Jump to content

கனேடிய நாடாளுமன்றத்தில்... நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் அதிருப்தி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி

கனேடிய நாடாளுமன்றத்தில்... நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கை அரசாங்கம் அதிருப்தி.

இனப்படுகொலை தொடர்பில் கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 18ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை தினமாக கனேடிய நாடாளுமன்றம் அங்கீகரித்தமை வருத்தமளிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முற்று முழுதாக நிராகரிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான கனேடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டுக்கும் இந்த தீர்மானத்திற்கும் முரண்பாடு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட போரின் போது நாட்டின் உண்மையான நிலைமைகள் குறித்து கனடாவிற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

யுத்தம் நிறைவிற்கு வந்து 13 ஆண்டுகளில் நல்லிணக்க முனைப்புக்களில் பாரியளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான அரசியல் நோக்கமுடைய சிறுபான்மை புலம்பெயர் சமூகத்தினர் மாத்திரமே இனவழிப்பு என்ற பதத்தை பயன்படுத்தி வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் இனவழிப்பு இடம் பெற்றதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறவில்லை இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிழையான வழிகாட்டல்களுக்கு கனேடிய நாடாளுமன்றம் இடமளித்திருப்பது வருத்தமளிப்பதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1282976

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொத்திக்கொண்டு படுத்திருந்த பீரிசுக்கு பொத்துக்கொண்டு கோபம் வந்திட்டுது...இனி கனடாபாடு கஸ்டம்தான்...😃

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

பொத்திக்கொண்டு படுத்திருந்த பீரிசுக்கு பொத்துக்கொண்டு கோபம் வந்திட்டுது...இனி கனடாபாடு கஸ்டம்தான்...😃

கனடாவுக்கு… பொருளாதார தடை விதிக்கலாம் என்று,
ஶ்ரீலங்கா பாராளுமன்ற வளாகத்தில் பேசிக் கொள்கிறார்களாம். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

கனடாவுக்கு… பொருளாதார தடை விதிக்கலாம் என்று,
ஶ்ரீலங்கா பாராளுமன்ற வளாகத்தில் பேசிக் கொள்கிறார்களாம். 🤣

கனடாக்காரன் தேத்தண்ணி இல்லாமல் சாகப்போறான்.....சாகட்டும்....சாகட்டும் .ஆரோடை என்ன சேட்டை எண்டு கேக்கிறன் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கனடாக்காரன் தேத்தண்ணி இல்லாமல் சாகப்போறான்.....சாகட்டும்....சாகட்டும் .ஆரோடை என்ன சேட்டை எண்டு கேக்கிறன் :cool:

கனடாகாரர்… இலங்கைக்கு,  உல்லாசப் பயணிகளாக வருவதையும்,  
தடை    செய்யப் போகிறார்களாம். 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

கனடாகாரர்… இலங்கைக்கு,  உல்லாசப் பயணிகளாக வருவதையும்,  
தடை    செய்யப் போகிறார்களாம். 🤣

ஆகா சிக்கல் சிதம்பரம்......கனடாக்காரலிலை அண்ணன் சுமந்திரன் வேறை கடுப்பிலை இருக்கிறார்......☺️

ஒகே நோ ப்ரொப்பளம்......கனடாக்காரருக்கு இருக்கவே இருக்கு கியூபா 😄

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

ஆகா சிக்கல் சிதம்பரம்......கனடாக்காரலிலை அண்ணன் சுமந்திரன் வேறை கடுப்பிலை இருக்கிறார்......☺️

ஒகே நோ ப்ரொப்பளம்......கனடாக்காரருக்கு இருக்கவே இருக்கு கியூபா 😄

சுமந்திரன் தானே…. கனடா பாராளுமன்றம் எல்லாம் போய்,
கனடா எம்.பி.களுடன் பேச்சுவார்த்தை எல்லாம் முடித்து விட்டு வந்தவர்.
பாராளுமன்றத்துக்கு….. முன்னால் எடுத்த படம் கூட வந்தது.
பிறகு ஏன்… கனடாவிலை கடுப்பு வந்தது. 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

கனடாகாரர்… இலங்கைக்கு,  உல்லாசப் பயணிகளாக வருவதையும்,  
தடை    செய்யப் போகிறார்களாம். 🤣

ஆஆஆ

கோடை விடுமுறைக்கு விமான ரிக்கட் எல்லாம் எடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்திலயா?

