Jump to content

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகினர்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாப பலி

அமெரிக்கா: தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாப பலி

உவால்டே, 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் உள்ள பள்ளியில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை கொடூரமாக, புரியாத வகையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். 

மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், அவன் 14 மாணவர்களையும் 1 ஆசிரியரையும் சுட்டுக் கொன்றார் என்றும் அதிகாரிகள் நடத்திய பதில் தாக்குதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைத் தவிர எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டெக்சாஸ் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

https://www.dailythanthi.com/News/World/texas-governor-15-killed-in-school-shooting-gunman-dead-707491

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னதொரு உலகம்? எல்லோர் கையிலும் உயிராபத்து ஆயுதங்கள் கிடைக்கும் என்றால் யார் தான் நிம்மதியாக வாழமுடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

18+Teacher+Grandma+Gunman

Freedom and democracy=America ? 

😭

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு :14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழப்பு

ஆரம்பப் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு :14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழப்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதுடைய ஒருவரால் குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று அம்மாநில ஆளுநர் கிரெக் அபோட் தெரிவித்துள்ளார்.

13 குழந்தைகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இருப்பினும் செல்லும் வழியிலேயே 2 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

பல தசாப்தங்களாக அமெரிக்கா முழுவதும் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் 19,350 பேர் உயிரிழந்துள்ளதோடு இந்த ஆண்டு இதுவரை 212 பாரிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

https://athavannews.com/2022/1283677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கக பாடசாலையில் துப்பாக்கிச் சூடு : 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் பலி

US school shooting: 18 children killed in attack, suspect identified |  Stuff.co.nz

அமெரிக்ககாவில் ஆரம்பப் பாடசாலையொன்றில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 18 சிறுவர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

School shooting in Texas leaves 18 dead children and 3 adults, per reports  | Marca

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில், மெக்ஸிக்கோ எல்லை அருகேயுள்ள உவால்டே நகரிலுள்ள ரொப் ஆரம்பப் பாடசாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவர்கள்  7 முதல் 10 வயதுக்குட்பட்டவர்கள் அவர்.

18 வயதான இளைஞன் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர் 18 வயதான சல்வடோர் ரமோஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக டெக்ஸாஸ் ஆளுநர் கிறேக் அபோட் தெரிவித்துள்ளார்.

தாக்குதலாளியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/128135

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெக்சாஸ் துப்பாக்கி சூடு: 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

25 மே 2022, 03:16 GMT
புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்
 

டெக்சாஸ் துப்பாக்கி சூடு

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

டெக்சாஸ் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடந்தது என்ன?

என்ன நடந்தது

அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை 11:32 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு தொடங்கியது, மேலும் தாக்குதல் நடத்தியவர் "இந்த சம்பவதின் போது தனியாகச் செயல்பட்டார்" என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

 

இதுவரை 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

 

டெக்சாஸ் துப்பாக்கி சூடு:

பட மூலாதாரம்,REUTERS

 

படக்குறிப்பு,

டெக்சாஸ் துப்பாக்கி சூடு

இந்த சம்பவத்தில், 19 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் ஈவா மிரெலெஸ் என்று அமெரிக்க ஊடகங்களில் தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு கல்லூரியில் ஒரு மகள் இருப்பதாகவும், ஓட்டம் மற்றும் நடைபயணத்தை அவர் விரும்புவதாகவும் கல்வி மாவட்ட இணையதளம் தெரிவிக்கிறது.

அதேசமயம், உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என காவல்துறையைக் குறிப்பிட்டு அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த சம்பவம் நடைபெற்றபோது, அமெரிக்க எல்லைக் கண்காணிப்புப் படையைச் சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர் சற்று தொலைவில் இருந்துள்ளார். அவர்தான், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை, விரைந்து சென்று சுட்டுள்ளார் என்று 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி முகமை தெரிவிக்கிறது.

