Jump to content

31க்கு பின்னர்... கட்டுநாயக்க உட்பட, அனைத்து விமான நிலையங்களும்... மூடப்படும் அபாயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர்... கட்டுநாயக்க உட்பட, அனைத்து விமான நிலையங்களும்... மூடப்படும் அபாயம்!

இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தெரியவருகின்றது.

எரிபொருள் பறக்குறையே இதற்கு காரணம் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்ற போதும் இதனை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மட்டுமே விமானங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தரையிறக்கப்பட்ட பல விமானங்கள்... எரிபொருள் நிரப்புவதற்காக, சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1283778

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை  நான் நல்ல  செய்தி  என்பேன்

ஆனால் இன்றைய சூழ்நிலையில் 

தாயகத்தமிழரை இச்சொல் ?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இதை  நான் நல்ல  செய்தி  என்பேன்

ஆனால் இன்றைய சூழ்நிலையில் 

தாயகத்தமிழரை இச்சொல் ?????

விசுகர், நல்லூர் திருவிழா வாற நேரம்.... விமானம் ஓடாமல் இருந்தால்,
வெளிநாட்டு பக்தர்களுக்கு, சிரமம் அல்லவா.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

விசுகர், நல்லூர் திருவிழா வாற நேரம்.... விமானம் ஓடாமல் இருந்தால்,
வெளிநாட்டு பக்தர்களுக்கு, சிரமம் அல்லவா.. 

 

தமிழருக்கொரு  தீர்வு வரும்வரை

அவர்களும்  போகக்கூடாது என்பது  தானே எனது  நிலைப்பாடு??

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

 

தமிழருக்கொரு  தீர்வு வரும்வரை

அவர்களும்  போகக்கூடாது என்பது  தானே எனது  நிலைப்பாடு??

 

நீங்கள் இப்படியே சொல்லிக்கொண்டிருக்கவேண்டியதுதான். கொரோனா முடக்கத்தில் செலவழிக்க முடியாத காசைத் தாயகம் போய் செலவழிக்க பயணச்சீட்டெல்லாம் எடுத்து வைத்துவிட்டு எப்போது விடுமுறையெனத் தயாராக இருக்கிறது சிறீமான் பொதுசனம். (இதில் அவசரதேவைகள் நோக்கிச் செல்வோரைச் சுட்டமுடியாது)இந்த ஏமாற்றத்தை  விடுத்து யாராவது முடிந்தவர் முடிந்ததை செய்யும் நிலை. யாரும் எங்கும் எதிலும் நன்மையோ தீமையோ கதைக்க முடியாத ஒரு குமுகாயப் பண்புநிலை தோற்றம் பெற்றுள்ளது.  விசுகரவர்களே "விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி" என்பதைத் தமிழினம் மறந்து பல ஆண்டாகிவிட்டது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nochchi said:

நீங்கள் இப்படியே சொல்லிக்கொண்டிருக்கவேண்டியதுதான். கொரோனா முடக்கத்தில் செலவழிக்க முடியாத காசைத் தாயகம் போய் செலவழிக்க பயணச்சீட்டெல்லாம் எடுத்து வைத்துவிட்டு எப்போது விடுமுறையெனத் தயாராக இருக்கிறது சிறீமான் பொதுசனம். (இதில் அவசரதேவைகள் நோக்கிச் செல்வோரைச் சுட்டமுடியாது)இந்த ஏமாற்றத்தை  விடுத்து யாராவது முடிந்தவர் முடிந்ததை செய்யும் நிலை. யாரும் எங்கும் எதிலும் நன்மையோ தீமையோ கதைக்க முடியாத ஒரு குமுகாயப் பண்புநிலை தோற்றம் பெற்றுள்ளது.  விசுகரவர்களே "விழிப்புத்தான் விடுதலைக்கு முதல் படி" என்பதைத் தமிழினம் மறந்து பல ஆண்டாகிவிட்டது.

 

நேற்று எனது  மைத்துணியின் 60வது பிறந்தநாளுக்கு ஒரு ஊரிலுள்ள 50 குடும்பத்தவர்களுக்கு 5 கிலோ  அரிசிப்படி கொடுத்திருந்தார்

இதைக்கூட செய்யாத  அதிகம் புலத்தவர்தான்

ஊரில் போய்  நின்று அந்த  மக்களுக்கு வலியைக்கொடுப்பவர்கள்?

