Jump to content

பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


Recommended Posts

மகிழ்ச்சியான செய்தி.தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கௌவும் மறுபடியும் தர்மம் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது நீண்ட காலங்களுக்குப்பிறகு.சிறப்பான இளமைக்காலத்தை எல்லாம் சிறைப்படுத்தி வைத்தவர்கள் இழப்பீடும் வழங்கவேண்டும்,இனி இவரால் உழைக்க இயலாது.இது போல் மற்றையோரும் இயன்ற விரைவில் வெளிவர வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, people sitting, people standing and indoor

தமிழக முதல்வருடன்... பேரறிவாளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடக்கம் - பொது வாழ்க்கை ஸ்தம்பிப்பு..😢

IMG-20220519-141946.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதம் அம்மா என்ற ஒரு தாய் இருந்தபடியால்
தமிழர்களால் மறந்திருக்கக் கூடிய பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

இவருடைய விடுதலைக்கு சீமான் போன்றவர்கள் இனி  உரிமை கோரமுடியாது

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, people standing and indoor

முன்னாள் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமியுடன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல காரணங்களுக்காக கண்ணை மூடிக்கொண்டு, கையை கழுவிட்டு இருந்த தி.மு.க இப்போது எதுக்கு இந்த விடுதலைக்கான உரிமை கோரும் பேடித்தனத்தில் இறங்கியுள்ளார்கள்?? 🤔
 

5 hours ago, வாத்தியார் said:

அற்புதம் அம்மா என்ற ஒரு தாய் இருந்தபடியால்
தமிழர்களால் மறந்திருக்கக் கூடிய பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

இவருடைய விடுதலைக்கு சீமான் போன்றவர்கள் இனி  உரிமை கோரமுடியாது

இவர்களது விடுதலை குறித்து நெடுமாறன் ஐயா,  வைகோ போன்றவர்கள் செய்த கோரிக்கைகள், மேடை முழக்கங்கள் ஓய்ந்த நிலையில், சீமான் மேடை மேடையாக பேசி இந்த விவகாரத்தை வெகுஜன பேசுபொருளாக மாற்றியவர் என்பது மறுப்பதற்கு இல்லை. அதே நேரம் இதை நான் தான் செய்தேன் என்று சீமானும் உரிமை கோரவில்லை. 
பேரறிவாளன், அற்புதம் அம்மா அவர்களின் விடா முயற்சி முதல் காரணமாக இருந்தாலும்,  தோழர் செங்கொடி போன்றவர்களின் போராட்டமும்  அ .தி.மு.கா வின் தொடர் கோரிக்கைகள் இவையும் காரணம். 

Edited by Sasi_varnam
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

அற்புதம் அம்மா என்ற ஒரு தாய் இருந்தபடியால்
தமிழர்களால் மறந்திருக்கக் கூடிய பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.

இவருடைய விடுதலைக்கு சீமான் போன்றவர்கள் இனி  உரிமை கோரமுடியாது

நடு நிலைமையுடன் இருந்த இந்த திரிக்குள் ஏன் சீமானை இழுக்கின்றீர்கள் என புரியவில்லை?

யாழ் இணையம் தொடக்கம் உலக தமிழின நலன் விரும்பிகள் அனைவரும் அந்த எழுவரின் விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள்.இதில் வைகோ அவர்கள் நெஞ்சை கொடுத்தவர். சீமான் உரக்க பேசியவர்.ஏனைய அனைவரும் குரல் கொடுத்தவர்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

தூக்கு கிட்டத்தட்ட உறுதியான நிலையில், ராம்ஜெத்மலானி Article 20 ஐ மேற்கோள்காட்டி எடுத்த வைத்த வாதம் தான் ஏழு பேரையும் தூக்கிலிருந்து காப்பாற்றியது..

ராம்ஜெத்மலானியை அழைத்து வந்தவர் வைகோ.. இந்நேரத்தில் வைகோவை நினைவுகூர  யாவரும் கடமைப்பட வேண்டும்.