சிபிஎஸ் செய்தியின்படி, துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், பாதுகாப்புக்கவச உடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே 18ஆம் தேதி, நியூயார்க் பஃபல்லோ பகுதியில் ஒரு மளிகைக்கடையில் துப்பாக்கிச் சூடு நடந்தபோதும், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சொல்லப்பட்ட சந்தேக நபர், கைத்துப்பாக்கியுடன் பாதுகாப்பு உடை அணிந்திருந்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இது தொடர்பாக, வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையில் இருந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , இந்தக் குழந்தைகளுக்காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையிலிருந்து உரையாற்றிய அவர், "ஏதுமறியாத அழகிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு போர்க்களத்தைப் போல, தன் நண்பர்கள் கொல்லப்பட்ட காட்சியையும் குழந்தைகள் நேரில் பார்த்துள்ளனர்.

இனி காலம் முழுக்க இதே நினைவுகளுடன் இந்தக் குழந்தைகள் வாழ வேண்டியிருக்கும்" என்று பேசினார்.

 

அமெரிக்க அதிபர் ஜோ பிடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அமெரிக்க அதிபர் ஜோ பிடன்

சம்பவம் குறித்து இப்படி பேசிய ஜோ பைடனிடம், இதற்கு பிறகு டெக்சாஸ் செல்வீர்களா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/global-61574826

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை உலுக்கிவரும் துப்பாக்கிக் கலாச்சாரத்தின் பின்னால் இருக்கும் பலம்பொருந்திய அமைப்பு - என் ஆர் ஏ !

National Rifle Association - Wikipedia

அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாசாரத்திற்கு அடித்தளமாக இருப்பது நஷனல் ரைபிள் அசோஸியேஷன் எனப்படும் ஒரு தனியார் அமைப்புத்தான். இன்றுவரை அமெரிக்காவின் துப்பாக்கிப் பாவனை தொடர்பான சட்டங்களை அரசுகள் இறுக்கமுடியாமல் இருப்பதற்கான காரணம் இந்தப் பலமான அமைப்பு அமெரிக்க செனட்டர்கள் மீது செலுத்தும் செல்வாக்குத்தான். 

வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றுவரும் கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலாளிகளின் கைகளுக்கு இலகுவாகத் துப்பாக்கிகள் கிடைக்கப்பெறுவதை ஏதுவாக்கியிருக்கும் தற்போதைய சட்டங்களை அரசுகள் மாற்றுவதை இந்த அமைப்புக் கடுமையாக எதிர்த்துவருவதுடன், இதற்காக பெருமளவு பணத்தினையும் வருடந்தோறும் செலவிட்டு வருகிறது.

அமெரிக்க சிவில் யுத்தத்தில் ஈடுபட்ட போர்வீரர்களால் 1871 இல் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு சாதாரண மக்களையும் விஞ்ஞான அடிப்படையிலான பொழுதுபோக்கு துப்பாக்கிச் சுடும் நிலையினை உருவாக்குவதற்காகவே இதனை உருவாக்கியதாக கூறப்படுகிறது. 

ஆனால், இந்த அமைப்பு அரசியல் ரீதியாக இயங்கத் தொடங்கியது 1934 இன் பின்னர்தான். தனது அமைப்பின் அங்கத்தவர்களுக்கு துப்பாக்கிகள் தொடர்பான சட்டாங்களை விளங்கப்படுத்துதல், புதிய துப்பாக்கிகள் பற்றிய தரவுகளை தபால் மூலம் அனுப்பிவைக்கத் தொடங்கியதிலிருந்து இவ்வமைப்பின் அரசியல் பிரவேசம் உருவானது. 

1934 மற்றும் 1968 ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட தேசிய துப்பாக்கிகள் சாசனம் மற்றும் துப்பாக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்துதல் சட்டம் ஆகியவற்றிற்கு இவ்வமைப்பு தனது ஆதரவினை வழங்கியிருந்தது.  அதன் பின்னர், 1970 களில் அமெரிக்காவின் துப்பாக்கிப் பாவனையினைக் கட்டுப்படுத்தும் சட்டம் தொடர்பாக இவ்வமைப்பு கடுமையான அரசியலைச் செய்யத் தொடங்கியது. 

