Jump to content

உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய் - T. கோபிசங்கர்


Recommended Posts

உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்…. 

“அண்ணை முடிய நேரமாகுமே போகோணும்”எண்டு சொல்ல இந்தப் போத்திலுக்க ஆறு பிளேன்ரீயும் கடிக்கிறதுக்கு ஏதாவதும் வாங்கித்தாரும் எண்டு கேட்டார் தம்பிஅண்ணை. தம்பிப்பிள்ளை தம்பியாகி வயது முதிர்ச்சிக்கு அண்ணன் சேர வந்த பேர் தம்பியண்ணை. கடைசீல கணக்கில கழிக்கலாம் எண்டு காசைக் கேக்காம வேலை முடிஞ்சாச் சரி எண்டு ஓடிப்போய் கேட்டதுகளை வாங்கிக்கொண்டு வந்தன். 

பிளேன்டீயை குடுச்சிக்கொண்டு வாயும் மோட்டச்சைக்கிளும் போட்டி போட்டுக்கொண்டு புகை கக்க நட்டுக்களை திருப்பி tune பண்ணீட்டு , “இப்ப ஓடும் , பிறகு ஒருக்கா ஆனந்தன்டைக் கொண்டு போய் carburetor ஐ செய்வம் “ எண்டு சொல்லி மோட்டச்சைக்கிளைத் தந்தார். மூண்டு நாளா அலைஞ்சதுக்கு ஒரு மாதிரி முக்கித்தக்கி ஓடிற நிலமைக்கு bike வந்திட்டுது. எவ்வளவு கணக்கெண்டு கேக்கப் பதில் சொல்லமால் பத்தின பீடீ வாயில இருந்து எடுத்து மதிலில வைச்சார். எனக்கென்னவோ அந்தாளின்டை வாயில இருந்ததிலும் பாக்க பீடி சிவர்க்கரையில இருந்து புகைக்கிறது தான் கூட மாதிரி இருந்திச்சுது. எவ்வளவு எண்டு கேட்டா கணக்கு நேர சொல்ல மாட்டார் , பாத்து தாரும் எண்டு போட்டு என்னைக் கணக்கெடுக்காம அடுத்த சைக்கிளை பிரிக்கத் தொடங்கீடுவார். 

அம்மான்டை recommendation இல அண்ணா கம்பஸ்ஸுக்குப் போகத் தொடங்க அப்பா ஆராரிட்டையோ எல்லாம் கேட்டு கடைசீல இந்த மோட்டச்சைக்கிளை கண்டு பிடிச்சார். பெடியள் கண்டா பறிச்சிடுவாங்கள் எண்டு வீட்டுக்காரர் இரவு தான் கொண்டு போகத் தந்தார். பின்னுக்கு வந்த சைக்கிள் காரர் foot rest இல காலைவைச்சுத் தள்ள ஒரு மாதிரி பலன்ஸ் பண்ணி இரவோட இரவா நிலவு வெளிச்சத்தில எங்கடை வீட்டின் முதலாவது வாகனத்தின் கன்னிப் பயணம் தொடங்கியது. ஆனாலும் வீட்டை கொண்டு வராமல் நேர கொண்டு போய் கராஜ்ஜில விட்டிட்டு வந்தம்.

அண்ணாக்கு எண்டு தான் வாங்கினது ஆனாலும் உள் வீட்டு ragging மாதிரி நான் தான் maintenance. இதைப் பண்ணினாத்தான் எப்பவாவது ஓடக் கிடைக்கும் எண்ட நம்பிக்கையில் நானும் கராஜ்ஜுக்குப் போனான்.

அப்ப ஊரில பெரும்பாலான தொழில் செய்யிறாக்கள் இந்த வேலைக்கு விலை இவ்வளவு தான் எண்டு காசுக் கணக்கு கேக்கிறேல்லை. வாயைத்திறந்து நேர சொல்லவும் மாட்டினம் கேட்டாப் பாத்துத் தாங்கோ எண்டு தான் பதில் வரும். நானும் தம்பிஅண்ணையை திருப்பித் திருப்பிக் கேக்க, அண்டைக்கு இப்பிடித்தான் ஒரு சைக்கிள் செய்தானான் அவர் ஐஞ்ஞூறு தந்தவர் நீர் படிக்கிற பெடியன் தானே எண்டு அவர் இழுக்க நான் வாங்கின ரீ கணக்கை நெச்சபடி முன்னூறை குடுக்க, பாத்திட்டு சரி “அடுத்தமுறை பாத்து எடுப்பம்” எண்டு சொன்னார். அம்மாவுக்கு கராஜ் வழிய போய் தூங்கிறது விருப்பமில்லை, அங்க போனா கெட்டுப் போடுவன் எண்டு ஆனாலும் வழியில்லாமல் போக விடுவா. அங்க குந்திக்கொண்டு இருக்கேக்க பத்தும் பலதும் தெரிய வரும் சில கதைகள் தொடங்கேக்க கண்காட்டுப்பட இடம் பொருள் ஏவல் அறிந்து கதைகள் நிப்பாட்டுப்படும். 

