Jump to content

இந்திய இராணுவத்திடம் இருந்து நூல்களைக் காப்பாற்றிய நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (30.04.1940- 27.04.2022)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவத்திடம் இருந்து நூல்களைக் காப்பாற்றிய நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (30.04.1940- 27.04.2022)

இந்திய இராணுவத்திடம் இருந்து நூல்களைக் காப்பாற்றிய நூலகர் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் (30.04.1940- 27.04.2022) 

— என்.செல்வராஜா, நூலியலாளர், லண்டன் — 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தை வளர்த்தெடுத்த நூலகர்களின் வரிசையில் ஆர்.எஸ். தம்பையா, சிற்றம்பலம் முருகவேள், வரிசையில் திருமதி ரோகிணி பரராஜசிங்கம் மூன்றாமவராவார். யாழ்ப்பாணத்தில், ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிவந்த வேளையில், திருமதி ரோ.பரராஜசிங்கம் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வேளையில் அவர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகப் பணியாற்றிவந்தார். நூலகவியல் சஞ்சிகையை நான் வெளியிட்டு வந்த வேளையில் அதன் ஆசிரியர் குழுவில் திரு சி.முருகவேள் அவர்களுடன் திருமதி பரராஜசிங்கமும் இடம்பெற்றிருந்தார்.  

யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த திருமதி ரோகிணி பரராஜசிங்கம் 30.04.1940இல் பிறந்தவர். இரண்டு பெண் பிள்ளைகளுக்குத் தாயான இவர் சிறுவயது முதலே வாசிப்பில் ஆர்வம் மிக்கவர். தன் இளமைக் காலத்தில் பென்குவின் பதிப்புகளைத் தேடித் திரிந்து வாசித்து மகிழ்ந்தவர். அவரது நூல்களின் மீதான ஆர்வமே விலங்கியல் பட்டதாரியான அவரது வாழ்வின் திசையை நூல்களையும் நூலகங்களையும் நோக்கித் திருப்பியுள்ளது.  

திருமதி ரோ.பரராஜசிங்கம் 1961இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில், தனது B.Sc. சிறப்புப் பட்டத்தை விலங்கியல்துறையில் பெற்றுக்கொண்டவர். தமிழகத்திலிருந்து இலங்கைக்குத் திரும்பிய பின்னர் சிறிது காலம் கார்கில்ஸ் நிறுவனத்தின் புத்தக விற்பனைப் பிரிவின் (Cargill’s Book Centre) பொறுப்பாளராகப் பணியாற்றி வந்தார்.  

தனது பட்ட மேற்படிப்பு டிப்ளோமாவை (Post Graduate Diploma) நூலகவியல் துறையில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில்1964-1965 காலகட்டத்தில் பெற்றுக்கொண்டார். இக்காலகட்டத்தில் இலங்கையின் புகழ்பெற்ற நூலக அறிஞர்களான சி.முருகவேள், எச்.ஏ.ஐ. குணத்திலக்க, திரு. சோமதாச, கலாநிதி போல் குரூஸ் ஆகியோர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இவரது வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். இவர்களின் சிறப்பான வழிகாட்டலின்கீழ் திருமதி ரோ.பரராஜசிங்கம், சிறந்ததொரு நூலக ஆளுமையாக செதுக்கப்பட்டார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 02.03.1978இல் இணைந்து, உதவி நூலகராக அங்கு சேவையாற்றத் தொடங்கினார். சிக்கலான போர்க் காலப்பகுதியில், குறிப்பாக 1983 இனக்கலவரக் காலத்திலும், அதன் பின்னர் இந்திய இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த 1987-1990 காலகட்டத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தை சிறப்புற நிர்வகித்து வந்தவர் இவர்.  

