Jump to content

மரியோபுல் முற்றாக ரஷ்சியா வசம் வீழ்ந்தது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் யுத்தம் உட்பட ஈழ விடுதலைப் போரின் போது.. கூலிக்காக.. நேரடியாகப் பங்கேற்று எம் மக்களின் தலையில் குண்டு வீசிக் கொன்ற உக்ரேனியர்களின் நகரான மரியோபுல்.. முள்ளிவாய்க்கால் மாதத்தில்.. ரஷ்சியா வசம் வீழ்ந்தது.

இதன் போது உக்ரைன் அரச நவ-நாசிய கொள்கையுடன் செயற்பட்டு வந்த கொடிய  Azov உக்ரேனிய அரச பயங்கரவாதக் குழு முழுமையாக ரஷ்சியாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. நேட்டோ உட்பட்ட மேற்கு நாடுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களையும் கையளித்துவிட்டு சரணடைந்துள்ளனர்.

கடைசி ஆள் இருக்கும் வரை போரிட்டு ரஷ்சியாவை தோற்கடிப்போம் என்று வீர வசனம் பேசி வந்த Azov உக்ரைன் அரச பயங்கரவாதிகள்.. தற்போது தமது உயிரை பாதுகாக்க சரணடையக் கேட்கப்பட்டதாக.. உக்ரைன் வீர வசனம்.. புளுகர் சனாதிபதி சமாளிப்புக்கேசன்.. துப்பித் தள்ளியுள்ளார். 

Russian army takes control of Azovstal steel plant

The Russian military says the Azovstal steelworks in Mariupol has been "totally liberated", with the last Ukrainian defenders surrendering.

The ministry said that since 16 May, 2,439 "neo-Nazis from Azov and Ukrainian troops" trapped in the steelworks "laid down their arms and surrendered".

Azovstal fighters were told to get out and save their lives, Zelensky says

https://www.bbc.co.uk/news/live/world-europe-61518209

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dreamies.de (ywhxgha6krs.gif)

GIF transparent han applause - animated GIF on GIFER - by Bathis

உக்ரைனின்…. வரை படத்தை, மாற்றி அமைத்த…. புட்டினுக்கு, வாழ்த்துக்கள். 👍🏽 🤝 👏🏻

புட்டினிடமிருந்து... இன்னும் நிறைய, எதிர் பார்க்கின்றோம்.  ❤️

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாசிகளுக்கு பாடம் புகட்டிய புட்டினுக்கு வாழ்த்துக்கள்.
இனவாதம் நிறவாதம் கொண்ட உக்ரேன் நாசிகளை அடியோடு அழிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரியுபோல் நகரம் முழுவதும் ரஷ்யா வசம்!

மரியுபோல் நகரம் முழுவதும்... ரஷ்யா, வசம்!

உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரம் முழுவதும் தங்கள் வசம் வந்துவிட்டதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மரியுபோல் நகரில் ரஷ்யாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளதாக ரஷ்ய இராணுவ அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

சரணடைந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.

தங்கள் நாட்டின் கிழக்குப் பிராந்தியமான லுஹான்ஸ்கில் ரஷ்யப் படையினர் கணிசமாக முன்னேறியுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த லிசிசான்ஸ்க் மற்றும் செவரோடொனட்ஸ்க் பகுதிகளில் ரஷ்யப் படையினர் கணிசமாக முன்னேறியுள்ளனர்.

இதுதவிர, ஒட்டுமொத்த டான்பாஸ் பிரதேசத்தில் ரஷ்யா படையினர் தங்களது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளதுடன், தாக்குதலின் தீவிரத்தையும் அதிகரித்துள்ளனர்.

டான்பாஸின் டொனட்ஸ்க் நகரைச் சுற்றிலும் உள்ள உக்ரைன் இராணுவ அரணை உடைக்கும் நோக்கில், சக்திவாய்ந்த ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் மூலம் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

https://athavannews.com/2022/1283138

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nedukkalapoovan said:

முள்ளிவாய்க்கால் யுத்தம் உட்பட ஈழ விடுதலைப் போரின் போது.. கூலிக்காக.. நேரடியாகப் பங்கேற்று எம் மக்களின் தலையில் குண்டு வீசிக் கொன்ற உக்ரேனியர்களின் நகரான மரியோபுல்.. முள்ளிவாய்க்கால் மாதத்தில்.. ரஷ்சியா வசம் வீழ்ந்தது.

இதன் போது உக்ரைன் அரச நவ-நாசிய கொள்கையுடன் செயற்பட்டு வந்த கொடிய  Azov உக்ரேனிய அரச பயங்கரவாதக் குழு முழுமையாக ரஷ்சியாவிடம் சரணாகதி அடைந்துள்ளது. நேட்டோ உட்பட்ட மேற்கு நாடுகள் அள்ளிக்கொடுத்த ஆயுதங்களையும் கையளித்துவிட்டு சரணடைந்துள்ளனர்.