  • Like 4
Link to comment
Share on other sites

போரின் பின் நல்லூர் திருவிழா காலம் என்பது யாழ்ப்பாணம் பொருளாதார ரீதியில் அதிகமாக முன்னேறும் ஒரு சிறு குறுகிய காலம். இது புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் ஒரே நேரத்தில் அங்கு போய் செலவழிப்பதால் நிகழ்வது.நல்லூர் திருவிழாக்காலத்திலும் அது முடிந்த பின் வரும் அடுத்தடுத்த வாரங்களிலும் ஊரில் இருக்கும் வேறு சிறு கோவில்களிலும் திருவிழாக்கள் நிகழும். 

கடந்த 2 வருடங்களாக கொரனாவால் இந்த வளர்ச்சி பாதிகப்பட்டு இருந்தது. இம் முறையும் பொருளாதார / எரிபொருள் பற்றாக்குறை, விமான நிலைய மூடல் போன்ற காரணங்களால் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வரவு மட்டுப்படுத்தப்படுமாயின், அதன் விளைவு வடக்கு மக்களை பாதிப்பதாகத்தான் அமையும். அதுவும் மிக மோசமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் இன்றைய நிலையில் பாதிப்பு இரட்டிப்பாகும்.

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

நேற்று எனது  மைத்துணியின் 60வது பிறந்தநாளுக்கு ஒரு ஊரிலுள்ள 50 குடும்பத்தவர்களுக்கு 5 கிலோ  அரிசிப்படி கொடுத்திருந்தார்

இதைக்கூட செய்யாத  அதிகம் புலத்தவர்தான்

ஊரில் போய்  நின்று அந்த  மக்களுக்கு வலியைக்கொடுப்பவர்கள்?

எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாகும் போல் உள்ளது யாழில் காரணம் 95க்கு பிறகு இயக்கம் அங்கில்லை 25 வருடங்களுக்கு மேல் வேறுவிதமான மக்களின் வாழ்க்கை முறை தற்போதைய உணவு தட்டுப்பாட்டை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை . சடுதியாக தாக்கப்போகும் உணவு நெருக்கடியை தாங்கும் வல்லமையை பெற ஆண்டவனை வேண்டுவதை தவிர வேறுவழியில்லை சும்மா அற்ப காரணம்களுக்கு தற்கொலை செய்யும் மனோ நிலையில் வேறு இருக்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு இருக்கு சாமான் விலை கூடிக்கொண்டு போகுது. குத்தரிசி 250ரூபா.

Link to comment
Share on other sites

என் சிங்கள நண்பர் நேற்று கொழும்பில் இருந்து 'கெதியன கனடாவுக்கு வர ஏதும் வழி இருக்கா" என்று மிக பவ்யமாக (அல்லது பம்மிக் கொண்டு என்றும் சொல்லலாம்) கேட்டார். ஏன் என்று கேட்டேன், "இனி இங்கு இருக் முடியாதாம்...எப்படியாவது எங்காவது ஓடி போக வேண்டுமாம்" என்றார். 

இன்னொன்றையும் சொன்னார்.

அனேகமான தமிழ் குடும்பங்களில் ஆராவது ஒருவராவது வெளி நாட்டில் உள்ளார்கள். அவர்கள் ஒரு நூறு டொலரை மாதம் அனுப்பி வைத்தாலே போதும், தமிழ் குடும்பம் ஒன்று ஓரளவாவது இந்த திடீர் விலை அதிகரிப்பை சமாளிக்க முடியும்... ஆனால் சிங்களவருக்கு அப்படி ஒன்றும் இல்லை. அடுத்த மாசம், கையில் உணவுப் பொருளை எடுத்துக் கொண்டு செல்லும் ஒருவரை அடித்து அந்த உணவை பறிக்கும் நிலைக்கு சிங்கள மக்கள் செல்லப் போகின்றனர் என்றார்.

ஆகவே அவர் சொன்னது போன்று ஒரு குடும்பத்துக்காகவது நாம் மாதம் ஒரு 100 டொலரை மேலதிகமாக அனுப்பி வைப்போம்.