IMG-20220522-WA0001.jpg?resize=360%2C480 புகைப்படம்: துஸ்யந்தினி கனகசபாபதிபிள்ளை அவர்களால் எழுதப்பட்ட கட்டுரையில் இருந்து

தனது MLIS நூலக உயர்கல்விப் பட்டத்தினை சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 1983இல் சிறப்புச் சித்திகளுடன் பெற்றுக்கொண்டவர். இப்பட்டத் தேர்ச்சியின் பயனாக சிரேஷ்ட உதவி நூலகராகப் பதவி உயர்வினை 1983இல் பெற்றுக்கொண்டவர்.  

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகமும் இராணுவத்தால் முற்றுகையிடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு இராணுவ முகாமாகவே அது மாறிவிட்டிருந்தது. அவ்வேளையில் பல்கலைக்கழக நூலகத்தின் சேர்க்கைகளை சமயோசிதமாக பாதுகாத்த பெருமை இவருக்கு உரியதாகும். இக்காலகட்டத்தில் பிரதம நூலகர் திரு. சி.முருகவேள் அவர்கள் ஒராண்டு கல்விசார் விடுப்பில் (Sebatical Leave) சென்றிருந்தார். பல்கலைக்கழக நூலகத்தின் தலைமைப் பொறுப்பினை திருமதி பரராஜசிங்கம் அவர்களே ஏற்று நடத்தவேண்டிய சூழல் அன்று இருந்தது. அவ்வேளையில் திருமதி பரராஜசிங்கம் அவர்கள் குடும்பத்தினருடன்,திருநெல்வேலியில் இடம்பெயர்ந்து வாழ்ந்திருந்தார். உள்ளக இடப்பெயர்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுள் இவருடைய குடும்பமும் ஒன்று.  

இந்திய இராணுவம் பல்கலைக்கழகத்தை ஆக்கிரமித்திருந்த ஒருநாள் இரவு அவரது உதவி நூலகர் ஒருவரிடமிருந்து அவசர அழைப்பு வந்திருந்தது. அவரின் கூற்றுப்படி நூலகக் கட்டிடம் தாக்கப்பட்டிருந்தது. நூல்கள் சிதறுண்ட கிடக்கின்றன. அந்நியர்களால் நூல்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. மழைவேறு சிதறுண்டு கிடந்த நூல்களை நனைத்தழித்துக்கொண்டிருந்தது. அவற்றை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் அப்புறப்படுத்தாவிட்டால், பல்கலைக்கழக நூலகச் சேர்க்கைகள் அனைத்தும் அழிந்துவிடும். இந்நிலையில் துரிதமாகச் சிந்தித்து மிகமுக்கியமான முடிவொன்றினை உடனடியாக எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம்.  

மழையுடன் கூடிய காரிருள் சூழ்ந்திருந்த அவ்வேளையில் மின்சார வெளிச்சம் தடைப்பட்டிருந்த நிலையில் கூப்பிட்ட குரலுக்கு வரக்கூடியதாகவிருந்த ஒரு சில நூலக உதவியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்று இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாகிக் கைவிடப்பட்டிருந்த நூலகப் பகுதியைக் கண்டு திருமதி பரராஜசிங்கம் அதிர்ச்சியடைந்துள்ளார். அங்கே பல நூல்கள் இந்திய இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டு, தீவைத்துக் குளிர்காயவும் பயன்படுத்தப்பட்ட சான்றுகள் சாம்பல் மேடுகளாகக் காட்சியளித்தன. மேலும் பல நூல்கள் சேர்த்தடுக்கப்பட்டு இராணுவத்தினருக்கான இருக்கைகளாகவும், படுக்கைகளாகவும் உருமாற்றப்பட்டிருந்தன. புள்ளிவிபரவியல் பகுதியில் காணப்பட்ட நூல்தட்டுக்கள் வெறிச்சோடியிருந்தன. அவர் முன்னிருந்த ஒரே தீர்வு எஞ்சிய நூல்களையாவது பாதுகாப்பாக மீட்டெடுத்து லொறியொன்றில் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்துவதேயாகும். 