காலத்தின் தேவையில் சந்திக்கு சந்தி ஒரு சைக்கிள் கடை மாதிரி மோட்டச்சைக்கி்ள் கராஜும் வரத் தொடங்கீட்டு. கராஜ்காரருக்கு மோட்டச்சைக்கிளோட ஆரும் வாறது bank இல போடற நிரந்தர வைப்பு மாதிரித்தான். அதோட நாங்களும் சைக்கிளைப் பத்தி ஒண்டும் தெரியாமல் போய் ஒரு மாதத்தில எந்த நட்டுக்கு எத்தினையாம் நம்பர் சாவி எண்டு தெரியிற அளவுக்கு வளந்திடலாம். 

அப்ப வாகனம் ஓட லைசென்ஸ் எல்லாம் தேவேல்லை. ஆனால் கொஞ்சம் மெக்கானிக் வேலை தெரிஞ்சாத் தான் மோட்டச்சைக்கிள் ஓடலாம். பற்றிரிக்கு எதிர்ப்பக்கத்து box இல பழைய பிளக்குகள், சைக்கிள் brake ன்டை பழைய cable கம்பி, தேஞ்ச வால் பிளேட் , நெருப்புப் பெட்டி பழைய துணி எல்லாம் இருக்கும் , இடைக்கிடை ஓடிற மோட்டச்சைக்கிள் அடிக்கடி நிண்டா இதுகள் தேவை. 

பிளக்கை மாத்தினாச்சரி எண்டு தொடங்கி Timing chain அடிக்குது, ஒயில் சீல் சரியில்லை, காஸ்கெட் மாத்தோணும், lathe இல கொண்டு போய் boring செய்யோணும் , oil rings சரியில்லை எண்டு போய் கடைசீல பிரிச்சுத் தான் செய்யோணும் எண்டு மோட்டச்சைக்கிளைப் பற்றி முழு அறிவும் கிடைக்கும். 

தடை அமுலாக்கத்தின்டை உச்சத்தில வந்த கஸ்டத்தில கன கண்டுபிடிப்புகள் ஊரில வந்திச்சிது. அதிலையும் மண்ணெண்ணை மோட்டச்சைக்கிள் modification காலத்தின் கண்டுபிடிப்பு. Saline tube ஐ எடுத்து காத்துப்போற கறுப்பு air hose இல ஓட்டை போட்டு அதைக் கொண்டு போய் carburetor இல கூடப் பெற்றோல் வந்தா இருக்கிற overflow ஒட்டைக்குள்ள செருகி வெளி saline tube இல ஒரு syringe கவிட்டு செருகிறது தான் modification இன்டை முதல் படி. அங்கங்க இருக்கிற மினி பெற்றோல் ஸ்டெசனில பாதி வெட்டின பரலில மண்ணெண்ணை, கொஞ்சம் போத்திலில பெற்றோல், can இல ஒயில், singer oil குப்பி / சூப்பி எல்லாம் விக்க இருக்கும். அப்ப மண்ணெண்ணை வியாபாரிகள் தான் பெரிய கடை முதலாளிகள். 

ஒவ்வொரு அங்குலம் ராணுவம் பின்வாங்க அடிக்கிற ஒவ்வொரு அடிக்கும் விலைகளும் சாமாங்கள் தடைகளும் கூடும் . கடலில கப்பல் அடிச்சா கடைக்காரர் எல்லாம் சந்தோசத்தில கடையை மூடினவங்கள் எண்டு நாங்கள் நம்பினம் . ஆனால் பாத்தா ரெண்டாம் நாள் கன சாமாங்கள் மூண்டு மடங்கு விலை கூடி இருக்கும் . Talk of the town கைப்பற்றின ஆயுதங்களாக இருக்கிற gap இல ஏறின விலைகள் கவனிக்கபடாமல் போயிடும். இதைத்தான் பிறகு இலங்கை அரசாங்கமும் பாத்து ,cricket match நடக்கேக்க தான் பல விலையேற்றங்களை செய்யவும் தரை இறக்கங்கள் பற்றிய நிலவரத்தை வெளியிடவும் தொடங்கினது.

பெற்றோல் குப்பியை / சூப்பியை வைக்கிறதுக்கு செட்டையில ஒரு வெட்டின பிளாஸ்டிக் போத்திலை fix பண்ணி அதுக்குள்ள தான் வைக்கிறது. பிறேக் கேபிளில கட்டி இருக்கிற சேலைன் ரியூபை எடுத்து போலியோ மருந்து மாதிரி மூண்டு சொட்டு மட்டும் விட்டிட்டு வாயால காத்தடிக்கிற மாதிரி மூலம் தள்ளிற அளவுக்கு ஊதினபடி கிக்கரை உதைக்கத்தொடங்கி ஒரு பத்து தரம் உதைக்கவிட்டி ஒருக்கா கேக்கிற இஞ்சின் சத்தம் மூண்டு மாதம் பின்னால சுத்தின பெட்டை ஒருக்கா திரும்பிப் பாக்கேக்க வாற அதே நம்பிக்கையைத் தரும் . எப்பிடியும் start பண்ணிடலாம் எண்டு தொடர்ந்து முயற்சித்தால் அது பெட்டையோ மோட்டச்சைக்கிளோ முயற்சி திருவினையாக்கும் . 

