Jump to content

ரணிலின் அமைச்சரவையில்... அங்கம் வகிக்கும், அமைச்சர்களின்... பழைய திருகு தாளங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 3 people and people standing  May be an image of 2 people
May be an image of 4 people, people standing and indoor  May be an image of 2 people and people standing
 
May be an image of 1 person, standing and text
 
 
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடக தப்பி ஓட முயற்சித்து... பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இழுத்து செல்லப்படும் படத்தில் இருக்கும் நபரை தெரியுமா ? இன்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களால் வர்த்தக வாணிப அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு நளின் பெர்னாண்டோ என அழைக்கப்படும் இவர்.2014 ஆம் ஆண்டு சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் Carrom மற்றும் Checker-boards வாங்குவதற்காக 39 மில்லியன் அரச பணத்தை மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் 2018 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தார்
 
உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு டிரான் அல்லஸ் அவர்கள் Reconstruction and Development Agency (RADA) நிறுவனத்தின் தலைவராக இருந்த போது 125 மில்லியன் ரூபா அரச பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இருந்தார். குறிப்பாக திறைசேரியிடம் இருந்து சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டுவதற்காக 645 மில்லியன் ரூபா பணத்தை பெற்று கொண்ட இவர் பாதிக்கப்பட்ட எவருக்கும் ஒரு வீட்டை கூட கட்டி கொடுக்கவில்லை.
 
இன்று சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு ஹெகலிய ரம்புக்கல அவர்கள் அரச அச்சக கூட்டுத்தாபானத்தின் 230,000 ரூபா பணத்தை பயன்படுத்தி தனது தனிப்பட்ட தொலைபேசி கட்டணத்தை செலுத்திய மோசடி குற்றசாட்டை எதிர்கொண்டு இருந்தார்
இது தவிர, ஊடகத்துறை அமைச்சராக இருந்த பொது ரூபவாஹினி நிறுவனத்தின் 990,000 ரூபா பணத்தை பயன்படுத்தி 600 GI pipes ஐ மோசடியாக வாங்கிய வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இது போதாதென்று தனிப்பட்ட வீட்டுக்குரிய மின்சரான கட்டணமான 12 மில்லியனுக்கும் (12,056,803 ரூபா) அதிகமான பணத்தை இதுவரை திரு ஹெகலிய ரம்புக்கல அவர்கள் செலுத்தவில்லை
 
நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு விஜேதாச ராஜபக்ஷ அவர்கள் அவன்ட் கார்ட் கடல்சார் சேவை நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதன் மூலம் அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய வழக்கில் கோட்டாபய ராஜபக்சே அவர்களை சட்டமா அதிபர் திணைக்களம் கைது செய்ய முயன்ற பொது அமைச்சர் என்கிற அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்தி இருந்தார்
 
துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் சுகாதார அமைச்சராக இருந்த போது அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மற்றும் காலாவதியான மருந்து விநியோகம் தொடர்பான மோசடிகளுடன் தொடரப்பட்டு இருந்தார். குறிப்பாக 2007 ஆம் ஆண்டு கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் படி தரமற்ற மருந்துகளின் இறக்குமதி காரணமாக சுகாதார அமைச்சுக்கு 0.5 பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய சம்பவத்துடன் திரு நிமல் சிறிபால டி சில்வா தொடர்பு பட்டு இருந்தார்
 
கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு சுசில் பிரேமஜயந்த அவர்களின் மனைவி மாணவர்களை பாடசாலைக்கு சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்ற குற்றசாட்டுகளை கடந்த காலங்களில் எதிர்கொண்டு இருந்தார்
 
நகர மற்றும் வீடமைப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு பிரசன்னா ரணதுங்க அவர்கள் மீது வர்த்தகர் ஒருவருக்கு Meethotamulla பகுதியில் காணி ஒன்றின் உரிமையை மீள பெற்று கொடுக்க 64 மில்லியன் ரூபா லஞ்சம் பலவந்தமாக பெற்று கொண்ட குற்றசாட்டு ஒன்று வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கின்றது
 
மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு காஞ்சனா விஜேசேகர அவர்கள் மதுபோதையில் இரவு விடுதி ஒன்றில் தகராறில் ஈடுபட்ட குற்றசாட்டு ஒன்றும் நிலுவையில் இருக்கின்றது.
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ இருந்த‌ மேற்கு வங்காள முத‌ல‌மைச்ச‌ர் இந்திரா காந்தி அம்மையார‌ பார்த்து கேட்ட‌து இந்திய‌ ப‌டையை அனுப்புறீங்க‌ளா அல்ல‌து என‌து காவ‌ல்துறைய‌ அனுப்ப‌வா என்று............மேற்கு வங்காள முத‌லைமைச்ச‌ரின் நிப‌ந்த‌னைக்கு இன‌ங்க‌ இந்திய‌ ப‌டையை இந்திரா காந்தி அம்மையார் இந்திய‌ ப‌டையை அனுப்பி வைச்சா...............இந்தியா அடுத்த‌ நாட்டு பிர‌ச்ச‌னையில் த‌லையிடுவ‌து இல்லை என்றால் ஏன் ராஜிவ் காந்தி அமைதி ப‌டை என்ற‌ பெய‌ரில் அட்டூழிய‌ம் செய்யும் ப‌டையை ஈழ‌ ம‌ண்ணுக்கு அனுப்பி வைச்சார்............. உங்க‌ட‌ இஸ்ர‌த்துக்கு பாலும் தேனும் ஓடுவ‌து போல் எழுதி இந்தியா ஏதோ புனித‌ நாடு போல் காட்ட‌ முய‌ல்வ‌தை நிறுத்துங்கோ பெரிய‌வ‌ரே...............இந்தியாவை வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் இருந்து தூக்கி விட்டின‌ம்.............இந்தியா 2020வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்துடும் என்று சொன்னார்க‌ள் வ‌ல்ல‌ர‌சு ஆக‌ வில்லை நாளுக்கு நாள் பிச்சைக்கார கூட்ட‌ம் தான் அதிக‌ரிக்குது லொல்...........................
    • ரனிலுக்கு ஆதரவளிக்கும் குழுவினர் யார்?
    • சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி பிரியன்..........!  👍
    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.