அயலவர்களாலும் இந்திய இராணுவத்தினராலும் சூறையாடப்பட்டவை போக தப்பிப் பிழைத்த நூல்களையும், மழையில் நனைந்து கொண்டிருந்த நூல்களையும் அவசர அவசரமாக சேர்த்து எடுத்து லொறிகளில் ஏற்றி, தன்னிடமிருந்த சில்க் சேலைகளினால் அவற்றை மழையிலிருந்து ஒரளவு பாதுகாத்து, அவற்றை சாவகச்சேரியிலுள்ள ஒரு பாடசாலை மண்டபத்துக்குக் கொண்டுசென்று சேர்த்திருக்கிறார். அதற்கான முழுச்செலவினையும் அப்பொழுது 44 வயதேயான அவர், தானே பொறுப்பேற்று  இந்த அவசரகாலப் பணியை ஆற்றியிருக்கிறார். 

ஆரம்பத்தில் நூல்களை அனுமதியின்றி அப்புறப்படுத்திய இவரது அருஞ்செயலை பல்கலைக்கழக நிர்வாகம் முதலில் கண்டித்தபோதிலும், பின்னாளில் அவரால் பாதுகாத்து வழங்கப்பட்ட 35000 நூல்களையிட்டு அவருக்கு அதே நிர்வாகம் பாராட்டுக் கடிதமொன்றினையும் வழங்கியிருந்தது. அங்கே இழக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நூல்களையும் பின்னாளில் திட்டமிட்டுக் கட்டியெழுப்ப அவர் மிகுந்த பிரயாசையுடன் செயற்பட வேண்டியிருந்தது.  

திருமதி பரராஜசிங்கம் அவர்கள்,துஷ்யந்தி கனகசபாபதிப்பிள்ளை என்பவருக்கு வழங்கிய நேர்காணலொன்றில் தனது உணர்வுகளை விரிவாகப் பதிவுசெய்திருக்கிறார். அந்த நேர்காணலில் பல்கலைக்கழக நூலக அழிப்புப் பற்றித் தான் கொழும்பிலிருந்த இந்திய உயர் ஸ்தானிகருக்கு ஒரு காரசாரமான கடிதத்தை எழுதியிருந்ததாகவும், அதில் இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் சேர்க்கைகளுக்கும் கட்டிடத்திற்கும், தளபாடங்களுக்கும் ஏற்படுத்தியிருந்த மீளப்பெறமுடியாத சேதத்தை, கலாச்சாரப் படுகொலையை விலாவாரியாகக் குறிப்பிட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.  

இந்திய இராணுவம் ஏற்படுத்திய சேதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவ்வேளையில் இருப்பிலிருந்த 64000 நூல்களில் 35000 நூல்களையே மீட்டெடுக்க முடிந்ததாகத் தெரிவித்திருந்தார். யாழ்ப்பாணப் பொது நுலகம் 97000 நூல்களுடன் எரியுண்டபோது இழந்த நூல்களைப் பற்றிப் பேசுமளவிற்கு எவரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூல்களின் இழப்புப் பற்றிப் பேசுவதில்லை என்பது அவதானிக்கத்தக்கது. பல்கலைக்கழகத்தின் நூலகப் பிரிவில் மாத்திரமல்ல, சில கல்வித்துறைகளுக்கான பீடங்களின் அலுவலகங்களில் இந்திய இராணுவத்தினர் தங்கியிருந்த வேளை தமக்கு இடைஞ்சலாகவிருந்த சொத்துக்களையும் அப்புறப்படுத்தியிருந்தார்கள். அவற்றில் குறிப்பாக, பல்கலைக்கழக மாணவர்களின் ஆய்வேடுகளின் பிரதிகளை பல்கலைக்கழக தண்ணீர்த் தாங்கியின் அருகே குப்பைமேடாகக் குவித்து வைத்திருந்த அவலத்தையும் அவ்வேளையில் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்த ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தில் வாழ்ந்திருந்த என்னால் கண் கூடாகப் பார்க்கவும் கண்ணீர் வடிக்கவுமே முடிந்திருந்தது. வரலாற்றுத்துறைப் பிரிவினரால் பாதுகாக்கப்பட்டு வந்த தொல்பொருட்கள் சிதறியடிக்கப்பட்டிருந்தன. அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த 5000 ஆண்டுப் பழமையானஆனைக்கோட்டை அகழ்வாராய்ச்சிப் பொருட்களுக்கும், குறிப்பாக அங்கு பேணி வைத்திருந்த முதுமக்கள் தாழிக்கும் என்ன நடந்திருக்கும் என்று கற்பனைகூட செய்திருக்க என்னால் முடியவில்லை. முப்பதாண்டுகள் கழிந்த நிலையிலும் எமது தலைமுறையினரின் மனத்திரையை விட்டு அகலாத வடுக்கள் இவை. 

