Jump to content

யாழ்ப்பாண நூலகத்தில், எரிக்கப்பட்ட ஓலைச் சுவடிகளில்... என்ன இருந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of monument, outdoors and text that says 'அகழ்வு ஆராய்ச்சியில் கண்டெடுந்த கோட்டையல்ல.... யாழ் நூலகம் நமிழவன்'

No photo description available.

No photo description available.

யாழ்ப்பாண_நூலகத்தில் எரிந்தது என கூறப்படும்  ஓலைச் சுவடிகளில் என்ன இருந்தது ?

முன்னுரை :
யாழ் பொது நூலகம் என்பது ஈழத் தமிழரின் பெரும் அறிவுப் பெட்டகமாகவே அக்காலத்தில் பார்க்கப்பட்டது.......எமதினத்தின் கல்வி வளர்ச்சியில் மிக முக்கிய இடம் வகித்ததாலோ என்னவோ தெரியவில்லை, சிங்கள காடையரின் தீயிற்கு இரையாகியது. 1981ஆம் ஆண்டு வைகாசி 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் ஈழத் தமிழரின் இந்த அறிவுக்களஞ்சியம் சிங்களக் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது.
 
அது மட்டுமல்ல,
-) யாழ்ப்பாணம் காட்லிய் கல்லூரியின் நூலகம் ,
-) யாழிலே மிகப்பெரிய புத்தகசாலையான பூபாலசிங்கம் புத்தகசாலை
ஆகியவையும் அன்று எரிக்கப்பட்டது, சிங்கள இனவெறியர்களால்……….
 
யாழ்நூலகம் உருவான வரலாறு :
கரு கே. எம். செல்லப்பா என்னும் ஆர்வலரொருவரால் உருவாக்கப்பட்டது இந்நூல் நிலையம் . நவம்பர் 11. 1933 ஆம் ஆண்டில் தனது வீட்டில், சில நூல்களுடன் இவர் நடத்தி வந்த நூல் நிலையமே இது.
இதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் விரிவுபடுத்தும் நோக்கில், செல்லப்பா அவர்களும் வேறு சில பிரமுகர்களும் இணைந்து செயல்பட்டு, இந்த நூல் நிலையத்தை யாழ் நகரின் மத்தியில் யாழ் ஆஸ்பத்திரி வீதியில் இதற்கென வாடகைக்குப் பெறப்பட்ட ஒரு சிறிய அறையொன்றுக்கு மாற்றினார்கள். அக்காலத்தில் சில நூறு நூல்களே இங்கிருந்தன.
 
மாதம் 25 ரூபாய்கள் வாடகைக் கட்டிடத்தில் இயங்கிய யாழ்ப்பாண பொது நூலகத்தை 1935ல் யாழ்ப்பாண நகர சபை பொறுப்பேற்றது. 1949ல் யாழ்ப்பாண நகர சபை இலங்கையின் இரண்டாவது மாநகர சபையாக தரமுயரத்தப்பட, மேயராக பதவியேற்ற சாம் சபாபதி, நூலகத்திற்கென தனியான கட்டிடம் கட்ட வேண்டும் என்ற திட்டத்தை முன்மொழிந்து செயலிலும் இறங்கினார்.மார்ச் 29, 1954ல் யாழ் நூலகத்திற்கான அடிக்கல்லை யாழ்ப்பாண மேயர் சாம் சபாபதியோடு Fர் ளொங்ம் அமெரிக்க, பிரித்தானிய இந்திய உயர்ஸதானிகர்கள் இட்ட நாளில், அமெரிக்க அரசு 22,000 அமெரிக்க டொலர்களை (அன்றைய பெறுமதியில் ரூ 104,000) நன்கொடை செய்தது.
 
அன்றைய மதராஸ் அரசின் தலைமை கட்டிடக் கலைஞரான VM நரசிம்மன், திராவிட கட்டிட பாரம்பரியத்திற்கமைய வடிவமைத்த கட்டிட வரைபிற்கமைய கட்டப்பட்ட கம்பீரமான யாழ்ப்பாண பொது நூலக கட்டிடம், ஒக்டோபர் 11, 1959ல், அன்றைய யாழ்ப்பாண மேயரான துரோகி அல்பிரட் துரையப்பாவால் திறந்து வைக்கப்பட்டது.
 
No photo description available.
 
சிங்களத்தால் தீக்கிரையாக்கப்பட்ட நேரம் :
வைகாசி 31, 1981 அன்று, இரவு பத்து மணி துரையப்பா விளையாட்டரங்க பக்க மதிலிற்கு மேலால் பாய்ந்து வந்த சிங்கள காடையர்கள், சர் ஃபளொங்ன் சிலையைத் தாண்டி உள் நுளைந்தனர் .
 