Accelerator ஐயும் chalk ஐயும் அளவாப்பிடிச்சு முறுக்க சைலன்சர் அடைச்சு வெடிச்சு காபன் பறக்க இன்னும் கூட முறுக்க இஞ்சின் கொஞ்சம் நிதானத்துக்கு வரும் . மிச்சப் பெற்றோல் இருந்தாலும் எண்டு இன்னும் ஒருக்கா சேலைன் ரியூபை ஊதீவிட்டட்டுத் தான் ஓடத்தொடங்கிறது. அப்ப ஒருக்கா start பண்ணிற வாகனங்களின்டை இஞ்சினை நிப்பாட்டிறேல்லை ஏனெண்டால் முழு நாள் ஒடிற மண்ணெண்ணைச் செலவு மூண்டு சொட்டிலும் பாக்க குறைவு எண்ட படியாத்தான். அதோட நிப்பாட்டீட்டு இறங்கிப் போகேக்க மறக்காம துறப்பைக் கழட்டி அதோட குப்பியை எடுத்து பொக்கற்றுக்க வைச்சிடுவினம். பெற்றோல் குப்பி / சூப்பி வைச்சிருக்கிற ஆக்கள் அதை ரொலக்ஸ் மணிக்கூடு மாதிரி பெருமையா கொண்டு திரிவினம் அதிண்டை பெறுமதி தெரிஞ்சு.

என்னதான் start வராட்டியும் மூண்டு சொட்டுக்கு மேல பெற்றோல் விடுறேல்லை . அடிச்சு அடிச்சே பிளக்கை சூடாக்கிறது இல்லாட்டு பிளக்கை கழட்டி நெருப்பில பிடிச்சிட்டு திருப்பியும் start பண்ணிறது . 

 

“ செருப்புக் கிழியும் வரை உதை,

கால் தேயும் வரை உதை,

கிக்கர் உடையும் வரை உதை “ எண்ட தாரக மந்திரத்தோட தான் ஒவ்வொரு நாளும் காலமை தொடங்கும் எண்டாலும் start பண்ணீட்டு கப்பலோட்டிய பரம்பரை எண்ட பொருமையோட மோட்டச்சைக்கிளையும் நாங்கள் ஓடித்திரியறது .

 

Dr. T. கோபிசங்கர்

யாழப்பாணம்

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மூண்டு மாதம் பின்னால சுத்தின பெட்டை ஒருக்கா திரும்பிப் பாக்கேக்க வாற அதே நம்பிக்கையைத் தரும்" .

இடைக்கிடை பகிடியும் விட்டு  கதை சொல்லும் அழகு அருமை. பாராட்டுக்கள் 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
    • இந்த மாத முடிவில் சில நாடுகளின் நரித்தனத்தாலும், சுயநலத்தாலும் இரு நாடுகள் அணு ஆயுதங்களால் பலமாக தாக்கபட போகின்றன. ஜீசசும் வருகின்றார் என்ற செய்தும் உலாவுகிறது.
    • நான் யாழில் எழுத தொடங்கியது 2013. அதுதான் உளவுதுறை பிஜேபி கைப்பாவை ஆச்சே? அதேபோல் இப்படி சொன்ன தேர்தல் ஆணையம் மீது ஏன் சீமான் வழக்கு போடவில்லை? நம்ப வேண்டிய தேவை இல்லை. என் கருத்து அது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு விடயத்தை சீமானிடம் சொல்லாது. எந்த அதிகாரியாவது மேலிட பிரசரால் இப்படி செய்கிறோம் என சீமானிடமே வெளிப்படையாக சொல்வாரா? மிகவும் சின்னபிள்ளைதனமாக சீமான் கதை பின்னுகிறார். நம்ப ஆள் இருக்கு என்ற தைரியத்தில். சீமான் சொல்வது உண்மை எனில் சீமான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.  போடமாட்டார் ஏன் என்றால் இது சும்மா….லுலுலுலா கதை. இந்த 😎 இமோஜியை பாவிக்காமலாவது விட்டிருக்கலாம். திருடப்போகும் இடத்தில் சிக்னேச்சர் வைத்தது போல் உள்ளது. 🤣🤣🙏
    • நான் எப்போதும் என்னை தேர்தல் விற்பனர் என்றோ - என் கணிப்புகள் திறம் என்றோ சொன்னதில்லை.  நான் என்ன லயலா கொலிஜா அல்லது இந்தியா டுடேயா? சர்வே எடுக்க. அல்லது சாத்திரக்காரனா🤣 நான் கணிக்கிறேன் என நீங்கள் எழுதுவதே சுத்த பைத்தியக்காரத்தனம். எல்லாரையும் போல் நான் என் கருத்தை எதிர்வுகூறலாக எழுதுகிறேன். அது என் கருத்து மட்டுமே. Pure speculation. அது சரி வரும், பிழைக்கும் - I don’t give a monkey’s.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.