படிப்படியாகத் தன் பதவியுயர்வுகளைப் பெற்று 16 ஆண்டுகள் உதவி நூலகராகச் சேவையாற்றிய பின்னர் அப்போது பிரதம நூலகராகவிருந்த திரு. சி. முருகவேள் அவர்கள் 1994இல் ஓய்வுபெற்றவேளையில் திருமதி பரராஜசிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் நூலகராகப் பதவியேற்றிருந்தார். பின்னர் 01.03.1995இல் பிரதம நூலகராகப் பணியில் தொடர்ந்தார். இவரது பொறுப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் இருந்த வேளையில்தான் மீண்டும் ஒரு பாரிய சிக்கல் ஏற்பட்டது. வரலாற்று முக்கியத்துவமான 1995 வலிகாமம் பாரிய இடப்பெயர்வு அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் பின்னர் இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் பொறுப்பெற்ற பின்னர் காணப்பட்ட அந்த இறுக்கமான நிர்வாகக் கட்டமைப்பிற்குள்ளும் பாரிய போக்குவரத்துச் சங்கடங்களுக்குள்ளும், பல்கலைக்கழக நூலகத்தை மீளவும் ஒழுங்கமைத்து வழிநடத்தவேண்டியிருந்தது.  

இவரது நூலக பணிகளில் அவரது கணவர் பரராஜசிங்கம் அவர்கள் பின்னணியில் நின்று பலவிதங்களிலும் உதவி புரிந்து வந்துள்ளார். ஆங்கிலத்தில் மிகவும் திறமையாக எழுத்தாற்றலை கொண்டிருந்த இவரது கணவர் பல சந்தர்ப்பங்களில் சட்ட நுணுக்கமான கடிதங்களை எழுதி இவரது பணிக்கு உதவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 27 ஆண்டு இடையறாத நூலகப் பணியினை மேற்கொண்டுவந்த திருமதி ரோகிணி பரராஜசிங்கம் 30.09.2005இல் பல்கலைக்கழக நூலகர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்.  

பல்கலைக்கழக புத்திஜீவிகளுக்கு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும்ஒரு வருட கல்விசார் விடுமுறைகளையும் இரண்டு தடவைகள் பெற்றக்கொள்ளாமல் நூலகத்தை வளர்த்தெடுப்பதிலேயே செயற்பட்டிருந்தவர் திருமதி பரராஜசிங்கம். தொடர்ந்து 27 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்துறைக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றியிருக்கின்றார்.ஒரு தடவை இவர் 3 மாத விடுமுறையை மாத்திரம் பெற்றுக்கொண்டு பல்வேறு சர்வதேச நூலகங்களுக்கும் விஜயம்செய்து, தான் அவதானித்து வந்திருந்த நூலக நிர்வாக, வடிவமைப்புச் சிந்தனைகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் செயற்பாட்டில் அறிமுகம்செய்ய முன்வந்திருந்தார்.  