பொது நூலக வாயிலில் காவல் கடமையிலிருந்த காவலாளி அரை நித்திரையிலிருந்தான். சிங்களத்தில் கத்தி சிரித்துக் கொண்டு வந்த கூட்டத்தை பார்த்து டோர்ச் அடித்த காவலாளியை, காடையர் கூட்டம் அடித்துக் கலைத்தது. காடையர் கூட்டத்தில் சீருடையணிந்த காவல்துறையினரும் இருந்தனர். காவலாளி சுப்ரமணிய பூங்காப் பக்கம் தலைதெறிக்க ஓட, நிறை வெறியிலிருந்த காடையர்கள் நூலகத்தின் பிரதான கதவை அடித்து திறந்தார்கள்.
முன் கதவை உடைத்து திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சிங்கள காடையர்களும் காவல்துறைக்காரர்களும், புத்தகங்களையும் அரிய ஓலைச் சுவடுகளையும் அள்ளிக் கொண்டு வந்து நடுக் கட்டிட விறாந்தையில் போட்டனர். கிழக்கு பக்க கட்டித்திலிருந்தும் மேற்குப் பக்க கட்டிடத்திலிருந்தும் ஓடி ஓடி பெறுமதியான புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்து கொட்டினார்கள்.பின்னர் அவர்ரை நெருப்புக்கு இரையாக்கினர்.புத்தகங்களை நெருப்பிட்டு கொளுத்திவிட்டு வெளியே ஓடிவந்த காடையர் கூட்டம், பைலா பாட்டுப் பாடி ஆடத் தொடங்கியது.
 
சிங்கள காவல்துரையினர் வேடிக்கை பர்தது மட்டுமல்லாமல் தீயை அணைக்க வந்த தமிழ் மக்களையும் தடுத்தனர்.இருந்தால் போல, கிழக்கு பக்க கட்டிடத்தில் நெருப்பு பெருஞ்சுவலை எடுத்தது. காக்கி களுசான் அணிந்த ஒருத்தன் கையில் பெற்றோல் குடுவையோடு கிழக்கு பக்க கட்டிட பக்கத்திலிருந்து மேற்கு பக்கமாக ஓடிய சிறிது நேரத்தில், மேற்குப் பக்க கட்டித்தையும் தீச்சுவாலைகள் சூழத்தொடங்கியது.
 
தீயில் கருகிக் கொண்டிருந்த யாழ் நூலகத்தின் குவிமாடத்தின் கண்களிற்கு, யாழ் வாடி வீட்டு வாசலில் நின்று நூலகம் எரிவதை பார்த்து ரசித்த இலங்கையின் அமைச்சர் சிறில் மத்தியூவையும், காமினி திஸநாயக்காவையும் (பின்னொரு நாளில் சிங்களத்தின் தலைநகரான கொழும்பில் வைத்து 24/10/1994 அன்று இந்த கொடூரன் பெண் மறைமுக கரும்புலியால் அழிக்கப்ப ட்டான் ) தெரிந்திருக்கும்.
 
யாழ்ப்பாண நூலகம் எரிந்ததை தாங்கொண்ணா அதிர்ச்சியில் சர் டேவிட், கொழும்புத்துறையிலிருந்த அவரது செமின்றியில் மாரடைப்பு வந்து இறந்து போனார்.
 
யாழ்ப்பாண நூலகத்தில் இருந்த அரிய புத்தகங்கள் :
ஆசியக் கண்டத்திலேயே தலைசிறந்த நூலகங்களில் ஒன்றாக யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.
 
