Jump to content

இன்று, மே 18... முள்ளிவாய்கால் அழிவு தினம். -எதிரிகளை அடையாளப்படுத்தும் வரலாற்று பதிவு.-


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person

இன்று, மே 18... முள்ளிவாய்கால் அழிவு தினம்.   -எதிரிகளை அடையாளப்படுத்தும் வரலாற்று பதிவு.- 

 

 ஈழத்தில் தமிழர்க்கெதிரான இறுதிப் போரில்.... தமிழகத் தலைவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்ததாக   மலையாளி சிவ்ஷங்கர் மேனன்  தனது புத்தகத்தில் கூறுகிறார்?
 
சிவ்ஷங்கர் மேனன் - ஈழத் தமிழர்களால் மறக்கமுடியாத, அவர்களின் சரித்திரத்தில் பதிந்துவிட்ட பெயர். லட்சக்கணக்கான அப்பாவிகளின் படுகொலைகளுக்கும், தமிழரின் தாயகத்தில் முற்றான சிங்கள ஆக்கிரமிப்பிற்கும், அவர்களின் தாயக சுதந்திர விடுதலைப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிடக் காரணமான இரு மலையாளிகளில் ஒருவரது பெயர்.
சிவ்ஷங்கர் மேனன் - ஈழத்தமிழரின் ரத்தத்தில் குளித்த மலையாளி !
 
ஈழத்தமிழர் வாழ்வின் அத்தனை அவலங்களுக்கும் காரணமான இந்தியாவின் இலங்கை தொடர்பான பத்தாம்பசலி வெளியுறவுக்கொள்கையினை இந்தியா சுதந்திரம் அடைந்ததுமுதல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மலையாள நம்பூதிரிகளின் குடும்பமான மேனன் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வாசிசு இவர். அத்துடன், 1998 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட பிரதமருக்கு அடுத்தபடியான மிகப்பலம் கொண்ட "இந்திய பாதுகாப்புச் செயலாளர்" எனும் பதவியினை தொடர்ச்சியாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும், 1980 கள் முதல் 2009 இனக்கொலை வரைக்கும் ஈழத்தமிழரின் அவலங்களுக்கு முக்கிய காரணகர்த்தாக்களாக விளங்கியவர்களுமான மலையாளி மும்மூர்த்திகளில் மிக முக்கியமானவர் இந்த சிவ் ஷங்கர் மேனன்.
 
ஈழத்தமிழர் மீதான சிங்கள பெளத்த இனவாதிகளின் இனவழிப்புப் போர் திட்டமிடப்பட்ட காலப்பகுதியான 2006 முதல் இனக்கொலை நடத்தி முடிக்கப்பட்ட 2009 மே மாதம் வரை சிவ் ஷங்கர் மேனனே இந்திய வெளியுறவுச் செயலாளராக இருந்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், 1997 முதல் 2000 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான இந்தியாவின் தூதராகக் கடமையாற்றியிருக்கிறார்.
 
ஆகவே, தமிழர்களின் அவலங்களின் மிக முக்கியமான காலங்களில், இவர் இந்தியா சார்பாக முடிவெடுக்கக் கூடிய, பிரதமருக்கு ஆலோசனைகளை வழங்கக்கூடிய நிலமையில் இருந்திருக்கிறார். இவரது ஆலோசனைப்படியும், சோனியாவின் விருப்பப்படியுமே மன்மோகன் சிங் எனும் அடையாளம் இல்லாத மனிதர் இந்தியாவின் ஈழத்தமிழர் மீதான இனக்கொலைக்குச் சம்மதம் தெரிவித்திருந்தார்.
 
ஒரு கொலையாளியின் வாக்குமூலம் - சிவ்ஷங்கர் மெனனின் தெரிவுகள்
2016 ஆம் ஆண்டில், தமிழர் மேல் இலங்கையுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியா நடத்திய இனக்கொலையில், தனது பங்கு அடங்கலாக பல விடயங்களை மேனன் "தெரிவுகள்" எனும் புத்தகம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
 
அப்புத்தகத்தில், இலங்கைக்கான இந்தியாவின் ராணுவ உதவிகள், புலிகளின் ஆயுதக் கப்பல்கள் மீதான இந்திய கடற்படையின் தாக்குதல்கள், ராணுவத்திற்கான பயிற்சிகள், கடற்படைக்கான ரோந்துக்கப்பல்கள், செய்மதி வழிக்காட்டல்கள், விமானப்படைக்கான உலங்கு வானூர்திகள், முப்பரிமாண ராடர் நிலையங்கள், அவற்றை இயக்குவதற்குத் தேவையான இந்திய நிபுணர்கள் என்று இந்தியாவின் அளப்பரிய உதவிகள் பற்றி அவர் கிலாகித்து எழுதியிருந்தார்.
 
ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, சோனியாவையும், மலையாளிகளையும் தயக்கப்பட வைத்த ஒரு விடயம் இருக்கிறது. அதுதான் தமிழக மக்களின் ஈழத்தமிழருடனான நெருக்கமும், தமிழர்களை அழிக்கும் போருக்கெதிரான அவர்களின் நிலைப்பாடும். ஆகவே, தாம் நேரடியாகப் போரில் இறங்குமுன்னர், தமிழகத்தில் உள்ள அரசியல்த்தலைவர்களை தமது அழிவு யுத்தத்திற்குச் சம்மதம் தெரிவிக்க அழுத்தம் கொடுக்கும் பொறுப்பினை சோனியா மேனனிடம் கொடுத்திருந்தார். இதற்காகவே மேனன் பலமுறை கருனாநிதியையும், ஜெயலலிதாவையும் தனிப்பட்ட ரீதியில் சந்தித்திருக்கிறார். இவரது தமிழகத்திற்கான பயணங்களும், காரணங்களும் அன்று ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. இந்த ரகசியத்தையும் மீறி தகவல்கள் வெளியே கசிந்தபோது, "தமிழர்களைப் பாதுகாக்குமாறு இலங்கையரசினைக் கேட்டுக்கொள்கிறோம், யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்படவில்லையென்பதை தமிழக அரசியல்த் தலைவர்களுக்குத் தெரிவிக்கவே வந்தேன்" என்று மேனன் பொய்மூட்டைகளை அவிழ்த்து விட்டிருந்தார்
 
ஆனால், அவர் 2016 இல் எழுதிய புத்தகத்தில், அவரது பயணங்களில் போது இடம்பெற்ற முக்கியமான கலந்துரையாடல்களின் விடயங்கள் பற்றி அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை கீழே தருகிறேன்.
"...............................பொதுமக்கள் பாதுகாப்பு வலயம் மீது இலங்கை ராணுவம் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்திக்கொண்டேயிருந்தது. அதேவேளையில் இங்கிலாந்தும், அமெரிக்காவும் உடனடியான யுத்த நிறுத்தம் ஒன்றிற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தன. அத்துடன், புலிகளின் தலைவர் பிரபாகரனை பத்திரமாக யுத்த களத்திலிருந்து வெளியேற்றி, புலிகள் முற்றாக அழிவதைத் தடுத்து, அவர்களின் சுதந்திரப் போராட்டம் அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தொடர்ச்சியாக நடைபெறுவதே அந்த நாடுகளின் நோக்கமாக இருந்தது. ஆனால் தில்லியிலும், தமிழ்நாட்டிலுமிருந்த அரசியல்த் தலைவர்களைப் பொறுத்தவரையில், புலிகள் தப்பிக்க விடப்படுவதோ அல்லது பிரபாகரனை உயிருடன் விடுவதோ ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு முடிவாக அன்று இருந்ததோடு, இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது பாதகமாக அமையும் என்பதையும் நாம் உறுதியாக நம்பினோம்.
 
தமிழகத்தில் இரு பிரதான கட்சிகள் உட்பட, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் பொறுத்தவரையில் ஈழத்தை அடைவதற்கான பிரபாகரனின் போராட்டத்திற்கு தமிழகத் தலைவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பார்கள் என்பதால் அவர்களின் பாதுகாப்பிற்குப் பிரபாகரன் அச்சுருத்தலாக இருப்பார் என்று நம்பினார்கள்.
 
மக்கள் முன்னால், தில்லியின் தமிழர் மீதான போருக்கு எதிரானவர்கள் என்று தமிழகத்தலைவர்கள் காட்டிக்கொண்டாலும்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், தில்லியின் மத்திய அரசாங்கத்துக்குமிடையே மிகச் சுமூகமான உறவு நிலவி வந்ததுடன், புலிகளை முற்றாக அழிப்பது தொடர்பாக ஒருமித்த கருத்தே அன்று நிலவியது. பிரணாப் முகர்ஜீ மற்றும் நாராயணன் ஆகியோரது அயராத முயற்சியினால், தமிழக அரசியல்த்தலைவர்கள், கட்சி பேதமின்றி இப்போருக்குத் தமது ஆதரவினை தனிப்பட்ட ரீதியில் வழங்கியதோடு, என்னுடனான தனிப்பட்ட சந்திப்புகளில் எவ்விலை கொடுத்தாவது புலிகள் அழிக்கப்படவேண்டியதையும் வலியுறுத்தியிருந்தனர்.
 
ராஜீவ் காந்தியைக் கொன்றதுமுதல், தமிழகத்தில் ஈழத்தமிழருக்கு எதிரான நிலைப்பாடு வலுப்பட்டு வந்ததுடன், இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இருந்த பொது எதிரியான புலிகளை அழிக்கவும் இந்த நிலைப்பாடு பெரிதும் உதவியது"
 
ஆக, இந்த உண்ணாவிரத நாடகங்களும், மனிதச் சங்கிலிப் போராட்டங்களும், கருனாநிதியால் சோனியாவுக்கு எழுதப்பட்ட கடிதங்களும், அவசரமாக அனுப்பப்பட்ட தந்திகளும், சட்டசபைத் தீர்மானங்களும் பொய்யானவை, போலியானவை என்பதுடன், இன்று காங்கிரஸ் அடிவருடிகளும், கழகக் கண்மணிகளும் கூவும், "தமிழர்களைக் காக்கவே இந்தியா போரிட்டது " என்பது ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை மறைக்க தமிழக ஒட்டுமொத்த அரசியல்வாதிகளும் ஆடிய நாடகம்தான் என்பது தெளிவாகிறது.
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் அனைவருக்கும் இதய அஞ்சலிகள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் அனைவருக்கும் இதய அஞ்சலிகள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.