Jump to content

”ஈ.பி.டி.பி. ஐ விமர்சிக்கும் அருகதை யாருக்கும் கிடையாது”: டக்ளஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

”ஈ.பி.டி.பி. ஐ விமர்சிக்கும் அருகதை யாருக்கும் கிடையாது”: டக்ளஸ்

ஆட்சியை தீர்மானிக்கும் அதிகாரங்களை மக்கள் எமக்கு வழங்கியிருந்தால், கணிசமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கான சந்தர்ப்பங்களையும் மக்கள் வழங்கிய அதிகாரத்தினையும் வீணடிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
 
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட முக்கியஸத்தர்கள், அமைப்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனான இன்றைய கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த செயலாளர் நாயகம்,
 
“ஆர்ப்பாட்டங்கள், கோசங்கள் போடுவதாலோ அல்லது வெறுப்புத் தன்மையினை வெளிப்படுத்துவதின் ஊடாக இந்த கியூ வரிசை யுகமும் பொருளாதார நிலைமையும் அகன்றுவிட போவதில்லை. பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொள்கின்ற மனோநிலமை ஒவ்வொரு மனிதனிடமும் இருக்குமானால் இதுவும் கடந்து போகும்” என்று தெரிவித்தார்.
 
மேலும், ஈ.பி.டி.பி. கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக தெளிவுபடுத்திய செயலாளர் நாயகம், தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கேற்கின்ற போதிலும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்திகளாக இருந்ததில்லை.
 
நல்லாட்சிக் காலத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த கூட்டமைப்பினர், தமது ஆட்சிக் காலத்தில் எதையுமே செய்யாத நிலையில், தற்போது ஈ.பி.டி.பி. யை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கேற்கின்ற போதிலும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்திகளாக இருந்ததில்லை.

 
நல்லாட்சிக் காலத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த கூட்டமைப்பினர், தமது ஆட்சிக் காலத்தில் எதையுமே செய்யாத நிலையில், தற்போது ஈ.பி.டி.பி. யை விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

இருக்கிற ஒரு பிரதிநிதித்துவம் காணாது போலை. 🙃
தமிழ் தேசிய கூட்டமைப்பு  எதுக்கும்... உதவாமல் போயிட்டதால்...
அடுத்தமுறை.... உங்கள் கட்சிக்கு,  வடக்கு கிழக்கிலிருந்து, 
20 பேரை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கின்றோம். 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கேற்கின்ற போதிலும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்திகளாக இருந்ததில்லை.

இதுவே இவரின் யோக்கியதை என்னவென்று உணர்த்துகிறது இன்னும் புரியவில்லை என்றால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

1 hour ago, கிருபன் said:

நல்லாட்சிக் காலத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்த கூட்டமைப்பினர், தமது ஆட்சிக் காலத்தில் எதையுமே செய்யாத நிலையில்,

இருந்தும் மக்கள் இவரை வெறுப்பதன் காரணத்தை கண்டறிந்து திருத்திக்கொள்ள முடியவில்லை. மக்கள் இவரையும் இவரது ஏஜமானர்களையும் அருவெறுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டையில போற நேரத்திலதான் எல்லோருக்கும்   ஞானம் பிறக்குது.

ஆனந்தசங்கரி, சம்பந்தன், இப்ப டக்கிளஸ் 

😫

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு ஒன்றும் ஞானம் பிறக்கவில்லை, நோகாமல் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியவில்லையே என்று புலம்புகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான். ஒரு அரச ஆதரவு ஆயுதக்குழுவை ஏன் விமர்சிக்கனும். அது அநாவசியமும் கூட. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் ஆசை வார்த்தையில் மயங்கி, வடை வாயில விழுகுதில்லையாம். மக்கள் உசார் என்று ஆதங்கப்படுகிறார்.               

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.