நூலகத்தில் இருந்த அரிய புத்தகங்கள் :
1.1660ல் றொபெர்ட் க்னொக்ச் எழுதிய History of Ceylon,
2.ஆனந்த கே.குமாரசாமி நூல் தொகுதியில்உள்ள 700 நூல்கள்
3.சி.வன்னியசிங்கம் நூல் தொகுதி (100 நூல்கள்)
4.ஐசக் தம்பையா நூல் தொகுதி (சமயம்,தத்துவம் பற்றிய நூல்கள் 250)
5.கதிரவேற்பிள்ளை நூல் தொகுதி (600 நூல்கள்)
6.ஆறுமுக நாவலர் நூல் தொகுதி
7.பைபிள் - முதன்முதலாக தமிழில் எழுதப்பட்ட கையெழுத்துப் படி
8.சமயங்கள் பற்றிய கலைக்களஞ்சியம்
9.பிரிட்டானியா கலைக்களஞ்சியம்
10.அமெரிக்க கலைக்களஞ்சியம்
11.கொல்லியர்ஸ் கலைக்களஞ்சியம்
12.மாக்மில்லன் கலைக்களஞ்சியம்
13.தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர் பெருமக்கள் எழுதிய அரிய நூல்கள்
14.யாழ்ப்பாண வரலாற்று நூலான முதலியார் ராஜநாயகத்தின் பண்டைய யாழ்ப்பாணம்,
15.தமிழில் முதல் முதலாக வெளிவந்த இலக்கிய கலைக்களஞ்சியமான முத்துத்தம்பிப்பிள்ளையின் அபிதான கோசம்,
16.அதன் பின் வந்த சிங்காரவேலு முதலியாரால் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியமான அபிதான சிந்தாமணி,
17சித்த வைத்தியம் சம்பந்தமான பனையோலையில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள் என்பன இருந்தன.
18.அங்கிருந்த ஓலைச்சுவடிகளில் தமிழினத்தின் கலை கலாச்சாரம், நாகரீகம், பண்பாடு, பண்டைய ஈழத்தை ஆண்ட தமிழரசர்களின் வரலாறு என்பன எழுதப்பட்டிருந்தன.
19.மேலும் சீர் வளர் சீர் ஆறுமுகநாவலர் அவர்களால் அங்கிருந்த ஓலைசுவடிகளின் மூலம்தான் சைவத்தையும் தமிழையும் வளர்த்தெடுத்தார்.
20.மிக முக்கியமாக சீர் வளர் சீர் ஆறுமுகநாவலர் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தற்கால தமிழில் எழுதப்பட்ட பல ஓலைசுவடிகள் அவற்றுள் அடங்கும்.
21.பண்டைய புவியியல் நிலவரைகள்(geo. maps)
22.பண்டைய நிலவரை நூல்கள்(map books)
23 அது மட்டுமா எமது அரசர்கள் ஈழதேசத்திற்காய் கட்டுவித்த குளங்கள், மேற்கொண்ட நீர்ப் பாசன முறைகள், வழங்கிய வயல் நிலங்ககள் , கோவில்களுக்கு ஆற்றிய பணிளின் ஆவணங்கள் என்பன அங்கிருந்தன
 
May be an image of outdoors
மீள் கட்டமைப்பு :
எரிந்த நூலகத்தை மீண்டும் உடனடியாக கட்டியெழுப்பி, தமிழர்களின் கல்வியை நாசமாக்கும் இனவாதிகளின் எண்ணத்தை நிறைவேற்றக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அன்றைய யாழ்ப்பாண மேயரான ராஜா விஸ்வநாதனும் மாநகர சபை ஆணையாளர் CVK சிவஞானமும் களமிறங்கினார்கள். அவர்களோடு ஒட்டு மொத்த தமிழினமும் அணிதிரள கட்டிட கலைஞர் VS துரைராஜா, எரிந்த நூலக கட்டிடத்தை அதே போல் மீண்டும் கட்ட, கட்டிட வரைபுகளை வரைய முன்வந்தார். யாழ்ப்பாண நூலகத்தை மீளக் கட்டுவதில் முன்னின்று உழைத்த இன்னுமொருவர் அன்றைய stpetric கல்லூரியின் றெcடொர்ம், 2009ல் வட்டுவாகலில் போராளிகளோடு இணைந்து இராணுவத்திடம் சரணடைந்தது காணாமல் போகடிக்கப்பட்டவருமான, சர் பிரான்ஸிஸ் சேவியர்.
 
முடிவுரை :
எம்மினத்தின் விடுதலைப் போருக்கும் இதுவே பெரும் வித்தாகியது. எந்த நோக்கத்திற்காக எதிரி நூலகத்தை எரித்தானோ, அந்த நோக்கத்தை எதிரியை அடைய வைத்து விட்டது. அதே நேரம், அந்தக் காலத்தில் தமிழர்கள் கல்வியில் அடைந்திருந்த உச்சத்தின் வெளிப்பாடாய் திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகத்தை மீண்டும் கட்டியெழுப்பியது போல், தமிழினம் மீண்டும் கல்வியில் முன்னணிக்கு வரவேண்டும்.
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள காடைகள் என்று சொல்ல வேண்டியதில்லை.

அவர்கள் அணைவருமே, சிங்கள போலீஸ் காடையர்கள்....

ஆடாத ஆட்டமெல்லாம் போட்ட சிங்களம், இன்று தமிழன் தமிழக்கத்தில் இருந்து அனுப்பும் பிச்சை தனக்கும் வேண்டும் என்று கெஞ்சுகிறது.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.