நேரடியான ஆயுத உற்பத்தியில் இந்த அமைப்பு ஈடுபடாவிட்டாலும்கூட, அமெரிக்காவின் பல முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தமது லாபத்திற்காக இந்த அமைப்பிற்கு பல மில்லியன் டொலர்களை வருடாந்தம் கொடுத்து வருகின்றனர். அத்துடன், பல ஆயுத உற்பத்தியாளர்களும் இந்த அமைப்பில் முக்கிய அங்கத்துவப் பொறுப்புக்களில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், எந்த ஒரு நபரும் அங்கத்துவப் பணமாக ஒரு மில்லியன் டொலர்களை செலுத்துவதன் மூலம் இவ்வமைப்பில் இணைய முடியும் என்பதுடன், இவ்வமைப்பின் தீர்மானங்களில் செல்வாக்குச் செலுத்தும் தகமையினையும் பெற்றுக்கொள்கின்றார்.

அந்தவகையில், பல ஆயுத உற்பத்தியாளர்களின் பணபலத்துடனும், ஆதரவுடனும் இயங்கிவரும் இந்த அமைப்பு 1975 இலிருந்து அமெரிக்க துப்பாக்கிச் சட்டத்தினை தனக்கேற்ற வகையில் அமைப்பதற்கு தேவையான ஒரு பலமான பரப்புரை பிரிவொன்றினை உருவாக்கியது. 1977 இல், இந்த பரப்புரை பிரிவின் ஊடாக அமெரிக்க சட்டவாளர்கள் பலரை விலைக்கு வாங்கியதுடன், அவர்கள் மூலம் தற்போது அமுலில் இருக்கும் சட்டம் திருத்தப்பட்டுக் கடுமையாக்கப்படுவதை எதிர்த்து வருகிறது. 

US gun control: What is the NRA and why is it so powerful? - BBC News

இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் வெயின் லாப்பியெர் தற்போதிருக்கும் துப்பாக்கிச் சட்டத்தினை மிகவும் உறுதியுடன் ஆதரிப்பவர் என்பதுடன், இச்சட்டத்தினைக் கடுமையாக்க எடுக்கும் முயற்சிகளை மிகவும் மூர்க்கத்தனமாக தடுத்துவருபவர் என்று பலராலும் அறியப்பட்டவர். இவரின் தலைமையில் இந்த அமைப்பு அமெரிக்காவின் மிகவும் பலம் பொருந்திய, அரசியலில் மிகுந்த செல்வாக்குடைய தனி அமைப்பாக உருவாகியுள்ளதுடன் அமெரிக்கக் காங்கிரஸின் பல சட்டவாளர்களை விலைக்கும் வாங்கி வைத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. 

NRA lawsuit: Will NY AG Letitia James' past comments hurt her case?

ஆவணி 2020 இல், இவ்வமைப்பின் தலைவர்கள் பாரிய நிதிக்கையாடல்களில் ஈடுபட்டுள்ளார்கள், அமைப்பின் நிதியினை தமது சொந்த உல்லாசங்களுக்காகச் செலவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டி நியூயோக் மற்றும் வோஷிங்க்டன் பொலீஸாரினால் கொண்டுவரப்பட்ட வழக்கு இவ்வமைப்பின் அரசியல் பலத்தின் முன்னால் நின்றுபிடிக்கமுடியாமல் தோற்றுப்போனது. 

னஷனல் ரபிள் அசோஷியேஷன் அமைப்பின் வருடாந்தச் செலவீனம் சுமார் 250 மில்லியன் டாலர்களிலிருந்து 300 மில்லியன் டாலர்கள் வரை இருக்கிறது. இத்தொகையானது அமெரிக்காவெங்கும் இயங்கும் ஏனைய துப்பாக்கி பாவனை அமைப்புக்களின் மொத்த செலவீனத்தைக் காட்டிலும் மிக மிக அதிகமானது. ஏனைய அமைப்புக்களுடன் ஒப்பிடும்போது பெருமளவு அங்கத்துவர்களையும், துப்பாக்கிச் சூட்டு பயிற்சி மைதானங்களையும், பயிற்சி நிலைகளையும் இது கொண்டிருக்கிறது.