கடைசி ஆள் இருக்கும் வரை போரிட்டு ரஷ்சியாவை தோற்கடிப்போம் என்று வீர வசனம் பேசி வந்த Azov உக்ரைன் அரச பயங்கரவாதிகள்.. தற்போது தமது உயிரை பாதுகாக்க சரணடையக் கேட்கப்பட்டதாக.. உக்ரைன் வீர வசனம்.. புளுகர் சனாதிபதி சமாளிப்புக்கேசன்.. துப்பித் தள்ளியுள்ளார். 

Russian army takes control of Azovstal steel plant

The Russian military says the Azovstal steelworks in Mariupol has been "totally liberated", with the last Ukrainian defenders surrendering.

The ministry said that since 16 May, 2,439 "neo-Nazis from Azov and Ukrainian troops" trapped in the steelworks "laid down their arms and surrendered".

Azovstal fighters were told to get out and save their lives, Zelensky says

https://www.bbc.co.uk/news/live/world-europe-61518209

ரஷ்யா - உக்ரைன் விவகாரத்தில் இலங்கை தமிழரை இழுத்துபோடுவது உணர்ச்சிபூர்வமானது, ஆனால் விவேகம் அற்றது. ரஷ்யா - உக்ரைன் விடயத்தில் நடுவுநிலமையே இலங்கை தமிழரை பொறுத்த அளவில் தேவையானது என்பது எனது அபிப்பிராயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Screen Shot 2022-03-11 at 1.21.13 AM தமிழ் ஈழத்தில் Screen Shot 2022-03-11 at 1.25.08 AM உக்ரைனில்

உக்ரைன் மக்களையும், குடிமனைகளையும் ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினர் அழித்துள்ளனர்.  சிங்களப் படையினரின் அழிவுகளுக்குள் வாழ்ந்தவர்களுக்கு இந்த அழிவுகளின் வலிகள் புரியும். ஆனால் தமிழர்களின் வலிகளை வைத்து தமது வாழ்வை புலம்பெயர் நாடுகளில் வளமாக்கியவர்களுக்கு சர்வாதிகாரி பூட்டினின் மிலேச்சத்தனமான உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ரசிக்கமுடியும், கொண்டாடமுடியும்.

யாழ் களத்தில் ஆசாரவாதிகளும், பிற்போக்குவாதிகளும், பிழைப்புவாதிகளும் தங்களை தமிழர்களின் போராட்டத்தின் ஆதரளவாளர்கள் என்று வேடம் போட்டுக்காட்டுவது வழமைதானே. அதில் சிலரை ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக்கியுள்ளது. ஆனால் தாங்கள் அம்மணத்தை மறைக்க நேட்டோவின் எதிர்ப்பு, மேற்கின் எதிர்ப்பு என்று ஓட்டைகள் நிரம்பிய கோவணத்தை இடுப்பில் கட்டிவருவார்கள்!

 

 

  • Like 6
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

GIF transparent han applause - animated GIF on GIFER - by Bathis

உக்ரைனின்…. வரை படத்தை, மாற்றி அமைத்த…. புட்டினுக்கு, வாழ்த்துக்கள். 👍🏽 🤝 👏🏻

புட்டினிடமிருந்து... இன்னும் நிறைய, எதிர் பார்க்கின்றோம்.  ❤️

T-Shirt von Wolodymyr Selenskyj ist „Zeichen des Respekts und der Loyalität“

வணக்கம் சிறித்தம்பி! இந்த கோமாளி உங்கை ஒரு சில நாட்டு பாராளுமன்றங்களிலை ஒன்லைன் மீட்டிங் குடுத்து அசத்துறார்.....இவர் செய்த தியாகம் என்னெண்டு எனக்கு தெரியேல்லை. உங்களுக்கு ஏதும் தெரியுமோ? 🤣

கண்ணிலையே தெரியுது நாஷி குணம். அவ்வளவும் விசம்.....விசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யாழ் களத்தில் ஆசாரவாதிகளும், பிற்போக்குவாதிகளும், பிழைப்புவாதிகளும் தங்களை தமிழர்களின் போராட்டத்தின் ஆதரளவாளர்கள் என்று வேடம் போட்டுக்காட்டுவது வழமைதானே. அதில் சிலரை ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக்கியுள்ளது. ஆனால் தாங்கள் அம்மணத்தை மறைக்க நேட்டோவின் எதிர்ப்பு, மேற்கின் எதிர்ப்பு என்று ஓட்டைகள் நிரம்பிய கோவணத்தை இடுப்பில் கட்டிவருவார்கள்

ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா தன்னிச்சையாக தாக்கியழித்தது சர்வாதிகாரம் இல்லை.அங்கே மக்கள் நிர்கதியாக்கப்படவில்லை.

உக்ரேனுக்கு மட்டும் ஈழ அழிவுகளுடன் ஒப்பிட்டு இரத்தக்கண்ணீர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

T-Shirt von Wolodymyr Selenskyj ist „Zeichen des Respekts und der Loyalität“

வணக்கம் சிறித்தம்பி! இந்த கோமாளி உங்கை ஒரு சில நாட்டு பாராளுமன்றங்களிலை ஒன்லைன் மீட்டிங் குடுத்து அசத்துறார்.....இவர் செய்த தியாகம் என்னெண்டு எனக்கு தெரியேல்லை. உங்களுக்கு ஏதும் தெரியுமோ? 🤣

கண்ணிலையே தெரியுது நாஷி குணம். அவ்வளவும் விசம்.....விசம்.