இந்த பொருளாதார சீரழிவில் இருந்தும் எம் மக்களை காப்போம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை, டுபாய் மற்றும் சிங்கப்பூர் ஆகிய விமான நிலையங்களுக்கு விமானங்கள் செல்வதாக கொழும்பில் இருந்து வெளி வரும் டெய்லி மிரர் ரும் பின் வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.

Airlines divert to Chennai, Dubai Singapore airports for refuelling

As an alternative solution and measures to minimize the issues of refuelling aircraft at the Bandaranaike International Airport (BIA), it was reported that the airlines would be diverted to airports such as Chennai, Dubai and Singapore, the airport sources said.

SriLankan Airlines which are already flying over India, are operating with fuel for its fleet from Chennai and other Indian airports, a senior official said.

He added that the matter has been discussed with the India authorities earlier.

He further said the fuel required for the aircraft will be procured from the airports on their return flights to Chennai or New Delhi. (T.K.G. Kapila)

Airlines divert to Chennai, Dubai Singapore airports for refuelling - Breaking News | Daily Mirror

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெய்லி மிரர் செய்திக்கு ஆதவன் நியூஸ் கண், மூக்கு, வாய் வைத்து தனது சொந்த சரக்கை இறக்கிவிட்டு உள்ளது.

விமானங்கள் வேறு இடங்களில் எரிபொருள் நிரப்புவது உலகில் நடக்காத புதிய விடயம் இல்லை. எங்கு எரிபொருள் விலை மலிவாக உள்ளதோ அங்குதான் பெறுவார்கள்.

விமானத்தை டிஸ்பட்ச் செய்யும்போது எங்கே எரிபொருள் நிரப்புவது, எந்த பாதையால் செல்வது, எந்த குழு விமானத்தில் பணியாற்றுவது என்பதை எல்லாம் நேரம், வருவாய், இலாபம், நடைமுறை சாத்தியம், விமானத்தின் பாரம், காலநிலை (Headwind, Tailwind, Jet-stream போன்றவை) எல்லாம் பார்த்து தீர்மானிப்பார்கள். 

எங்கள் சுப்பரின் ட்க்சி உள் ஊரில் எரிபொருள் நிரப்புவது போன்றது இல்லை விமானத்துறை. 

மே31 திகதி சோதிடம் பார்த்து அறியப்பட்டதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

டெய்லி மிரர் செய்திக்கு ஆதவன் நியூஸ் கண், மூக்கு, வாய் வைத்து தனது சொந்த சரக்கை இறக்கிவிட்டு உள்ளது.

விமானங்கள் வேறு இடங்களில் எரிபொருள் நிரப்புவது உலகில் நடக்காத புதிய விடயம் இல்லை. எங்கு எரிபொருள் விலை மலிவாக உள்ளதோ அங்குதான் பெறுவார்கள்.

விமானத்தை டிஸ்பட்ச் செய்யும்போது எங்கே எரிபொருள் நிரப்புவது, எந்த பாதையால் செல்வது, எந்த குழு விமானத்தில் பணியாற்றுவது என்பதை எல்லாம் நேரம், வருவாய், இலாபம், நடைமுறை சாத்தியம், விமானத்தின் பாரம், காலநிலை (Headwind, Tailwind, Jet-stream போன்றவை) எல்லாம் பார்த்து தீர்மானிப்பார்கள். 

எங்கள் சுப்பரின் ட்க்சி உள் ஊரில் எரிபொருள் நிரப்புவது போன்றது இல்லை விமானத்துறை. 

மே31 திகதி சோதிடம் பார்த்து அறியப்பட்டதா?

உங்களவுக்கு, அவர்களுக்கோ அவர்களது வாசர்களுக்கோ, நீங்கள் சொல்லும் விபரங்கள் புரியாது என்பதால் அப்படி தானே எழுதுவார்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

மே31 திகதி சோதிடம் பார்த்து அறியப்பட்டதா?