தற்போதிருக்கும் துப்பாக்கிப் பாவனைச் சட்டத்தைத் தொடர்ந்தும் பேணுவதற்காக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என்று சுமார் 3 முதல் 4 மில்லியன் டாலர்களை இந்த அமைப்பு வருடந்தோறும் செலவிட்டு வருகிறது. இதனைத் தவிரவும் தனது பரப்புரைகளுக்கென்றும், தனிப்பட்ட லஞ்சமாகவும் பெருமளவு பணம் இவ்வமைப்பினால் செலவிடப்பட்டுவருவதாகவும், இதனை இவ்வமைப்பு கணக்குகளில் சேர்ப்பதில்லையென்றும் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

NRA leader 'with backbone of chocolate éclair' given both barrels over  rotten reign | World | The Sunday Times

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினருக்கு மிகவும் நெருக்கமானதாகவும், தனது அங்கத்தவர்களைக் குடியரசுக் கட்சியில் களமிறக்கியிருக்கும் அமைப்பாகவும் இருக்கும் நஷனல் ரபிள் அசொஷியேஷன், இக்கட்சியின் உதவியுடன் ஜனநாயகக் கட்சி எடுக்க எத்தனிக்கும் அனைத்துவிதமான துப்பாக்கிச் சட்ட மாற்றங்களையும் தொடர்ச்சியாகத் தடுத்தே வந்திருக்கிறது. 

Power struggles and a 'personal piggy bank': what the NRA lawsuit alleges |  NRA | The Guardian

அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுவரும் தனது அங்கத்துவர்கள் மூலம் அமெரிக்காவின் துப்பாக்கிப் பானவனைச் சட்டங்களை நீட்டித்துவரும் இவ்வமைப்பு, ஏனைய கட்சி அங்கத்தவர்கள் மீதும் தனது உறுப்பினர்கள் மூலம் பாரிய நெருக்குதலையும் கொடுத்துவருவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜனநாயகக் கட்சிமீதும், குடியரசுக் கட்சியின் தமக்கெதிரான உறுப்பினர்கள் மீதும் மிகக் கடுமையான பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டிருக்கும் இந்த அமைப்பு, பல அரசியல்வாதிகளின் அரசியல் வாழ்க்கையினையும் முடிவிற்குக் கொண்டுவந்திருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. தேர்தல் காலங்களில் துப்பாக்கிப் பாவனைக்கு எதிரானவர்கள் என்று தான் அடையாளப்படுத்தும் வேட்பாளர்களை நோக்கிக் கடுமையான ஊடகப் பிரச்சாரத்தினை முடுக்கிவிட்டுவரும் இந்த அமைப்பு, தனக்குச் சார்பானவர்கள் என்று கருதப்படுபவர்கள் தெரிவுசெய்யப்படுவதற்கு பின்னாலிருந்து உழைத்துவருவதாகவும் நம்பப்படுகிறது.

I don't trust them any more': how the NRA became its own worst enemy | NRA  | The Guardian

2016 இல் ட்ரம்பின் வெற்றிக்குப் பின்னர் இவ்வமைப்பு அரசியலில் செலவிட்ட பணத்தின் அளவு குறைந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான இரண்டு காரணங்களை முன்வைக்கும் ஆய்வாளர்கள், முதலாவதாக தமக்குச் சார்பான ஜனாதிபதியொருவர் ஆட்சியிலிருப்பதால் இவ்வமைப்பு தனது செயற்பாடுகளை குறைத்துக்கொண்டிருக்கலாம் என்றும், இதே காலப்பகுதியில் அமெரிக்காவில் நடந்த பல படுகொலைகளையடுத்து இயல்பாகவே மக்களிடையே ஏற்பட்டுவரும் அதிருப்தியும், இதனால் பல அமைப்புக்கள் துப்பாக்கிக் கலாசாரத்திற்கு எதிரான நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு, அதற்கான பிரச்சாரத்திலும் அரசியல் நடவடிக்கைகளிலும் பாரிய பணத்தினைச் செலவிட்டத்தையடுத்து இவ்வமைப்பின் தனது செலவைக் குறைத்துக்கொண்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். 2018 இல் இவ்வமைப்பு தனது பிரச்சாரப் பரப்புரைகளுக்குச் செலவிட்ட பணத்தைக் காட்டிலும் மிக அதிகமான பணத்தினை துப்பாக்கிகளைத் தடைசெய்யவேண்டும் என்று கோரிக்கையினை முன்வைக்கும் அமைப்புக்கள் செலவிட்டதாகத் தெரிகிறது. 