குமாராசாமி அண்ணை...  இவர், ஒரு கோமாளி நடிகன் மட்டுமே.
அவர் தியாகமும் செய்யவில்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. 😁

ஐரோப்பாவிலை சேருகிற ஆசையிலை.... முழுசாய் கிடந்த உக்ரேனையும்,
ரஸ்யாவிடம்.... பறி, கொடுத்திட்டு நிக்கிறார். 🤣

கெட்டது   நினைத்தால்.... கெட்டது தான் நடக்கும் என்பதற்கு,
உந்தக் கோமாளி... நல்ல உதாரணம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளில் அமெரிக்கா தன்னிச்சையாக தாக்கியழித்தது சர்வாதிகாரம் இல்லை.அங்கே மக்கள் நிர்கதியாக்கப்படவில்லை.

உக்ரேனுக்கு மட்டும் ஈழ அழிவுகளுடன் ஒப்பிட்டு இரத்தக்கண்ணீர்.

கண்முன்னால் நடக்கும் உக்கிரேன் மக்களின் இறப்புக்களையும் அழிவுகளையும் கொண்டாட்ட மனநிலையில் இருந்துகொண்டு இரசித்துக்கொண்டும் சர்வாதிகாரி பூட்டினின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திக்கொண்டும் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் அமெரிக்காவின் தலைமையில் மேற்கு நாடுகள் மேற்கொண்ட அழிப்புக்களையும், சிரியாவில் ரஷ்யாவின் ஆதரவோடு ஆசாத் மேற்கொண்ட பயங்கர அழிப்புக்களையும் பார்த்து நிச்சயம் கண்ணீர் உகுத்திருக்கமாட்டீர்கள்.

மனிதாபிமானமும், அடிப்படை விழுமியங்களும் இல்லாதவர்கள்தான் மக்களின் அழிவுகளைப் பார்த்து மகிழ்ந்து திளைப்பார்கள்.

அராபியர் மீதும், முஸ்லிம்கள் மீதும் பிற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் எவ்வளவு அனுதாபம் காட்டுவார்கள் என்பதை யாழ் களத்திற்கு வருவபவர்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. 

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இதில் மக்கள் அழிவை எனது பதிவு மூலம் ஆமோதிக்கவில்லை; கொண்டாடவும் இல்லை.

 வருத்தமும், ரஷ்யா மீது ஆத்திரமும் தான்.

அனால், உக்ரைன் அரசு எனும்  தனது  நிலைப்பாட்டில் தவறு  இழைத்து விட்டது.

எந்த அரசும், தனது உடல், உயிர் ஊடக இருக்கும் ஆணி வேர் மற்றும் விருட்ச நலன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.

உக்ரைன் என்ற அரசு யதார்த்தமாக , ஆக குறைந்தது ஐரோப்பாவின் அங்கமாக வரலாற்று, மற்றும் இருப்பு அடிப்படையில் இருக்கிறது.

அந்த அரசை எவ்வாறு பாதுகாப்பது எனும் குறிக்கோளே உக்ரைன் எடுத்து இருக்கவேண்டிய முடிவு, நேட்டோ, eu, rusSIA எதை சொன்னாலும், செய்தாலும்.

இங்கே பலர் உக்ரைன் சண்டைக்கு போகவில்லை, ரஷ்யா உள்ளே வந்த நிலையில் எதிர்க்கிறது  எனும் கருத்து இதில் தான் முரண்பாடாக இருக்கிறது.

உக்ரைன் அரசின் முழு முதல் நலன் சண்டையை தவிர்ப்பது.

(மிகச் சிறந்த உ.ம். நரி JR செய்தது, கிந்தியாவின் கால்களில் விழுந்தது. தமிழ் தரப்பு விழுந்து இருக்கலாம், 13 இ விட அதிகாரம் கொண்ட, நிலையான அரச அமைப்பை மற்றும் பாதுகாப்பு உறுதிகளை கிந்தியா தமி தரப்புடன் ஓர் ஒப்பந்தமாக செய்ய முன்வந்து, அதை யஸ்தர்த்தமாக நடைமுறைப்படுத்தி  இருந்தால், இப்பொது ரஷ்யா Moldova இல் செய்வது போல, பெரும்பன்மை தமிழர் ஏற்றக்குக்கொண்டு இருப்பார்கள், பிரபா, புலிகளுக்கு விருப்பு இல்லை என்றாலும். அப்போது கூட புலிகள் ஏற்றுக்கொண்டனர் விருப்பம் இல்லாமல், புலிகள் மேல் கிந்தியவும் சேர்ந்து அமைதி என்ற பெயரில் அழிக்க முனைந்த போதே புலிகள் ஆயுத  எதிர்ப்பு எடுக்க, மிகுந்த பொது  ஆதரவும் இருந்தது).

