கோகம விலேயே இரு போராட்டங்களும் ஒன்றாக நடக்கும்போது

கோட்டா கோகமவில் இரு போராட்டங்கள் ஒன்றாக நடந்தனவா? பெற்றோல் இல்லை காஸ் இல்லை மின்சாரம் இல்லை ராசபக்சே குடும்பம் நாட்டை கொள்ளை அடித்துவிட்டார்கள் அவர்கள் போய் நல்ல ஒரு தலைவர் இலங்கைக்கு வேண்டும் என்று தானே அதில் பங்கு பற்றிய தமிழர்களும் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பகிடி said:

எல்லாரும் மலையக தமிழரை பார்த்த பார்வையில் தவறு இருக்கின்றது

மிகவும் சிறுபான்மை இருந்தது, அவர்களை சக உறவுகளாக மதித்தது.

எனது சகோதரம்,  நான் எனக்கு அறியாத குழந்தை பருவத்தில் இருந்து வளர்ந்தது, வளர்க்கப்பட்டது ஓர் மலைநாட்டு தமிழ் பெண்ணால். 

அவரை முதலில் வேலைக்காரி என்று தான் வந்தார் என்றும், பின் குடும்பத்தில் ஒருவராகி விட்டார் என்றும் அறிந்தேன்.

அவர் எம்மை விட்டு போகும் போது, அன்றைய நிலையில் 50,000 (அப்போது அந்த தொகையில் யாழில் காணி வாங்க கூடிய பெறுமதி இருந்தது) அவருக்காக எனது பெற்றோரால் சேமிக்கப்பட்டு, வட்டியில்  இடப்பட்டு கொடுத்ததாக அறிந்தேன். இது அவரின் சம்பளத்தை விட.

சிலகாலம் பின், தனது குடும்பத்தோடு என்னையம், குடும்பத்தையும் பார்ப்பதற்கு வந்தார்.

1995 அழிவுக்கு முதல்,   அவர் எம்முடன் வாழ்ந்த பொது எடுக்கப்பட்ட படங்கள் (Black & White), குடும்பமாகவே எமது குடும்ப அல்பத்தில்  இருந்தது. 

அனால், அந்த வயதில் அவரை வேளைக்கு அமர்த்தியது சரியா, பிழையா என்பதை அந்தக் கால வாழ்க்கை முறையும், அவர்களின் பொருளாதாரமும் தீர்மானித்து இருக்கும்.  

வேறு எவர் அப்படி வந்து இருந்தாலும், அநேகமாக எனது குடும்பத்தில் இப்படி நடந்து இருபதற்கே வாய்ப்புகள்.  

 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.