அதுவும் கனடியன் டாலர் 300 போகுதாம் போய ஒருக்கா குத்தாட்டம் போடுவமென்றா இது வேற பிரச்சனையா போச்சே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

பொத்திக்கொண்டு படுத்திருந்த பீரிசுக்கு பொத்துக்கொண்டு கோபம் வந்திட்டுது...இனி கனடாபாடு கஸ்டம்தான்...😃

சிங்கள மக்கள் இலங்கையின் தலைநகரில் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி...தீபம் எற்றி...காஞ்சியும். குடிக்கிறார்கள்   இது ஏன் என்று இந்த பிழைப்புவாதிக்கு விளங்கவில்லை இப்பவும்...ஜே.ஆர் காலத்து சிந்தனையில் இருக்கிறார்   மேலும் இந்த தீர்மானத்துக்காக கடுமையாக உழைந்த கனடா வாழ் தமிழ் உறவுகளுக்கும்.  யாழ் கள உறவுகளுக்கும். எனது நன்றியையும்  மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏😄

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் தானே…. கனடா பாராளுமன்றம் எல்லாம் போய்,
கனடா எம்.பி.களுடன் பேச்சுவார்த்தை எல்லாம் முடித்து விட்டு வந்தவர்.
பாராளுமன்றத்துக்கு….. முன்னால் எடுத்த படம் கூட வந்தது.
பிறகு ஏன்… கனடாவிலை கடுப்பு வந்தது. 😛

மாத்தி யோசியுங்கோ....தேர்தல் வரும்போது...நான்தான் இதைச் செய்தனென்று வருவார் அண்ணன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

மேலும் இந்த தீர்மானத்துக்காக கடுமையாக உழைந்த கனடா வாழ் தமிழ் உறவுகளுக்கும்.  யாழ் கள உறவுகளுக்கும். எனது நன்றியையும்  மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.🙏😄

புரினின் தீவிர ஆதரவு யாழ்கள உறுப்பினர்களும் கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட இனபடுகொலை பற்றிய பிரேரணை போன்ற ஒன்றை ரஷ்சிய புரின் மன்றத்திலும் புரினை கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கலாம் தானே 😄

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அரசாங்கம் அதிருப்தி.. கோத்தா அரசாங்கமா.. ரணில் அரசாங்கமா..??! இரண்டும் கூட்டு இனப்படுகொலையாளர்கள் தானே. அதிருப்தி இருக்கத்தான் செய்யும். கொலை செய்தவனை கொலைகாரன் என்றால் கோபம் வரத்தான் செய்யும். என்ன கொலை செய்யும் வரை பார்த்துக் கொண்டிருந்தவைக்கும் கொலையில் பங்குண்டு. கனடா அதனையும் நிராகரிக்கக் கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புரினின் தீவிர ஆதரவு யாழ்கள உறுப்பினர்களும் கனடா பாராளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட இனபடுகொலை பற்றிய பிரேரணை போன்ற ஒன்றை ரஷ்சிய புரின் மன்றத்திலும் புரினை கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கலாம் தானே 😄

ரஷ்யா செய்வதும் கொலைகள் தான்.துருக்கி செய்வதும் கொலைகள் தான். கனடா செய்ததும் கொலைகள் தான்  அமெரிக்கா செய்வதும் செய்ததும் கொலைகள்தான் அவுஸ்ரேலியா செய்ததும் கொலைகள் தான்.....

உக்ரேன் மட்டும் கொலைகள் செய்யவில்லை.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ

கோடை விடுமுறைக்கு விமான ரிக்கட் எல்லாம் எடுத்து வைத்திருக்கும் இந்த நேரத்திலயா?

அதுவும் கனடியன் டாலர் 300 போகுதாம் போய ஒருக்கா குத்தாட்டம் போடுவமென்றா இது வேற பிரச்சனையா போச்சே.

நீங்கள் எப்ப கனடா வந்தனீங்கள்? 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் எப்ப கனடா வந்தனீங்கள்? 

நான் எங்கை கனடா வந்தன்?கனடிய உறவுகளின் குரலாக பதிவு செய்திருக்கிறேன்.

அதுசரி நீங்க கனடாவில போல.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடியன் டொலர் 275 போவதற்கே குத்தாட்டம் என்றால் அமெரிக்கன் டொலர் 360 போவற்கு 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நான் எங்கை கனடா வந்தன்?கனடிய உறவுகளின் குரலாக பதிவு செய்திருக்கிறேன்.

அதுசரி நீங்க கனடாவில போல.

இல்லையண்ணை. வர விருப்பம் தான். இப்போதைக்கில்லை. ஒண்டு ரெண்டு வருஷம் கழிச்சு வருவம் எண்டிருக்கிறன். வந்தால் சந்திப்பம். நீங்களும் சிட்னி வந்தால் சொல்லுங்கோ. 

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
    • ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார். https://thinakkural.lk/article/299459
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.