Jump to content

"ஒரு டிரில்லியன் ரூபாய்" பணத்தை... அச்சிட வேண்டியுள்ளது: போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கலாம் -ரணில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் கறுப்பு பட்டியலுக்குள் இலங்கை இணைக்கப்படலாம் – ரணில் எச்சரிக்கை

"ஒரு டிரில்லியன் ரூபாய்" பணத்தை... அச்சிட வேண்டியுள்ளது: போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கலாம் -ரணில்.

நாட்டில் ரூபாய் வருமானம் இன்மையால் ஒரு டிரில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட வேண்டியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தங்களிடம் ரூபாய் வருமானம் இல்லை, இப்போது இன்னும் ஒரு டிரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டும் என்றும் வருடாந்த பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 வீதத்தை தாண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது ஏற்கனவே அதிக விலைகள் காரணமாக இன்னல்களை அனுபவிக்கும் குடும்பங்களுக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால் போராட்டங்கள் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1283792

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடி: 1 லட்சம் கோடி ரூபாய் பணம் அச்சிட திட்டம் - பிரதமர் ரணில் தகவல்

3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ரணில் விக்ரமசிங்க

இலங்கை பொருளாதார நெருக்கடி தீவிர நிலையை அடைந்துள்ள இந்த தருணத்தில், மேலும் பணத்தை அச்சிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இதன்படி, மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

''எங்களுக்கு ஒரு ரூபாய் வருமானம் கூட இல்லை. நாங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை மேலும் அச்சிடுகிறோம்" என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் மாதங்களில் நாட்டின் பணவீக்கமானது 40 வீதத்தை எட்டும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

விலையேற்றத்தினால் போராட்டங்களை நடத்தி வரும் மக்களுக்கு இது மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும் என அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்த மார்ச் மாதத்தில் 21.5 வீதமான காணப்பட்ட பணவீக்கம், ஏப்ரல் மாதத்தல் 33.8 வீதமாக உயர்வடைந்துள்ளது என தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை அதிகரித்ததால், அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெரும் அளவில் அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில், மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட புதிய நிதி அமைச்சரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதேவேளை, எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் புதிய இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கிறார்.

நாட்டின் உட்கட்டமைப்பு திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு மாறாக, இரண்டு வருட நிவாரண திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும் வகையில் புதிய இடைக்கால வரவு செலவுத்திட்டம் அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ரணில் விடுத்த எச்சரிக்கை

 

Central Bank of Sri Lanka

பட மூலாதாரம்,CENTRAL BANK OF SRI LANKA

 

படக்குறிப்பு,

இலங்கையில் பணத்தை அச்சிடும் அதிகாரம் மத்திய வங்கியிடம் மட்டுமே உள்ளது.

''பணம் அச்சிடுவது உற்பத்திக்கு வழி வகுக்காமல், நுகர்வுக்கு செலவிடப்பட்டால், நிச்சயமாக பணவீக்கத்தை ஏற்படுத்தும். இப்போது கிட்டத்தட்ட 30 சதவீதம் பணவீக்கம் வந்து விட்டது. பணம் அச்சிட்டு அதை உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தாமல், வெறுமனே தேவைகளை அதிகரிக்கும் வகையில் நுகர்வுக்கு பயன்படுத்தப்பட்டால், உதாரணமாக சொன்னால், அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் கொடுப்பதற்கு பயன்படுத்தப்பட்டால் பணவீக்கம்தான் உருவாகும்.

அது உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டால், அது வேறு விடயம். அரசாங்கத்தின் வருமானத்தையும் செலவினத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மாத வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளி முன்னர் 50 பில்லியனாக இருந்து தற்போது 700 பில்லியன் வரை அதிகரித்துள்ளது. ஆகவே, அரசாங்கத்திற்கு பணத்தை அச்சிடுவதை தவிர வேறு வழி இல்லை" என பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

பணம் அச்சிடாத பட்சத்தில், அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை செலுத்த முடியாது என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

புதிய கடன்களை வழங்க உலக வங்கி மறுப்பு

சர்வ பொருளாதார கொள்கை வரைவொன்று நடைமுறைப்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய கடன் உதவிகளை வழங்கும் திட்டம் கிடையாது என உலக வங்கி அறிவித்துள்ளது.

இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டு செயற்படுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பரந்த அளவிலான வளர்ச்சியை மீட்டெடுப்பதற்கான சரியான கொள்கைகள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் மற்ற அபிவிருத்தி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் உலக வங்கி கூறுகிறது.

இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான சரியான கொள்கை வரைவொன்றை தயாரிக்க வேண்டும் என அது தெரிவிக்கிறது.

இலங்கை தற்போது பின்பற்றிவரும் சில நிதி திட்டங்களை மீள ஆராய்ந்து, இலங்கைக்கு தேவையான மருந்து வகைகள், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் விவசாயிகள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உலக வங்கி கூறுகிறது.

உலக வங்கியின் இந்த அறிவிப்பு தொடர்பில் பிபிசி தமிழ், பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்கவிடம் வினவியது.

 

இலங்கை பணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலக வங்கியின் இந்த அறிவிப்பு குறித்து ஆச்சரியப்பட வேண்டிய தேவை கிடையாது என அவர் கூறுகின்றார்.

''உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது, ஆச்சரியப்படக்கூடிய அறிவிப்பு கிடையாது. செய்திகளில் வெளியாகியுள்ள விதத்தில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலைமை ஒன்று காணப்படுகின்றது. இந்த நெருக்கடி குறித்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆய்வுகளை நடத்தி வருகின்றன. இந்த ஆய்வுகளின்படி, புதிய நிதி திட்டங்களை வழங்குவதற்கு இலங்கை தகுதியற்றதாக காணப்படுகின்றது. பொருளாதார நிலைமை வழமைக்கு கொண்டு வரப்படும் வரை புதிய நிதி உதவிகளை வழங்க முடியாது என ஏற்கெனவே கூறியுள்ளனர்" என பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க தெரிவிக்கிறார்.

இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுக்கு இடையிலான கலந்துரையாடல்கள் குறித்தும் அவர் இதன்போது கருத்து தெரிவித்தார்.

''இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. எவ்வாறான உடன்படிக்கை, எவ்வாறான பொருளாதார பொதியை வடிவமைக்க முடியும் என்பது குறித்து அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடலே தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் முடிவடைந்ததன் பின்னர், இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றுக்கு இடையில் எவ்வாறான பொருளாதார பொதி கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்படும்.

அந்த உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபைக்கு சென்று அதற்கான அனுமதியை பெற வேண்டும். இலங்கை சார்பில் இலங்கை அமைச்சரவையில் அதற்கான அனுமதியை பெற வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளும் முடிவடைந்ததன் பின்னரே, இந்த உடன்படிக்கை உறுதியாகும் என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும்" என்கின்றார் அனுஷ்க விஜேசிங்க.

 

இலங்கை பணம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த உடன்படிக்கையை இரண்டு தரப்பும் உறுதிப்படுத்திய பின்னரே, ஏனைய நிதி உதவிகளை வழங்கும் நிறுவனங்கள் இலங்கைக்கு உதவி வழங்குவதற்கான வாய்ப்பு அமையும் என அவர் கூறுகிறார்.

இந்த நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரை, குறித்த நிறுவனங்களுக்கு புதிய கடன், புதிய திட்டங்களுக்கு செல்ல முடியாது என்றே கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அமைய, எவ்வாறான கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என்பது அவதானிக்கப்படும்.

உலக வங்கியால் ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட பணம் கிடைக்கும்

உலக வங்கி இலங்கைக்கு வழங்குவதாக ஏற்கெனவே அறிவித்துள்ள நிதி திட்டங்களில், செலவிடப்படாதுள்ள தொகையை, அந்த பழைய திட்டங்களிலிருந்து விடுவித்து, அதனை அவசர தேவைக்காக பயன்படுத்த உலக வங்கி தீர்மானித்துள்ளது.

''புதிய கடன் திட்டங்கள் வழங்காவிட்டாலும், இலங்கைக்கு உலக வங்கியினால் உதவுவதற்கு மாற்று வழிகள் காணப்படுகின்றன. அந்த திட்டங்களை அவர்கள் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். உலக வங்கியினால் இலங்கைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள நிதித் திட்டங்கள் மற்றும் அனுமதி வழங்கப்பட்டுள்ள திட்டங்களுக்காக செலவிடப்பட்டு எஞ்சியுள்ள தொகையை, ஏற்கெனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து அப்புறப்படுத்தி, நாட்டின் அவசர தேவைக்காக அந்த நிதியை வழங்க உலக வங்கி தற்போது தீர்மானித்துள்ளது" என பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க தெரிவிக்கின்றார்.