எமது, இந்த நிலையை ஒப்பிட்டு பார்த்தால், உக்ரைன் அரசு (இதை அழுத்தி சொல்கிறேன்) தனது கேந்திர, ஆணி வேர், விருட்ச நலன் எது என்பதை  அறியவில்லை, அல்லது புறக்கணித்து விட்டது என்பது வெளிப்படடை.
 
நேட்டோ சொல்லிவிட்டது, உக்ரைன் உடனடியாக சேர முடியாது என்று . அதற்கு பின்னும் Ukrain சண்டை தவிர்ப்பை செய்வதற்கு ஆனா விட்டு கொடுப்புகளை செய்யவில்லை என்பதே, உக்ரைன் நலனில் இருந்து பார்க்கும் பொது, உக்ரைன் செய்த பெரும் வரலாற்று தவறு.

எல்லோரும் சொல்லலாம், ருசியா அதை கேட்டு சும்மா இருந்து இருக்கலாம் தானே என்று. ரஷ்யா இற்கு அந்த நிலையிலும், தனது பாதுகாப்பு கேள்வி குறி என்ற அச்சுறுத்தல் உணர்வு ஏற்றப்படும் போது, ரஷ்யா வேறு எவர் சொல்லுவதை கேட்கும் நிலை எடுக்க தேவை (அழுத்தம்) இல்லை என்பதை உக்ரைன் கருத்தில் எடுத்து இருக்க வேண்டும்.        

இப்பொது நேட்டோ, ரஷ்யா பல பரீட்சையில் அழிந்தது உக்ரைன். உக்ரைன் அரசு என்ற நோக்கில், உக்ரைனுக்கு இது தேவையா?

மற்றது இதில் ரஷ்யா க்கு பாரிய பொருளாதர பின்னடைவு இருந்தாலும், ரஷ்யா அதை ஆக குறைந்தது பகுதியாக நிரப்பும் தன்மை  அதன் பொருளாதாரத்தில் வரும், ஏனெனில் உலகம் முழுவதும் மேற்றுகின் ரஷ்யா பொருளதாசரை தசடையை ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்னொமொரு மறைமுக  விளைவு, காலம் எடுத்தாலும், இப்பொது உள்ள US மேலாண்மை financial system க்கு ஈடான ஒன்றை கட்டி எழுப்புவது.

இன்னமொன்று, அண்மையில் (April 2022) Solomon Islands இல் US, Australia, UK, EU இந்த நிலைப்பாடு, ரஷ்யா எடுத்த நிலைப்பாட்டை சரி என்று ஆக்கி விட்டது. சுருக்கமாக, Solomon Islands சீனாவுடன்  பாதுகாப்பு உடன்படிக்கை செய்தது. US சொன்னது (UK, EU எதிர்கவில்லை, ஆஸ்திரேலியா ஆதரித்தது), சீன Solomon Islands இல் நிரந்தர இராணுவ பிரசன்னம் வரும் என்றால், இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று, சீனாவையும், Solomon Islands ஐயும் எச்சரித்தது.

அத்துடன் US இன்னமும் Monroe கோட்பாட்டை இறுக்கி கடைபிடிக்கிறது. Monroe கோட்பாடு என்பது, James  Monroe எனப்படும் அமெரிக்க அதிபரால், அன்றைய நிலையில் (1823 இல், அநேகமான Spanish காலனிகள் சுதந்திரத்துக்கு தயாரான காலம்), ஐரோப்பிய   காலனித்துவ அரசுகள் மீளவும் அமெரிக்கா கண்டத்தில் தலையிடும் என்று US அறிந்த போது, அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அரசு மற்றும் அதிகார பீடங்களை தவிர வேறு எவரும் அமெரிக்க கண்டத்தில் தலையீடு செய்ய கூடாது. செய்வதை  US பார்த்து கொண்டு இராது எனம் பிரகடனம். Trump Venezuala பிரச்சனையில் கையில் எடுத்தது, Monroe கோட்பாடு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

 

Screen Shot 2022-03-11 at 1.21.13 AM தமிழ் ஈழத்தில் Screen Shot 2022-03-11 at 1.25.08 AM உக்ரைனில்

உக்ரைன் மக்களையும், குடிமனைகளையும் ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினர் அழித்துள்ளனர்.  சிங்களப் படையினரின் அழிவுகளுக்குள் வாழ்ந்தவர்களுக்கு இந்த அழிவுகளின் வலிகள் புரியும். ஆனால் தமிழர்களின் வலிகளை வைத்து தமது வாழ்வை புலம்பெயர் நாடுகளில் வளமாக்கியவர்களுக்கு சர்வாதிகாரி பூட்டினின் மிலேச்சத்தனமான உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ரசிக்கமுடியும், கொண்டாடமுடியும்.