  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலைக் கடந்து ஒரு உயிர்காப்பாற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி. கட்சியரசியலே தமிழினத்தின் சிதைவுக்குக் கரணியமதாக உள்ளதைத் தமிழினம் உணராதவரை உரிமைகோரல்களும் ஓயாது. ஆனால் தமிழினம் தமிழினமாக விழித்துகொள்ளவேண்டிய தருணம். 

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'புதிய தலைமுறை உண்மை உ.ட க்பு தற்போது แ.ST NESSN "பேரறிவாளன் விடுதலையில் சொந்தம் கொண்டாட முடியாது" ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னைத்தானே விடுதலை செய்து கொண்டார் பேரறிவாளன்; பேரறிவாளன் விடுதலையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது தமிழர்கள் பிரச்னைக்காக எவ்வித போராட்டமும் காங்கிரஸ் நடத்தியதில்லை -நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 19|05|2022 04: 00 PM www.puthiyathalaimurai.com'

 

May be an image of 2 people, people sitting and indoor

சீமானுடன்... பேரறிவாளன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: சிறையில் உள்ள மற்ற ஆறு பேருக்கும் இந்த விடுதலை தீர்ப்பு பொருந்துமா?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மற்ற ஆறு பேரின் கதி என்ன?

பட மூலாதாரம்,TWITTER

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மற்ற ஆறு பேரின் நிலை என்ன?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு தண்டனைக் காலத்தை அனுபவித்து வந்த ஏழு பேரில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் தற்போது விடுவித்துள்ளது. மீதமுள்ள நளினி, சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர்.

சிறையில் இருந்த ஏழு பேரும் ஒரே குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டிருந்த நிலையில், பேரறிவாளனின் விடுதலையை அடுத்து இவர்களது நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. பேரறிவாளன் விடுதலைக்குப் பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டபோது, "தீர்ப்பின் முழு விவரமும் வரவில்லை. அது வந்த பிறகு சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்து முடிவெடுப்போம்" என்று தெரிவித்தார்.

தூக்கு தண்டையிலிருந்து ஆயுள் தண்டனை

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து 2014 பிப்ரவரி 18ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த நாளே ஜெயலலிதா தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவைகூடி, சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுவிக்க முடிவுசெய்தது.

குற்ற விசாரணைச் சட்டம் 432ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்களை விடுவிக்க முடிவெடுத்து இருப்பதாகவும் இது தொடர்பாக மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் தனது கருத்தைத் தெரிவிக்கவில்லையென்றால், அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார் ஜெயலலிதா.

ஆனால், இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தை அணுகி தடை ஆணை பெறப்பட்டது. இந்த வழக்கில் 2018 செப்டம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் குற்ற விசாரணைச் சட்டம் 432ன் கீழ் விடுவிக்க முடிவெடுத்தது தவறு என்றும் விரும்பினால் 161வது பிரிவின் கீழ் விடுவிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.

இதற்கு மூன்று நாட்கள் கழித்து செப்டம்பர் 9ஆம் தேதி கூடிய எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை 161வது பிரிவின் கீழ் இந்த ஏழு பேரையும் விடுவிப்பதாக பரிந்துரைத்து, அதை செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த விவகாரத்தில் ஆளுநர் முடிவேதும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், சில தகவல்களைக் கேட்டு பேரறிவாளன் தடா நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்கிறார். இதற்கு நீதிமன்றம் மறுக்கவே, உச்ச நீதிமன்றத்தில் அதை வழக்காகக் தொடுக்கிறார். அதில் இடையீட்டு மனுவாக தனது விடுதலையையும் கோருகிறார்.

அந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் மே 18ஆம் தேதியன்று பேரறிவாளனை விடுவித்துத் தீர்ப்பளித்துள்ளது.