அபிவிருத்தி திட்டங்கள், நீர்பாசன திட்டங்கள், வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு வகையிலான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, தற்போது உலக வங்கியினால் அவசர தேவையை சமாளிக்க மாற்றி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கைக்கு உதவி வழங்க முடியாது என உலக வங்கி கூறவில்லை என அவர் தெரிவிக்கிறார்.

எனினும், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை முடிவடைந்து, அது உறுதிப்படுத்தப்படும் வரை புதிய கடன் திட்டங்களை வழங்க முடியாது என்றே உலக வங்கி அறிவித்துள்ளதாக பொருளாதார நிபுணர் அனுஷ்க விஜேசிங்க தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-61583958

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

பார்த்தவுடன்.. சிரிக்க வைத்தது மட்டுமல்லாது... 
பல அர்த்தங்களை கூறிய  கருத்துப் படம்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

https://www.investopedia.com/terms/h/hyperinflation.asp

பணவீக்கம் 50% எட்டினால் அதனை Hyperinflation என்பார்கள்.

இதிலிருந்து... இலங்கை மீண்டு வர, பல வருடங்கள் எடுக்கும் போல் உள்ளதே.
அதுவரை... மக்கள் தாக்குப் பிடிப்பார்கள் என்று நினைக்கவில்லை.
பிரேசில் போல... கொலை, கொள்ளை, வழிப்பறி, பட்டினி.... என்று
பல பிரச்சினைகளுக்கு, மக்கள் முகம் கொடுக்க வேண்டி வரப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

https://www.investopedia.com/terms/h/hyperinflation.asp

பணவீக்கம் 50% எட்டினால் அதனை Hyperinflation என்பார்கள்.

May be an image of 1 person, money and text that says 'JUST IN oneindia ndia tamil இந்திய ரூபாயை பயன்படுத்தும் இலங்கை! இலங்கை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் இந்திய ரூபாய்களை பயன்படுத்தும் நிலைமை உருவாகும்; இலங்கையில் பட்டினியால் செப்டம்பர் மாதம் மனிதப் பேரழிவு ஏற்படப் போகிறது- இலங்கை முன்னாள் கணக்கு தணிக்கையாளர் காமினி விஜேசிங்கே Follow us on tamil.oneindia.com 26 MAY 2022'

 

Indian Money Cash GIF - Indian Money Money Cash - Discover & Share GIFs

வசி....   நிலைமை இப்படியே போனால், எதிர்காலத்தில்... இந்திய ரூபாயை,
இலங்கை பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளதா?

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person, money and text that says 'JUST IN oneindia ndia tamil இந்திய ரூபாயை பயன்படுத்தும் இலங்கை! இலங்கை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் இந்திய ரூபாய்களை பயன்படுத்தும் நிலைமை உருவாகும்; இலங்கையில் பட்டினியால் செப்டம்பர் மாதம் மனிதப் பேரழிவு ஏற்படப் போகிறது- இலங்கை முன்னாள் கணக்கு தணிக்கையாளர் காமினி விஜேசிங்கே Follow us on tamil.oneindia.com 26 MAY 2022'

 

Indian Money Cash GIF - Indian Money Money Cash - Discover & Share GIFs

வசி....   நிலைமை இப்படியே போனால், எதிர்காலத்தில்... இந்திய ரூபாயை,
இலங்கை பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளதா?

இலங்கை நாணயம் மதிப்பிழந்த பின் வேறு நாட்டு நாணயங்களை விட இலங்கைக்கு, இந்திய நாணயம் சிறந்த தெரிவாக இருக்கும் என நானும் நினைக்கிறேன், சில மாதங்களின் முன் அது பற்றி வேறு ஒரு திரியில் குறிப்பிட்டதாக நினைவில் உள்ளது.

இவ்வாறு பல நாடுகளில் நடைமுறை உள்ளது, அதனை டொலரைசேசன் எனக்கூறுவார்கள்.

 

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.