யாழ் களத்தில் ஆசாரவாதிகளும், பிற்போக்குவாதிகளும், பிழைப்புவாதிகளும் தங்களை தமிழர்களின் போராட்டத்தின் ஆதரளவாளர்கள் என்று வேடம் போட்டுக்காட்டுவது வழமைதானே. அதில் சிலரை ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பு அம்மணமாக்கியுள்ளது. ஆனால் தாங்கள் அம்மணத்தை மறைக்க நேட்டோவின் எதிர்ப்பு, மேற்கின் எதிர்ப்பு என்று ஓட்டைகள் நிரம்பிய கோவணத்தை இடுப்பில் கட்டிவருவார்கள்!

 

 

கிருபனின் கோபம் சரியானது.....நியாயமானது....வரவேற்கப்படவேண்டியது...இலங்கை தமிழரின் போரட்டத்துக்கு....ஆதரவை அதிகரிப்பு செய்யக்கூடியது.....இலங்கை அரசை யார் ஆண்டபோதும். ..இன்றைய நிலையிலும்...ஓர் ஆக்கிரமிப்புயாளனென்று ...பறைசாற்றுகின்றது.இலங்கை தமிழர் ஆகிய எமக்கு தமிழ்ஈழம்  அல்லது மிகவும் உறுதியான சுயாட்சி கிடைக்கவேண்டுமானால்....எங்கு எல்லாம் ஆக்கிரமிப்பு நடக்கிறதோ அவற்றை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்   அப்படி செய்யாமல் ஆதரிப்போமாகில்.  எங்கள் விடுதலைக்கு பின்னடைவை எற்ப்படுத்தும்  🙏🤝

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

முள்ளிவாய்க்கால் யுத்தம் உட்பட ஈழ விடுதலைப் போரின் போது.. கூலிக்காக.. நேரடியாகப் பங்கேற்று எம் மக்களின் தலையில் குண்டு வீசிக் கொன்ற உக்ரேனியர்களின் நகரான மரியோபுல்.. முள்ளிவாய்க்கால் மாதத்தில்.. ரஷ்சியா வசம் வீழ்ந்தது.

 

எம்முடன் ஒப்பிடும்போது

உக்ரைன் அழிவுகள்  ஒன்றுமே  இல்லை

சீ இத்தனை குண்டுகளை  எம்மீது  கொட்டியவனின்  அழிவுகள்  இவ்வளவு  தானா?

இன்னும் எதிர் பார்க்கிறேன்

அடுத்து  ரசியர்கள்???

துன்பத்தை  தந்தவனுக்கு  அதையே  திருப்பிக்கொடு

(இப்பொழுதெல்லாம் இரக்கத்தை வீம்புக்கு வரவழைக்க  வேண்டியுள்ளது.  வேண்டாம்  அது  எனக்கு?)

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது புராதன மற்றும் சமகால வரலாற்றை புரட்டிப் பார்த்தல், ரஷ்யா ஒன்றில் அதன் வலிந்த மற்றும் தற்பாதுகாப்பு   ராணுவ நடவடிக்கை என்பதில் மிகவும் மெதுவாகவே அதன் குறிக்கோளைகளை அடைந்தது.

Ukrain இப்போது செய்வது எல்லாம், தந்திரோபாய முன்னேற்றம் அல்லது வெற்றிகள். ஒன்றும் கேந்திர தன்மை உடையவை அல்ல.

ரஷ்யா ஐ நியாயப்படுத்த சொல்லவில்லை, உக்ரைன் கேந்திர நலனின் நோக்கில் இருந்தே இதை நான் பார்க்கிறேன்.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

கண்முன்னால் நடக்கும் உக்கிரேன் மக்களின் இறப்புக்களையும் அழிவுகளையும் கொண்டாட்ட மனநிலையில் இருந்துகொண்டு இரசித்துக்கொண்டும் சர்வாதிகாரி பூட்டினின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்திக்கொண்டும் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் அமெரிக்காவின் தலைமையில் மேற்கு நாடுகள் மேற்கொண்ட அழிப்புக்களையும், சிரியாவில் ரஷ்யாவின் ஆதரவோடு ஆசாத் மேற்கொண்ட பயங்கர அழிப்புக்களையும் பார்த்து நிச்சயம் கண்ணீர் உகுத்திருக்கமாட்டீர்கள்.

மனிதாபிமானமும், அடிப்படை விழுமியங்களும் இல்லாதவர்கள்தான் மக்களின் அழிவுகளைப் பார்த்து மகிழ்ந்து திளைப்பார்கள்.

அராபியர் மீதும், முஸ்லிம்கள் மீதும் பிற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் எவ்வளவு அனுதாபம் காட்டுவார்கள் என்பதை யாழ் களத்திற்கு வருவபவர்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. 

 

""ஆனால் நாம் அமெரிக்காவின் புஷ்ஷின் ஆக்கிரமிப்பையோ, ரொனி பிளேயர் அதற்கு உடந்தையாக செயற்பட்டதையோ ஒருபோதும் நியாயப்படுத்தவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை"

கிருபன்,

நீங்கள் எழுதியதில் ஒரு சொல்லு விடுபட்டுப் போச்சு. அது என்ன சொல்லு எண்டு சொல்லுங்கோ பார்ப்போம் ?

"" எதிர்க்கவும் இல்லை "" Missing  🤣

நடுவூ நிலைமை காக்கிறீங்கள் போல..