இவ்வமைப்பின் அங்கத்துவர்கள் எண்ணிக்கை தொடர்பான தெளிவான தகவல்களை இவ்வமைப்புப் பகிரங்கப்படுத்துவதில்லை. 2012 ஆம் ஆணு சாண்டி ஹோக் பாடசாலை தாக்குதலின்பின்னர் இவ்வமைப்பின் செயற்பாடுகள், அங்கத்தவர்கள் குறித்த கேள்விகள் எழும்பியபோது, தமது அமைப்பில் சுமார் 5 மில்லியன் அங்கத்தவர்கள் இருப்பதாக அது தெரிவித்திருந்தது. ஆனால், சுயாதீன ஆய்வாளர்களின் கணிப்பின்படி சுமார் 3 மில்லியன் அங்கத்தவர்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. தனது அங்கத்துவர்களின் எண்ணிக்கையினைப் பெரிதாக்கிக் காட்டுவதன் மூலம் தனது செல்வாக்கினை மக்களிடையே அதிகரிக்க இந்த அமைப்பு முயல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

George H.W. Bush Quit the NRA With This Sternly Worded Letter

நஷனல் ரபிள் அச்சொஷியேஷன் அமைப்பின் அங்கத்தவர்களில் பல முன்னால் குடியரசுக் கட்சி ஜனாதிபதிகள் உள்ளங்கியவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுள் முன்னாள் ஜனாதிபது ஜோர்ஜ் புஷ்ஷும் ஒருவர்.

Who was Oklahoma City Bomber Timothy McVeigh? | Inside Editionஆனால், 1995 இல் இவ்வமைப்பின் ஆதரவாளர் ஒருவரினால் நடத்தப்பட்ட 
 ஓக்லகோமா அரச கட்டட குண்டுத் தாக்குதலின் பின்னர், விசாரணைகளில் ஈடுபட்ட அதிகாரிகளை "சப்பாத்து அணிந்த நாய்கள்" என்று இவ்வமைப்பின் தலைவர் விமர்சித்ததையடுத்து வேறு வழியின்றி புஷ் இவ்வமைப்பிலிருந்து வெளியேறியதாகத் தெரியவருகிறது. 

Did George H.W. Bush Resign from the NRA? | Snopes.com

தற்போதும் இவ்வமைப்பில் குடியரசுக் கட்சியின் முன்னாள் உப தலைவர் சாரா பாலின், நடிகர்கள் டொம் செல்லெக் மற்றும் வூப்பி கொல்ட்பேர்க் ஆகியோர் அங்கத்துவர்களாக இருக்கிறார்கள்.

Lupica: Sarah Palin's appearance at the National Rifle Association  convention is perfect for phony 'patriots' - New York Daily News சாள்ட்டன் ஹெஸ்ட்டர் எனும் முன்னால் நடிகர் 1998 இலிருந்து 2003 வரை இவ்வமைப்பின் தலைவராக இருந்திருக்கிறார்.

Zero Hour" Massacre at Columbine High (TV Episode 2004) - IMDb1999 இல் இடம்பெற்ற மிகக் கொடூரமான கொலம்பையின் கல்லூரித் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கிகளைத் தடைசெய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை விழித்து, தலைக்கு மேலே துப்பாக்கியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, "இத்துப்பாக்கியை அவர்கள் என்னிடமிருந்து பறிக்க நினைத்தால், உயிரற்ற, குளிரான எனது உடலிலிருந்துதான் எடுத்து செல்லவேண்டும்" என்று பகிரங்கமாகச் சவால் விட்டார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

Charlton Heston's “Cold Dead Hands” Speech Fired Up the NRA in 2000 – The  Hollywood Reporter

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வரை NRA அல்லது NSSF இந்த சம்பவங்களைப்பற்றி ஒன்றும் கூறுவதில்லை.. அதைவிட கவலையானது நாளை இவர்களது வருடாந்த கருத்தரங்கு இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து 300 மைல்களிற்கும் குறைவான தூரத்தில் இருக்கும் Houstonல் நடைபெற உள்ளது. Donald Trump உரையாற்ற உள்ளார்..