ஆறு பேரையும் விடுவிக்க இந்தத் தீர்ப்பே போதுமா?

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மீதமுள்ள ஆறு பேருக்கும் பொருந்துமா, அப்படிப் பொருந்தினால், தமிழ்நாடு அரசே அவர்களை விடுவித்துவிடலாமா அல்லது ஆறு பேரும் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற வேண்டுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

"இந்த ஆறு பேரையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் தற்போது அளித்துள்ள தீர்ப்பே போதுமானது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு மாநில அரசு முடிவெடுப்பதை ஆளுநர் தடுக்க முடியாது. தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், மாரு ராம் வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்தத் தீர்ப்பு 1980ல் ஐந்து நீதிபதிகளால் வழங்கப்பட்டது.

 

இந்திய உச்சநீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இந்திய உச்சநீதிமன்றம்

அந்தத் தீர்ப்பின்படி மாநில அரசின் முடிவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதில்லை. இரண்டும் வெவ்வேறு அதிகாரங்கள் என்பதை அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆகவே அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா என்ற கேள்விக்கு நீதிமன்றம் விடையளித்துவிட்டது. ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர்தான்; அமைச்சரவையின் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதே தவறு என நீதிமன்றம் கூறிவிட்டது.

அடுத்ததாக விவாதிக்க வேண்டிய விவகாரம், பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு மற்ற ஆறு பேருக்கும் பொருந்துமா என்பது. நிச்சயமாகப் பொருந்தும். ஒரு வழக்கில் ஆறு, ஏழு பேர் சம்பந்தப்பட்டிருக்கும் நிலையில், ஒரே ஒருவர் மட்டுமே நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றால் அந்த நிவாரணம் மற்ற ஆறு பேருக்குமே பொருந்தும்.

தமிழ்நாடு அமைச்சரவை ஏழு பேரையும் விடுவிக்க முடிவுசெய்துதான் பரிந்துரையை அனுப்பியது. ஆளுநர் முடிவெடுக்காத நிலையில் பேரறிவாளன் நீதிமன்றத்தை நாடி நிவாரணத்தைப் பெற்றிருக்கிறார். ஆகவே அந்த நிவாரணம் மற்ற ஆறு பேருக்குமே பொருந்தும். ஏழு பேரையும் விடுவிக்க அமைச்சரவை முடிவெடுத்த நிலையில், ஒருவரை விடுவித்துவிட்டு, மற்றவர்களை விடுவிக்க முடியாது எனக் கூற முடியாது" என்கிறார் நளினி, முருகன், சாந்தன் ஆகியோரின் வழக்கறிஞரான புகழேந்தி.

ஆனால், தமிழ்நாடு அரசு தானாக ஆறு பேரையும் விடுவிக்கவில்லையென்றால் அவர்களது நிலை என்ன? "சட்டத்தின் முன்பாக அனைவருமே சமம். ஆகவே, சட்டரீதியாக நிவாரணமளிக்கப்பட்ட ஏழு பேரில் ஒருவர் விடுவிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்படி மற்ற ஆறு பேரும் உயர் நீதிமன்றத்தையோ, உச்ச நீதிமன்றத்தையோ அணுக முடியும்.

அந்த நிலைக்கு அவர்களைத் தள்ளாமல் தமிழ்நாடு அரசே அவர்களை விடுவிக்குமென நம்புகிறோம்," என்கிறார் புகழேந்தி.

 

பேரறிவாளன்

பட மூலாதாரம்,TWITTER

 

படக்குறிப்பு,

பேரறிவாளன்

ஆளுநர், குடியரசு தலைவரின் அதிகாரங்கள்

ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் வேறு விதமான கருத்தை முன்வைக்கிறார்.

"உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மிக விரிவான பொருளைப் பேசுகிறது. ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோரின் அதிகாரங்களை வரையறுக்கிறது. ஏழு பேரையும் விடுவிக்க மாநில அமைச்சரவை முடிவெடுத்த பிறகும், ஆளுநர் செயல்பட்ட விதத்தை இது கேள்வி கேட்கிறது. ஆளுநர் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுக்காததால், உச்ச நீதிமன்றமே முடிவெடுத்திருக்கிறது.

ஆனால், மாநில அமைச்சரவை ஏழு பேரையுமே விடுவிக்கத்தான் பரிந்துரை செய்திருக்கிறது என்பதால், தற்போது ஆளுநர் அந்தப் பரிந்துரையை ஏற்க வேண்டும். இனியும் தாமதம் செய்ய முடியாது. ஏனென்றால், அந்தத் தாமதத்தையும் கேள்வியெழுப்ப முடியுமென நீதிமன்றம் கூறிவிட்டது.

மேலும், ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதையும் தீர்ப்பில் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆகவே, ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரையில் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும். அதுதான் அவர் முன்பாக உள்ள ஒரே வாய்ப்பு. அப்படி அவர் கையெழுத்திட்ட பிறகு, ஆறு பேரையும் மாநில அரசு விடுவிக்கலாம்" என்கிறார் ஹரி பரந்தாமன்.

மாநில அரசைப் பொறுத்தவரை, இந்த விவகாரத்தில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வைத்தே விடுவிப்பது அல்லது ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று விடுவிப்பது அல்லது இந்த ஆறு பேரின் சார்பில் மீண்டும் நீதிமன்றத்தை அணுகி ஒப்புதலைப் பெறுவது ஆகிய வாய்ப்புகளே மாநில அரசின் முன்பாக இருக்கின்றன. அடுத்த சில நாட்களில் ஆளுநரும் சரி, மாநில அரசும் சரி ஒரு முடிவை எடுத்தாக வேண்டும்.

https://www.bbc.com/tamil/india-61521953

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • By KELUM BANDARA   Colombo, April 18 (Daily Mirror) - Sri Lanka is still at a loss to thwart the efforts by a city council in Canada to construct what it called a Tamil genocide monument, and to counter the allegations by the Canadian politicians, an informed source said . Brampton city council in Canada has approved the final design for the Tamil Genocide Memorial, a monument the city promised three years ago, according to foreign media. The media said it is a 4.8-metre tall stainless steel monument built in Chinguacousy Park in the Bramalea area to commemorate the lives lost in the Sri Lankan civil war — what many people in the Tamil community call a genocide. Canada's Parliament unanimously voted to recognize May 18 as Tamil Genocide Remembrance Day in 2022. A well placed diplomatic source said that Sri Lanka remains on high alert as Canadian leaders may make genocide allegations next month when the country marks the war victory. Last year, Canadian Prime Minister Justin Trudeau’s genocide accusations sparked a diplomatic dispute between the two nations. Sri Lanka responded with protests by summoning the Canadian envoy. A well-placed diplomatic source informed Daily Mirror yesterday that the Sri Lankan government is keen to ascertain whether such allegations will be repeated this time, despite previous protests by Sri Lanka. “Canadian leaders have a history of making such allegations, even though the Canadian federal government has concluded that the events in Sri Lanka during the war do not amount to genocide,” the official said. However, the official said Sri Lanka had been unable to thwart the efforts by the Brampton city council to construct the monument. The Canadian Federal government which rejected genocide allegations, however, has no jurisdiction over the city council making it difficult for Sri Lanka to stop the move. SL on alert on possible genocide allegations by Canada - Top Story | Daily Mirror
    • இதுக்கு மேலை விளங்கப் படுத்த எனக்குத் தெரியாது ராசா..... 🤣
    • மாதவன். யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்; யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன். நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது. யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது . ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச) யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM   7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும். தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும்.  2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை. ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். 11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது. 10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன. 14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk
    • Published By: DIGITAL DESK 7 18 APR, 2024 | 03:43 PM   கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது.    இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.