Jump to content

கொழும்பு காலிமுகத் திடலில் தமிழர்கள் - சிங்களர்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஆண்டுகளில்…… முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை விதித்த…
நீதிமன்றங்கள், நீதிபதிகளை…. தலை குனிய வைத்தது, நேற்றைய நிகழ்வு.
நீதி என்பது… ஆட்சியாளருக்கு சார்பாக இருக்கக் கூடாது என்பதற்கு,
நேற்றைய சம்பவம் நல்ல எடுத்துக் காட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

கடந்த ஆண்டுகளில்…… முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை விதித்த…
நீதிமன்றங்கள், நீதிபதிகளை…. தலை குனிய வைத்தது, நேற்றைய நிகழ்வு.
நீதி என்பது… ஆட்சியாளருக்கு சார்பாக இருக்கக் கூடாது என்பதற்கு,
நேற்றைய சம்பவம் நல்ல எடுத்துக் காட்டு.

அட நீங்கள் வேற! அவர்கள் தங்கள் தீர்ப்பை வெளியிடவிடாமல் இப்படி ஆக்கிவிட்டார்களே என்று மனம் புழுங்குவோரும் உண்டு, தாங்கள் தப்பித்து விட்டோமே என்று சந்தோஷப்படுவோரும் உண்டு. சிங்கள நீதிபதிகள் இன்றைய காலகட்டத்தில் எந்த அழுத்தத்திற்கும் அடிபணியாமல் தங்கள் தீர்ப்பை அளித்திருப்பதாலேயே கோத்தா கோகம இன்று இந்த வரலாற்று நிகழ்வை செய்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

நிதர்சனமாகி விட்ட ஓர் பாடல்....

எங்க இன ரத்தசோறு கேட்டவனே...உன் கோட்டை சரிந்து விழும்.... மாளிகை நொருங்கி விழும்.....

 

 

 

இப்படி நாங்கள்  எழுதியபோது....

மகிந்தவை  அசைக்கமுடியாது

இப்படியே கனவு  காணுங்கள்  என எழுதியவர்களுண்டு  யாழில்....

ரதி  உட்பட...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் நடந்தது பற்றி மிகவும் கவனமாக இருக்கவும்.

இது சிங்களவர்களில் மிகவும் சிறிய பகுதி. அவர்களிலும், பல்வேறு வகை  இருக்கிறது.

சிலர் பரிதாபம், சிலர் சக மனிதர்களை இவ்வாறு நடத்திவிட்டோம் எனும் உணர்வு என்று பலவகை.

வெகு சிலரே, தமிழர்களுக்கு தம்மளவு பூர்விகம் இருக்கிறது எனும் அறிவு தெளிவினால், தமிழர்களுக்கு இந்த தீவில் அவர்களை போல தாயகம் இருக்கிறது; அதை மறுக்க முடியாது என்பதால் தமிழருக்கு தம்மை போல ஓர் அரசு இருக்க வேண்டும் எனும்    என்பது.

இவர்கள் இது மட்டுமே. அப்பால் ஒன்றும் செய்ய முடியாது.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இப்படி நாங்கள்  எழுதியபோது....

மகிந்தவை  அசைக்கமுடியாது

இப்படியே கனவு  காணுங்கள்  என எழுதியவர்களுண்டு  யாழில்....

ரதி  உட்பட...

 

ஆடத்தெரியாதவள் மேடை கோணல் என்பது போல் நிர்வாகம் சரியில்லை அது சரியில்லை இது சரியில்லை என ஒதுங்கி விட்டார்கள். உண்மைகளும் நியாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர பொய்யாமொழிகள் தங்களை தாங்களே மௌனித்து விட்டார்கள் போலும்..... 

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.