 உந்த நடு நிலைவாதிகள், முற்போக்குவாதிகள் எண்டு சொல்லுற கனபேர் இப்பிடித்தான் சீசனுக்கு சீசன் சுருதி மாத்திப் பாடுவினம். 

இப்பிடி எத்தின பேரப் பாத்திட்டோம் கிருபன். 

ஜோச் புஸ் சொன்ன “Either you with us or against us”  இதில நீங்கள் எந்தப் பக்கம் ? 

அமெரிக்க ஆயுதப் படைகளின் தளகர்த்தர் Lloyd Austin பகிரங்கமாகவே "ரஸ்யா மீண்டும் எழ முடியாதபடி அழிக்கப்பட வேண்டும்  என்பதே தங்கள் நோக்கம்"  என்று கூறிய பின்னரும் ரஸ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பு தனியே நில ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்டது என்று நீங்களும் உங்களைப் போன்ற நடுவூ (😏) நிலைமைவாதிகள் நம்புவீர்களானால்...........🤦🏼‍♂️

 

 

 

 

Edited by Kapithan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

ஜோச் புஸ் சொன்ன “Either you with us or against us”  இதில நீங்கள் எந்தப் பக்கம் ? 

நிச்சயமாக புஷ்ஷின் பக்கம் இல்லை. ஒரு போதும் வலதுசாரிகளை ஆதரித்தது கிடையாது ஏனெனில் எனது சிந்தனை எப்போதும் முற்போக்கான இடது சார்ந்ததுதான். 

40 minutes ago, Kapithan said:

"" எதிர்க்கவும் இல்லை "" Missing  🤣

அது உங்களைப் போன்ற பிழைப்புவாதிகளின் சிந்தனை. அதுதான் உங்களிடம் இருந்து வந்துள்ளது.

எவ்வளவு பிற்போக்குவாதியாக இருந்தாலும் புலிகளை ஆதரிக்கின்றேன், தமிழ்த்தேசியவாதி என்று சொன்னால் அரவணைத்துக் கொள்ளவும் யாழில் சிலர் இருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தைப் போர்வையாகக் கொண்ட பிற்போக்குவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் இங்கு தினமும் பார்க்கின்றோம்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

நிச்சயமாக புஷ்ஷின் பக்கம் இல்லை. ஒரு போதும் வலதுசாரிகளை ஆதரித்தது கிடையாது ஏனெனில் எனது சிந்தனை எப்போதும் முற்போக்கான இடது சார்ந்ததுதான். 

அது உங்களைப் போன்ற பிழைப்புவாதிகளின் சிந்தனை. அதுதான் உங்களிடம் இருந்து வந்துள்ளது.

எவ்வளவு பிற்போக்குவாதியாக இருந்தாலும் புலிகளை ஆதரிக்கின்றேன், தமிழ்த்தேசியவாதி என்று சொன்னால் அரவணைத்துக் கொள்ளவும் யாழில் சிலர் இருக்கின்றார்கள். தமிழ் தேசியத்தைப் போர்வையாகக் கொண்ட பிற்போக்குவாதிகளையும், பிழைப்புவாதிகளையும் இங்கு தினமும் பார்க்கின்றோம்தானே.

நம்பிட்டோம் சாமியோவ் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

நம்பிட்டோம் சாமியோவ் 🤣

 

தேவையற்ற பிற  விடயங்களில் எமக்குள்ளேயே பிரித்தடிபட்டாலும் சொல்வார்கள்

இந்தளவு  தான் தமிழரின் ஒற்றுமை  என?

நீ  எந்த  தளத்தில் 

ஏன் நடுவில் தான் நின்று கொம்பெடுத்தாலும்

தமிழர் தாயகத்தில்  ஒரே  கொள்கையா?

நீ எனக்கு  சகோதரம்  என் தம்பியடா நீ

இவ்வளவு  தான் என் கொள்கை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணர்.. இன்னும் முழுமையா இந்த யுத்தம் பற்றி விளங்கிக்கொள்ளவில்லை அல்லது விளங்கினதா காட்ட விரும்பவில்லை போலும்.

பெரும்பான்மை.. ரஷ்சிய மொழி பேசும் டான்பாஸ் பிராந்திய மக்களின் சுதந்திரத்தை உக்ரைன் பறித்து.. ரஷ்சியாவோடு.. நேரடியாக முரண்பட்டு.. நேட்டோ சார்பு.. ஐரோப்பிய ஒன்றிய சார்பு நிலையை வலுப்படுத்த.. நேட்டோ நாடுகளின் தேவையை பூர்த்தி செய்யமுற்பட்டதன் விளைவே இந்த யுத்தம்.

