Jump to content

மே18 தமிழின அழிப்பு நினைவுசுமந்து யேர்மனியில் நடைபெற்ற நிகழ்வுகள்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனி சார்புறுக்கன் நகரமத்தியில் தமிழின அழிப்பு நினைவுகூரப்பட்டது.

pa16-146x300.jpegசிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இன்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின் மத்தியில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களின் நிலமையை ஓவியமாகத் தீட்டி சார்புறுக்கன் நகரமத்தியில் கண்காட்சி நடாத்தப்பட்டது.

இதன்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களுக்கு நகரமத்தியில் தீபம் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வானது யேர்மனியில் 4.5.2022 இல் இருந்து 18.5.2022 வரை முக்கிய நகரங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

pa17.jpeg
pa16.jpeg
pa14.jpeg
pa13.jpeg
pa12.jpeg
pa11.jpeg
pa9.jpeg
pa8.jpeg
pa7.jpeg
pa6.jpeg
pa5.jpeg
pa4.jpeg
pa3.jpeg
pa2.jpeg
pa1.jpeg
 
 

லாண்டோ மற்றும் கால்றூவ நகரமத்தியில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவு நாள்.

K800_SADS5990-225x300.jpgசிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் உச்ச மாதமாக மே மாதம் 2009 ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் அழிக்கமுடியாத பதிவாக இருக்கின்றது.
அதைப் பல்லின மக்களுக்கு வெளிப்படுத்தும் முகமாக யேர்மனியின் பல நகரங்களில் மே 4 ஆம் திகதியிலிருந்து கண்காட்சிகளும் துண்டுபிரசுரப் பிரச்சாரமும் நடந்து வருகின்றது.

அந்த வகையில் 4.5.2022 லாண்டோ நகரத்திலும் 5.5.2022 கால்றூய நகரத்திலும் அந் நகரங்களில் வாழும் தமிழ்மக்கலால் முன்னெடுக்கப்பட்டது. இரு நகரங்களின் நகரமத்தியிலும் காண்காட்சிகள் வைக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு சுடர்வணக்கம், மலர் வணக்கம் செலுத்தி நினைவுகூரப்பட்டது.

K800_BEQB9932.jpg
K800_EBUB2282.jpg
K800_EXDI2774.jpg
K800_GHBA2525.jpg
K800_HOFR0333.jpg
K800_IJXF3835.jpg
K800_LUQY4794.jpg
K800_MJHQ5866.jpg
K800_QQEO6522.jpg
K800_GNFV7137.jpg
K800_HEUI1270.jpg
K800_JTZZ2332.jpg
K800_XBIR0173.jpg
K800_AQQV9392.jpg
K800_JNBM6687.jpg
K800_NUAP3512.jpg
K800_OUMS9646.jpg
K800_PQTT3319.jpg
K800_QSDD1230.jpg
K800_SCCZ8239.jpg
K800_YBJW3156.jpg
K800_FPIG4355.jpg
K800_JPYT4097.jpg
K800_GICR4314.jpg
K800_KGKG9947.jpg
K800_MTXW6494.jpg
K800_ONIF0404.jpg
K800_RQZS9450.jpg
K800_SADS5990.jpg
K800_SMEY4793.jpg
K800_VDLH2942.jpg
K800_AIML2566.jpg
K800_ESDJ6802.jpg
K800_JVVT6992.jpg
K800_TBMC0333.jpg

யேர்மனி பிறைங்போட் நகரத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புக் கண்காட்சி.

K800_LNSI5624-300x225.jpgயேர்மனி பிறைங்போட் நகரத்தில் தமிழின அழிப்புக் கண்காட்சி 7.5.2022 சனிக்கிழமை நகரமத்தியில் இடம்
பெற்றது. இக்கண்காட்சியை பல்லின மக்கள் பார்வையிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா சிங்கள இனவெறி அரசினால் தமிழீழ மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன அழிப்பினை, வேற்றின மக்களுக்கு எடுத்துக்கூறும் வகையில் யேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மே 4ஆம் திகதியிலிருந்து மே 17 ஆம் திகதிவரை இக்கவனயீர்ப்பு நிகழ்வுகள் தொடர்ச்சியாக பதினாறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது. சென்ற 04. 05. 2022 லண்டவ் (Landau) நகரிலும் மறுநாள் 05. 05. 2022 கால்ஸ்றூக Karlsruhe எனும் நகரிலும் இக்கவனயீர்ப்பு நிகழ்வுகள் மிகவும் உணர்வோடு நடாத்தபட்டன. தமிழின அழிப்பின் குறியீட்டு வடிவமாக வரையப்பட்ட ஓவியக் காட்சிப்படுத்தல்கள் பார்ப்பவர் மனங்களை மிகவும் பாதித்திருந்தது. இதே வேளை எமது மனிதநேயச் செயற்பாட்டாளர்களும், எமது இளையர்வர்களும் இணைந்து துண்டுப்பிரசுரங்களை வழங்கியும் தமிழின அழிப்பின் வலியினையும் எடுத்துவிளக்கினர்.

தொடர்ந்து இக்கவனயீர்ப்பு நிகழ்வுகள் கீழ்க்காணும் நகரங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
08. 05 Wuppertal
09. 05 Mönchengladbach
10. 05 Hagen
11. 05 Münster
12. 05 Oberhausen
13. 05 Soest
14. 05 Osnabrück
14. 05 Stuttgart
15. 05 Bielefeld
15. 05 München
16. 05 Hannover
17. 05 Berlin
இக்கவனயீர்ப்பு நிகழ்வுகளின் இறுதியாக மே 18 இன அழிப்பு நினைவுநாள் 18. 05. 2022 நினைவுப் பேரிணைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

“எதிரி ஈவிரக்கமற்றவன், போர்வெறிகொண்டவன் எமது தாயகத்தைச் சிதைத்து, எமது இனத்தை அழித்துவிடுவதையே இலட்சியமாகக் கொண்டவன்.”

“ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வித காலவரம்பையும் நிர்ணயிக்க முடியாது. இறுதி இலட்சியத்தை அடையும்வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.”
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

K800_AXDI2489.jpg
K800_AYVX8579.jpg
K800_CGEL7249.jpg
K800_DKFO2615.jpg
K800_GJNE2706.jpg
K800_GKJR0569.jpg
K800_JGUE9668.jpg
K800_LNSI5624.jpg
K800_OGFB0148.jpg
K800_PEVX1137.jpg
K800_RQZK6261.jpg
K800_UMOM7668.jpg
K800_XWFO9629.jpg
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.