அந்த திகதி மட்டும் விமான  எரிபொருள் இருப்பு உள்ளது என்கிறார்கள் அதன் பின் நீங்கள்  சொல்வது போல் மாலைதீவு அல்லது திருச்சி மதுரை திருவானந்த புரம்  போன்ற இடங்களை நாடி சென்று எரிபொருள் நிரப்பவேண்டி வரலாம் லண்டனில் இருந்து டோகா கட்டார்  போன்ற இடங்களில் ட்ரான்சிட் ல் நடக்க பஞ்சி பிடித்த கூட்டம்  நேரடி பிளைட் என்று ஏர் லங்காவை 1300 பவுன் என்றாலும் பரவாயில்லை என்று போகின்றவர்கள் இனி 15 அல்லது 16 மணிநேரம் பிரேதம் இருப்பது போல் இருக்கனும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

31க்கு பின்னர்... கட்டுநாயக்க உட்பட, அனைத்து விமான நிலையங்களும்... மூடப்படும் அபாயம்!

என்ன கொடுமை சார்?


பங்களாதேஷ்,மாலைதீவுக்கு கூட இந்த நிலைமை இல்லையே சார் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

ட்ரான்சிட் ல் நடக்க பஞ்சி பிடித்த கூட்டம்  நேரடி பிளைட் என்று ஏர் லங்காவை 1300 பவுன் என்றாலும் பரவாயில்லை என்று போகின்றவர்கள் இனி 15 அல்லது 16 மணிநேரம் பிரேதம் இருப்பது போல் இருக்கனும் .

அவர்கள் தங்களது பகட்டை ஆடம்பரமாக செலவு செய்வோம் என்று காட்ட ஒரு சந்தர்ப்பமாக எல்லோ இதை  நினைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

உங்களவுக்கு, அவர்களுக்கோ அவர்களது வாசர்களுக்கோ, நீங்கள் சொல்லும் விபரங்கள் புரியாது என்பதால் அப்படி தானே எழுதுவார்கள்....

நாங்கள் சொல்வதை கேட்டுவிட்டு பொத்திக்கொண்டு கிடவுங்கோ என்பதுதான் நமது ஊடகங்கள் தொடக்கம் பாடசாலை, ஊர் சங்கங்கள் வரையான மனப்போக்கு. என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

அந்த திகதி மட்டும் விமான  எரிபொருள் இருப்பு உள்ளது என்கிறார்கள் அதன் பின் நீங்கள்  சொல்வது போல் மாலைதீவு அல்லது திருச்சி மதுரை திருவானந்த புரம்  போன்ற இடங்களை நாடி சென்று எரிபொருள் நிரப்பவேண்டி வரலாம் லண்டனில் இருந்து டோகா கட்டார்  போன்ற இடங்களில் ட்ரான்சிட் ல் நடக்க பஞ்சி பிடித்த கூட்டம்  நேரடி பிளைட் என்று ஏர் லங்காவை 1300 பவுன் என்றாலும் பரவாயில்லை என்று போகின்றவர்கள் இனி 15 அல்லது 16 மணிநேரம் பிரேதம் இருப்பது போல் இருக்கனும் .

 

இலங்கையில் எரிபொருள் நிரப்பவேண்டிய கட்டாயம் இல்லை. தவிர விலை பார்த்தே மலிவான இடங்களில் எரிபொருள் நிரப்புவார்கள். சரி மே 31 இன் பின் இந்த கருத்தாடலை தொடர்வோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு விமானங்களை முழுமையாக இயக்க அனுமதி!

எரிபொருள் தட்டுப்பாடு – சென்னை, டுபாய், சிங்கப்பூருக்கு திருப்பி அனுப்பப்படும் விமானங்கள்!

சென்னை, டுபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற விமான நிலையங்களுக்குத் விமானங்கள் திருப்பி அனுப்பப்படுவதாக  விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதில் உள்ள பிரச்சினைகளைக் குறைப்பதற்கான மாற்றுத் தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவிற்குச் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், சென்னை மற்றும் ஏனைய இந்திய விமான நிலையங்களில் இருந்து தனது விமானங்களுக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்து இயங்குகிறது என விமான நிலைய மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் இந்திய அதிகாரிகளுடன் முன்னதாகவே கலந்துரையாடப்பட்டதென்றும் அவர் கூறினார்.

டுபாய் மற்றும் சிங்கப்பூரில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இலங்கைக்கு வரும் விமானங்களுக்கான எரிபொருளைக் கொள்வனவு செய்யும் பணியில் விமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1283876

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.