டான்பாஸ் பிராந்தியத்தில்.. தற்போது உக்ரைனில் கொல்லப்பட்டதை விட அதிகம் மக்கள் உக்ரேனியப் படைகளால் கொல்லப்பட்டிருப்பதோடு.. பள்ளிக்கூடங்கள்.. வைத்தியசாலைகள் என்று எதுவுமே மிஞ்சாது இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டு வந்தது. இது 2014 இல் இருந்து நடந்து வருகிறது.. அந்தப் பிராந்திய மக்கள் உக்ரைனில் இருந்து தாம் பிரிந்து செல்ல விரும்பியதாக இனங்காட்டிய பின்னரும்.. உக்ரைன் வலிந்து ரஷ்சியாவை வேறு நாடுகளின் தேவைக்காகப் பகைத்துக் கொள்ளும் வகையில்.. இந்த மக்களின் கோரிக்கையை நிராகரித்து அவர்கள் மீது இராணுவ அடக்குமுறைகளையும் இராணுவ ஆக்கிரமிப்பையும் வலுப்படுத்தியது.

இதன் ஒரு கட்டத்தில்.. டான்பாஸ் ரஷ்சிய ஆதரவுப் போராளிகள்.. டான்பாஸ் பிராந்தியத்தின் கனிசமான அளவை கைப்பற்றி தம் வசப்படுத்திக் கொண்டனர். தமது நிலைகளை அங்கு வலுப்படுத்தி.. முகமாலை போன்று ஒரு முன்னரங்க அரணை அமைத்துக் கொண்டனர்.. தமது கட்டுப்பாட்டில் இருந்த டான்பாஸ் பிராந்தியத்தில்.

இந்த பிராந்தியத்தை மீளக் கைப்பற்றும் நோக்கில்.. உக்ரைன் முன்னெடுத்த பல இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்த நிலையில்.. உக்ரைன் நேரடியாகவே நேட்டோ நாடுகளிடம் இருந்து ஆயுத.. இராணுவ தளபாட உதவிகளையும் இராணுவ தந்திரோபாய உதவிகளையும்.. நேரடிப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டு.. இந்தப் போராளிகள் மீது பாரிய அளவில் ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு திட்டமிட்டு வந்த நிலையிலும்.. நேட்டோவின் நேரடி ஆதிக்கம்.. உக்ரைனில் அதிகரிக்க ஆரம்பித்ததன் அடிப்படையிலும்.. ரஷ்சியா மீது மேற்குலகு தமது தேவைக்காக பொருண்மிய தடைகளை கொண்டு வந்ததன் விளைவாகவுமே ரஷ்சியா இந்த யுத்தத்திற்குள் முழுமையாக இழுத்துவிடப்பட்டது. 

சிரியாவில்.. ரஷ்சியாவிடம் தாம் ராஜதந்திர ரீதியில் தோற்க வேண்டி வந்ததற்கு பழிவாங்கும் வகையிலும் ரஷ்சியாவின் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னான மீள் எழுச்சி கண்டும்.. நேட்டோ மற்றும் அமெரிக்க சார்ப்பு மேற்கு நாடுகளின் பகைமைத் தன்மை காரணமாக கொழுந்துவிட்டு எரிவதே இந்த யுத்தம்.

இதில்.. ரஷ்சிய மொழி பேசும்.. டான்பாஸ் பிராந்திய மக்களை தான் ஈழத்தமிழருக்கு ஒப்பிட முடியுமே தவிர.. மேற்குலக.. நேட்டோ ஆதரவும் ஆயுதமும் பெறும்.. உக்ரைன் ஈழத்தமிழர்களின் நிலையை எப்பவுமே எட்ட முடியாது. ஏனெனில் உக்ரைன் சுதந்திரம் வேண்டிப் போராடவில்லை.. மாறாக ஆக்கிரமிப்பை நோக்கி போர் செய்கிறது. 

டான்பாஸ் பிராந்தியம் விடுதலை வேண்டிப் போராடுகிறது.. ரஷ்சியா அதற்கு ஆதரவளிக்கிறது. ஈழத்தில் ஹிந்தியா செய்தது போல் அன்றி தன்னை நம்பி வந்த டான்பாஸ் மக்களை என்ன விலை கொடுத்தாலும் பாதுகாப்பதை கொண்டியங்கும் ரஷ்சியாவா.. சொந்த பிராந்தியத்தில் வாழ்ந்த ரஷ்சிய மொழி பேசும் மக்களை கொன்று குவித்து நேட்டோ.. ஐரோப்பிய ஒன்றிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்.. உக்ரைனா சிறந்தது.. என்றால்..

ரஷ்சியா என்பது வெளிப்படை ஆகும். 

Edited by nedukkalapoovan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ukraine launched a military counter-offensive against pro-Russian forces in April 2014, called the "Anti-Terrorist Operation"[44] (ATO) from 2014 until 2018, when it was renamed the "Joint Forces Operation" (JFO). 

இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பதம் எம் மக்களுக்கு நன்கு பரீட்சயமாக இருக்கும். இப்படி ஒரு பதம் மூலமே அமெரிக்கா தலைமையிலான இணைத்தலைமை நாடுகளையும் இணைத்துக் கொண்டு தன் சார்பு சர்வதேச நாடுகளையும் இணைத்துக் கொண்டு.. ஹிந்தியாவையும் சீனாவையும் இணைத்து ஒரு புள்ளியில் குவிய வைச்சு.. தமிழ் மக்களின் தமிழீழ விடுதலைப் போரை பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்குள் கொண்டு வந்து சிங்களச் சிறீலங்கா செய்தது.. பெரும் இனப்படுகொலையை செய்து முடித்தது. அதே பாணியை தான் உக்ரைன் டான்பாஸ் பிராந்தியத்தில் செய்தது.. செய்தும் வருகிறது.