அவ்வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலக சேர்க்கைகளை கணனிமயப்படுத்தும் Library Automation நடவடிக்கைக்கு 2003 முதலே பெரும் பங்காற்றியிருக்கின்றார்.  

நூலகவியல் கல்வியை தமிழ் மாணவர்களுக்கு வழங்கும் பணியில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே நூலகவியல்துறைக்கான பட்டப்பின் கல்வி டிப்ளோமா துறையை (DIPLIS) இலங்கை நுலகச் சங்கத்தின் உதவியுடன் 2002/2003 காலகட்டத்தில் மீளுருவாக்கம் செய்வதில் முன்நின்று உழைத்தவர் இவர்.  

பல்கலைக்கழகத் தேவைகளுக்கான ஆராய்ச்சித்துறையில் இவர் ஈடுபாடு காட்டிவந்ததன் பயனாக, லேசர் தொழில்நுட்பத்துறைக்கான சுட்டி மற்றும் சாராம்ச சேவைகள் பற்றிய வழிகாட்டிகளையும் (Major Indexing and Abstracting Services in the field of Laser Technology), நூலக விஞ்ஞான,தகவல் தொழில்நுட்பக் கல்விக்கான குறிப்புரையுடனான வழிகாட்டியொன்றினையும், பட்டியலாக்கம், பகுப்பாக்கம், சுட்டிகள், மற்றும் நூலக முகாமைத்துவம் சார்ந்த பல ஆய்வுக் கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கின்றார்.  

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம், இலங்கை நூலகச் சங்கம் ஆகியவற்றின் ஆயுட்கால உறுப்பினராகவிருந்து இந்த அமைப்புகளின் வளர்ச்சிக்கும் தனது கடின உழைப்பினை இவர் வழங்கியிருக்கிறார்.  

2005இற்குப் பின்னரான தனது ஒய்வுக்காலத்திலும்கூட, நூலகவியல்துறையைத் தேர்வுசெய்திருந்த தமிழ் மாணவர்களுக்கு உதவும் வகையில் தான் முன்னர் வழங்கிவந்த விரிவுரைச் சேவையினைத் தொடர்ந்தும் வழங்கிவந்திருந்தார். அவ்வகையில், ஸ்ரீலங்கா நூலகச் சங்கம் வழங்கி வந்த நூலகவியல், தகவல் விஞ்ஞானக் கல்வி மாணவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வழங்கிவந்த நுலகவியல்துறைக்கான பட்டப் பின்படிப்பு டிப்ளோமா கல்விகற்கும் மாணவர்களும், யாழ்ப்பாண தேசிய கல்வியியற் கல்லூரி வழங்கிவந்த நூலகக் கல்வி கற்கும் மாணவர்களும் பயனடைந்துள்ளனர். உரும்பிராயில் இருந்தபோது பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு கல்வியறிவை ஊட்டியதோடு அவர்களது தடையுறாத கல்விக்காக பண உதவியும் செய்து வந்தார். இயல்பாகவே மிகவும் இரக்க குணம் படைத்தவரான இவர் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னாலான உதவிகள் செய்து வந்தார் என்பதை இவருடன் நெருங்கிப் பழகிவந்த சக நூலக ஊழியர்கள் நினைவுகூர்ந்துள்ளனர். 

பின்னாளில் பருத்தித்துறையில் தனது இளைய மகளோடு அமைதியாகத் தனது ஓய்வினை அனுபவித்து வந்த திருமதி ரோகிணி பரராஜசிங்கம் அவர்கள், 27.04.2022 அன்று இயற்கையெய்தினார். திருமதி பரராஜசிங்கம் ஈழத்துத் தமிழ் நூலகர்களின் வரிசையில் குறிப்பிடத்தகுந்தவராக வரலாற்றில் பதிவுசெய்யப்படுவார். அவரது ஆத்மா சாந்தியடைவதாகுக.  
 

 

https://arangamnews.com/?p=7739

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.