அதே போல Republican Texas ஆளுனரின் கூற்று இப்படி உள்ளது.. 

// Later, Abbott said that stricter gun laws aren't a "real solution."

"The ability of an 18-year-old to buy a long gun has been in place in the state of Texas for more than 60 years," he said, claiming that throughout those six decades, the state had "not had episodes like this." 

"The one thing that has substantially changed is the status of mental health in our communities," he added.  

இவர்களைப்பொறுத்தவரையில் ஒன்றுமே நடக்கவில்லை, வாழ்க்கையில் மரணம் சாதாரண ஒன்று என்ற ரீதியில் அமெரிக்க மக்கள் வாழவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.. 

அமெரிக்க மக்களின் இன்றைய உளவியல் சிக்கல்களை எல்லாவற்றிக்கும் காரணமாக காட்டுகிறார்கள்.. 

உளவியல் சிக்கல்கள் எவ்வாறாகவேனும் இருக்கலாம், ஆனால் இந்த gun cultureற்கான அடிப்படை காரணங்களை தீர்க்காமல், இந்த gun lobbyஅக்கு பயப்படாமல் மக்களும் அரசியல்வாதிகளும் முயன்றால்தான் இதை இல்லாதெழிக்கமுடியும்.. 

 

https://www.cbsnews.com/amp/news/texas-school-shooting-biden-second-amendment-is-not-absolute/#app

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2022 at 22:56, ரஞ்சித் said:

இவ்வமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் வெயின் லாப்பியெர் தற்போதிருக்கும் துப்பாக்கிச் சட்டத்தினை மிகவும் உறுதியுடன் ஆதரிப்பவர்

Wayne LaPierreதான் மீண்டும் NRAன் தலைவராக வந்துள்ளார். ஒரேயொரு ஒருவர் மாத்திரம்தான் இவர் மீண்டும் தலைவராக வருவதை ஆதரிக்கவில்லை(54-1). எனவே அரசினால் எந்த முடிவு எடுக்க முடியாது.. உலகத்திற்கு பொலீஸாக இருக்கும் அமெரிக்காவில் சொந்த மக்களிற்கு பாதுகாப்பு இல்லை. 

https://www.bloomberg.com/news/articles/2022-05-30/nra-board-re-elects-wayne-lapierre-54-1-despite-scandal

இந்த இணைப்பில் அமெரிக்காவில் நடந்த இது வரை நடந்த இந்த வன்முறைகளின் தொகுப்பு உள்ளது. வாசிக்க வாசிக்க கவலையாக இருந்தது..👇🏽

https://www.wsws.org/en/topics/socialIssuesCategory/mass-shooting

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Lindsey Graham நேற்று உக்ரெய்ன் அதிபரைச் சந்தித்துள்ளார். இவர் ட்றம்பின் ஆதரவாளரும் உக்ரெயினுக்கான அமெரிக்க உதவியை எதிர்த்தவரும் ஆவார். இச் சந்திப்பின் பின் குறைந்த வட்டியின் அடிப்படையில் தடைபட்டுள்ள 60 பில்லியன் டொலர் உதவியை உக்ரெயினுக்கு வழங்க இவரின் ஆதரவு கிடைக்கும் போல் உள்ளது. தேர்தலில் வெல்வதற்காகவே ஒரு நாளில் யுத்தத்தை நிறுத்துவேன் என்று சொல்லி வந்த ட்றம்ப் ரஸ்யாவை ஆதரிக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்திருப்பார்.
    • தமிழக அரசியல் எமக்கு  உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களைச் சீண்டத் தேவையில்லை.  👎🏿
    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    • ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும்   ஆனால் இது மிகவும் குறைவு   கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.