இதனை எல்லாம் விட்டிட்டு.. மேற்குலக பிரச்சாரங்களுக்கு எடுபட்டு கிருபண்ணர் உக்ரைனுக்காக வடிக்கும் கண்ணீர் நீலிக்கண்ணீராகும். அது முற்போக்கும் அல்ல.. முழுப் பித்தலாட்டத்தின் உச்சம். 

https://en.wikipedia.org/wiki/War_in_Donbas

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இவ்வளவு காலமும் பிஸியாக்கும். லேற்றாக வந்து இப்பத்தான் விக்கிபீடியா எல்லாம் படிக்கின்றார்.🤭

யாழில் பல திரிகளும், கட்டுரைகளும், ஆய்வுகளும் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் படிக்க உங்களுக்கு நேரம் இருக்காது என்பதால் @பகிடி எழுதிய அவரது உக்கிரேன் வாழ்வு அனுபவங்களையாவது படித்தால் டொன்பாஸ் பற்றிப் புரியும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவை ஒரு குண்டு ஆல் அழிக்க முடியும்....செயற்கையாக சுனாமி எற்ப்படுத்தி கடலில் முழ்கடிக்க முடியும்...ஜேர்மனியை அழிக்க 120 வினாடிகள் போதும்   ...பிரான்ஸ்யும சில நொடியில் அழிப்போம்....என்று செய்திகளும் அறிக்கைகளும்.  வந்து கொண்டிருக்கும் போது ரஷ்யா இதுவரை எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.  எனவே… இவையெல்லாம் உண்மை என்று தான் கருத வேண்டும்    ஆகவே இப்படியான  திறமையான நாட்டுக்கு இங்கே பலரும் சொன்னது போல் உக்ரேன் பாதுகாப்பு அற்ற நாடாக இருக்க 1% கூட வாய்ப்பு இல்லை.....மேலும் புதினுக்கு பதிலாக வேறு நபர் அதிபர் பதவியில் இருத்தல் இந்த போர் தொடங்கியிருக்காது பொருள்களில் விலைகளும் ஏறி இருக்காது 

ஆசை நாயகி மூலம் நான்காவது குழந்தையை உருவாக்கிய புதின். உக்ரேன் இல் பல ஆயிரம் குழந்தைகளை கண்ணை மூடிக்கொண்டு கொலை செய்கிறார்  கோத்தா இன் நிலைக்கு இவர் வருவார்...வர வேண்டும்...

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

பிரித்தானியாவை ஒரு குண்டு ஆல் அழிக்க முடியும்....செயற்கையாக சுனாமி எற்ப்படுத்தி கடலில் முழ்கடிக்க முடியும்...ஜேர்மனியை அழிக்க 120 வினாடிகள் போதும்   ...பிரான்ஸ்யும சில நொடியில் அழிப்போம்....என்று செய்திகளும் அறிக்கைகளும்.  வந்து கொண்டிருக்கும் போது ரஷ்யா இதுவரை எந்தவொரு மறுப்பும் தெரிவிக்கவில்லை.  எனவே… இவையெல்லாம் உண்மை என்று தான் கருத வேண்டும்    ஆகவே இப்படியான  திறமையான நாட்டுக்கு இங்கே பலரும் சொன்னது போல் உக்ரேன் பாதுகாப்பு அற்ற நாடாக இருக்க 1% கூட வாய்ப்பு இல்லை.....மேலும் புதினுக்கு பதிலாக வேறு நபர் அதிபர் பதவியில் இருத்தல் இந்த போர் தொடங்கியிருக்காது பொருள்களில் விலைகளும் ஏறி இருக்காது 

ஆசை நாயகி மூலம் நான்காவது குழந்தையை உருவாக்கிய புதின். உக்ரேன் இல் பல ஆயிரம் குழந்தைகளை கண்ணை மூடிக்கொண்டு கொலை செய்கிறார்  கோத்தா இன் நிலைக்கு இவர் வருவார்...வர வேண்டும்...

ஐயாவுக்கு உக்ரேன் அழிவுகள், உலக பொருளாதார, அரசியல், கொள்கை மாற்றங்களில் எல்லாம் இல்லாத அக்கறை, புட்டினின் ஆசை நாயகி மீது ஏன் .....

🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

ஐயாவுக்கு உக்ரேன் அழிவுகள், உலக பொருளாதார, அரசியல், கொள்கை மாற்றங்களில் எல்லாம் இல்லாத அக்கறை, புட்டினின் ஆசை நாயகி மீது ஏன் .....

🤣🤣🤣

அவர்களுக்கு… ஆசைநாயகி இல்லையே, என்ற வயித்தெரிச்சலில் தான்…
புட்டினில் பிழை என்று, உருட்டுகிறார்கள். 🤣 😂

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.